ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.22

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.22 

பாரத மாதா குருகுல ஆசிரமத்தின் பூமிபூஜைக்கு பகவானின் ஆசிகள்

புத்தாண்டு 1999 பிறந்தவுடன் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் தேசீய இளைஞர் தினத்தை முன்னிட்டு, யோகி ராம்சுரத்குமார் சுழற்கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்குவதற்கான, நகரத்து மாணவர்களுக்கான, பேச்சுப்போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய,  கடுமையாக பணிபுரிந்தனர். சிரஞ்சீவி் விவேக் மற்றும் சௌ பிரியா, ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி 10, 1999 அன்று, கலாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடக்க இருக்கும் விழாவிற்கு, சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதிபதி கற்பகவினாயகம் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். சாது பகவானுக்கு ஜனவரி 7 ஆம் தேதி விழா குறித்து கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்யபாத குரு மஹராஜ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், பதினோறாவது ஆண்டாக சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் தேசீய இளைஞர் தினத்தை முன்னிட்டு, சுவாமிஜி குறித்த பேச்சுப்போட்டியை நகரத்து பிள்ளைகளுக்கு, யோகி ராம்சுரத்குமார் சுழற்கேடயங்கள் மற்றும் விருதுகளுக்காக நடத்த இருக்கிறது. ஜனவர் 10, 1999 அன்று, ராமகிருஷ்ண ஆசிரமத்தின் பூஜ்ய சுவாமி போதமயானந்தா தலைமையில் நடக்கும் விழாவில், சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதிபதி M.  கற்பகவினாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக இருப்பார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர், டாக்டர். V.S. நரசிம்மன் முக்கிய உரையாற்றுவார். திரு. விவேகானந்தன், டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் மற்றும் இந்த சாது உங்கள் ஆசியை இந்த விழாவிற்கு வேண்டுகிறார்கள். இத்துடன் நாங்கள் சுற்றறிக்கை மற்றும் விழாவின் அழைப்பிதழ் போன்றவற்றை இணைத்துள்ளோம்.

அகில இந்திய வானொலி சுவாமி விவேகானந்தர் குறித்த இந்த சாதுவின் உரையை ஜனவரி 12, 1999 அன்று ஒலிபரப்பு செய்ய விருப்பம் கொண்டுள்ளது. இது, கணிசமான இந்திய மக்கள்தொகை காணப்படுகிற, கிழக்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் அலைவரிசையில் ஒலிபரப்பாகும். இந்த சாது உங்கள் ஆசியை இந்த நிகழ்ச்சிக்கும் வேண்டுகிறான். 

‘தத்துவதர்சனா’ 15-வது ஆண்டு மலர்  தயாராகி வருகிறது அது, இந்த சாது வெளிநாடுகளுக்கு செல்லும் முன், பிப்ரவரி 1999 ல், வெளியாகும். பூஜ்ய தபஸ்வி பாபா அவர்களின்  “ராம்நாம்” என்ற நூலும் தயாராகி வருகிறது. இதில் ராமசரிதமானஸ் மற்றும் புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, ராம்நாம தாரக மந்திரத்தின் பெருமைகள் குறித்த கட்டுரைகள் அடங்கியுள்ளன. இதனையும் ஆண்டு மலரோடு தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க இந்த சாது  கொண்டுவருவான். இந்த புத்தகம் பிரத்தியேகமாக ராம்நாம் இயக்கத்தின் பக்தர்களுக்கும், மார்ச் மாதம் மொரிஷியஸ் நடக்கும். ராம்நாம் யக்ஞத்தில் விநியோகிக்கவும் உதவும் என நம்புகிறேன். இதுவரை மொரிஷியஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து உறுதி செய்யப்பட்ட விமான டிக்கெட் கிடைக்கவில்லை, கூடிய விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். டிக்கெட்டுக்கள் வந்தபின்னர் பிப்ரவரியில் மொரிஷியஸ், மற்றும் மார்ச் முதல் ஜூன் வரை  தென் ஆப்பிரிக்கா செல்ல விசாவினை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நாட்டைவிட்டு கிளம்பும் முன் பகவானின் தரிசனத்தையும், ஆசியையும் அங்கு  வந்து பெறுவதற்கு வேண்டுகிறோம். 

திருமதி பாரதி, சிரஞ்சீவி விவேகானந்தன், சௌ. நிவேதிதா மற்றும் அவளது குடும்பத்தினர் தங்கள் தாழ்மையான நமஸ்காரங்களை பகவானுக்கும் மற்றும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு  : மேலே குறிப்பிட்டபடி”

பகவானின் கருணை மற்றும் ஆசியால் விவேகானந்தா ஜெயந்தி மற்றும் தேசீய இளைஞர் தினம் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக ஜனவரி 10 ஆம் தேதி நடைப்பெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் மூன்று நிலைகளான – சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் நிலைகளில் பங்கேற்றனர். AIR – ன் திரு. அஸ்வினிகுமார் மற்றும் திரு. சக்தி ஸ்ரீனிவாசன், டாக்டர். பவானி, மற்றும் பேரா. பட்டு, மற்றும் YRYA வைச் சேர்ந்த தன்னார்வலர்கள், திரு. ரவி , திரு. சந்திரசேகர், திரு வெங்கடாசலம், சௌ. சுபா மற்றும் சௌ. அனு நீதிபதிகளாக இருந்தனர். டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சிரஞ்சீவி். விவேக் நிகழ்ச்சியை மிகுந்த திறம்பட நடத்தினர். மாண்புமிகு நீதிபதி. கற்பகவினாயகம், சிறப்பு விருந்தினர் ஆகவும், சுவாமி போதாமயானந்தா தலைவராகவும் மாலை நிகழ்வில் கலந்து கொண்டனர். பரிசுகள் வெற்றிபெற்றவர்களுக்கும், ஆறுதல் பரிசுகள் கலந்து  கொண்டவர்களுக்கும் அனைத்து நிலையிலும் வழங்கப்பட்டது. டாக்டர். V.S. நரசிம்மன்,  திருவேடகம் விவேகானந்த கல்லூரி முன்னாள் துணை முதல்வர், முக்கிய உரை ஆற்றினார். சாது தனது நிறைவு உரையில் சுவாமி விவேகானந்தர் மீது யோகி ராம்சுரத்குமார் கொண்டிருந்த ஆழமான அன்பு குறித்து பேசினார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை மத்திய அரசு, தேசீய இளைஞர் தினமாக அறிவித்த போது எப்படி பகவான் ஒரு குழந்தையைப்போல் துள்ளி குதித்தார் என்பதை விளக்கினார். 

திங்கள்கிழமை அன்று சாதுவின் விவேகானந்தர் குறித்த உரையானது AIR ல் திரு. சக்தி ஸ்ரீனிவாசன் மற்றும் சௌ. அஸ்வினி ஒலிப்பதிவு செய்து, விவேகானந்தா ஜெயந்தி நாளான ஜனவரி – 12 ல் ஒலிப்பரப்பானது. அதே நாளில் சாதுவிடம், தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு விடுத்துள்ள அறைகூவல் குறித்து ஒரு நேர்காணல், தொலைபேசி மூலம் AIR ல் மேற்கொள்ளப்பட்டது. சாதுஜி பகவானுக்கு கடிதம் ஒன்றை ஜனவரி – 23 அன்று இந்த நிகழ்ச்சி குறித்து விரிவாக எழுதினார். 

பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் விவேகானந்தா ஜெயந்தி பெரும் வெற்றி பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேச்சுப்கோட்டியில் கலந்து கொண்டனர். அகர்வால் வித்யாலயா மற்றும் RBCC பள்ளியானது யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயத்தை முறையே சீனியர் மற்றும் ஜூனியர் நிலைகளில் பெற்றனர். யோகி ராம்சுரத்குமார் விருதுகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. “நீதிபதி திரு. கற்பகவினாயகம், திரு. V.S.நரசிம்மன், சுவாமி போதாமயானந்தா மற்றும் இந்த சாதுவின் உரைகள் பற்றி, “மாம்பலம் டைம்ஸ்“ ல் வெளியான செய்தி, தனியே தபாலில் தங்களின் பார்வைக்காக அனுப்பியுள்ளோம். 

இந்த சாது, பொங்கலை முன்னிட்டு ஜனவரி 26, 1999 அன்று நடக்க இருக்கும் தமிழ் விழாவில் உரையாற்ற, மும்பைக்கு கிளம்புகிறான். சென்னைக்கு ஜனவரி 29 அன்று திரும்பி வருவான். பின்னர், நமது  சகோதரி நிவேதிதா அகாடமி குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் போன்றவற்றிற்கு, பிப்ரவரி மாத துவக்கத்தில் அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, நாங்கள் பெங்களூருக்கு செல்வோம்.

மொரிஷியஸின் திரு. C.C. கிருஷ்ணா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் திரு. டெட்டி கொமல்  முறையே ஒரு இமெயில் மற்றும் ஃபேக்ஸ் தகவல்களை அனுப்பினர். அதில், அவர்கள் பிப்ரவரி 25 முதல் ஜூன் 27, 1999 வரை எங்களின் வெளிநாட்டு பயணத்திற்கான திட்டத்தை உறுதி செய்துள்ளனர். நாங்கள் விசா பெறுவதற்கு விண்ணப்பிக்க விமான டிக்கெட்களை விரைவில் அனுப்ப உள்ளனர். நாங்கள் இந்த நாட்டில் இருந்து பயணம் மேற்கொள்ளும் முன். தங்களை வந்து கண்டு தரிசனம் பெறவும், ஆசியை பெறவும் விரும்புகிறோம். அதற்கு முன் எங்களின் ‘தத்துவ தர்சனா’ 15 வது ஆண்டுமலர் மற்றும், பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் அவர்களின் “ராம்நாம்” நூலும் தயாராகிவிடும். அவைகளில் முதல் பிரதிகளை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்க கொண்டுவருவோம். சௌ நிவேதிதா மற்றும் குழந்தை ஹரிப்ரியா இங்கே குடியரசு தின விடுமுறைக்காக வந்திருக்கிறார்கள். நிவேதிதாவின் கணவன் திரு ரமேஷ் கல்கத்தாவிற்கு அலுவலக பணிக்காக சென்றுள்ளார். அவள், விவேக் மற்றும் பாரதி தங்கள் வணக்கங்களை உங்களுக்கும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்க சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

சாது தனது மும்பை பயணத்தை மும்பை எக்ஸ்பிரஸில் ஜனவரி 24 , 1999 ஞாயிற்றுக்கிழமை அன்று துவக்கினார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் திரு.நாகராஜ் சாதுவை மும்பையில் அடுத்தநாள் காலையில் வரவேற்றார். தமிழ் சங்கம் பொங்கல் விழாவை சீயோன் கோலிவாடாவில்  உள்ள ஹனுமான் தேல்கியில் சிறப்பாக கொண்டாடியது. அங்கே நாள் முழுக்க கலை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்காக நடந்தன. சாதுஜி மாலையில் கூட்டத்தினரிடையே பொங்கலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். திரு.A.R. ராவ், சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர் மற்றும் பகவானின் பக்தர், ஒரு சிறப்பான ராமநாம சத்சங்கத்தை தனது இல்லத்தில் நடத்தினார். பகவானின் பக்தர்களான திரு. மோக்கல், திரு. சாவன் , திரு. T.S. பால் மற்றும் திரு.C.S. ரங்கநாதன் சத்சங்கத்தில் கலந்து கொண்டனர். சாது பகவான் குறித்தும், உலக ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசினார். திரு. ராவ் ராம்நாம் இயக்கத்தின் மும்பை ஒருங்கிணைப்பாளராக இருக்க சம்மதித்தார். சாது சென்னை எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னைக்கு அடுத்தநாள் திரும்பினார். 

ஆனந்தாஸ்ரமத்தின் திரு ஸ்ரீராம், சுவாமி சச்சிதானந்தர் அவர்களின் அர்ப்பணிப்பின் பொன்விழா ஆண்டு மலரை பூஜ்ய சுவாமிஜி அவர்களின் பிரசாதங்களுடன் திரு. கிருஷ்ணமூர்த்தி மூலம் திங்கள்கிழமை பிப்ரவரி – 1 அன்று கொடுத்தனுப்பினார். சென்னை கம்பன் கழகம், கல்லூரி மாணவர்களுக்கான ஒரு பேச்சுப்போட்டி, திருவள்ளுவரின் ‘வாலறிவன்’ பற்றி, பிப்ரவரி 5 வெள்ளிக்கிழமை அன்று ராணி சீதை ஹாலில் நடத்தியது. அதற்கு சாது நடுவராக அழைக்கப்பட்டிருந்தார். திரு. S.L. பண்டாரி என்ற சேவை மனப்பான்மை கொண்ட வியாபாரி மற்றும் ராம்நாம பக்தர், சாதுவையும் திருநெல்வேலியின் உலக ராமநாம இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. S.G. பத்மநாபன் அவர்களையும் அவரது சென்னை சௌகார் பேட்டை இல்லத்தில் பிப்ரவரி 9 அன்று வரவேற்றார். அவர்  ராமர் பட்டாபிஷேகம் படம் மற்றும், ஆங்கிலம் மற்றும் தேவநாகரி மொழிகளில் அச்சிடப்பட்ட ஹனுமன் சாலீசா அடங்கிய, பிளாஸ்டிக் நாட்காட்டியின்  இரண்டாயிரம் பிரதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ராம்நாம் பக்தர்களுக்கு விநியோகிக்க வழங்கினார். பிப்ரவரி – 10 அன்று சாது பெங்களூருக்கு சென்று பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார். கட்டிட ஒப்பந்தக்காரர் திரு. கார்த்திக் உடன் கட்டிடத்தின் திட்டம் குறித்து விவாதித்தார். அவைகளை இறுதி செய்துவிட்டு சென்னைக்கு பிப்ரவரி 15 அன்று திரும்பினார். அடுத்தநாள் காளஹஸ்தியை சேர்ந்த திரு. ரமேஷ், ராமநாம பக்தர்களுக்கு வினியோகம் செய்ய டாக்டர் C.V. ராதாகிருஷ்ணன் தயாரித்த, யோகி ராம்சுரத்குமார் படம் அச்சிடப்பட்ட, நாட்காட்டியின் பிரதிகளோடு  வந்தார். அமெரிக்காவில்,  ஹவாயில் இருந்து வெளிவரும், “ஹிந்துயிசம் டுடே” ஆசிரியர் சுவாமி ஆறுமுகம் அவர்களின் பிரத்யேக வேண்டுகோளுக்கிணங்க, சாதுஜி, சகோதரி நிவேதிதா குறித்த கட்டுரை ஒன்றை, பிப்ரவரி – 19 வெள்ளிக்கிழமை அன்று அனுப்பினார். திங்கள்கிழமை , பிப்ரவரி – 22 அன்று சாது பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்யபாத  குருமஹராஜ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியினால் எங்களின் சென்றமாத மும்பை பயணம் பெரும் வெற்றி அடைந்தது.  பொங்கல் திருவிழாவில் நான்காயிரம் மும்பை தமிழர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே சாது உரையாற்றினார். நாங்கள் திரு. A.R. ராவ் அவர்களின் இல்லத்தில் ஒரு சத்சங்கத்தை நடத்தி அவரை நமது அகாடமியின் ஒருங்கிணைப்பாளராக நியமித்தோம். நாங்கள் திரும்பி வந்தபின்  பெங்களூர் சென்று ‘தத்துவ தர்சனா’ மற்றும் “ராம்நாம்” புத்தக தட்டச்சுப் பிரதிகளை எடுத்துவிட்டு, குருகுல ஆசிரமத்தின் கட்டிடத் திட்டத்தையும் கவனித்துவிட்டு வந்தோம். 

பிப்ரவரி 26 , 1999 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ குலசேகர ஆழ்வாரின் ஜெயந்தி நாளாகிய அன்றைய புனிதநாளில், பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், ஸ்ரீனிவாசாநகரில், சகோதரி நிவேதிதா அகாடமி மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தின் நூலகம் மற்றும் குருகுல ஆசிரமத்தின் அடிக்கல் நாட்டுவிழாவை நடத்த விருப்பம் கொண்டுள்ளோம். இந்த சாது, திருமதி பாரதி மற்றும் சிரஞ்சீவி விவேக்கும் பெங்களூருக்கு 24 ஆம் தேதி இரவு பயணிக்க இருக்கிறோம். இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணியை அடுத்த யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்குள் முடிக்க நாங்கள் உங்கள் ஆசிர்வாதங்களுக்காக பிரார்த்திக்கிறோம். நாங்கள் சென்னைக்கு பிப்ரவரி 28 அன்று திரும்புவோம் என எதிர்ப்பார்க்கிறோம். நாங்கள் அதன்பின் திருவண்ணாமலைக்கு உங்கள் தரிசனத்தை பெற வருவோம். அப்போது ‘தத்துவ தர்சனா’ மற்றும் “ராம்நாம்” புத்தகத்தையும் உங்கள் பாதங்களில் சமர்ப்பித்து உங்கள் ஆசியைப்பெற்றப்பின் இந்த சாது தனது ஆறாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வான். 

நாங்கள் இன்னமும் விமான டிக்கெட்டை பெறவில்லை. நாங்கள் எங்களது தென். ஆப்பிரிக்கா நண்பர்களிடம் இருந்து பெற்றுள்ள தகவலின்படி, டிக்கெட் டிராவல் ஏஜெண்ட் மூலம் ஏற்பாடாகி உள்ளதாக தெரிகிறது. எந்த நேரத்திலும் வரும் என எதிர்பார்க்கிறோம். அதனை நாங்கள் பெற்றவுடன் மொரிஷியஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விசாக்களை பெற்று எங்களது விமான பயணநாளை உறுதிசெய்வோம். நாங்கள் பகவானின் ஆசியை பயணத்தின் வெற்றிக்கு வேண்டுகிறோம். மொரிஷியஸ் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், V.H.P., மற்றும் ஆன்மீக இயக்கங்கள் திட்டமிட்டுள்ள ராமநாம ஜப யக்ஞத்திற்கும், தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஹிந்து விழிப்பு இயக்கம் மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் நிகழ்ச்சிகள் வெற்றி பெறுவதற்கும் தங்களின் ஆசியை வேண்டுகிறோம். 

நாங்கள் “பூஜ்ய சுவாமி சச்சிதானந்த்ஜி அவர்களின் அர்ப்பணிப்பின் பொன்விழா ஆண்டு மலர்” பிரதியை சுவாமிஜியிடமிருந்து அவரது ஆசீர்வாதத்துடன் பெற்றோம். அதில், உங்கள் உத்தரவின்படி நாங்கள் எழுதிய கட்டுரையை ஆனந்தாஸ்ரமம் வெளியிட்டுள்ளது. பிரதியைப் பெற்றுக் கொண்டு எங்களது நன்றியை தெரிவித்துள்ளோம். 

திருமதி பாரதி, சிரஞ்சீவி் விவேகானந்தன், சௌ நிவேதிதா மற்றும. அவளது குடும்பத்தினர் தங்களின் நமஸ்காரங்களை உங்களுக்கும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

சாது திருமதி. பாரதி , சிரஞ்சீவி். விவேக் மற்றும் திரு. ரமேஷ் பெங்களூருக்கு புதன்கிழமை பிப்ரவரி 24 அன்று காவேரி எக்ஸ்பிரஸ் மூலம் புறப்பட்டு, அவர்கள் அடுத்தநாள் காலையில் சென்றடைந்தனர். பூமி பூஜை, வாஸ்து பூஜை , நவக்ரஹ ஹோமம் மற்றும் விஷ்வக்சேனா ஹோமம் போன்றவை அனைத்தும் மங்களகரமாக, ஸ்ரீநிவாச நகரில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் ஸ்தாபகர், திரு. சம்பத் பட்டர் மூலம் நடத்தப்பட்டது. திரு. கார்த்திக் என்ற ஒப்பந்தக்காரர் இடம், பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் கட்டுமானத்தை துவங்குவதற்கான முன்பணம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை ஒன்று ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நடத்தப்பட்டது. சனிக்கிழமையன்று சாது அனைத்து பக்தர்களுக்கும் ஆசிரம பணி  துவக்கம் குறித்து தகவல் தெரிவித்தார். திருமதி. பாரதி, சிரஞ்சீவி. விவேக் மற்றும் திரு. ரமேஷ் ஆகியோருடன் சாது, சென்னைக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் மூலம் அடுத்தநாள் காலை திரும்பினார். 

மார்ச் 11, 1999 அன்று நிவேதிதா தொலைபேசியில் அழைத்து, தான் திரு. கிருஷ்ணா கார்ஸில் மூலம் பெற்ற தகவலில், அவர் மொரிஷியஸ் நிகழ்ச்சிகளை, தவிர்க்க இயலாத காரணங்களுக்காக, ஒத்தி வைக்கும்படி கூறியுள்ளதாக தெரிவித்தாள். சாது நிவேதிதாவிடம் ஏற்கனவே மொரிஷியஸிற்கான விமான டிக்கெட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், தான் மொரிஷியஸ் வழியாகவே தென் ஆப்பிரிக்கா செல்லவேண்டும் என்றும் கூறினார். பகவான் விரும்பினால் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வருகையில் மொரிஷியஸ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றார். சாதுஜி பகவானுக்கு ஒரு ஃபேக்ஸ் தகவலை, அடுத்தநாள் திருவண்ணாமலைக்கு வருவதாக, மார்ச் 13 அன்று அனுப்பினார். 

சாது திரு. G.V. ஸ்ரீதர், திரு.மோகன் ஆகியோருடன் காரில் திருவண்ணாமலைக்கு மார்ச் – 14 ஞாயிற்றுக்கிழமையன்று சென்று பகவானின் இல்லத்தை காலை 9.30 மணிக்கு அடைந்தார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் திரு. சக்திவேல் சாதுவை வரவேற்றனர். பகவான் ஆசிரமத்திற்கு வந்தப்பின் சாது ராமநாம ஜெபத்தை பிரார்த்தனை கூடத்தில் முன்நடத்தினார். பின்னர் பகவான் சாதுவை தனதருகே அழைத்தார். சாது தன்னுடன் வந்த பக்தர்களை யோகிக்கு அறிமுகப்படுத்தினார். பகவான் ரவியிடம் சாது அனுப்பியிருந்த நிகழ்ச்சிநிரல் தகவலை கொடுக்குமாறு கூறினார். அது அச்சமயம் அங்கே தயாராக இல்லாதமையால் சாது தனது  தென் ஆப்பரிக்க பயணத்தின் நிகழ்ச்சி நிரலை விளக்கினார். சாது பகவானிடம் தான் 23 ஆம் தேதி சென்னையிலிருந்து மும்பைக்கும், 24 ஆம் தேதி மும்பையில் இருந்து நேரடியாக தென் ஆப்பிரிக்காவிற்கும் செல்வதாக கூறினார். அவரது விமானம் மொரிஷியஸ் வழியாக சென்றாலும் தான் அங்கே தங்கபோவதில்லை என்றும், திரும்பி வருகையில் தான் மொரிஷியஸில் தங்க கூடும் என்றார். பகவான் சாதுவின் பயணத்திட்டத்தை ஆசீர்வதித்து, “என் தந்தை ரங்கராஜன் மேற்கொள்ளும் பணியில் மகிழ்வோடு இருக்கிறார். உனது நிகழ்ச்சி பெரும் வெற்றியடையும்.“ என்றார். பகவான் சென்னையின் ராமநவமி விழா குறித்து கேட்டார். சாது பக்தர்கள் அகண்ட ராமநாமத்தோடு விழா கொண்டாடுவார்கள் என்றார். பகவான் அந்த நிகழ்ச்சியை ஆசீர்வதித்தார். 

சாது, பகவானிடம், பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் மையத்தின் பூமிபூஜை, பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீநிவாச நகரில், பகவானின் ஆசி மற்றும் கருணையால் சிறப்பாக நடைப்பெற்றது என்றார். பகவான், “அனைத்தும் தந்தையின் கருணை“ என்றார். பகவான் சாதுவிடம் குருகுல ஆசிரமத்தில் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து கேட்டார். சாது, முக்கிய பணி, ஹிந்து சிந்தனை மற்றும் பண்பாடு பற்றி இளைஞர்களுக்கு பயிற்றுவித்து, உள்நாட்டின் பல பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் பிரசாரகர்களாக அனுப்புவது என்றார். பகவான் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் குருகுலத்துடன் இணைக்கப்படுமா என்று வினவினார். சாது அவைகள் குருகுல ஆசிரமத்தில் சகோதரி நிவேதிதா அகாடமியின் பகுதியாக செயல்படும் என்றார். பகவான், “என் தந்தை உனது பணியின் வெற்றிக்கு ஆசீர்வதிப்பார்“ என்றார். சாது பகவானிடம் நிவேதிதா கட்டுமானப்பணிகளை கவனித்து வருகிறாள் என்றார். யோகி தனது ஆசிகளை நிவேதிதா, விவேக் மற்றும் பாரதிக்கு வழங்கினார். பகவான் நிவேதிதாவின் குழந்தை ஹரிப்ரியா எனும் சிவா பள்ளிக்கு செல்வதை கேட்டு மகிழ்ந்தார். பகவான் , “அவள் நன்றாக படிப்பாள், ஹரிப்ரியாவிற்கு என் தந்தையின் ஆசிர்வாதங்கள்” என்றார். 

பகவான் தனது கரங்களில் ‘தத்துவ தர்சனா’வின் 15 வது ஆண்டுமலர் 1999 இதழை எடுத்து அதன் அட்டைப்படத்தில் இருந்த ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை  புகைப்படத்தை மிகுந்த ஆர்வத்தோடு கவனித்தார். பின்னர் அவர் இந்த இதழில் ஏதேனும் அன்னை குறித்த கட்டுரைகள் இருக்கின்றனவா என்று கேட்டார். சாது அதற்கு பதில் அளிக்கையில், பாரிசில் உள்ள இன்ஸ்டிட்யூட் டே  ரிசர்ச்சஸ் ஏவோல்யூடிவ்ஸ் மற்றும் மைசூரிலுள்ள மீரா அதிதி சென்டர் வெளியிட்டுள்ள “அன்னை பாரதம் — அன்னையின் வார்த்தைகளிலிருந்து ஒரு தேர்வு“ (INDIA THE MOTHER – A Selection From Mother’s Words) என்ற நூல் குறித்த ஒரு விரிவான மதிப்புரை தான் எழுதியுள்ளதாக கூறினார். பகவான் அந்த கட்டுரையை தனக்காக படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாது அதனை படித்தார். பகவான் பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் அவர்களின் ராம்நாம் குறித்த புத்தக பிரதிகளை பார்த்தார். சாது பகவானிடம் இந்த புத்தகம் ராமநாம பக்தர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வினியோகம் செய்வதற்காக அச்சிடப்பட்டதாக கூறினார். பகவான் ‘தத்துவ தர்சனா’ மற்றும் “ராம்நாம்” புத்தகங்களில் கையொப்பம் இட்டு யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மைய நூலகத்திற்காக கொடுத்தார். பின்னர் அவர் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து, “என் தந்தையின் பணிக்கான பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும்“ என்றார். சாது பகவானிடம் வெளிநாட்டவர்களுக்கான ஒரு சேதியை கூறுமாறு கேட்டார். பகவான் அவர்களுக்கான சேதியை கூறுகையில், அவர்கள் எனது தந்தையை பிரார்த்திக்கட்டும். அவரது பெயரை எப்போதும் ஜபிக்கட்டும். அவர்கள். எப்போதும் எனது தந்தையை நினைவில் கொண்டிருக்கட்டும். அவர் இவர்களை கவனித்துக்கொள்வார். என் தந்தை அனைவருக்கும் உரியவர். அதுவே இந்தப்பிச்சைக்காரனின் சேதி !” என்றார். 

சாது பகவானிடம் பகவான் மற்றும் ராமநாமத்தை எங்கும் பரப்புவதற்கான வலிமையை தருமாறு கோரினார். போகி பதிலளிக்கையில், “ நீ எனது தந்தையின் பணியை மிகச்சிறப்பாக செய்வாய் !“ என்றார். சாதுவும் பிற பக்தர்களும் பகவானிடம் விடைப்பெற்று சென்னைக்கு மாலையில் திரும்பினர். வீடு திரும்பியப்பின் சாது விசாவிற்கான ஆவணங்களை தயார் செய்து அவைகளை டெல்லிக்கு அனுப்பினார். சாதுவிற்கு டெல்லியின் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் இருந்து கிடைத்த சேதியின் படி அவரது விசா 24 ஆம் தேதியே கிடைக்கும் என்று தகவல் கிடைக்க, சாது ஏர் இந்தியாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது பயணத்தை விசா கிடைக்கும் வரை ஒத்தி வைக்குமாறு கூறினார். மார்ச் 19 அன்று தென் ஆப்பரிக்காவின் அம்ஷலாளியை சேர்ந்த திரு  ராம்பிரசாத் மற்றும் அவரது மனைவி சாதுவின் இல்லத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் மூலமாக  சாது தென்னாபிரிக்காவில் உள்ள சகோதரர்களுக்கு தனது பயணத்திட்டத்தை தெரிவித்தார். “கிறிஸ்துவ மதமாற்றம் மற்றும் இந்திய தேசியத்திற்கான அச்சுறுத்தல்கள்” குறித்து சாதுவின் பேட்டியை வெளியிட்டு,  பெங்களூரில் இருந்து வெளியாகும் “எமினன்ஸ்” பத்திரிக்கை மார்ச் 22 அன்று, வந்து சேர்ந்தது. மார்ச் 24 அன்று பகவானின் பக்தர்கள் சக்திவேல் மற்றும் பரிமேலழகன் பகவானின் சேதி குறித்த நகலோடு வந்தனர். 

ராமநவமி சிறப்பு சத்சங்கம் அகண்ட ராமநாமத்துடன் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் கே.கே.நகர் அய்யப்பன் கோயிலில் நடைப்பெற்றது. இளைஞர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. K.N. வெங்கடராமன் மற்றும் திரு B வெங்கடராமன் அதிகாலையில் அகண்ட ராமநாமத்தை முன்நடத்தினர். ராமநாம இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு D.S. கணேசன், மற்றும் சென்னையை சுற்றியிருக்கும் பக்தர்கள் நாள் முழுதும் நடைபெற்ற அகண்ட ராமநாமத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர். மாலை 5 க்கு நிறைவு விழா நடைப்பெற்றது. சாதுஜி பக்தர்களிடையே அவரது அயல்நாட்டு பணியை குறித்து பேசினார். கோயிலைச் சார்ந்த நம்பூதிரிகள் ராமநவமி விழாவில் கலந்து கொண்டு சிறப்பு தாந்தரீக பூஜையை ராம்பிரானுக்கு மேற்கொண்டார்கள். சாஸ்தா சங்கத்தின் தலைவர் திரு. R.K. பரதன் கோயிலில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததற்கு, சாதுவிற்கும் பகவானின் பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.                              

புதன்கிழமை மார்ச் – 31 அன்று, 115 வது பப்பா ராம்தாஸ் ஜெயந்திவிழா ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திர் ஹாலில், சென்னை ஷெனாய் நகரில், நடைப்பெற்றது. சாதுஜி பப்பா மற்றும் பகவான் பக்தர்களிடையே உரையாற்றுகையில், மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்கள் உலக அமைதிக்காக துவங்கிய நாம ஜெப யக்ஞம்  உலகெங்கும் பரப்புவதற்காக பகவான் சாதுவிற்கு தீக்ஷை அளித்தது குறித்தும், அகில உலக ராமநாம இயக்கம் மற்றும் சாதுவின் தென்ஆப்பரிக்கா பயணம் குறித்தும் பேசினார். ஸ்ரீ குருஜி முரளீதர சுவாமிகளும் கூட்டத்தினரிடையே உரையாற்றினார்.

 . 

குருகுல ஆசிரமத்தின் பணிகள் குறித்த முன்னேற்றம் பற்றி பார்வையிட சாது ஒரு பயணத்தை பெங்களூருக்கு ஏப்ரல் 4, 1999 அன்று மேற்கொண்டு, அடுத்தநாள் சென்னை திரும்பினார். ஏப்ரல் 20, செவ்வாயன்று, சாதுவின் தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கான விசா, டெல்லியில் உள்ள தென் ஆப்பரிக்க தூதரகத்தில் இருந்து வந்து சேர்ந்தது. சாது, மும்பை பயணத்திற்கு ஜெட் எயர்  விமானசேவை,  மற்றும் தென்னாப்பிரிக்க டர்பனுக்கான பயணத்திற்கு எயர் இந்தியாவுடனும் தொடர்பு கொண்டார். சாது, தாயகத்தை விட்டு புறப்படுவது குறித்த கடிதம் ஒன்றை அடுத்தநாள் பகவானுக்கு எழுதினார்:

“பூஜ்யபாத  குரு மஹராஜ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் அளவற்ற ஆசியினால் இந்த சாது இறுதியாக தனது தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கான விசாவை பெற்றுவிட்டான். இந்த சாதுவின் தென் ஆப்பிரிக்கா பயணம் அங்கு ஹிந்து சமயப் பிரசாரம் செய்வதற்கானதால்,  டில்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதரகம் பிரிட்டோரியாவில் அந்த அரசின் உள்நாட்டு இலாக்காவிற்கு தெரிவித்து அனுமதி கேட்டிருந்தது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் அனுமதி அளித்ததை  தொடர்ந்து விசா வழங்க ஏற்பாடாயிற்று. சில தாமதங்கள் ஆனபோதும், தென் ஆப்பிரிக்கா அமைச்சகம் பலமுறை நுழைவதற்கான விசாவை தந்துள்ளனர். நேற்று முன்தினம் நாங்கள் விசாவை பெற்றோம். இன்று நாங்கள் எங்களது மும்பை, மொரிஷியஸ் மற்றும் டர்பன் பயணத்திற்கான பயணச்சீட்டுகளை உறுதி செய்தோம், நாளை, 22-4-1999, சென்னையிலிருந்து கிளம்புகிறான். இரவு 7.35 மணிக்கு மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் சென்று, அங்கிருந்து 23 ஆம் தேதி காலை 2-45 க்கு ஏர் மொரிஷியஸ் மூலம் மொரிஷியஸிர்கு பயணித்து, 7-15 க்கு மொரிஷியஸ் அடைந்து, அங்கிருந்து 8-20 க்கு கிளம்பி டர்பனுக்கு 10-25 க்கு சென்றடைவோம்  ஏர் இந்தியா, ஏர் மொரிஷியஸ் இடம் இந்த சாதுவிற்கு வி.ஐ.பி சலுகைகளை வழங்குமாறு கூறியிருப்பதால் இந்த சாதுவின் பயணம் மிகவும் சௌகரியமாக அமையும். நாங்கள் உங்கள் ஆசியை உங்களின் பெயரையும், ராமநாமத்தையும் பரப்ப வேண்டுகிறோம். 

நாங்கள் ஜூலை மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்புகையில், மொரிஷியஸில் தங்க எண்ணுகிறோம். நாங்கள் கிருஷ்ணாவிடம் எங்கள் பயணத்திட்டத்தை அறிவித்துவிட்டோம். 

சௌ நிவேதிதா மற்றும் குழந்தை ஹரிப்ரியா, இந்த சாதுவை விமான நிலையத்தில் வழியனுப்ப, இன்று மாலை இங்கு வருகின்றனர். திருமதி. பாரதி, சிரஞ்சீவி. விவேகானந்தன், சௌ.நிவேதிதா மற்றும் அவளின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தாழ்மையான நமஸ்காரங்களை பகவானுக்கும், சுதாமா சகோதரிகளுக்கும்  தெரிவிக்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்.”

வியாழக்கிழமை , ஏப்ரல் 22 அன்று திருமதி பாரதி, விவேக், ராஜி மற்றும் குழந்தைகள், மற்றும் ஹரிப்ரியா சாதுவை சென்னை விமான நிலையத்தில் 7-35 க்கு மும்பை செல்லும் விமானத்தில் வழியனுப்பினா். திரு ஏ.ஆர். ராவ்,  திரு மோகல், திரு தேஷ்பாண்டே மற்றும் திரு ஷெனாய், மும்பை விமான நிலையத்தில் சாதுவை வரவேற்று,  பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் காலை 2-30 க்கு மொரீஷியஸுக்கு புறப்படும்  எம் கே ஃபிளைட்  751  விமானத்தை பிடிக்க அங்கு கொண்டு சென்று, வழியனுப்பினார்கள். மொரிஷியஸிற்கு  காலை 7-30 மணிக்கு சென்றடைந்த போதிலும் அங்கு யாரையும் சந்திக்க இயலவில்லை, தொலைபேசியில் பேசவும் முடியவில்லை. இருப்பினும் தென்னாப்பிரிக்க ஸ்டாங்கரை சார்ந்த திரு பிரேம் அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து, அவருடன் எம் கே ஃபிளைட் 845-ல் பயணித்து  காலை 10-35 க்கு டர்பன் சென்றடைந்தோம். சாதுவை டர்பன் விமானநிலையத்தில் திருமதி ஷெரிதா , திரு. டெட்டி, திரு. ட்ரிசேன், திரு கமல் மஹராஜ், திரு. துளஸிதாஸ், திரு. ஜெயராம், சௌ. லோகி மற்றும் அன்னையர்கள் வரவேற்றனர். சாதுவிற்கு பாதபூஜையை விமானநிலையத்திலேயே செய்தனர். சாது அவர்களோடு டோங்காட் வந்தடைந்தார். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.21

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.21 

1998 யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியில் வெளிநாட்டு பக்தர்கள்

சாது, திருமதி. பாரதி உடன் லக்னோவிற்கு லக்னோ எக்ஸ்பிரஸ் மூலம் சனிக்கிழமை அக்டோபர் – 17, 1998 அன்று கிளம்பி அடுத்தநாள் அங்கே சென்றடைந்தனர். சுவாமி ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் தலைவரான திரு. R.K. லால் அவர்களின் மகன் திரு. ராஜேந்திரா, சாது மற்றும் பாரதியை ரயில் நிலையத்தில் வரவேற்று அவர்களை திரு லால் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே குடும்பத்தினர் அனைவரும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். சாது சுவாமி ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் ஜெயந்தி விழாவில் அக்டோபர் 20 அன்று கங்காபிரசாத் ஹாலில் உரையாற்றினார். பூஜ்ய டாட் பாபா, சுவாமி விவேகானந்தா மற்றும் பிற சாதுக்களும் அந்த சபையில் உரையாற்றினர். சனிக்கிழமை, சாது வருண் எக்ஸ்பிரஸ் மூலம், பனாரஸ் சென்றார். திரு. வீரேந்திரா மற்றும் திரு. ரமாபதி ராம் ஸ்ரீவாஸ்தவ் சாதுவை வரவேற்றார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் திரு முல்தானியின் பங்களாவில் பிரம்மாண்ட ராம்நாம் சத்சங்கமும், மாலையில் திரு. ஸ்ரீவாஸ்தவ் அவர்களின் இல்லத்தில் மற்றொரு சத்சங்கமும் நடைப்பெற்றன. சாது யோகி ராம்சுரத்குமார் மற்றும் ராம்நாம் இயக்கம் குறித்து பேசினார். திங்கள்கிழமை சாது பிரயாகையை அடைந்தார் அங்கே திரு. T.S. சின்ஹா அவர்களின் இல்லத்தில் நடந்த சத்சங்கத்தில் பல பக்தர்கள் கலந்து கொண்டனர். புதன்கிழமை அக்டோபர் 28 அன்று, சாது மற்றும் திருமதி பாரதி திரிவேணி சங்கமத்தில் கங்கா ஸ்நானம் செய்தனர். பின்னர் அவர்கள் கங்கா – காவேரி எக்ஸ்பிரஸ் பிடித்து தங்கள் பயணத்தை சென்னைக்கு மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இல்லத்தை அடைந்தனர். ஆர்.எஸ்.எஸ் – ன் சர்சங்கசாலக், பரம பூஜனீய திரு. ராஜேந்திர சிங், சாதுவை அவரது “வந்தே மாதரம்” என்ற நூலுக்காக பாராட்டி எழுதிய கடிதம், அவருடைய பார்வைக்காக காத்துக் கொண்டிருந்தது.

சனிக்கிழமை , நவம்பர் 7 ஆம் தேதி 1998 அன்று, சாது பெங்களூருக்கு பயணித்து, ‘தத்துவ தர்சனா’வின். சமீபத்து இதழுக்கான உள்ளடக்கங்களை உறுதி செய்து, பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தை  ஏற்படுத்துவதற்கான பணிகளை பார்வையிட்டு, பின்னர் சாது சென்னைக்கு நவம்பர் – 11 புதன்கிழமையன்று திரும்பினார். டிசம்பர் – 1, 1998, யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் முழுஅளவில் நடைப்பெற்றன. தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களான திரு டெட்டி கொமல், திரு சுனில் பாஸ்தேவ், திரு. ராஜின் நாயுடு மற்றும் திரு. வெள்ளை சின்னசாமி போன்றோர் வெள்ளிக்கிழமை நவம்பர் – 13 அன்று வந்து சேர்ந்தனர். சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை நவம்பர் – 18 அன்று எழுதினார்: 

“பரமபூஜ்னீய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

இத்துடன் நாங்கள் டிசம்பர் – 1 1998 அன்று நடைபெற இருக்கும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திவிழாவிற்கான அழைப்பிதழை தங்களுக்கு அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த விழா யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால் சென்னை மேற்கு மாம்பலத்தின் கலாமந்திர் மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளியில் நடத்தப்பட இருக்கிறது. வழக்கம்போல் ஆயுஷ் ஹோமம், கணபதி ஹோமம் மற்றும் பூஜைகளோடு அகண்ட ராமநாம ஜபமும் நடத்தப்படும். நாங்கள் இதற்கு பகவானின் ஆசி மற்றும் கருணையை வேண்டி பிரார்த்திக்கிறோம். 

திரு. டெட்டி கொமல்  மற்றும் சில பக்தர்கள் ஏற்கனவே தென் ஆப்பரிக்காவில் இருந்து வந்துவிட்டனர். அவர்கள் புட்டபர்த்திக்கு சென்றுள்ளனர். அவர்கள் இங்கே யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது அகாடமியின். ஒருங்கிணைப்பாளரான திருமதி ஷெரிதா கொமல்  மற்றும் அவரது பிள்ளைகளுடன் 22-11-1998 அன்று வருவார் என எதிர்பார்க்கிறோம். திரு. தயாராம் அஹீர், நமது தென் ஆப்பிரிக்காவின் புரவலர், மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த மாதத்தின் இறுதியில் வருவார்கள். ஜெயந்தி விழாவிற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து தங்களை தரிசிக்க ஆவல் கொண்டுள்ளார்கள். யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மலரான 1998 தத்துவ தர்சனா தற்சமயம் அச்சில் உள்ளது. ஜெயந்திக்கு முன் அவ்விதழ் தயாராகி விடும். நாங்கள் அதன் முதல் பிரதியை தங்களின் காலடியில் சமர்ப்பிக்க வருவதற்கு தங்கள் ஆசியை வேண்டி பிரார்த்திக்கிறோம். பகவானின் கருணையால் தத்துவ தர்சனா வெற்றிகரமாக தனது 15 வருட பயணத்தை பகவானின் காரியத்தில் நிறைவு செய்துள்ளது. நாங்கள்  பகவானின் இந்தப்பணியை, ராம்பிரானின் சேவையில் அணில்களைப் போல தொடர்ந்து செய்துவர, தங்கள் ஆசியை வேண்டுகிறோம்.

உங்களின் கருணை மற்றும் ஆசியினால் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் குருகுல ஆசிரமத்திற்கான பூமிபூஜையை பெங்களூரில் மகரசங்கராந்தி நாளில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். எங்களது மொரீஷியஸ் மற்றும. தென் ஆப்பரிக்க சுற்றுப்பயணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் மொரீஷியஸ் பயணம். பிப்ரவரி 25 முதல் மார்ச் 26 வரை, மற்றும் தென் ஆப்பிரிக்கா பயணமானது மார்ச் 27 முதல் ஜூன் 27 , 1999 வரை என திட்டமிடப்பட்டுள்ளது. நாங்கள் இந்த வெளிநாட்டு பயணத்திற்கான ஆசியை பகவானிடம் வேண்டுகிறோம். 

திருமதி. பாரதி, சிரஞ்சீவி விவேக், சௌ நிவேதிதா மற்றும் அவளது குடும்பத்தினர் தங்களின் நமஸ்காரங்களை உங்களுக்கும், மா தேவகி மற்றும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். 

கிருஷ்ணா கார்ஸில் வெள்ளிக்கிழமை நவம்பர் 20 அன்று வந்தார். சாது, தென் ஆப்பிரிக்காவின் க்ரேடவுனை சேர்ந்த திரு. D.R. அஹீர், டர்பனை சேர்ந்த திருமதி ஷெரிதா கொமல்  போன்றோர் மும்பைக்கு வந்தடைந்தனர் என்ற தகவலை பெற்றார். ‘தத்துவ தர்சனா’வின் 1998 ஆம் ஆண்டு யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மலரானது வண்ணமயமான தத்தாரேயர் படத்தை அட்டைப்படமாக கொண்டு அச்சாகி வந்தது. அது வெளியிட தயாரான நிலையில், சாது பகவானுக்கு, நவம்பர் 27 , 1998 அன்று கடிதம் ஒன்றை எழுதி, தனது விறுவிறுப்பான ஜெயந்தி விழா ஏற்பாடுகள் குறித்து தகவல் அளித்து, ஜெயந்தி மலரின் இரண்டு பிரதிகளையும், பதிவு தபாலில் அனுப்பி, அந்த இதழ்களை ஆசீர்வதிக்கும்படி கோரினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

இந்த சாது மிகுந்த மகிழ்வோடு ‘தத்துவ தர்சனா’வின் 1998 -ன் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மலரை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறான். இது டிசம்பர் – 1 , 1998 அன்று தங்களின் ஜெயந்தி விழாவின் போது வெளியிடப்பட இருக்கிறது. நாங்கள் பகவானின் ஆசியை வேண்டுகிறோம். நமது இதழும் வெற்றிகரமாக 15 ஆண்டுகளை தங்களின் சேவையில் கடந்துள்ளது. இந்த சிறப்பிதழ் குருவின் மகிமை குறித்து பல பெரும் துறவிகள் மற்றும் மகான்களின் கருத்தை தாங்கியுள்ளது. 

திரு டெட்டி கொமல், திருமதி ஷெரிதா கொமல்  மற்றும் அவர்களின் பிள்ளைகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திங்கள்கிழமை காலை இங்கே ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளார்கள். திரு. தயாராம் அஹீர் மற்றும் குடும்பத்தினரை தென் ஆப்பிரிக்காவில் இருந்து விழாவில் பங்கு கொள்ள வந்து சேர உள்ளனர். விழாவிற்கு பின் அவர்கள் இந்த சாதுவுடன் திருவண்ணாமலைக்கு பகவானின் தரிசனம் மற்றும் ஆசியை பெற வருகின்றனர். நாங்கள் எங்கள் வருகையை முன்கூட்டியே தெரிவிக்கிறோம். நாங்கள் பகவானின் தரிசனம் மற்றும் ஆசியை பெற பிரார்த்திக்கிறோம். 

திருமதி. பாரதி, சிரஞ்சீவி. விவேக், சௌ. நிவேதிதா மற்றும் அவளது குடும்பத்தினர் மற்றும் இங்குள்ள அனைத்து பக்தர்களும் தங்கள் நமஸ்காரங்களை பகவானின் புனித பாதங்களில் சமர்ப்பித்து பகவானின் ஆசியை ஜெயந்தி விழாவிற்காக வேண்டுகின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.

இணைப்பு: மேல் குறிப்பிட்டபடி,”   

திரு. டெட்டி, திருமதி. ஷெரிதா மற்றும் அவர்களது பிள்ளைகள், திரு. டெரனஸ் மற்றும் திரு ட்ரிசேன் திங்கள்கிழமை காலையில் வந்தனர். திரு. தயாராம் அஹீர் மற்றும் திருமதி ராதிகா போன்றோர் இரவில் வந்து சேர்ந்தனர். யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவானது செவ்வாய்க்கிழமை டிசம்பர் – 1 , 1998 அன்று வழக்கமான கணபதி, நவக்ரஹ, ஆயுஷ் மற்றும் ஆவஹந்தி ஹோமத்துடன் துவங்கி, குருதேவருக்கான ஒரு சிறப்பு பூஜை காலையிலும் அதனை தொடர்ந்து அகண்ட ராமநாம ஜபமும் நடைப்பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பள்ளிப்பிள்ளைகளும் ராமநாம ஜபத்தில் பங்குபெற்றனர். திரு. D.S. கணேசன் விருந்தினர்களை வரவேற்றார். மாலையில் நடந்த நிறைவு விழா உரையில் திரு. டெட்டி கொமல்  மற்றும் திருமதி. ராதிகா அஹீர் போன்றோர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் நோக்கம் குறித்தும், தென்னாப்பிரிக்காவில் ராமநாம இயக்கத்தின் முன்னேற்றம் குறித்தும், பேசினர். சாது இறுதியாக உரையாற்றி பகவானின் ஆசியை அனைவருக்கும் தெரிவித்து ராமநாம இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் இலக்கை முடிப்பது குறித்த பகவானின் கனவு பற்றியும் குறிப்பிட்டார். 

சாது பகவானுக்கு ஃபேக்ஸ் ஒன்றை வியாழக்கிழமை டிசம்பர் 3 அன்று அனுப்பினார். அதில் சாது தனது திருவண்ணாமலை விஜயம் குறித்தும், தன்னோடு தென் ஆப்பிரிக்கா நண்பர்களும் டிசம்பர் 5 சனிக்கிழமை அன்று வர இருப்பதை தெரிவித்தார். வெள்ளிக்கிழமை அன்று சாது பக்தர்களை ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றார். சனிக்கிழமை காலை அவர்களோடு, திருமதி. பாரதி, சிரஞ்சீவி விவேக், டாக்டர். சுப்பிரமணியம், அவரது மனைவி மற்றும் அவரது மகள்களான ஷோபனா மற்றும் விமலா, ஆகியோருடன், திருவண்ணாமலைக்கு வேனில் சென்று யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தை காலை 10.15 மணிக்கு அடைந்தனர். அங்கே பெரும் கூட்டம் இருந்தது. லீ லோசோவிக் தனது 35 வெளிநாட்டு பக்தர்களோடு அங்கே வந்திருந்தார். அவர்கள் யோகியின் முன்னால் அமர்ந்திருந்தனர். சில பக்தர்கள் பேசியவாறும், சிலர் பாடியவாறும் இருந்தனர். பகவான் சாதுவின் வருகையை கவனித்து, லீ லொசோவிக்கிடம் சாதுவை முன்னுக்கு அழைத்துவந்து தன முன் ஒரு நாற்காலியில் அமரச்செய்யுமாறு கூறினார். பின்னர் பகவான், சாதுவை மேடையில் அமருமாறு கூறினார். யோகி சாதுவிடம் சத்சங்கத்தை தொடருமாறு கூறிவிட்டு, பகவான், மா தேவகி மற்றும் விஜயலட்சுமி ஒரு சிறிய இடைவேளையை எடுத்துக்கொண்டனர். சாது தனது சத்சங்கத்தை உணவு இடைவேளை வரை தொடர்ந்தார். அங்கு குழுமியிருந்த பல பக்தர்கள் சாதுவிடம் ஆசி பெற்றனர். உணவு இடைவேளைக்குப்பின் சாது தென் ஆப்பிரிக்கா பக்தர்களை, பகவான் தனக்கு தீக்ஷை அளித்த பப்பா ராம்தாஸ் குகைக்கு, அழைத்துச் சென்றார். அங்கே சுந்தரம் சுவாமி அவர்களை வரவேற்றார். அதன்பின் சேஷாத்திரி சுவாமி ஆசிரமம், ரமணாச்ரமம் போன்றவைகளை தரிசித்து விட்டு, மீண்டும் அவர்கள் பகவானின் ஆசிரமத்திற்கு வந்தடைந்தனர். அதற்குள் பகவானும் அங்கு வந்து சேர்ந்திருந்தார். நாங்கள் அனைவரும் பகவானின் சிலையை தரிசித்துவிட்டு உணவு கூடத்திற்கு வந்தோம். சாது மற்றும் அவரது குழுவினர் கூட்டத்தின் பின்னால் அமர்ந்திருந்தனர். பகவான், லீ இடம், சாதுவை முன்னால் வருமாறு கூறும்படி, உத்தரவிட்டார். 

ஆனந்தாஸ்ரமத்தின் திரு. ராஜகோபால் அங்கே வந்து பகவானோடு உரையாற்றினார். பகவான் உடனடியாக சாதுவை தன்னருகில் அழைத்து, உத்தரவிட்டார்: “ஆனந்தாஸ்ரமம், சுவாமி சச்சிதானந்தர் ஆசிரமத்திற்கு செய்த 50 வருட சேவையை நினைவு கூற, ஒரு சிறப்பு மலரை வெளியிட இருக்கிறார்கள். அதில் இந்தப்பிச்சைக்காரன் ஒரு கட்டுரையை எழுத வேண்டும் என்று அவர்கள் வேண்டுகிறார்கள். இந்தப்பிச்சைக்காரனுக்கு எழுதும் பழக்கம் இல்லை, தேவகியும் எழுத முடியாது, எனவே இந்தப்பிச்சைக்காரன் சார்பாக நீ எழுத வேண்டும்.  நீ எழுதுவது எதுவாயினும் அது இந்தப்பிச்சைக்காரன் எழுதுவது ஆகும்.” பகவானிடம்  சாது, தனக்கும், ஆனந்தாஸ்ரமத்தின் திரு. ஸ்ரீராம் அவர்கள் இடமிருந்து, இது குறித்த கடிதம் வந்துள்ளதாக கூறினார். இப்பொழுது பகவான் உத்தரவிட, சாது பகவானின் சார்பாக அதனை எழுதுவதாக கூறினார். பகவான் சாதுவிடம் தனது சார்பாக அதனை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றார். பகவான், ராஜகோபாலிடம், தனது சார்பாக சாது கட்டுரையை எழுதி வெகு சீக்கிரம் அனுப்பி வைப்பார் என்றார். 

சாது பகவானிடம் தன்னோடு வந்திருந்த தென் ஆப்பிரிக்கா பக்தர்கள் குறித்து கூறினார். பகவான் எத்தனை பேர் வந்துள்ளார்கள் என வினவினார். சாது பகவானிடம் பத்து பேர்கள் என பதிலளித்தார். பகவான் அவர்கள் எங்கே என வினவினார். சாது அவர்கள் கூட்டத்தின் பின்னால் அமர்ந்திருப்பதாக கூறினார். பகவான் சாதுவிடம் அவர்கள் அனைவரையும் முன்னால் அழைத்துவருமாறு கூறினார். அவர்கள் அனைவரும் முன்னால் வந்தனர். பின்னர் பகவான் அவர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் பெயர், அவர்கள் என்ன செய்கிறார்கள், என்று விசாரித்து அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். அவர் தயாராம் இடம் அவரது குடும்ப பெயரான அஹீர் குறித்து கேட்டார். மேலும் இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்து அவரது முன்னோர்கள் தென் ஆப்பிரிக்கா சென்றார்கள் என வினவினார். சாது அவர்கள் இன்றைய ம.பி. அல்லது உ.பி. மாநிலத்தில் இருந்து சென்றிருக்கக்கூடும் என்றார். பகவான் விமலாவை அவளது சந்தோஷமான மணவாழ்க்கைக்காக ஆசீர்வதித்தார். ஷோபனா ஆனந்த பரவசத்தில் கண்ணீர் சொறிந்தவண்ணம் இருந்தாள். அவளையும் பகவான் ஆசீர்வதித்தார். பகவான் அனைவரையும் ஆசீர்வதித்து கொண்டிருக்கும் போது, அவர்கள் முன் நிவேதிதாவின் மகள் ஹரிப்ரியா என்னும் சிவா திடீரென்று வந்தாள். அவள் தனது தாத்தா, திரு. விஜயராகவன், மற்றும் குழுவினருடன் பெங்களூரில் இருந்து வேனில் வந்ததாக கூறினாள். பகவான் அனைவரையும் அழைத்து, ஒவ்வொருவராக வந்து தனது ஆசியைப் பெற அனுமதித்தார். 

பகவான் பின்னர் தனது கரங்களில், அவர் முன் வைக்கப்பட்டு இருந்த ‘தத்துவ தர்சனா’வின் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மலர் 1998 -ஐ எடுத்து, மா தேவகியின் உதவியோடு, சில பிரதிகளில் தனது கையொப்பத்தை இட்டு, யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தின் நூலகத்திற்காக கொடுத்தார். பின்னர் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்து வழக்கம்போல் வழியனுப்பினார். தென் ஆப்பிரிக்கா மற்றும் பெங்களூரில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் அன்பு காணிக்கைகளை வழங்கினர். பகவான் அந்த காணிக்கைகளை எடுத்து சாதுவின் கரங்களில் திணித்தார். அவை மொத்தம் ரூ. 1055 / – அதனை ஏற்றுக்கொள்ளும்படி யோகி கூறினார். யோகி லீ லோசோவிக்கை அழைத்து அவரது நூலான, “தி டெத் ஆஃப் எ டிஸ்ஹானஸ்ட் மேன்” (The Death Of A Dishonest Man) என்ற நூலின் பிரதியை வழங்குமாறு கூறினார். லீ அந்த பிரதியை வழங்கிய பொழுது, பகவான் மா தேவகியிடம், ரூ. 4000 /- த்திற்கான செக் – ஐ, லீ யிற்கு தருமாறு கூறினார். பின்னர் அந்த புத்தகத்தை பகவான் சாதுவிடம் தந்து, அதன்விலை ரூ. 4000 /- என்றும், சாதுவின் சார்பில் தான் அதற்கான தொகையை கொடுப்பதாகவும் கூறினார். சாது அந்த புத்தகத்தை பகவானின் ஆசியோடு பெற்றார். சாது நாற்காலியில் அமர்ந்தவுடன், ஹரிப்ரியா வந்து அவரது மடியில் அமர்ந்தாள். பகவான் அவளை புன்னகையோடு பார்த்து ஆசீர்வதித்தார். பின்னர் அவள் தனது பாட்டியிடம் சென்றாள். பகவான் சாதுவை மேடைக்கு வந்து உரையாற்றும்படி கூறினார். சாது 20 நிமிடங்கள் , “யோகி, யோகி ராம்சுரத்குமார் மற்றும் ராம்நாம்“ குறித்து பேசினார். பகவான், சாது உரையை முடித்தவுடன், மீண்டும் ஆசீர்வதித்தார். பகவான் சாதுவின், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற இடங்களுக்கான, அனைத்து பயணத்திட்டங்களும் வெற்றியடைய ஆசீர்வதித்தார். யோகி ‘தத்துவ தர்சனா’ இதழின் பிரதிகளை லீ லோசோவிக் மற்றும் அவரது குழுவினர்களுக்கும், பிற பக்தர்களான திரு. D.S. கணேசன், திரு சீத்தாராமன், திரு ஹரிஹரன், திரு ஜெயராமன், திரு மணி, மற்றும் திரு ஞானகிரி கணேசன் ஆகியோர்களுக்கும் வழங்கினார். பகவான் ஹாலில் இருந்து கிளம்பியவுடன் சாது தன்னுடன் வந்த பக்தர்களை அருணாச்சலேஸ்வரர் கோயில் தரிசனத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் ஓட்டல் பிருந்தாவனில், திரு. விஜயராகவன், ஹரிப்ரியா மற்றும் பிறரிடம் விடைப்பெற்றார். சாது நிவேதிதாவிடம் தொலைபேசியில் பேசினார். இரவு உணவிற்குப்பின் சாது மற்றும் தென் ஆப்பிரிக்கா பக்தர்கள் சென்னையை நள்ளிரவில் வந்தடைந்தனர். சாது டாக்டர். சுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினரை அவர்களது இல்லத்தில் விட்டுச்சென்றார். அஹீர் மற்றும் அவரது மனைவி காலையில் விடைப்பெற்றனர். டெட்டி மற்றும் குடும்பத்தினர் சாதுவோடு தங்கினர். 

திங்கள்கிழமை , திரு. டெட்டி மற்றும் குடும்பத்தினர் பெங்களூருக்கு சென்றனர். திரு. லஷ்மிநாராயணன் என்ற பக்தர் ரூ.5000/- செக் மூலம் நன்கொடையாக அனுப்பினார். அடுத்த நாள், லீ லோசோவிக், ஒரு பொட்டலம் காலுறைகளை, சாதுவிற்கு அன்பளிப்பாக, யோகி ராம்சுரத்குமார் உதவியாளர் யோகராஜ் மூலம் அனுப்பி வைத்தார். புதன்கிழமை டிசம்பர் – 9  அன்று திரு. மதிவாணன் என்பவருடன், மொரீஷியஸின் திரு. பழனியாண்டி மற்றும் ஒரு நண்பர் சாதுவை காண வந்தனர். வெள்ளிக்கிழமை , டிசம்பர் – 11 அன்று, சாது, தனது குருவின் ஆணைப்படி, “பணிவெனும் உடையில் தெய்வீகம்“ என்ற தலைப்பில் சுவாமி சச்சிதானந்தர் குறித்து ஒரு கட்டுரை எழுதி, திரு. ஸ்ரீராம் அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி, அவைகளை சனிக்கிழமை அன்று ஆனந்த ஆசிரமத்திற்கு ஃபேக்ஸ் செய்தார். அந்த கட்டுரை சுவாமி சச்சிதானந்தர் , பப்பா ராம்தாஸ் மற்றும் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களிடையேயான யோகி ராம்சுரத்குமாரின்  நெருக்கமான உறவை உணர்த்தியது: 

பணிவெனும் உடையில் தெய்வீகம்

சாது பேராசிரியர். V. ரங்கராஜன்

ஆனந்தாஸ்ரமம் பணிவின் இல்லம் 

“கோயிலுக்கு அருகில், கடவுளுக்கோ தொலைவில்“ என்பது புகழ்பெற்ற ஒரு சொற்றொடர். இந்த எழுத்தாளர் கேரளாவில் பிறந்து, இருபது வருடங்களாக அங்கு வளர்ந்திருந்தபோதிலும், ஒரு போதும் காஞ்சன்காட்டில் உள்ள ஆனந்தாஸ்ரமத்திற்கு, பப்பா ராம்தாஸ் உயிருடன் இருந்தபோது, பயணித்ததில்லை. ஆனால் 1960 களின் இறுதியில் இந்த சாது பப்பாவை சில ஆனந்தாஸ்ரமத்தின் பக்தர்கள் மூலம் அறிந்தான். அவர்கள் சென்னையில் தொடர்ந்து சத்சங்கத்தை நடத்திவந்தனர். எண்பதுகளின் துவக்கத்தில் சாது  எனது குருவான யோகி ராம்சுரத்குமார் அவர்களுடன் தொடர்பில் வந்ததுதான் இந்த சாதுவை தனது குருவின் குருவான பப்பா ராம்தாஸ் குறித்தும் பப்பாவின் அருள் வாரிசு, பூஜ்ய மாதாஜி. கிருஷ்ணாபாய் குறித்தும் மேலும் அறிய வழிவகுத்தது. இருப்பினும் இந்த சாது, “பிள்ளைகளுக்கான யோகா பாடங்கள்“ என்ற நூலை, தென் ஆப்பிரிக்கா டிவைன் லைஃப் சொஸைட்டி 1985 ல் சுவாமி சிவானந்தரின் நூற்றாண்டு விழாவின் பொழுது வெளியிடுவதற்காக, அந்த நூலை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள, தொலைதூரத்தில் உள்ள அந்த நாட்டிற்கு சென்றிருந்த பொழுது தான், பப்பா குறித்தும் மாதாஜி கிருஷ்ணாபாய் குறித்தும் மிக விரிவாக அறிந்தான். தென் ஆப்பிரிக்கா டிவைன் லைஃப் சொஸைட்டியின் தலைவர், சுவாமி சகஜானந்தா, இந்த சாதுவிடம், பாரதத்திற்கு திரும்பியபின், ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்று பூஜ்ய மாதாஜி அவர்களை தரிசிக்குமாறு கூறினார். 

ஆகவே , 1986 ல் இந்த சாது இரண்டு தென் ஆப்பிரிக்கா இளம் பக்தர்களுடன் ஆனந்தாஸ்ரமத்திற்கு பூஜ்ய மாதாஜியை தரிசிக்க சென்றார். நாங்கள் ஆசிரமத்தை அடைந்த உடன் ஒரு வயதான, மெலிந்த உடல் உடைய, சாது எங்களை வரவேற்று தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவர் மிகுந்த எளிமையாகவும், பணிவோடும் அவரது தோற்றத்தில் காணப்பட்டார். இந்த சாது, அவர் ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களில் ஒருவர் என்றே அவரை கருதினார். பின்னரே, தான் சந்தித்த சுவாமி, சுவாமி சச்சிதானந்தர் என்பதை அறிந்து கொண்டார். அவர் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் வலது கரம் என்பதையும், அவர் ஆசிரம நிர்வாகத்தை மேற்கொண்டு வந்ததையும், அறிந்து கொண்டார். அப்பொழுது சாது அவரிடம் இருந்து பெற்ற உத்வேகத்திற்கு அளவேயில்லை. மாதாஜியும் அன்னையின் அன்பை வெளிப்படுத்தினார். அவர் நீண்ட காலம் வெளியே இருந்துவிட்டு வீடு திரும்பிய பிள்ளைகளை கவனிப்பதைப்போல் எங்களை கவனித்துக்கொண்டார். ஆன்மீக வாழ்க்கையின் முதல்பாடம்-– பணிவாகவும், எளிமையாகவும் இருத்தல், அதுவே பேரானந்தம் அடையும் வழி– என்பதை மாதாஜி மற்றும் சுவாமிஜி வாழ்ந்து காட்டி எங்கள்முன் எடுத்துக்காட்டாக இருந்தனர். 

ஓட்டுனர் மீதான அக்கறை 

அடுத்த வருடமே சாது மீண்டும் ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்றார். இந்தமுறை சாது, தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் குழுவுடன், “டிஸ்கவர் இந்தியா டூர்“ ஒன்றினை விமானப்பயணம் மூலம் மேற்கொண்டார். நாங்கள் மங்களூர் விமானநிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆனந்தாஸ்ரமத்திற்கு ஒரு டாக்ஸி மூலம் பயணம் மேற்கொண்டோம். பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா வழக்கம்போல் எங்களுக்கு ஆசிரமத்தில் தங்குவதற்கான குடிலை ஏற்பாடு செய்து தந்ததோடு தனிப்பட்ட முறையில் எங்களின் தேவைகளை கவனித்து கொண்டார். ஒரு குடையோடு அவ்வப்போது நாங்கள் தங்கியிருக்கும் குடிலுக்கு வந்து எங்கள் தேவைகளை அறிந்துகொண்டார். அவர் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து அவரது ஆசியைப் பெற உதவினார். இந்த பயணத்தின் போது சுவாமிஜி சாதுவிடம், ஒரு முக்கிய தகவலான, எனது குரு யோகி ராம்சுரத்குமார் ஆனந்தாஸ்ரமத்தில் பப்பா ராம்தாஸ் மூலம் 1952 ல் தீக்ஷை அளிக்கப்பட்டதைப்பற்றி கூறினார். அது இந்த சாதுவின், “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. சுவாமி பப்பா ராம்தாஸ் அவர்களின் நூல் தொகுப்புகளையும், மறை நிலை உண்மை அறிவதற்கான ஊசல் (Dowsing Pendulam) ஒன்றையும் சுவாமிஜி சாதுவிற்கு பரிசளித்தார். 

நாங்கள் ஆசிரமத்தில் இருந்து கிளம்புகையில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. நாங்கள் மங்களூரில் இருந்து எங்களை அழைத்து வந்த கார் ஓட்டுனருக்காக காத்திருந்தோம். அவர் அதிகாலையில் மங்களூர் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியிருந்தார். ஆனால் அவர் இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லை. நாங்கள் சுவாமி சச்சிதானந்தர் அவர்களிடம் சென்று உதவி கோரினோம். நள்ளிரவாக இருந்தபோதிலும் சுவாமிஜி பிரச்சனையை உணர்ந்து ஆசிரமத்திற்கு அருகே உள்ள டாக்ஸி டிரைவரை அழைத்து எங்கள் பிரச்சனையை தீர்த்தார். ஆனால் மங்களூரிலிருந்து வரவிருந்த டிரைவர் நள்ளிரவு கடந்து வந்து சேர்ந்தார். நாங்கள் சுவாமிஜி ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியை நீக்குவதற்கு தவித்தோம். சுவாமிஜி அந்த லோக்கல் டாக்ஸி ஓட்டுனரை அவசியமின்றி அதிகாலையில் தொல்லை படுத்திவிட்டதற்காக வருந்தினார். நாங்கள் அவரை சந்தித்து எங்களின் திரும்பும் வழியில் தகவல் தெரிவிக்குமாறு எங்களிடம் சுவாமிஜி கூறினார். நாங்களும் அதனை செய்தோம். 

பப்பா மாதாஜியின் செயல்களுக்கு ஆதரவு 

ஏப்ரல் 26, 1988 அன்று, மங்களகரமான சுவாமி ராம்தாஸ் ஜெயந்தி நாளில், இந்த சாதுவிற்கு ராமநாம தாரக மந்திரமான “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்” என்னும் மந்திரம், எனது குரு யோகி ராம்சுரத்குமார் அவர்களால் ஆலமரத்து குகையில், தீக்ஷையாக வழங்கப்பட்டது. அந்த குகை, பப்பா ராம்தாஸ் பல நாட்கள் அங்கே அமர்ந்து தியானம் செய்த காரணத்தால், பப்பா ராம்தாஸ் குகை என்று அழைக்கப்பட்டது. எனது குரு, இந்த சாதுவிடம், இந்த நாமத்தை எல்லாநேரமும் சொல்லுமாறும், அனைத்து செயல்களையும் தன்னிடம் விட்டுவிடுமாறும், கூறினார். அடுத்தவருடம் பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய் மஹாசமாதி அடைந்தபோது, எனது குரு என்னிடம், எனது ஆற்றல் மற்றும் நேரத்தை, பூஜ்ய  மாதாஜி துவக்கிய, 15,500 கோடி ராமநாம ஜெபம் என்ற இலக்கை, உலகின் எல்லா மூலைகளுக்கும் கொண்டு செல்லும் பணியில் செலுத்துமாறு உத்தரவிட்டார். அதன் விளைவாக, சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒரு சிறகான யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், உலக ராமநாம இயக்கத்தை, அதன் தலைமையகத்தை சென்னையாக கொண்டு, துவக்கியது. அதன்பின் இந்த சாதுவின் ஆனந்தாஸ்ரம பயணங்கள் பப்பா மற்றும் மாதாஜியின் பணிகளை செய்யும் தனது இல்லமாக மாறியது. குருவும் சாதுவிடம் எப்போது ஆனந்தாஸ்ரமம் சென்றாலும் அங்கே குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தங்குமாறு கூறுவார். ஒவ்வொரு முறையும் சாது ஏதேனும் பக்தர்களுடனேயே அங்கே பயணம் செய்வார், பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் மற்றும் ஆசிரமத்தின் பிறரும், யோகி ராம்சுரத்குமார் அவர்களின் சிஷ்யருக்கு அளிக்கப்படவேண்டிய மரியாதைகளுடன் சாதுவை வரவேற்றனர். பூஜ்ய சுவாமிஜி சாதுவிற்கு மாலைகள், புத்தகங்கள், கேசட்டுக்கள் இன்னும் பிறவற்றை ராமநாம பிரச்சார பணிகளுக்காக தந்தார். யோகி ராம்சுரத்குமார் அவர்களும் உலக ராமநாம இயக்கப்பணியை பப்பா மற்றும் மாதாஜி அவர்களுக்கு மேற்கொள்ளும் பணியாகவே கருதினார். பூஜ்ய சுவாமிஜியின் கருணை மற்றும் ஆசியால் எனது பணி மிக வேகமாக, குறிப்பாக 1995 ஆம் ஆண்டு டர்பன் உலக ஹிந்து மாநாட்டிற்கு பிறகு, தொடர்ந்த பல தென் ஆப்பிரிக்கா பயணங்களுக்குப்பின், உலகெங்கும் பரவியுள்ளது. இந்த சாது, பிப்ரவரி 1999 ல் மொரீஷியஸிற்கு,  மார்ச் – 18 , 1999 யுகாதி முதல் மார்ச் – 25 , 1999 ராமநவமி வரை நடக்க இருக்கும் ஸ்ரீ ராம்நாம் மஹா யக்ஞத்திற்காக, பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.. 

ஆறுதல் அளிக்கும் சுவாமியின் சமயோசிதம் 

சனிக்கிழமை, 20 ஆம் தேதி நவம்பர் 1993 அன்று, சாதுவிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்தது. அந்தநாளில் சாது பகவானை திருவண்ணாமலையில் சந்தித்தார். பகவான் சாதுவோடு வந்தவர்களை சென்னைக்கு திருப்பி அனுப்பிவிட்டு, சாதுவை தன்னோடு இரவு ‘சுதாமா’ எனும் மா தேவகியின் இல்லத்தில் தங்குமாறு கூறினார். அன்றிரவு பகவான் ஒரு ஆச்சரியமளிக்கும், முக்கியத்துவம் வாய்ந்த, அறிவிப்பை வெளியிட்டார்: “ரங்கராஜா, பப்பா ராம்தாஸ் இந்தப்பிச்சைக்காரனுக்கு தீக்ஷையளித்தப்பின், பப்பா இந்தப்பிச்சைக்காரன் ஆசிரமத்தை விட்டு நீங்க வேண்டும் என விரும்பினார். அவர் இந்தப்பிச்சைக்காரன் ஆசிரமத்தில் இருப்பதை விரும்பவில்லை. அவர் இந்தப்பிச்சைக்காரன் வெளியே சென்று சாதனா செய்வதை விரும்பினார். குருவிற்கும், மாதாஜிக்கும் சேவை செய்யும் வாய்ப்பு சுவாமி சச்சிதானந்தருக்கு  அளிக்கப்பட்டது. அதைப்போல் இந்தப்பிச்சைக்காரன் ரங்கராஜனுக்கு தீக்ஷை அளித்தான். ரங்கராஜன் வெளியே சென்று மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் பணியான ராமநாம ஜப யக்ஞத்தை பரப்பவேண்டும் என்று இந்தப்பிச்சைக்காரன் விரும்புகிறான். ரங்கராஜன் தன் அருகே இருக்க வேண்டும் என இவன் எதிர்ப்பார்க்கவில்லை.” 

அவர் சொன்ன வார்த்தைகளின் அதிர்ச்சியிலிருந்து மீள சில வினாடிகள் தேவைப்பட்டன. ஆனால் இந்த சாது குருவிடம் அவரது வார்த்தைகளுக்கு கீழ்படிவேன் என உறுதியளித்தான். குரு எப்போதும் தன்னுடன் இருப்பார் என்ற உறுதியே தனக்கு போதுமானது என்று கூறினான். “இந்தப்பிச்சைக்காரன் எப்போதும் ரங்கராஜன் உடனிருப்பான்“ என்று குருவும் உறுதியளித்தார். பின்னர் அவர் ஒரு மிகப்பெரிய பணியைசாதுவிற்கு அளித்தார் — மாதேவகியை இந்த உலகிற்கு தனது “ நித்திய அடிமை “ என்று அறிமுகப்படுத்த ஒரு தலையங்கத்தை ‘தத்துவ தர்சனா’ காலாண்டிதழில் எழுதுமாறு பணித்தார். அது மிகச்சிறப்பாக, அடுத்த இதழான 76 ஆவது யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மலரில், எழுதப்பட்டது. குருவே அந்த இதழின் பிரதிகளை நூற்றுக்கணக்கில் பல பக்தர்களுக்கு வினியோகம் செய்தார். மேலும் அவர்களை தினம்தினம் அந்த தலையங்கத்தை அவரது சபையில் வாசிக்கவும் சொன்னார். ஒரு பெரிய அகண்ட ராமநாம ஜப யக்ஞம் ஒன்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால் திருவண்ணாமலை ஓயா மடத்தில் யோகி ராம்சுரத்குமார் முன்னிலையில் ஜனவரி – 1 மற்றும் 2 ஆம் தேதி 1994 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கும் இந்த ‘தத்துவ தர்சனா’ இதழ் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் தலையங்கம் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது. 

இந்த சாது மீண்டும் யோகியின் முன் அடுத்தமாதமே ஒரு முக்கிய பணிக்காக அழைக்கப்பட்டான். குரு, சாதுவிடம், ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி சச்சிதானந்தர் திருவண்ணாமலைக்கு பிப்ரவரி 25 , 1994 அன்று வருகை தந்து குருவை சந்திப்பதோடு அடுத்த நாள் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் அடிக்கல்லை நாட்ட இருப்பதாகவும், சுவாமிஜி சென்னையிலிருந்து காரில் வர இருப்பதன் காரணமாக , சாது சுவாமிஜியுடன் இணைந்து திருவண்ணாமலைக்கு வரவேண்டும்  என்றார். அதன்படி இந்த சாது சென்னை வந்து, மீண்டும் திருவண்ணாமலைக்கு சுவாமிஜி மற்றும் அவரது குழுவினருடன் பயணித்தார். பிப்ரவரி 26, 1994 அன்று திருவண்ணாமலை ஆசிரமத்தின் அடிக்கல் நாட்டப்பட்டப்பின், பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் மற்ற அனைவரும் சுதாமாவில் அமர்ந்திருக்கும் போது, பகவான் யோகி ராம்சுரத்குமார், ஸ்வாமி சச்சிதானந்தர் இடம், சாதுவை சுட்டிக்காட்டி, தான் யாருக்கும் தீக்ஷை அளித்ததில்லை என்றும், ஆனால் ராமநாம தாரக மந்திரத்தை ரங்கராஜனுக்கு தீக்ஷை அளித்ததாகவும் கூறினார். “அப்போது ரங்கராஜன் இந்தப்பிச்சைக்காரனிடம் இனி தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்க, இந்தப்பிச்சைக்காரன் அவனிடம் மாதாஜியின் பணியை பரப்புமாறு கூறினான். ரங்கராஜன் அதனை மிகவும் மும்முரமாக மேற்கொண்டு தனது இதயம் மற்றும் ஆன்மாவை இப்பணிக்காக அர்ப்பணித்துள்ளான்.” யோகிஜி பின்னர் இந்த சாதுவிடம் சில வார்த்தைகள் அவனது பணி குறித்து பேசுமாறு கூறினார். அந்த நேரத்தில் இந்த சாது சுவாமி சச்சிதானந்தரிடம் நகைச்சுவையாக, எப்படி யோகி அவர்களுக்கு பாப்பா தீக்ஷை அளித்தபின், யோகி ஆஸ்ரமத்தில் இருப்பதை பாப்பா  விரும்பாமல், அவரை வெளியே அனுப்பிவிட்டு, பாப்பா மற்றும் மாதாஜியை கவனிக்கும் பணியை சுவாமிஜிக்கு வழங்கினாரோ, அதேபோல்  இந்த சாதுவும் தீக்ஷைக்குப்பின் வெளியே அனுப்பப்பட்டு, மா தேவகிக்கே குருவுக்கு சேவை செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டது என்றான். இருப்பினும் ஆறுதலான விஷயம் என்னவென்றால் யோகி ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பின் ஒருமுறை கூட பாப்பாவை சந்திக்க இயலாது போனதுபோல் அல்லாமல் இந்த சாது தீக்ஷைக்குப்பிறகு பல முறை யோகியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றுவருகிறான் என்பதாகும் என்றும் சாது கூறினான். சுவாமி சச்சிதானந்தர் சமயோசிதமாக, புன்னகைத்தவாறே, சாதுவிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், “பப்பா வெளியுறவுத்துறையை யோகிக்கும், எனக்கு உள்துறையையும் தந்தார். அதேபோல் யோகிஜி உங்களுக்கு வெளியுறவுத்துறையையும், தேவகிக்கு உள்துறையையும் தந்திருக்கிறார்“ என்றார். இந்த சாது, “யோகிஜி எப்போதும் என்னோடு இருப்பதாக உறுதியளித்திருக்கிறார்” என்று கூற, யோகிஜி,  “இந்தப்பிச்சைக்காரன் 1952 ல் பப்பாவிடம் இருந்து விலகினாலும், அவன் எப்போதும் பப்பாவின் இருப்பை அனைத்து நேரத்திலும் உணர்ந்தவாறே இருக்கிறான்” என்றார். சுவாமி சச்சிதானந்தர் இந்த விவாதம் குறித்து சுருக்கமாக, “தந்தையும், தனயனும் ஒன்றே!” என்று கூறி முடித்தார்.

பெரும் குருமார்களின் பாதங்களில் வணங்குதல்கள் 

ஆதி சங்கர பகவத்பாதா தனது விவேக சூடாமணியில் 

துர்லபம் த்ரய மேவைதத் தைவானுக்ரஹ ஹேதுகம் | 

மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம்  மஹாபுருஷ ஸம்ஸ்ரயம் ||”

— “மூன்று விஷயங்கள் அரிதானவை. அவை கடவுளின் கருணையால் கிடைக்ககூடியவை. அவை மனிதப்பிறவி, விடுதலைக்கான வேட்கை, மற்றும் ஒரு உத்தம துறவியின் பாதுகாப்பு”. 

ஸ்திதப்ரக்ஞர்கள் அல்லது சுயம் அறிந்த குருமார்கள் எப்போதும் உள்ளுணர்வு நிலையிலிருந்துகொண்டு, இந்த துன்பப்படும் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் செயல்களை மேற்கொள்பவர்கள் மிகவும் அரிதானவர்கள். அவர்களுடன் இருக்கும் சில வினாடிகளே மனித மனத்தை, உலகியல் சிந்தனைகளில் இருந்து உயர்ந்த வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும். அத்தகைய இரண்டு மகாத்மாக்கள் பரஸ்பரம் சந்தித்து பக்தர்களுக்கு இணைந்து தரிசனம் தருவது என்பது ஆன்மீக தேடல் கொண்ட சாதகர்களுக்கு பேரானந்தம் தருபவை. அதுவே பூஜ்ய சுவாமிஜி சச்சிதானந்தர் மற்றும் பகவான் யோகி ராம்சுரத்குமார், 1952-ல் எனது குருநாதர் ஆனந்த ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து, 40 ஆண்டுகள் கழித்து சந்தித்தபொழுது, நடந்தது. இது இரண்டு நண்பர்கள் அல்லது ஆன்மீக சகோதரர்களின்  சந்திப்பாக மட்டும் இல்லாமல், இரண்டு தீப்பொறிகள்  ஒரே சுடரில் இருந்து தோன்றி அவை  வளர்ந்து பெரும் தீப்பிழம்புகள் ஆக மாறிய பிறகு, ஒன்றோடொன்று இணைந்தது போல் அமைந்தது அந்த நிகழ்வு. அவர்கள் இருவரும் பப்பா மாதாஜியின் எல்லையற்ற அருளாசியின் வெளித்தோற்றமாக தென்பட்டனர். யோகிராம்சுரத்குமார் ஆசிரமத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும், பப்பா மாதாஜியின் பணி  ஒரு புதிய தோற்றமாக உருவெடுப்பதை உணர்ந்தனர். அந்த இரு குருமார்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளிக்காட்டிய எளிமை மற்றும் கருணை உணர்வு அங்கு குழுமியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பலமணிநேரம் சுவாமிஜியின் கரங்களை யோகி ராம்சுரத்குமார் ஒரு குழந்தை தந்தையின் கரத்தை பற்றியிருப்பதைப்போல் பற்றியிருந்தார். சுவாமிஜியும், ஒரு அறியாத குழந்தை தனது தாய் தனது  கரங்களைப் பற்றி இருப்பதுபோல் இருந்தார். 

தெய்வீகத்தின் வழிகள் மிகுந்த மர்மமானவை. கீழ்நிலையில் உள்ள அமீபா முதல் உயர்ந்த நிலையில் உள்ள மனித இனம்வரையிலான  பரிணாம வளர்ச்சியின் இயல்திட்டவாதம் இறுதி நிலையை அடைவதற்கு வழிகாட்டி நட்சத்தரங்களாக பல தீர்க்கதரிசிகள் விடிவெள்ளியாக வந்திருக்கின்றனர். உயரே நோக்குபவர்களுக்கு அவர்கள் கண்ணில் பட்டு வழிகாட்டுவார்கள். அந்த ஆசாரியர்களின் அனுக்கிரஹம் எப்பொழுதும் நமக்கு கிட்டட்டும். எனது குருவான யோகி ராம்சுரத்குமார் அவர்களின் உத்திரவு மற்றும் வழிக்காட்டுதலின்படி,  அடியேன் எழுதும் இந்த வாழ்த்து மடல், எனது குருவின் சார்பாகவும், இந்த சாதுவின் சார்பாகவும், அடியேனின் சாஷ்டாங்க நமஸ்காரங்களை பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டு, ஆனந்த் ஆசிரமம் மூலமாக, பிரியமான பப்பாவுக்கு  அவர் ஆற்றி வந்துள்ள சேவை 50 ஆண்டுகள் நிறைவடைகின்ற இந்த வேளையில் பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.

( சுவாமி சச்சிதானந்தரின் அர்ப்பணிப்பின் பொன்விழா ஆண்டுமலர் ஆனந்தாஸ்ரமம் காஞ்சன்காடு ) 

இந்த சாதுவின் கட்டுரையை ஏற்று அதனை பாராட்டி ஆனந்தாஸ்ரமத்தின்  திரு. ஸ்ரீராம்,  சாதுவிற்கு எழுதிய கடிதத்தில், “நாங்கள் உங்கள் அன்பான கடிதத்துடன், பூஜ்ய சுவாமிஜியின் சேவையின் பொன்விழா ஆண்டினை கௌரவிக்கும. வகையில் நீங்கள் எழுதியுள்ள அருமையான கட்டுரையை பெற்றுள்ளோம். எத்தகைய உயர்ந்த எண்ணம், அன்பு மற்றும் பாசத்தை பூஜ்ய யோகிஜி மஹராஜ் நமது சுவாமிஜியிடம்  வைத்திருக்கிறார் என்பது குறித்த ஒரு அரிய பார்வையை நீங்கள் எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள்”  என்று கூறியுள்ளார். 

சனிக்கிழமை, டிசம்பர் – 12 அன்று சாது பெங்களூருக்கு லால்பாக் எக்ஸ்பிரஸ் மூலம் சென்றார். அங்கே சாதுவை திரு. டெட்டி மற்றும் சிரஞ்சீவி. விவேக் போன்றோர் வரவேற்றனர். நாங்கள் கிருஷ்ணராஜ புரத்தில் பாரதமாதா குருகுல ஆசிரமம் கட்டப்பட இருக்கும் இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றோம். திங்கள்கிழமையன்று திரு. டெட்டி மற்றும் குடும்பத்தினர், சிரஞ்சீவி். விவேகானந்தன் மற்றும் சாது குர்லா எக்ஸ்பிரஸ் மூலம் புனேவிற்கு சென்று, செவ்வாய்க்கிழமை, பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் அவர்கள் இல்லத்தை அடைந்தோம். பேரா. G.C. அஸ்நானி , திரு.M.B. ஜோஷி , திரு. மிலண்ட் ஏக்போடே மற்றும் பிற பக்தர்கள் சாதுவை புதன்கிழமை அன்று சந்தித்தனர். சாது பேராசிரியர் திரு G.C. அஸ்நானி அவர்களின் பங்களாவிற்கு திரு விவேக் மற்றும் தென் ஆப்பிரிக்கா பக்தர்களுடன் வியாழக்கிழமை சென்றார். மாலையில், சாது, தீனதயாள் கூட்டுறவு சங்க காலனியில், சத்ய நாராயண கதை நிகழ்ச்சியில், உரையாற்றினார். வெள்ளிக்கிழமை திரு. டெட்டி மற்றும் குடும்பத்தினர் சாதுவிடம் விடைப்பெற்று மும்பைக்கு சென்று, தென் ஆப்பிரிக்கா பயணித்தனர். சாது மற்றும் விவேக், பூஜ்ய தபஸ்வி பாபா மற்றும் புனேவில் உள்ள  பக்தர்களிடம் விடைப்பெற்று, சென்னைக்கு மும்பை – சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் சனிக்கிழமையன்று கிளம்பி, டிசம்பர் – 20 ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்தனர். 

சாது டிசம்பர் – 21 திங்கள்கிழமை அன்று, திருவல்லிக்கேணி சுப்பிரமணிய ஐயர் கல்யாண மண்டபத்தில், சுவாமி ஐயப்பன. பக்தர்களிடம் உரையாற்றி, அவர்களின் சபரிமலை யாத்திரைக்கு வாழ்த்தினார். சாது, டிசம்பர் 24 , வியாழக்கிழமை அன்று, பெங்களூரில் இருந்து வெளி வரும், “எமினன்ஸ்” என்ற மாத பத்திரிக்கைக்கு ஒரு நேர்காணல் தந்தார். அதில் தேசீய ஒருமைப்பாட்டிற்கு கிறிஸ்துவ மதமாற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல்களை பற்றி விளக்கினார். டிசம்பர் – 29, 1998 செவ்வாய்க்கிழமை அன்று, திரு  அஸ்வினி குமார், சாதுவை, எஃப். எம். வானொலியில், “நம்பிக்கை மற்றும் பிரார்த்தனையின் ஆற்றல்“ என்பது பற்றி நேர்காணல் நடத்தினார். சாது, தனது குருநாதர் யோகி ராம்சுரத்குமார், அவரது தந்தை மற்றும் நாமஜெபத்தின் வலிமை மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கை குறித்து, சிறப்பான மேற்கோள்களுடன் பேசினார். 


சாது, மா தேவகி , பகவான் மற்றும் சுவாமி சச்சிதானந்தா

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் அடிக்கல் நாட்டு விழாவில்

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் அடிக்கல் நாட்டு விழாவில்

பக்தர்களுடன்

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.20

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.20 

பாரதமாதா குருகுல ஆசிரமம் கட்டுமானத்தை ஆசீர்வதித்த பகவான்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பணியை வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பிய பிறகு சாது புதன்கிழமை, மார்ச் 11, 1998, அன்று, பகவானுக்கு  கடிதம் ஒன்றை எழுதினார்: 

“பரமபூஜனீய  ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் இந்த சாது 7-3-98 சனிக்கிழமையன்று மிகவும் பாதுகாப்பாக மூன்றுமாதக்கால நீண்ட வெற்றிகரமான தென் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துவிட்டு திரும்பினான். நீங்கள் தொலைதூர நிலத்தில் எங்களின் விவரமான பணி குறித்த தகவல்களை பெற்றிருப்பீர்கள் என நான் நம்புகிறேன். 

பூஜ்ய சுவாமி சச்சிதானந்தாவும் தென் ஆப்பிரிக்கா நண்பர்கள் மூலமாக தகவல்களை பெற்றார். அவரும் தனது பாராட்டுதல்களை கடிதம் மூலம் பாரதிக்கு அனுப்பியிருந்தார், அதன் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த சாது 13-3-98 வெள்ளிக்கிழமையன்று உங்கள் தரிசனத்தை பெற விரும்புகிறான். உங்கள் தரிசனத்திற்கும், ஆசிக்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

சாது தனது திருவண்ணாமலை பயணத்தை அதிகாலையில் காரில் மேற்கொண்டார். திரு மோகன், திரு ஸ்ரீதர் மற்றும் திருநெல்வேலி ராமநாம இயக்க ஒருங்கிணைப்பாளர், திரு S.G. பத்மநாபன், சாதுவோடு இணைந்தனர். அவர்கள் ஆசிரமத்தை அடைந்தபோது அங்கே புகழ்பெற்ற திரைப்பட நடிகரான திரு S.V. சேகர், பகவான் தரிசனத்திற்காக காத்திருந்தார். அனைவரும் தரிசன ஹாலில் அமர்ந்து ராமநாமத்தை ஜபித்தனர். பின்னர் பகவான் சாது மற்றும் அவரது நண்பர்களை அழைத்தார். சாது அவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். பகவான் தென் ஆப்பிரிக்காவின் தேசீய கீதம் அச்சிடப்பட்ட ஒரு அழகான கோப்பையை சாது பகவானுக்கு பரிசளித்தார். 

தென்னாப்பிரிக்கா தேசிய கொடியுடன் கோப்பை

சாது, தேசீய கீதத்தின் ஒரு பிரதியை பகவானிடம் கொடுத்தார். பகவான் சாதுவிடம் தென்னாப்பிரிக்க மொழியிலும் ஆங்கில மொழிபெயர்ப்புடனும் இருந்த அந்த தேசீய கீதத்தை படிக்கச்சொன்னார். சாது பகவானிடம் அந்த தேசீய கீதமானது தென் ஆப்பிரிக்காவின் சகோதரி நிவேதிதா அகாடமியின் துவக்கவிழாவில் பாடப்பட்டது என்றார். சாது பகவானிடம் தனது தென் ஆப்பிரிக்கா பயணத்தின் புகைப்பட ஆல்பங்களைக் காட்டினார். பகவான் அதனை பார்த்தார். பகவான் சாதுவிடம் தென் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் பிற இடங்களில் இருக்கும் இந்து மக்கள்தொகை குறித்து கேட்டார். சாது பகவானிடம் ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் இந்து மக்கள்தொகை பற்றி விரிவாக விளக்கினார். பகவான் சகோதரி நிவேதிதா அகாடமி தனது சிறகுகளை தென் ஆப்பிரிக்காவில் விரித்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, “அனைத்தும் தந்தையின் கருணை“ என்றார். சாது பகவானிடம் அனைத்து ஆப்பரிக்க இந்து மாநாடு குறித்து கூறினார். பகவான் மாநாட்டின் நாட்கள் குறித்து விசாரித்து, அதனை ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் ராபின் தீவு சிறைச்சாலை புகைப்படங்களை காட்டினார். அங்கே திரு. நெல்சன் மண்டேலா சிறை வைக்கப்பட்டிருந்த சேதியை கூறினார். பகவான் அதனை கூர்ந்து கவனித்தார். பகவான் தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பிரதிநிதியாக இருந்த, மாண்புமிகு V.S. ஸ்ரீனிவாச சாஸ்திரி குறித்து விசாரித்தார். சாது பகவானிடம் க்ரேடவுன் பள்ளிக்கு திரு. சாஸ்திரி அவர்கள் அடிக்கல் நாட்டிய பெயர் பலகைகளின் புகைப்படங்களை காட்டினார். பகவான் சாதுவிடம் அந்த பலகையில் எழுதப்பட்டிருந்தவைகளை படிக்குமாறு சொல்லியதோடு தான் சாஸ்திரியின் தென் ஆப்பிரிக்கா சேவைகளை அறிந்து கொள்ள விரும்புவதாக கூறினார். தென் ஆப்பிரிக்கா முழுவதும் வெற்றிகரமாக பயணித்து, சாது, ராம்நாம இயக்கத்தை பரப்பி வருவது குறித்து தனது மகிழ்ச்சியை பகவான் தெரிவித்து சாது மற்றும் அவரது நண்பர்களுக்கும், வாழைப்பழங்களை  எடுத்து தோல் உரித்து பிரசாதமாக வழங்கினார். யோகி சாதுவோடு வந்த பக்தர்களை ஆசீர்வதித்தார். பக்தர்கள் பகவான் மற்றும் சாதுவை தென் ஆப்பிரிக்காவின் தேசீய கீதம் இருக்கும் கோப்பையோடு புகைப்படங்களை எடுத்தனர். அன்னை ராஜேஸ்வரி, தான் பகவானிடம் சாது இன்று வருகிறார் என்று கூறிய பிறகு, இன்று காலை முதலே பகவான் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்ததாகவும், “எனது தந்தை ரங்கராஜனை ஆசீர்வதிக்கிறார்” என்று கூறியதாகவும் சாதுவிடம் பகிர்ந்தார். பகவான் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை அவர் கிளம்பும் முன் ஆசீர்வதித்து தந்தார். 

கோடி ராமநாம ஜப யக்ஞம் உலக ராமநாம இயக்கத்தின் பக்தர்களால் நீலகிரியில் முடிவு செய்யப்பட்டது. சாது அந்த தகவலை நீலகிரியின் ஒருங்கிணைப்பாளரான திரு. தங்காடு மோகன் மூலம் பெற்றார். சாது பகவானிடம் இந்த நிகழ்ச்சி குறித்து மார்ச் 26 அன்று ஒரு கடிதம் மூலம் தெரிவித்தார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

இந்த சாது நாளை ( மார்ச் 27 ) அன்று கோயம்புத்தூருக்கு கோவை எக்ஸ்பிரஸ் மூலம் பயணிக்க இருக்கிறான். உதகமண்டலத்தில் ஒரு கோடி ராமநாம ஜப யக்ஞத்தை இந்த சாது தலைமை தாங்க இருக்கிறான். ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸின் சேர்மேன் மற்றும் M.D., பிரிகேடியர் சைதன்ய பிரகாஷ் V.S.M., மார்ச் 28, 1998, காலை 10.00 மணிக்கு துவக்கி வைக்க இருக்கிறார். பத்துநாள் ஜப யக்ஞம் நமது ராமநாம ஜப யக்ஞ ஒருங்கிணைப்பாளரான தங்காடு திரு. B. மோகன் மூலம் நடத்தப்பட இருக்கிறது. 

காலம்சென்ற திரு.D.S.சிவராமகிருஷ்ணன் அவர்களின் பேரனும் நமது கோயம்புத்தூர் ராமநாம இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான  திரு S. ஹரிஹரன் அவர்களின் இல்லத்தில் மார்ச் 29 அன்று சத்சங்கம் ஒன்று நடக்க இருக்கிறது. இந்த சாது அங்கு நடக்க இருக்கும் ராமநாம சத்சங்கத்தில் உரையாற்ற இருக்கிறான். இந்த சாது மார்ச் 30 அல்லது 31 அன்று சென்னைக்கு திரும்புவான் என நம்புகிறான். 

நாங்கள் பகவானின் ஆசியை இந்த நிகழ்ச்சிகளின்ன் வெற்றிக்கு வேண்டுகிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்.” 

சாது கோவைக்கு ஜனவரி 27 ஆம் தேதி கிளம்பி சென்றார். திரு. S. ஹரிஹரன் சாதுவை வரவேற்று தனது காரை அவரிடம் தந்து அடுத்தநாள் உதகமண்டலம் பயணிக்க ஏற்பாடு செய்தார். கோடி ராமநாம ஜப யக்ஞம் H.P.F. கோயிலில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பிரிகேடியர் சைதன்யபிரகாஷ் யக்ஞத்தை துவக்கி வைத்தார். சாது கூட்டத்தினரிடையே பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அருளாசியுடன் துவக்கப்பட்ட உலக ராமநாம இயக்கம் குறித்து பேசினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமநாமத்தை நாள் முழுவதும் ஜபித்தனர். சாதுஜி மாலையில் பக்தர்களிடம் மீண்டும் உரையாற்றி, ஜப யக்ஞம் வெற்றிகரமாக முன்னேற பகவானின் ஆசிகளை தெரிவித்தார். இரவே சாது கோயம்புத்தூர் திரும்பினார். ராமநாம ஜப யக்ஞம் ஒன்று ஞாயிற்றுக்கிழமையன்று கோயம்புத்தூரில் திரு ஹரிஹரனால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கோவை மற்றும் சேலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை சாது சென்னைக்கு கோவை எக்‌ஸ்பிரஸ் மூலம் திரும்பினார். ஏப்ரல் – 5 , ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை கே.கே. நகரில் அய்யப்பன் கோவிலில் அகண்டராம நாம ஐபம் ராமநவமியை முன்னிட்டு நடத்தப்பட்டது. திரு. T.K. அஸ்வினிகுமார் சாதுவை, அனைத்திந்திய வானொலி ஃஎப்.எம்.-ல், செவ்வாய்க்கிழமை. தமிழ் புத்தாண்டு தினம், ஏப்ரல் – 14 அன்று, பேட்டி கண்டார். சாது, அந்த நாளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி, பகவானின் ஆசியை நிகழ்ச்சி கேட்பவர்களுக்கு தெரிவித்தார். ஏப்ரல் 21 அன்று சாது ஆசிரமத்தை தொடர்பு கொண்டு, அடுத்தநாள் பகவானைக காண வருவதைப்பற்றி தெரிவித்தார். 

புதன்கிழமை, ஏப்ரல் 22, 1998 அன்று, திரு. ரவின் ரகுநன்னன் மற்றும் திரு. நரேன் ரகுநன்னன் ஆகிய, தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள், சாதுவோடு திருவண்ணாமலைக்கு காரில் சென்று, ஆசிரமத்திற்கு காலையில் சென்று சேர்ந்தனர். பகவான் அங்கே காரில் வந்து இறங்கியவுடன், சாது பகவானை வணங்கினார். பகவான் சாதுவை தனது அருகே பிரார்த்தனை கூடத்தில் அமரவைத்து ராம்நாமத்தை முன்னடத்தி ஜபிக்குமாறு கூறினார். நாமஜபம் நிறைவேறியபின், சாது, தென் ஆப்பரிக்க பக்தர்களை பகவானிடம் அறிமுகப்படுத்தினார். மேலும் சாது  பகவானிடம் க்ரேடவுனின் விஷ்ணு மந்திரை சேர்ந்த திரு ஓரி அவர்கள் அனுப்பிய கடிதம் ஒன்றை பகவானிடம் சேர்ப்பித்தார். திருமதி நரேன் அனுப்பிய இனிப்பு பொட்டலங்களையும் தந்தார். லெனேசியா யுவக் சங்கின் நினைவு மலர், ஹனுமன் சாலீஸா, மற்றும் சாது தயாரித்து சகோதரி நிவேதிதா அகாடமியின் தென்னாப்பிரிக்க கிளை ஜோஹனஸ்பர்கில் அச்சிட்ட, இந்துயிசம் குறித்த பாடங்கள், போன்றவற்றை பகவானிடம் சமர்ப்பித்தனர். பகவான் அவைகளை பார்வையிட்டு, பாடங்களின்  இறுதி அத்தியாயமான ஜெயினிஸம் என்பதை வாசிக்குமாறு சாதுவிடம் கூறினார். அந்த அத்தியாயத்தை படித்து முடிக்க 40 நிமிடங்கள் ஆகின. பகவான் அதனை ஆழமாக ஆர்வத்தோடு கேட்டார். பின்னர் யோகி ரவீன் மற்றும் நரேன் இருவருக்கும் ஹனுமான் சாலீசா நாட்காட்டியை பரிசளித்தார். பின்னர் அவர் திரு ஓரி அவர்கள் கவனித்துக் கொள்ளும் விஷ்ணு கோவில் குறித்து விசாரித்தார். யோகி சாதுவிற்கும், அவரது விருந்தினர்களுக்கும் பழங்களை வழங்கினார். யோகி நரேன் மற்றும் ரவீன் போன்றோர் மண்டபத்தின் உள்ளே படம் எடுக்க அனுமதித்தார். சாது பகவானிடம் தனது கென்யா பயணத்திட்டம் பற்றி குறிப்பிட்டார். பகவான் சாதுவிடம் நீ கென்யாவிற்கு முதன்முறையாக பயணிக்கிறாயா என்று கேட்டார். சாது ஆம் என்று பதில் அளித்தார். அவர் சாதுவை வெற்றிகரமான பயணத்திற்கு ஆசீர்வதித்தார். அவர் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து வழக்கம்போல் ஆசீர்வதித்து தந்தார். சாது, பகவானிடம் விடைபெற்ற பின், பக்தர்களை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். ரமணாச்ரமம், சேஷாத்ரி ஆசிரமம் போன்ற இடங்களுக்கும் சென்று பின்னர் அவர்கள் திருப்பதிக்கு சித்தூர் வழியாக பயணித்து இரவில் அங்கு சென்று அடைந்தனர். ஏப்ரல் 23, வியாழக்கிழமை காலையில் ஸ்ரீ பாலாஜியின் தரிசனத்தை பெற்றபின்னர் அவர்கள் திருத்தணி வந்து, அதன்பின் சென்னைக்கு மதியம் வந்து சேர்ந்தனர். தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் அடுத்தநாள் காலை சாது மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விடைப்பெற்று சென்றனர். 

சாதுஜியின் உரையானது செவ்வாய்க்கிழமை, மே 12 , 1998 அன்று சான்றோர் சிந்தனை என்ற நிகழ்ச்சிக்காக அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. திரு. சக்தி ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. T.K. அஸ்வினிகுமார் சாதுவை AIR ஸ்டூடியோவில் வரவேற்றனர். சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை அடுத்தநாள் எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

இந்த சாது பகவானிடம் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்வது யாதெனில், சென்னை – A வானொலி நிலையம் அவர்களது “சான்றோர் சிந்தனை” என்ற நிகழ்ச்சிக்காக இந்த சாதுவின் உரையை 5 நிமிடங்களுக்கு தினமும் காலை 6 மணிக்கு ஜூன் 1 முதல் 5 வரை ஒலிபரப்ப உள்ளது. இந்த சாது பக்கிம் சந்திர சாட்டர்ஜி,  சுவாமி விவேகானந்தர், சுவாமி ராம்தீர்த்தா, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் சகோதரி நிவேதிதா போன்றோர்களின் தேசப்பற்று குறித்த சேதிகள் பற்றி பேசினான். நேற்று மாலை இதற்கான ஒலிப்பதிவு சென்னை வானொலி நிலையத்தில் நடைப்பெற்றது. இந்த சாது பகவான் இதனை கேட்டு ஆசீர்வதிக்க வேண்டுமென விரும்புகிறான். 

இந்த சாது மே 25 முதல் 30 ஆம் தேதி வரை மைசூரின் தியாசஃபிகல் ஆர்டர் ஆஃப் சர்வீஸில், “நாரத பக்தி சூத்திரம்“ மற்றும் “இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்“ என்ற தலைப்புகளில் தொடர் உரை ஆற்ற இருக்கிறான். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு நாங்கள் பகவானின் ஆசியை வேண்டி பிரார்த்திக்கிறோம். 

புனேவின் பூஜ்ய தபஸ்வி பாபா இந்த சாதுவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் நமது கலாச்சாரம், பாரம்பரியம், மதம், வேதம் போன்றவற்றை நமது நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள நம் சகோதரர்களுக்கு கற்பிக்க, குருகுலத்தை அமைப்பது குறித்து எழுதியுள்ளார். இத்தனை வருட காலமாக நாங்களும் பகவான் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தை ஒரு குருகுல அமைப்பில் நிறுவுவதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டிருந்தோம். நாங்கள் இந்த நீண்ட நாள் கனவை நிறைவேற்றுவதற்கான தீவிரமான முயற்சிகளில் இறங்க இருக்கிறோம் . இத்துடன் பூஜ்ய பாபாஜி அவர்களின் கடிதமும் நமது அறிக்கையும், உடன் இணைக்கப்பட்டுள்ளன.  ‘தத்துவ தர்சனா’ 14 வது ஆண்டு மலர் தற்சமயம் அச்சில் உள்ளது. அதில் இவை இடம்பெறுகின்றன. நாங்கள் எங்களது முயற்சிகளின் வெற்றிக்கு தங்கள் ஆசிகளை வேண்டுகிறோம். நமது சகோதரி நிவேதிதா அகாடமியில் இப்பொழுது ஃபேக்ஸ் மெஷின் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாங்கள் பென்டியம் கம்யூட்டர் ஒன்றை நமது சென்னை மையத்தில் வாங்க உள்ளோம். நாங்கள் ஏற்கனவே வைத்துள்ள கம்யூட்டரை எங்களது பெங்களூர் மையத்தில் நமது பதிப்பக பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். 

சிரஞ்சீவி விவேகானந்தா மும்பைக்கு நேற்று காலை அவனது கம்பெனி தொடர்பான பணிக்காக விமானத்தில் சென்றுள்ளான். அவன் அங்கே ஒரு மாதத்திற்கு பணி செய்ய உள்ளான். அவன் உங்கள் ஆசியை வேண்டினான். திருமதி. பாரதி இங்கிருக்கிறாள், திருமதி. நிவேதிதா பெங்களூரில் இருக்கிறாள். இருவரும் தங்களது  நமஸ்காரங்களை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். நிவேதிதாவின் குழந்தையான சிவா என்கிற ஹரிப்ரியா , பேச துவங்கி விட்டாள் , அவள் தங்களை, “உம்மாச்சி தாத்தா“ என்றழைக்கிறாள். அவளுக்கும் தங்களின் ஆசி வேண்டும். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி.” 

சாதுவின் சகோதரரான திரு. V. லக்ஷ்மிகாந்தன் அவர்களின் சஷ்டியப்தபூர்த்தி விழா திங்கள்கிழமை மே 18 அன்று நடைப்பெற்றது. ‘தத்துவ தர்சனா’ இதழ்கள் தயாராகின. லூகாஸ் டி.வி.எஸ்.-ன் திரு. ஸ்ரீதர் என்ற பகவானின் பக்தர் ‘தத்துவ தர்சனா’வை  பகவானிடம் எடுத்துச் செல்வதாக கூறினார். சாது பகவானுக்கு மே – 21 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

இந்த சாது ‘தத்துவ தர்சனா’வின் 14 வது ஆண்டு மலர் 1998 இதழ்களை, சென்னையை சேர்ந்த பக்தர்கள், திரு G.V. ஸ்ரீதர், திரு ஆனந்தன், திரு பார்த்தசாரதி மற்றும் திரு கண்ணன் ஆகியோர்கள் மூலமாக அனுப்புகிறேன். அது இந்த சாதுவின் தென் ஆப்பிரிக்காவின் பயணம் பற்றி பதிவு செய்துள்ளது. இதனை தங்கள் புனிதமான பாதங்களில் சமர்ப்பித்து வெளியிட நாங்கள் உங்கள் ஆசிகளை வேண்டுகிறோம். 

இந்த சாது 23 – 5 – 1998 அன்று, அதிகாலையில், மைசூர் செல்லும் வழியில் பெங்களூர் செல்ல திட்டமிட்டுள்ளான். அங்கே மைசூரில், ‘நாரத பக்தி சூத்திரம்’ மற்றும் பாரதீய தர்சனா போன்றவற்றை தொடர் உரையாக தியாசஃபிகல் ஆர்டர் ஆஃப் சர்வீஸில் 26-5-1998 முதல் 30-5-1998 வரை நிகழ்த்த இருக்கிறான். இத்துடன் அழைப்பிதழின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள, பகவானின் பக்தர்கள், நிகழ்ச்சியின் வெற்றிக்கு உங்களுடைய ஆசிகளை வேண்டுகிறார்கள். 

இந்த சாதுவும் பகவானிடம் மைசூர் மற்றும் சென்னை பக்தர்களை ஆசீர்வதிக்குமாறு பிரார்த்திக்கிறான். இந்த சாது மைசூரில் இருந்து திரும்பிய பிறகு தங்கள் தரிசனத்தை பெற வருவான் என நம்புகிறான். 

சென்னை -I வானொலி நிலையம், இந்த சாதுவின் உரையை, “சான்றோர் சிந்தனை“ என்ற நிகழ்ச்சியில், 1-6-1998 முதல் 5-6-1998 வரை, காலை 6 மணிக்கு ஒலிபரப்ப இருக்கிறது. நாங்கள், பகவான் இதனை கேட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம். 

சிரஞ்சீவி விவேக் மும்பையிலிருந்தும், சௌ. நிவேதிதா பெங்களூரில் இருந்தும், திருமதி பாரதியும், தங்கள் நமஸ்காரங்களை பகவானுக்கு தெரிவிக்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”. 

சாது மே 23 சனிக்கிழமை அன்று பெங்களூருக்கும், ஞாயிற்றுக்கிழமையன்று மைசூருக்கும் சென்று சேர்ந்தார். திரு. பிரபாகரன் சாதுவை வரவேற்றார். சாது, மே – 25 , 1998, முதல் மகாஜன உயர்நிலை பள்ளி வளாகத்தில், தனது தொடர் உரைகளை, “நாரத பக்தி சூத்திரம்“ பற்றி காலையிலும், “பாரதீய தர்சனங்கள்“ பற்றி மாலையிலும் நடத்தினார். புதன்கிழமை முதல் ‘நாரத பக்தி சூத்திரம்’ வகுப்புகள் திரு. கோபாலகிருஷ்ண ஷெட்டி அவர்கள் இல்லத்திலும், “பாரதீய தர்சனங்கள்“  மகாஜன உயர்நிலை பள்ளியிலும் நடைப்பெற்றன. புதன்கிழமை முற்பகலில் சாது யோக நரசிம்மர் கோயில் துவக்கவிழாவில் கலந்து கொண்டார். பாரதீய தரிசனங்கள் பற்றிய இறுதி உரை மே – 30 லும் , நாரத பக்தி சூத்திரம் இறுதி உரை மே – 31 லும் நடைப்பெற்றது. சாது பெங்களூருக்கு மே – 31 அன்று திரும்பினார். பெங்களூர், கிருஷ்ணராஜபுரத்தில், திரு. சந்துரு என்பவரோடு, பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்திற்கான கட்டிடங்கள் அமைக்க நிலம் வாங்குவது குறித்த முதல்கட்ட விவாதம் நடைப்பெற்றது. சாது சென்னைக்கு செவ்வாய்க்கிழமை ஜூன் – 2 அன்று திரும்பினார். அவர் பகவானுக்கு கடிதம் ஒன்றை ஜூன் – 15 அன்று, பெங்களூரில். ஆசிரமத்தை பெங்களூரில் அமைப்பதற்கான அனுமதி மற்றும் ஆசியை கோரி கடிதம் ஒன்றை எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் எங்களது மைசூர் நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது. நாங்கள் அங்கே சகோதரி நிவேதிதா அகாடமியை நிறுவ இருக்கிறோம் . நாங்கள் சென்னை திரும்பும் முன் பெங்களூரில் தங்கினோம். நாங்கள் பெங்களூரில் ஒரு பென்டியம் கம்யூட்டரை நிறுவியுள்ளோம். நாங்கள் செரிப்ரா 486 கம்யூட்டரை சென்னைக்கு மாற்ற உள்ளோம். இது நமது ‘தத்துவ தர்சனா’ மற்றும் பிற பதிப்புக்களை வெளியிடுவதை விரைவாக்கும். 

பெங்களூரில் ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ஆண்டவன் சுவாமி அவர்களின் பக்தர், பெங்களூருக்கும்,  வைட் பீல்டுக்கும் இடையே உள்ள கிருஷ்ணராஜபுரம் அருகே, ஸ்ரீனிவாசா நகர் என்ற பெயரில் ஒரு ஹவுஸிங் காலனியை அமைத்து வருகிறார். அவர் நமக்கு, 35’×50’ என்ற அளவுகளில் உள்ள இரண்டு நில மனைகளை, தலா ரூ.1.1 லட்ச ரூபாய்க்கு தருவதாக கூறினார். நாங்கள் அங்கே குருகுல ஆசிரமம்,  யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகத்தை நிறுவி, வேத காலம் தொட்டு இன்று வரை வழிவழியாக வந்துள்ள, உலகம் தழுவியதும் மனிதனை உருவாக்குவதுமான, ஹிந்து பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறித்து உலகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களுக்கும் பயிற்சி தந்து, ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயம் அல்லது சமயப் பிரிவினைச் சார்ந்த தொண்டர்கள் என்று அல்லாது பாரத அன்னையின்  தொண்டர்களாக உலகெங்கும் சென்று பிரச்சாரம்  செய்யும் ஊழியர்களை உருவாக்க, இந்த இடம் பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த மனை க்கு அருகே ஸ்ரீ ஆண்டவன் சுவாமிகளின் ஆசிரமம் வர இருக்கிறது. சௌ. நிவேதிதா, மற்றும் திருமதி பாரதியின் சகோதரர், திரு. ரமேஷ், அவர்களும் இந்த மனை க்கு அருகே இருக்கும் இரண்டு மனை களை வாங்க விரும்புகிறார்கள். எனவே எதிர்காலத்தில் அதிகமான இடம் நமக்கு தேவைப்பட்டால் அதனை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நாங்கள் பகவானின் ஆசியை இந்த முயற்சிகளின் வெற்றிக்கு பிரார்த்திக்கிறோம். 

பகவானின் ஆசிபெறும் தென்னாப்பிரிக்கா பக்தர் டெட்டி கொமல்

தென் ஆப்பிரிக்காவின் திரு. டெட்டி கொமல் மற்றும் அவர் குடும்பத்தினர் தங்களது பணிவை பகவானுக்கு தெரிவிக்குமாறு கூறினார்கள். தென் ஆப்பிரிக்காவின் கல்விநிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளதோடு அவர் முதல்வராக பணிபுரியும் கறுப்பினத்தவர்களின் பள்ளியானது மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அங்குள்ள மாணவர்கள் தங்களுக்கு ஒரு இந்தியர் முதல்வராக இருப்பதை விரும்பவில்லை. அவர் தங்களிடம் தான் ஒரு இந்தியர் பள்ளிக்கு மாற்றலாக வேண்டும் என பிரார்த்திக்கிறார். சில தென் ஆப்பரிக்க இந்திய மாணவர்கள், இந்தியாவிற்கு வந்து கல்வி கற்க விரும்புகின்றனர். அவர்கள் உயர்நிலைப் பள்ளியிலும், ஆயுர்வேத கல்லூரியிலும் இணைய, நாங்கள் உதவிபுரிய முயற்சித்து வருகிறோம். அவர்களும் பகவானின் ஆசி மற்றும் கருணையை வேண்டுகிறார்கள். அவர்கள் இந்த சாது அடுத்த தென் ஆப்பரிக்க பயணத்தை எவ்வளவு விரைவாக துவக்க இயலுமோ அத்தனை விரைவாக மேற்கொள்ளுமாறு கூறுகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். அவர்கள், தங்களது பிள்ளைகள் பயிற்சி பெற இங்கே குருகுலத்தை துவங்க உதவி செய்ய விரும்புகிறார்கள்.

சௌ. நிவேதிதா சீனியர் அனாலிஸ்ட் ப்ரோக்ராமர் ஆஃப் கம்யூட்டர் சாஃப்ட்வேர் ஆக கமாண்ட் இன்டர்நேஷனல் பெங்களூரில் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அவளது கணவன், திரு. ரமேஷ், சென்டல் எக்ஸைஸில் இருப்பவர், பெங்களூருக்கு மாற்றலாகி இருக்கிறார். அவளது மகள் ஹரிப்ரியா என்கிற சிவா இப்போது மிகுந்த துறுதுறுப்போடு இருக்கிறாள். சிரஞ்சீவி. விவேகானந்தன் மும்பையில் இருந்து வெள்ளிக்கிழமை திரும்பிவிட்டார். திருமதி. பாரதி மற்றும் பிள்ளைகள் தங்களது சாஷ்டாங்க நமஸ்காரங்களை தங்களுக்கும், மாதேவகி மற்றும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்குமாறு கூறினார்கள். 

‘தத்துவ தர்சனா’ இதழ்களை ஆசீர்வதித்து தங்களின் கையொப்பத்தை அவைகளில் இட்டு, திரு.D.S. கணேசன் மூலம் அனுப்பியதற்கு, இந்த சாது நன்றி கூறுகிறான். அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மேட.டூர் சென்றார். நாங்கள் ராம்நாம் பிரச்சார நிகழ்ச்சிகளை ஈரோடு மற்றும் திருச்சியில் இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் பகவானின் ஆசியை வேண்டுகிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தாங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

ஜூன் -21 அன்று சாது ஒரு வீடியோ நேர்காணலை தூர்தர்ஷனில் வழங்கினார் அது V.G.P. வீடியோ ஸ்டூடியோவில் பதிவுசெய்யப்பட்டது. புதன்கிழமை ஜூலை – 1 , 1998, அன்று, செரிப்ரா 486 கம்யூட்டர் மற்றும் பேனாசோனிக் பிரிண்டர் சென்னை சகோதரி நிவேதிதா அகாடமியில் நிறுவப்பட்டது. சாது அதில் பகவானுக்கு முதலில் கடிதம் ஒன்றை தட்டச்சு செய்து அனுப்பினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் நாங்கள் எங்களது செரிப்ரா 486 PC மற்றும் பேனாசோனிக் பிரிண்டரை இன்று சென்னையில் நிறுவி உள்ளோம். இந்த முதல் கடிதம் அதில் தட்டச்சு செய்யப்பட்டு உங்கள் ஆசி மற்றும் கருணையையும், எங்களின் அனைத்து முயற்சிகளின் வெற்றிக்காகவும், வேண்டுகிறோம். 

இந்த சாது மற்றும் சிரஞ்சீவி விவேக் பெங்களூருக்கு ஜூலை -3 அன்று, கிருஷ்ணராஜபுரம் நிலத்தை எங்களின் குருகுல ஆசிரமத்திற்காக வாங்குவது குறித்து உறுதிசெய்ய, செல்ல இருக்கிறோம். நாங்கள் தங்கள் ஆசியை வேண்டுகிறோம். நாங்கள் சென்னைக்கு ஜூலை 6 அன்று திரும்புவோம். ‘தத்துவ தர்சனா’வின் மே – ஜூலை 1998 இதழ் தயாராகி வருகிறது. இதழ் தயார் ஆனவுடன் நாங்கள் பகவானின் தரிசனத்தை பெற திருவண்ணாமலைக்கு வருவோம். 

குமாரி ஈஸ்வரி என்ற தென்ஆப்பரிக்கா மாணவி இங்கே வந்து வெங்கடரமணா ஆயுர்வேத கல்லூரியில் இணைந்து, பி.ஏ. எம்..எஸ். படிக்க இருக்கிறார். அவர் தனது பெற்றோர் மற்றும் பாட்டியோடு இங்கே வந்துள்ளார். அவர் தனது பாட்டியோடு இங்கே தங்குவார். அவர் தனது கல்விக்காக தங்களது ஆசியை வேண்டுகிறார். லூகாஸ் டி.வி.எஸ் -ன் திரு. G.V.ஸ்ரீதர், IIT யின் திரு. R. பாஸ்கரன், திரு. S. பத்மநாபன் மற்றும் திரு. ராகவேந்திரன் போன்றோர் இங்கே கம்யூட்டரை நிறுவுவதில் பெரிதும் உதவினர். அவர்கள் பகவானின் ஆசியை வேண்டினர். திருமதி பாரதி ரங்கராஜன், சிரஞ்சீவி. விவேக், திருமதி. நிவேதிதா, திரு. ரமேஷ் மற்றும் குழந்தை ஹரிப்ரியா தங்கள் தாழ்மையான வணக்கங்களை உங்களுக்கு தெரிவித்தனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்.” 

சாது மற்றும் விவேக் பெங்களூருக்கு ஜூலை – 4 ஆம் தேதி சென்றடைந்தனர். பகவானின் அருளால், மூன்று மனைகள், விவேக் மற்றும் நிவேதிதாவின் பெயரில், கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீனிவாசநகரில், ஜூலை – 6 தேதி அன்று பதிவு செய்யப்பட்டன. சாதுவும், விவேக்கும் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அன்று திரும்பினர். வெள்ளிக்கிழமை சாது, A.G. அலுவலக வளாகத்தில், பக்தர்களிடம் வியாஸ கங்கோத்ரி குறித்து உரையாற்றினார். சிறிய இடைவேளைக்குப்பின் சாது இந்திய தத்துவ இயல் மற்றும் கலாச்சாரம் குறித்து திங்கள் முதல் வெள்ளிவரை அங்கே உரையாற்றினார். சாது பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததோடு இறுதி நாளன்று பகவானின் புகைப்படம் மற்றும் பிரசாதங்களை வினியோகம் செய்தார். வெள்ளிக்கிழமை ஜூலை 24 அன்று திரு. K.N. வெங்கடராமன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் துணைத்தலைவர், ஒரு வேனில் வந்து அனைத்து ராமநாம லிகிதஜப நோட்டுக்களையும் சாதுவின் இல்லத்திலிருந்து தி.நகர் ராமநாம வங்கிக்கு எடுத்துச் சென்றார். சாது ராமநாம வங்கிக்கு சென்றார். ராமநாம ஜப யக்ஞத்தின் அர்ப்பணிப்பான பக்தரான திரு. ஏகாம்பரம் என்ற ராமநாம வங்கியின் பொறுப்பாளர் சாதுவை வரவேற்றார். அங்கே கூடியிருந்தவர்களிடம் சாது உலக ராமநாம இயக்கம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் குறித்து பேசினார். 

சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை, ஆகஸ்ட் – 7, 1998  வெள்ளிக்கிழமையன்று, குருகுல ஆசிரமம் பெங்களூரில் அமைப்பது குறித்தும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பக்தர்கள் மீண்டும் அழைத்துள்ளது குறித்தும் எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் நாங்கள் இரண்டு வீட்டுமனை களை பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீனிவாசநகரில் நமது குருகுல ஆசிரமத்திற்கு வாங்கியிருக்கிறோம். நாங்கள் அங்கே கட்டிடத்தை எவ்வளவு விரைவாக முடிக்க இயலுமோ அவ்வளவு விரைவாக முடித்து நமது யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகத்தை பெங்களூருக்கு மாற்ற இருக்கிறோம். இங்கே இடம் தேவைப்படுவதன் காரணமாக நாங்கள் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து எங்களது பதிப்புகளை அந்த இடத்தில் வைத்துள்ளோம். ஆனால் அந்த வீடு பழைய கட்டுமானம். எனவே புத்தகங்கள் கரையான்களால் அரிக்கப்படுகின்றன. எனவே நாங்கள் புதிய இடத்திற்கு அவசரமாக இடம் மாற வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம். மேலும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து பல இளைஞர்கள் எங்களோடு தங்கி இந்து மதம் மற்றும் கலாச்சாரம் குறித்து அறிய விரும்புகின்றனர். அவர்களுக்கு போதிய இடவசதியும் செய்து தர வேண்டியிருக்கிறது. பகவானின் ஆசியை எங்களது அனைத்து முயற்சிகளுக்கும் வேண்டுகிறோம். 

‘தத்துவ தர்சனா’ மே – ஜூலை 1998 இதழ் சிறிது தாமதமாக வந்தது. நாங்கள் இத்துடன் முதல் பிரதியை அனுப்பியுள்ளோம். ஆகஸ்ட் – 11 அன்று அகில இந்திய வானொலி நிலையம் சென்னை – A இந்த சாதுவின் ஸ்ரீ அரவிந்தர் குறித்த உரையை பதிவு செய்து ஆகஸ்ட் 14 , அன்று, அவரது அடுத்தநாள் பிறந்தநாளை முன்னிட்டு, சான்றோர் சிந்தனையில் காலை 6 மணிக்கு ஒலிபரப்ப இருக்கிறது. இந்த சாது பகவானிடம் ஆசிபெற இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வர எண்ணம் கொண்டுள்ளான். நாங்கள் ஆகஸ்ட் – அக்டோபர் ‘தத்துவ தர்சனா’ இதழை தயாரித்து வருகிறோம். பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் வரலாற்று சிறப்புமிக்க பாடல் “வந்தே மாதரம்” குறித்து இந்த சாது எழுதி, அகாடமி 1977 ல் வெளியிட்ட நூலின்  இரண்டாம் பதிப்பை வெளியிட இருக்கிறோம். ஆச்சார்யா J.B. கிருபளானி இதற்கு முன்னுரை எழுதியுள்ளார். தேசீய தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற தேசபக்தர்களான, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், திருமதி. லட்சுமி N. மேனன், மற்றும் சுதந்திர போராட்ட வீரரான திரு. N.S. வரதாச்சாரி போன்றோர் பிரபல பத்திரிகைகளில் இந்த நூலுக்கு வழங்கியுள்ள மதிப்புரைகளை இரண்டாம் பதிப்பில் சேர்த்துள்ளோம். இதற்கான பணிகள் முடிவடைந்தவுடன் நாங்கள் தங்களின் ஆசியைப்பெற தங்களின் பாதங்களில் சமர்ப்பிப்போம். இந்த பதிப்பு இருபது ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவின் 50 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவருகிறது. 

சௌ. நிவேதிதா சில கம்யூட்டர் பிராஜக்ட்டிற்காக அமெரிக்கா செல்லும் வாய்ப்பை அவளது கம்பெனியிலிருந்து பெற்றுள்ளாள். அவளும் தனது குறுகிய மூன்றுமாத பயணத்திற்கான ஒப்புதலை வழங்கியுள்ளாள். இருப்பினும் அவள் தனது குழந்தை சிவா என்கிற ஹரிப்ரியாவை விட்டு செல்வது குறித்து கவலைக்கொண்டுள்ளாள். குழந்தை தற்சமயம் இரண்டு வயதை கடந்துள்ளது. அவள் இன்னமும் நிகழ்ச்சிக்கான முடிவை எடுக்கவில்லை. 

நமது தென் ஆப்பரிக்க சகோதரர்கள், இந்த சாதுவை, இந்த மாதம் கென்யா பயணம் மேற்கொள்ள இயலாது போனதால், ஜனவரியில் வருமாறு கோரியிருக்கிறார்கள்.. தென் ஆப்பரிக்க போலீஸின் ஹிந்து சங்கம், இந்த சாது, ஹிந்து போலீஸ்காரர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தென் ஆப்பரிக்க அரசாங்கம், தனது பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறைகளை  சார்ந்த பணியாளர்களுக்கு, மதம் சம்பந்தப்பட்ட வழிக்காட்டுதல்களை தருவதற்காக, பல்வேறு மதங்களை சார்ந்த நபர்களை சாப்லின்களாக நியமித்துள்ளது. காவல்துறையின் ஹிந்து சாப்ளின், திரு தன சங்கர் மஹராஜ், இந்த சாது அங்கு வந்து அவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். திரு. டெட்டி கொமல் மீண்டும் நவம்பரில் இந்தியா வர விருப்பம் கொண்டுள்ளார் . அப்போது அவர் பகவானை  சந்தித்து இந்த நிகழ்ச்சிகள் குறித்து  விளக்க விரும்புகிறார்.. 

திருமதி. பாரதி, சிரஞ்சீவி விவேகானந்தன், திரு. D.S. கணேசன் மற்றும் எங்களின் நண்பர்கள் தங்கள் வணக்கங்களை உங்களுக்கும், சுதாமா சகோதரிகளுக்கும் இந்த சாது மூலம் தெரிவித்துக் கொள்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன் , 

சாது ரங்கராஜன் 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி” 

சாதுவின் ஸ்ரீ அரவிந்தர் குறித்த உரையை, திரு. சக்தி ஸ்ரீனிவாசன், சென்னை வானொலி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் – 11 அன்று பதிவு செய்தார். ஆகஸ்ட் – 15 அன்று, சென்னை வானொலி நிலையத்தில் ஒரு தொலைபேசி தொடர்பு நிகழ்ச்சியில், திரு. அஸ்வினிகுமார் சாதுவை ‘வந்தே மாதரம்’ என்பது குறித்து நேர்காணல் செய்தார். ஆகஸ்ட் -25 அன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ், சாது எழுதிய ‘வந்தே மாதரம்’ என்பது குறித்த கடிதம் ஒன்றை வெளியிட்டது. சென்னை தூர்தர்ஷன்-1, ஒளிபரப்பிய, அழகு கிரியேஷன்ஸின் “அன்னை பாரதம்” நிகழ்ச்சியில், சாது, “மானுட சேவையே, மஹேசன் சேவை” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 27 அன்றும், “அறிவியலும், ஆன்மீகமும்” என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் – 1 அன்றும் உரையாற்றினார். ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு ஆர்மல் என்பவரை, பகவானின் பக்தை சௌ. சிவப்ரியா ( கிறிஸ்டி ) என்பவர் அனுப்பி வைக்க, அவர் செப்டம்பர் – 3 அன்று சாதுவை சந்தித்தார். அடுத்தநாள் சாது ஒரு ஃபேக்ஸ் கடிதம் ஒன்றை தென் ஆப்பிரிக்காவின் திருமதி. ஷெரிதா கொமல் அவர்களிடம் இருந்து பெற்றார். அதில் அதிகாரப்பூர்வமாக தென் ஆப்பிரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தபஸ்வி பாபா அவதூத் தனது முதல் நன்கொடையாக ரூ.5000/- த்தை குருகுல ஆசிரமத்தின் திட்டப்பணிகளுக்கு அனுப்பினார். 

சாதுஜி A.G.அலுவலக பணியாளர்கள் இடையே தெய்வீக அன்னை குறித்து ஒரு தொடர் உரையை நவராத்ரியை முன்னிட்டு செப்டம்பர் 21 திங்கள்கிழமை முதல் செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை வரை நிகழ்த்தினார். திரு. ஆஷிஷ் பக்ரோடியா என்ற பகவானின் மும்பை பக்தர், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்திற்கு, தனது முக்கிய பங்களிப்பை தருவது குறித்து சாதுவிற்கு  ஒரு கடிதம் எழுதினார். சாது பகவானுக்கு செப்டம்பர் 23 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்:

பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

நாங்கள் மும்பையை சேர்ந்த திரு. ஆஷிஷ் பக்ரோடியா அவர்களிடம் இருந்து பெற்ற கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளோம். அவர் இரண்டு டிமான்ட் டிராஃபட்டை, மொத்தம் ரூ.51,000 /- தொகையை, ஆசிரம டிரஸ்டிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இதனை பகவானுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவர் அதற்கான ஒப்புகையையும் கேட்டுள்ளார். டிரஸ்ட் இந்த ட்ராப்ட்டுகளை பெற்று அவருக்கு ரசீதை அனுப்பியிருக்கும் என நம்புகிறேன்.

இந்த சாது பகவானின் தரிசனத்தைப் பெற இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் வருவேன் என்று நம்புகிறான். “வந்தே மாதரம்” என்ற நூலின் இரண்டாவது விரிவுபடுத்தப்பட்ட  பதிப்பு, மற்றும் ஆகஸ்ட் – அக்டோபர் 98 -ன் ‘தத்துவ தர்சனா’ 28 ஆம் தேதி செப்டம்பர் அன்று தயாராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சாது அதன் பிரதிகள் கிடைத்தவுடன் அவைகளை பகவானின் பாதங்களில் சமர்ப்பிக்க வருவான். 

பகவானின் ஆசியாலும், கருணையாலும், இந்த சாதுவின் தூர்தர்ஷன் – I ல் ஒளிபரப்பான நிகழ்ச்சியான “அன்னை பாரதம்”, மக்களிடமிருந்து மிகுந்த வரவேற்பினை பெற்றது. நவராத்ரியை முன்னிட்டு இந்த சாது A.G. அலுவலக பணியாளர்களிடம் அன்னை வழிபாடு என்பது குறித்து ஒரு தொடர் உரையை நிகழ்த்தி வருகிறேன். 

இந்த சாது அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் உத்திர பிரதேசம் செல்ல திட்டமிட்டிருக்கிறான். லக்னோவில் நடக்க இருக்கும் சுவாமி ராம்தீர்த்தா அவர்களின் ஜெயந்தி விழாவில் அக்டோபர் 20, 21 மற்றும் 22 தேதியில் சாது கலந்து கொள்ள இருக்கிறான். இந்த சாது பிரயாக், காசி மற்றும் அயோத்யா போன்ற இடங்களுக்கும் பயணித்து இந்த மாத இறுதியில் திரும்புவான். திருமதி. பாரதி ரங்கராஜன் அவர்களும் இந்த பயணத்தின் போது என்னோடு வருவார். 

எங்களின் தென் ஆப்பிரிக்கா நண்பர்கள் இந்த சாதுவின் ஆறாவது பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்தப்பயணம் பிப்ரவரி – 1 , 1999 முதல் மே – 1 , 1999 வரை நடைபெறும். நாங்கள் விரைவில் விசாவிற்கு விண்ணப்பிப்போம். நாங்கள் இதற்கு பகவானின் ஆசிகளை வேண்டுகிறோம். 

சௌ. நிவேதிதாவின் குழந்தை ஹரிப்ரியா என்கிற சிவா தனது இரண்டு வயதை நேற்று பூர்த்தி செய்தாள். சௌ நிவேதிதா அவளது கணவன் திரு ரமேஷ், மற்றும் அவளின் புகுந்த வீட்டினர் பகவானின் ஆசியை குழந்தைக்கும், அவர்களது குடும்பத்திற்கும் வேண்டியிருக்கிறார்கள். திருமதி. பாரதி மற்றும் சிரஞ்சீவி. விவேகானந்தன் தங்களது நமஸ்காரங்களை உங்களுக்கும், சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

அக்டோபர் – 7 புதன்கிழமை அன்று திரு. அஸ்வினிகுமார் மற்றும் திரு. சக்தி ஸ்ரீனிவாசன், சாதுவின், தொலைபேசி மூலம் நேர்காணல் ஒன்றை, AIR நேரலை நிகழ்ச்சியான வண்ணமலருக்காக நடத்தினர். சாது பகவானுக்கு அக்டோபர் 10 அன்று. அடுத்தநாள் தனது திருவண்ணாமலை பயணம் குறித்து, கடிதம் ஒன்றை எழுதினார்: 

பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

‘தந்தவ தர்சனா’ மற்றும் “வந்தே மாதரம்” அச்சிடும் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக இந்த சாது நவராத்ரியின் போது அங்கு வரவில்லை. நாங்கள் இப்போதுதான் முதல் பிரதியை அச்சகத்தில் இருந்து வரப்பெற்றோம். இந்த சாது, இந்த தாழ்மையான பணிக்கு உதவிய நான்கு பக்தர்களுடன், திருவண்ணாமலைக்கு, நாளை ( ஞாயிற்றுக்கிழமை , அக்டோபர் 11 , 1998 ) முதல் பிரதியை தங்களின் காலடியில் சமர்ப்பிக்க வர இருக்கிறோம். நாங்கள் காரில் அதிகாலையில் கிளம்பி அங்கே காலை 10 மணிக்கு வந்து சேர்வோம் என நம்புகிறோம். பகவானின் தரிசனத்திற்கு நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

இந்த சாது லக்னோவிற்கு அக்டோபர் – 17 அன்று கிளம்பி, அக்டோபர் – 19  தீபாவளி நாளன்று அங்கே சென்று சேருவான். சுவாமி ராம்தீர்த்தா அவர்களின் ஜெயந்தி விழாவில் அக்டோபர் 22 மற்றும் 23 அன்று கலந்து கொள்வான். அயோத்யா, காசி, பிரயாக் போன்ற இடங்களில் ராம்நாம் பணிகளை முடித்துவிட்டு, நாங்கள் சென்னைக்கு அக்டோபர் – 29 அன்று திரும்புவோம். திருமதி பாரதி இந்தமுறை என்னோடு இணைந்து பயணிப்பார். 

எங்களின் தென் ஆப்பரிக்காவின் பக்தர்கள் எங்களின் அடுத்த தென் ஆப்பரிக்க பயணத்தை பிப்ரவரி 1 , 1999 முதல் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கான ஏற்பாடுகளும் சென்னையில் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் அகண்டராம நாமம், பஜன், பூஜை , ஹோமம் போன்றவை டிசம்பர் – 1 , 1998 அன்று மேற்கொள்ளப்படும். ஒரு சிறப்பு ‘தத்துவ தர்சனா’ இதழும் வெளியிடப்படும். அதுவும் தயாராகி வருகிறது. பகவானின் ஆசியால் நாங்கள் 1999 ஆம் வருடத்தை சர்வதேச ராம்நாம் வருடமாக அறிவித்து, 15,500 கோடி என்ற பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் இலக்கில், நாங்கள் 5000 கோடி ராமநாமத்தை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முடிக்க நினைக்கிறோம். 

திருமதி. பாரதி, சிரஞ்சீவி. விவேக், சௌ.நிவேதிதா, சிரஞ்சீவி. ரமேஷ், சௌ. ஹரிப்ரியா மற்றும் அனைத்து பக்தர்களும் இந்த சாதுவிடம் தங்களது நமஸ்காரங்களை உங்களுக்கும், மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்குமாறு கூறினார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். 

சாது, திரு ஸ்ரீதர், திரு ஆனந்த், திரு குமார் மற்றும் திரு ரவிசங்கர் உடன் திருவண்ணாமலைக்கு ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் – 11, 1998, அன்று பயணித்தனர். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக, பகவானின் இல்லத்தை 11 மணிக்கு வந்தடைந்தனர். பகவான் ஒரு மருத்துவருடன் இருந்தமையால் , மா தேவகி மற்றும் மா விஜயலட்சுமி சாதுவை வரவேற்றனர். அவர்கள் முற்பகலை பிரார்த்தனை கூடத்தில் ராமநாமத்தை ஜபித்து செலவழித்தனர். பகவான் சாது மற்றும் பிற பக்தர்களை மாலை 4 மணிக்கு அழைத்தார். திரு. சுப்பிரமணியம் என்ற பக்தர் மற்றும் குடும்பத்தினர் அங்கே இருந்தனர். சாது தன்னுடன் வந்த பக்தர்களை பகவானிடம் அறிமுகப்படுத்தினார். பகவான் திரு. ரவி சங்கர் அவர்களின் விவரங்களை கேட்டார். பகவான் சாதுவை தனது பக்கத்தில் அமருமாறு கூறி, சாதுவின் கரத்தை பிடித்துக் கொண்டிருந்தார். இரண்டு மணி நேர உரையாடலின் பொழுது, பகவான் பப்பா ராம்தாஸ் குகையில் சாதுவிற்கு தீட்சை அளித்ததை நினைவு கூர்ந்தார். மேலும் திரு. சுந்தரம் சுவாமி அந்த குகையை ஆலமர குகை என்று அழைக்கப்படவேண்டும் என குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். பகவான் 1984 ஆம் ஆண்டு ‘தத்துவ தர்சனா’ துவங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். பகவான் தன்னை ஆரம்பக்காலங்களில் பாதுகாத்த திரு. சுப்பிரமணியம் அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள், தனது உதவியாளரான திரு சசி ஒரு பட்டதாரி ஆவதற்கு உதவி புரிந்தது பற்றி குறிப்பிட்டார். மேலும் யோகி, திரு. ராமச்சந்திர ராவ், ஒரு ஓவியரை கல்வி கற்க வைத்து அவர் ராமாயண படங்களை வரைவதற்கு ரூ. 20,000 /- செலவழித்தார் என்று நினைவு கூர்ந்தார்.

சாது பகவானிடம் திரு அபனீந்திரநாத் தாகூர் குறித்தும், அவரது பாரதமாதா ஓவியம் சகோதரி நிவேதிதா மூலம் பெரும் பாராட்டை பெற்றது குறித்தும் கூறினார். சாது, பகவானிடம், தனது “வந்தே மாதரம்” நூலின் பிரதியை சமர்ப்பித்து, அதன்  அட்டையில் அந்த படம் அச்சிடப்பட்டுள்ளது சுட்டிக்காட்டினார். பகவான் அந்த நூலை ஒவ்வொரு பக்கமாக புரட்டிப்பார்த்து அதில் உள்ள ஓவியங்களையும் ஆர்வத்தோடு கவனித்தார். பகவான் சாதுவிடம் அதில் உள்ள ஆச்சார்ய J.B. கிருபளானி அவர்களின் முன்னுரையும், அபனீந்திரநாத்  தாகூரின் ஓவியத்திற்கு சகோதரி நிவேதிதா வழங்கிய பாராட்டுரையும் வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆச்சார்ய J.B.  கிருபளானி அவர்களுடன் சாதுவிற்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்று பகவான் வினவினார். சாது, பகவானிடம் வந்தே மாதரம் நூற்றாண்டு விழாவை கொண்டாட தான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திரு. கிருபளானிஜி கலந்து கொண்டதைப்பற்றியும், அவர் இந்த பாடலின் வரலாற்றை எழுதுவதற்கு தன்னை தூண்டியது பற்றியும் கூறினார். அந்த வரலாற்றுக் கட்டுரை முதலில் “யுவபாரதி” மாத இதழில் தொடர் கட்டுரையாக வெளிவந்து, பிறகு சகோதரி நிவேதிதா அகாடமியின்  முதல் வெளியீடாக, ஆச்சார்ய கிருபளானி அவர்கள்  முன்னுரையுடன்,   அக்ஷயத்ரிதீய நாளில் 1977 ஏப்ரல் 21 அன்று, வெளிவந்தது என்று சாது  குறிப்பிட்டார். பகவானும், சுதந்திர போராட்ட காலங்களில் தான் ஆச்சார்ய கிருபளானி அவர்களின். உரைகளை கேட்டதை, நினைவு கூர்ந்தார். 

பகவான் சாதுவிடம் அவரது சுவாமி சின்மயானந்தா உடனான தொடர்பு குறித்து கேட்டார். சாது பகவானிடம் தான் கேரளாவில், எர்ணாகுளத்தில் பிறந்ததாகவும், தான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் இருந்தே சுவாமியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், சுவாமிஜி வழங்கிய ஊக்குவித்தல் காரணமாக சின்மயா மிஷன் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் பணிகளில் தான் ஈர்க்கப்பட்டதாகவும் கூறினார். பகவான், சாதுவிற்கு ஏப்ரல் 26, 1988 ல் பப்பா ஜெயந்தி நாளில் பப்பா ராம்தாஸ் குகையில் தீக்ஷை அளித்தது பற்றி திரு சுப்பிரமணியத்திடம் கூறினார். சாது பகவானின் முன் சமீபத்து ‘தத்துவ தர்சனா’ இதழை வைத்தார். பகவான் ‘தத்துவ தர்சனா’ மற்றும் “வந்தே மாதரம்” இரண்டாம் பதிப்பில் கையொப்பம் இட்டு அவைகளை வெளியிட்டார். அவர் அங்கிருந்த அனைவரிடமும் பிரதிகளை வழங்கினார். சாது பகவானிடம். அனில் ஸுட்ஷி மற்றும் விவேக் அவர்களின் ஹைதராபாத் பயணம் குறித்து கூறினார். பகவான் அனில் ஸுட்ஷி குறித்து விசாரித்தார். சாது, பகவானிடம் தனது லக்னோ பயணம், சுவாமி ராம்தீர்த்தா ஜெயந்தி விழாவில் பங்கேற்பது, மற்றும் உ.பி. யில் ராமநாம பிரச்சாரம் ஆகிய திட்டங்கள் பற்றி கூறினார். பகவான், உ.பி. ராமநாம இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திரு. T.S. சின்ஹா குறித்தும், பிரயாகையில் அவரது இல்லம் இருக்கும் இடம் குறித்தும் விசாரித்தார். 

பகவான் சாதுவிடம் அவரது தென் ஆப்பிரிக்கா பயணத்திட்டம் குறித்து விசாரித்தார். மற்றும் அந்த நாட்டில் பயணிக்க கூடிய இடங்கள் குறித்தும் விசாரித்தார். சாது பகவானிடம் தான் அனைத்து மாநிலங்களிலும்  எல்லா முக்கியமான இடங்களுக்கும் செல்ல இருப்பதாகவும் அங்கெல்லாம் ஏற்கனவே, ராமநாமம் மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். சாது பகவானிடம் திரு. தயாராம் அஹீர், திரு. டெட்டி கொமல் மற்றும் பிறர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து அடுத்தமாதம் இந்தியா வருவதாகவும், அவர்கள், பகவானை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். சாது பகவானிடம் திரு. கிருஷ்ணா கார்ஸில் அவர்களிடமிருந்து மொரீஷியஸ் விஜயத்திற்கான அழைப்பு வந்துள்ளது குறித்தும் கூறினார். பகவான் சாதுவின் வெளிநாட்டு பயணத்தை ஆசீர்வதித்தார். 

சாது பகவானிடம் பெங்களூர், கிருஷ்ணராஜபுரத்தில் யோகி ராம்சுரத்குமார் இன்டோலோஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூல்நிலையம் ஏற்படுத்த, பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் கட்டுமான திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார். பகவான் திட்ட வரைபடத்தை பார்த்து ஆசீர்வதித்தார். யோகி, தனது தந்தையின் ஆசீர்வாதத்தை, புனேவின் பூஜ்ய ஸ்ரீ தபஸ்வி பாபா அவதூத் அவர்களுக்கு, பாரதமாதா குருகுல ஆசிரமத்தை  துவக்க ஊக்குவித்ததற்காகவும்  முதல் நன்கொடையை வழங்கியதற்காகவும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பகவான், “வந்தே மாதரம்” இதழின் பிரதிகளை, எங்களோடு இணைந்த திருமதி பங்கஜம்தாஸ், திரு. சக்திவேல், திரு. மணி மற்றும் பிற பக்தர்களுக்கும் வழங்கினார். அவர் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்து தந்தார். அவர் திரு. சுப்பிரமணியம் அவர்களின், திருமணமாக இருக்கும் மகள், மற்றும் அவரது மகனுக்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார். நாங்கள் பகவானிடம் இருந்து விடைப்பெற்றோம். சாது உடுப்பி பிருந்தாவன் ஓட்டலின் திரு. ராமசந்திர உபாத்யாயா அவர்களை சந்தித்து அவரிடம் பகவான் ஆசீர்வதித்து தந்த புத்தகங்களை வழங்கிவிட்டு சென்னைக்கு திரும்பினார். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.19

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.19 

சாதுவின் ஐந்தாவது தென் ஆப்பிரிக்க பயணத்திற்கு அனுமதித்த பகவான்

பாரத நாட்டிற்கு சாது திரும்பியவுடன் சாதுஜி உடனடியாக பகவானிடம் தான் பாதுகாப்பாக பாரதம் திரும்பியதை தெரிவித்தார். சாது, ஆகஸ்ட் 24, 1997 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரதி, விவேக், நிவேதிதா, ரமேஷ், ஹரிபிரியா, ஜெயா, சுரேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களான சன்னி ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு சென்றார். அவர்கள் அனைவரும் பகவானின் இல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றடைந்தனர். பகவான் அவர்கள் அனைவரையும் தர்சன் ஹாலில் அழைத்தார். அவர்கள் சிறிது நேரம் குருவின் முன்னிலையில் சிறிது நேரம் செலவழித்தனர். ராமநாமத்தையும் , யோகி ராம்சுரத்குமார் நாம ஜெபத்தை நிவேதிதா முன்னெடுத்து நடத்தினாள். பின்னர் யோகிஜி அவர்களை தனது பக்கத்தில் அழைத்தார். சாதுஜி ஒவ்வொருவரையாக அழைத்து பகவானிடம் அறிமுகப்படுத்தினார். யோகி நிவேதிதாவின் கணவர் ரமேஷை அழைத்து நாற்காலியில் அவரை அமர்த்தி அவரது வேலை குறித்து விசாரித்தார். மேலும் அவர் அவரிடம் கன்னட மொழியை நன்றாக கற்றுக்கொண்டாயா என வினவினார். பகவான் ரமேஷின் சகோதரி மற்றும் பெற்றோர்கள் குறித்து விசாரித்தார். ரமேஷ் பகவானிடம் தனது பெற்றோர்கள் செப்டம்பரில் பத்ரிநாத் செல்வதாக கூறினார். பகவான் அனைவரையும் ஆசீர்வதித்தார். அவர் ஜெயாவை அழைத்து அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என வினவினார். அவர் அவளை ஆசீர்வதித்து ஹரிப்ரியாவை நோக்கி அவளது பெயர் என்ன என்று வினவினார். நிவேதிதா பகவானிடம் அவளின் சிறிய உடல் குறைப்பாட்டை கூறினாள். பகவான் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்தை தந்து அதனை உண்ணுமாறு கூறினார். அவர் குழந்தையையும், நிவேதிதாவையும் ஆசீர்வதித்தார். பின்னர் அவர் தென் ஆப்பிரிக்கா பக்தரிடம் திரும்பினார். திரு. சண்முகம் மெய்யப்பன் அவர்களின் மனை வி சமீபத்தில் காலமான சேதியை பகவான் கேட்டார். பகவான் அவளது ஆன்மா அமைதியுறவும், அவர் அமைதியோடும், மகிழ்வோடும் இருக்க ஆசீர்வதித்தார். அவர் பாரதி மற்றும் விவேக் ஆகியோர்களை ஆசீர்வதித்து ஜெயாவிடம் எங்கு நீ தங்கியிருக்கிறாய் என வினவினார். அவள் தான் தனது சகோதரன் ரமேஷ் உடன் தங்கியிருப்பதாக கூறினார். பாரதி பகவானிடம் ரமேஷின் சென்ற வார வருகையை குறித்து நினைவூட்டினார். 

சாது பகவானிடம் அவரது கருணை மற்றும் ஆசியால் நிறைவுற்ற தனது வெற்றிகரமான தென் ஆப்பிரிக்காவின் பயணம் குறித்து விவரித்தார். பகவான் , “அனைத்தும் தந்தையின் கருணை“ என்றார். சாது பகவானின் முன் தனது தென் ஆப்பிரிக்கா பயணத்தின் புகைப்பட ஆல்பங்களை வைத்தார். அத்துடன் தென் ஆப்பிரிக்காவின் செய்திதாள்களில் தனது பயணம் குறித்து வெளிவந்த தகவல்களின் தொகுப்பை அவர்முன் வைத்தார். பகவான் அவைகளை பார்வையிட்டு அவற்றில் சிலவற்றை வாசிக்குமாறு சொன்னார். அதில் ஒன்று,  கிறிஸ்துவ பாஸ்டர் இந்துயிசம் மற்றும் இந்துக்களையும் இழிவுபடுத்தியதை எதிர்த்து இந்து அமைப்புகள் நடத்திய ஊர்வலத்தை இந்த சாது முன்னெடுத்த நிகழ்வு. இன்னொன்று சாதுவின் “ஹிந்துயிசம், அறிவியல் யுகத்தின் மதம்” என்ற உரை பற்றியது. சாதுஜி பகவானிடம் தனக்கு இவ்வருட இறுதியில் தென் ஆப்பிரிக்கா மீண்டும் விஜயம் செய்யவும், மொரீஷியஸ் மற்றும் கென்யா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து கூறினார். பகவான் அதற்கு அனுமதி அளித்து அந்த பயணத்திட்டத்தை மேற்கொள்ள ஆசி வழங்கினார். பகவான் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்தார். சாதுவிடம் இந்த சிரட்டை புதியதா என்று வினவினார். சாது அது பழைய ஒன்றுதான் என பதிலளித்தார். ஆனால் அதனை தென் ஆப்பிரிக்காவின் ஒரு பக்தர் பாலீஷ் செய்து தந்தார் என்றார். யோகி அவைகளை ஆசீர்வதித்து சாதுவிடம் தந்தார். சாது பகவானின் கருணையால் காப்பாற்றப்பட்ட குழந்தையான சுவீராவின் தந்தை, திரு. ஷம்மிலால், தனக்கு பரிசாக ஒரு ஸ்கேனர் தந்ததை பகிர்ந்தார். பகவான் அந்த ஸ்கேனரின் பயன்பாட்டை பற்றி கேட்டார். நிவேதிதா பகவானிடம் எப்படி அதனை பயன்படுத்தி ஆவணங்களும், படங்களும் கணிணிக்கு ஸ்கேன் செய்யப்படுகின்றன என்பதைப்பற்றி விளக்கினாள். 

பகவானிடம் இருந்து விடைபெறும் பொழுது, சாது அவரிடம் தான் திருக்கோயிலூர் சென்று திரு. D.S. சிவராமகிருஷ்ணன் அவர்களை சந்திக்க உள்ளதாகவும், திரு. ரமேஷ் பெங்களூருக்கு தனது இடத்திற்கு செல்வார் என்றும் தெரிவித்தார். சாதுவும் அவரது குழுவினரும் பகவானிடம் இருந்து விடைப்பெற்று திருக்கோயிலூர் செல்லும் முன் வள்ளியம்மை ஆச்சி அவர்களை சந்தித்தனர். திருக்கோயிலூரில் திரு. D.S. கணேசன் மற்றும் திரு. D.S. சிவராமகிருஷ்ணன் போன்றோர் சாதுவை வரவேற்றனர். உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசித்தப்பின் அவர்கள் சென்னை திரும்பினர். 

ஆகஸ்ட் – 31 ஞாயிற்றுக்கிழமை அன்று சாது ம்ருத்யுஞ்ஜய யக்ஞத்தையும், ராமநாம சத்சங்கத்தையும் திருமதி. இந்திராணி அவர்களின் இல்லத்தில் நடத்தினார். செப்டம்பர் 4 முதல் 13 வரை சாது பெங்களூரில், ‘தத்துவதர்சனா’வை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 13 ஆம் தேதி அவர் சென்னை திரும்பினார். செப்டம்பர் 26, வெள்ளிக்கிழமை அன்று, சாது கடிதம் ஒன்றை பகவானுக்கு, தனது நிகழ்ச்சிநிரல்கள் குறித்து எழுதினார். திரு. சன்னி உடன் சாது மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 28 அன்று சென்றார். பகவானின் பக்தர்களான திரு. சங்கர்ராஜூலு, திரு. ஆனந்தராஜ் மற்றும் திரு. தேவி பிரசாத் சாதுவை வரவேற்றனர். செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30 அன்று, சாதுஜி ராமேஸ்வரத்திற்கு சென்றார். அக்டோபர் – 1 அன்று அவர்கள் கன்னியாக்குமரி சென்றனர். காணிமடத்தின் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலயத்தில் திரு. பாலகிருஷ்ணன், சாதுவை வரவேற்றார். அங்கே கூடியிருந்த பக்தர்களிடம் உரையாற்றிய பின்னர் மாயம்மா சமாஜ்க்கு சாதுவும், சன்னியும் சென்றனர். சாது மாயம்மா பக்தர்களிடையே உரையாற்றினார். 

அக்டோபர் – 2 அன்று பொற்றையடி சென்றபின் சாது திருநெல்வேலியை அடைந்தார், திரு.S.G. பத்மநாபன் அங்கு சாதுவை வரவேற்றார். சிவானந்த சத்சங் சமிதியில் சாது ராமநாமத்தைப்பற்றியும் யோகி ராம்சுரத்குமார் குறித்தும் பேசினார். வெள்ளிக்கிழமை அன்று சாது கட்டபொம்மன் நினைவிடம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் சென்று பின்னர் மதுரையை அடைந்தார். தேவி பிரசாத் மற்றும் குடும்பத்தினர் சாதுவை வரவேற்றனர். சாது, அவர்களுக்கு ராமநாமஜப தீட்சையை வழங்கி, பகவான் ஆசீர்வதித்த ஜபமாலையை வழங்கினார். சனிக்கிழமை சாது திருச்சியை அடைந்து குணசீலம், சமயபுரம், திருவானைக்காவல் கோயில், மற்றும் ஸ்ரீரங்கம் போன்ற இடங்களுக்கு பயணித்தார். பின்னர் சாது மற்றும் திரு.சன்னி தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 5 அன்று திருச்சி மலைக்கோட்டை மற்றும் அம்மன்நகர் கோயிலுக்கு சென்று அங்கே ராம்நாம் இயக்க பக்தர்களை சந்தித்தனர். இரவில் அவர்கள் சென்னையை அடைந்தனர். செவ்வாய்க்கிழமை அக்டோபர் 7 அன்று சாது, பாரதி மற்றும் சன்னியுடன் பெங்களூரை அடைந்தனர். ஹரிப்ரியாவின் ஆயுஷ் ஹோமத்தில் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை அக்டோபர் 10 அன்று, நிவேதிதா, ரமேஷ், ஹரிப்ரியா, மற்றும் ஸ்ரீவித்யா உடன் அனைவரும் காரில் காஞ்சன்காடு சென்றனர். அவர்களை சுவாமி சச்சிதானந்தர் வரவேற்றார். திரு.S.G.பத்மநாபன் அவர்களும் இவர்களோடு இணைந்தார். சனிக்கிழமையன்று அவர்கள் குருவனம் மற்றும் நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்றனர். சுவாமி சச்சிதானந்தர் இவர்களோடு சிறிது நேரம் செலவழித்து ராமநாம இயக்கம் குறித்து விவாதித்து ஜபமாலைகளை வினியோகம் செய்ய வழங்கினார். சாது பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 12 அன்று திரும்பினார். அடுத்தநாள் சாது சென்னைக்கு திரும்பினார். மதுரையைச் சேர்ந்த திரு.தேவன் ஷர்மா என்ற பகவானின் பக்தர், பகவானின் வேறு சில பக்தர்களை சாதுவின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் டிசம்பர் 1 அன்று மதுரையில் நடக்கும் ஜெயந்திவிழாவிற்கு சாதுவை அழைத்தனர். 

தென் ஆப்பிரிக்காவின் டாக்டர். சுப்பையா நாயுடு மற்றும் திருமதி. ரவிகா, சாதுவை அக்டோபர் – 16 அன்று சந்தித்தனர். சாது யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் மணியை தொலைபேசி மூலம் அழைத்து அடுத்தநாள் தனது திருவண்ணாமலை பயணம் குறித்து தகவல் தெரிவித்தார். 

சாது, திரு. சன்னி , திரு. ஸ்ரீதர், மற்றும் திரு. மோகன் அக்டோபர் 20 , 1997 திங்கள்கிழமை அன்று திருவண்ணாமலைக்கு காரில் சென்றனர். அவர்கள் பகவான் ஆசிரமத்தை காலை 10 மணிக்கு சென்றடைந்தனர். பகவானின் உத்தரவின்படி சாது ராமநாம ஜபத்தை முன்னெடுத்து அரைமணி நேரத்திற்கு நடத்தினார். பின்னர் பகவான் எங்களை அவரின் முன்னால் வரச்சொன்னார். அவர் எதையோ சொல்லவந்து சில நிமிடங்கள் அமைதி காத்தார். பின்னர் அவர் தனக்கு உதவியாளராக இருக்கும் சிறுவனிடம் அங்கிருந்த பிரசாத பழத்தட்டினை கொண்டுவரச் சொல்லி அதிலிருந்த ஆப்பிளை எடுத்து சாதுவிற்கு வழங்கினார். சாது பகவானின் முன் புதிய “தத்துவ தர்சனா” இதழ்கள் அடங்கிய இரண்டு கட்டுக்களை வைத்தார். பகவான் சாதுவிடம் எத்தனை பிரதிகள் கொண்டுவந்தாய் என வினவினார். சாது “ ஐம்பது “ என பதிலளித்தார். அவர் ஒரு கட்டை தனது கரங்களில் எடுத்து எத்தனை பிரதிகள் இதில் இருக்கிறது என்றார். சாது, “இருபத்தைந்து“ என்றார். அவர் அந்த பிரதிகளை எடுத்து அங்கிருந்த அனைவருக்கும் ஒரு பிரதியை வழங்கினார். மீதமுள்ள பிரதிகளை எடுத்து அதில் பகவான் தனது கையொப்பம் இட்டு யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்க வழங்கினார். சாது தனக்கு வழங்கப்பட்ட பிரதியில் அவரது கையொப்பத்தை பெற்றார். 

சாது பகவானிடம், “ நான் சென்றவாரம் காஞ்சன்காடு சென்றிருந்தேன். அப்போது சுவாமி சச்சிதானந்தர் தங்களைப்பற்றி விசாரித்து அவரது வணக்கங்களை தங்களுக்கு தெரிவித்தார்.” பகவான் தனது கரங்களை குவித்து, “சுவாமி சச்சிதானந்தருக்கு நமஸ்காரங்கள்“ என்றார். சாது பகவானிடம் சன்னி (ஷண்முகம் மூட்லே) தென் ஆப்பிரிக்காவிற்கு 25 ஆம் தேதி கிளம்புவதாக கூறினார். பகவான் , “அவரது பெயர் ஷண்முகம் தானே?“ என வினவினார். சாது, “ஆமாம்” என்றார். “எங்கே அவர் தங்கியிருக்கிறார்“ என யோகி வினவ, “டோங்காட் – ல்“ என்றார். பகவான் மீண்டும், “அது எங்கே இருக்கிறது?“ என வினவினார். சாது பகவானிடம் டர்பனுக்கு அருகே நேடால் மண்டலத்தில் உள்ளது என்றார். பகவான் தனது கைகளை உயர்த்தி, “என் தந்தை சண்முகத்தையும் அவரைச்சார்ந்த அனைத்து தென் ஆப்பரிக்கர்களையும் ஆசீர்வதிக்கிறார்” என்றார். சாது பகவானிடம் தான் தனது விசாவிற்காக காத்திருப்பதாகவும் அது நவம்பர் இறுதியில் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார். பகவான் சாதுவிடம், “என் தந்தை உனது வெற்றிகரமான தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கும், அங்கே வேலை முடிந்தபிறகு பாதுகாப்பான முறையில் இந்தியாவிற்கு திரும்பவும் ஆசீர்வதிக்கிறார்,“ என்றார். 

சாது பகவானிடம் நவம்பர் முதல் வாரத்தில் மைசூருக்கும், மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்களிலும் பயணிக்க இருப்பதாக தனது பயணதிட்டத்தை தெரிவித்தார். பகவான் நிகழ்ச்சிகளின் நாள்கள் குறித்து கேட்டு அவைகளின் வெற்றிக்கு ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் அவரது கருணையால் ஹரிப்ரியாவின் முதல் பிறந்தநாள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டதாக தெரிவித்தார். பகவான், “அனைத்தும் தந்தையின் கருணை” என்றார். சாது பின்னர் ஸ்ரீதர் மற்றும் மோகனை பகவானிடம் அறிமுகப்படுத்தினார். சாது அவர்களை ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவருக்கும் பழங்களை கொடுத்தார். சன்னி பகவானை புகைப்படம் எடுக்க விரும்பினார். பகவான், “அவர் புகைப்படம் எடுக்கலாம்“ என்றார். சன்னி பகவான் அருகில் சாதுவை நிற்கவைத்து படம் எடுத்தார். வழக்கம்போல் பகவான் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்தார். அவர் ஆசிரமத்தில் இருந்து கிளம்புகையில் எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். சாதுவும் அவரது குழுவினரும் அருணாச்சல மலையில் உள்ள ஆலமரத்து குகைக்கு சென்று அங்கே திரு. சுந்தரம் சுவாமியை சந்தித்தனர். பின்னர், அவர்கள் திருக்கோயிலூர் சென்று அங்கே உடல்நலம் குன்றி படுக்கையில் இருந்த திரு. D.S. சிவராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தனர். திரு. D.S. கணேசன் அவர்களை வரவேற்றார். சாது பகவான் ஆசீர்வதித்து தந்த பிரசாதம் ஒன்றை திரு. D.S. சிவராமகிருஷ்ணன் அவர்களிடம் தந்தார். அவர்கள் தபோவனம் கோயிலுக்கு சென்றனர். பின்னர் உலகளந்த பெருமாள் கோயிலுக்கும் சென்றனர். சாதுவின் வகுப்புத்தோழனான திரு. மதிவாணன் சாதுவை வரவேற்று அவரை வித்யா மந்திர் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அங்கே திரு. சுப்பிரமணியம் என்பவர் சாதுவை வரவேற்றார். பின்னர் அவர்கள் சென்னைக்கு காரில் இரவில் திரும்பினர். 

காணிமடத்தின் திரு. பொன்.காமராஜ் சாதுவின் இல்லத்திற்கு அக்டோபர் – 30 வியாழக்கிழமை அன்று வந்து மதியம் சிறிது நேரம் செலவழித்து, தென் ஆப்பிரிக்காவின் ரேடியோ 702-வில் சாதுவின் நேர்காணலை கேட்டார். அடுத்தநாள் திரு. சீத்தாராமன் திருக்கோயிலூரில் இருந்து தொலைபேசி மூலம் அழைத்து திரு. D.S.சிவராமகிருஷ்ணன் காலமானார் என்ற சேதியை தெரிவித்தார். சாது உடனடியாக திரு. D.S. கணேசன் அவர்களுக்கு ஒரு இரங்கல் சேதியை அனுப்பினார். திங்கள்கிழமை நவம்பர் 3 அன்று மதுரையின் பக்தர்கள் வந்து சாதுவை யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவிற்கு அழைத்தனர். ராமகிருஷ்ணா மிஷனை சேர்ந்த திரு. பிரமேஷானந்தாவை சாது சந்தித்தார். அவர் ரூ.5000/-, சகோதரி நிவேதிதா அகாடமிக்கு, கல்கத்தாவின் ராமகிருஷ்ணா மிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கல்ச்சரின் சுவாமி முக்யானந்தா சார்பாக வழங்கினார். நவம்பர் – 6 வியாழக்கிழமை அன்று பகவானின் மதுரை பக்தர்கள் வந்தனர். திரு.K.N. வெங்கடராமன் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா டிசம்பர் – 1  நிகழ்வுகள் சென்னை தியாகராய நகர் அயோத்தியா அஸ்வமேத மண்டபத்தில் நடைபெறும் என அறிவித்தார். 

சாது தர்மபுரிக்கு நவம்பர் 10 திங்கள்கிழமை அன்று சென்றார். திரு. சௌந்திரராஜன் மற்றும் பிறர் சாதுவை வரவேற்றனர். சாது E.B. காலனி கணேஷ் கோயிலில் ஒரு சத்சங்கத்தை நடத்தினார். அடுத்தநாள் சாது நரேந்திர மெட்ரிக்குலேசன் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இந்து பாரம்பரியம் மற்றும் சகோதரி நிவேதிதா குறித்து பேசினார். சாது அந்த பள்ளியின் பிள்ளைகளை ஆசீர்வதித்தார். வியாழக்கிழமை மாலையில் அவர் பெங்களூரை அடைந்து, பின்னர் சென்னையை அடைந்தார். டெல்லியில் இருந்து வெளியாகும் “தி ஆர்கனைசர்“ என்ற வார பத்திரிக்கை சாது மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா பயணம் குறித்த சேதியை வெளியிட்டு இருந்தது. செவ்வாய்க்கிழமை நவம்பர் – 18 அன்று சென்னைப்பல்கலைகழகத்தின் டாக்டர். P.K. சுந்தரம் சாதுவின் இல்லத்திற்கு வந்து, பகவான் யோகி ராம்சுரத்குமார் படம் அச்சிட தேவையான ப்ளாக்கினை பெற்றுச் சென்றார். சாது, டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் மற்றும் காளஹஸ்தியை சேர்ந்த திரு. ரமேஷ் போன்றோர் நவம்பர் 21 வெள்ளிக்கிழமை அன்று ஹைதராபாத் சென்றனர். அவர் அப்பலோ மருத்துவமனை க்கு சென்று அங்கே திரு. மாதவனின் மகளான சௌ. அனிதா அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார். அடுத்தநாள் காலை சாது ஒரு சிறப்பு காயத்ரி, ராமநாம மற்றும் மிருத்யும்ஞ்ஜய ஹோமத்தை அவர்களது இல்லத்தில் மேற்கொண்டு சென்னை திரும்பினார். சென்னை கலாமந்திர் பள்ளியில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் அகண்ட ராம்நாமஜபத்தில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியில் டிசம்பர் – 1 அன்று பங்குபெறுவார்கள் என தகவல் வந்தது. சாது பகவானுக்கு ஜெயந்தி விழா ஏற்பாடுகள் பற்றி கடிதம் எழுதினார்.  இதற்கிடையில் திரு  முகிலன் பகவானின் உத்தரவுபடி, லீ லோசோவிக் அவர்களின் “உடைந்த உள்ளத்தின் பாடல்கள்” என்ற நூலினை, 100 பிரதிகள் வினியோகம் செய்ய வாங்கிச்சென்றார். 

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி பெரிய அளவில் அயோத்யா அஸ்வமேத மண்டபத்தில் டிசம்பர் – 1, 1997 அன்று நடைப்பெற்றது. திரு.K.N. வெங்கடராமன், யோகிராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் துணைத் தலைவர், சாதுஜியை பூரண கும்பத்துடன் வரவேற்றார். கலாமந்திர் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து ராமநாம ஜபத்தை மேற்கொண்டனர். ஆயுஷ்ஹோமம், ஆவஹந்தி ஹோமம் மற்றும் நவக்ரஹ ஹோமம் போன்றவை வேத பண்டிதர்களால் நடத்தப்பட்டது. திரு. D.S. கணேசன் மற்றும் பல நகரங்கள்  மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். மாலையில் சிவசக்தி அம்மையார் என்னும் ஆன்மீக தலைவர் மற்றும் இந்து மத பேச்சாளர் நிறைவு விழாவில் உரையாற்றினார். சாதுவும் அதில் உரையாற்றினார். பகவானின் பக்தர்களான, ஆஸ்திரியாவின் திரு. மற்றும் திருமதி. போஷ், சாதுவின் இல்லத்திற்கு அடுத்தநாள் வருகை தந்தனர். ஞாயிற்றுக்கிழமை , டிசம்பர் – 7 அன்று ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் திரு. வெங்கடாசலம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. பகவானின் பக்தர்களான ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் திரு. பொன்ராஜ் குடும்பத்தினர்கள்,  மற்றும் பிறர் நல்ல எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். 

பகவானின் கருணை மற்றும் ஆசியால் சாதுவின் ஐந்தாவது தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கு லெனேஷியா  யுவக் சங்க் மற்றும் ராமகிருஷ்ண வேதாந்த சென்டரால் நிதியுதவி வழங்கப்பட்டது. சாதுவின் பயணம் புதன்கிழமை , டிசம்பர் 12 , 1997, அன்று துவங்கியது. திருமதி. பாரதி மற்றும் திரு. விவேகானந்தன் சாதுவை சென்னை ஏர்போர்ட்டில் காலையில் வழியனுப்பி வைத்தனர். திரு. A.R. ராவ், திரு மற்றும் திருமதி தேஷ்பாண்டே குடும்பத்தினர் சாதுவை மும்பை விமானநிலையத்தில் வரவேற்றனர். சாது தென் ஆப்பிரிக்காவின் கோன்சல் ஜெனரலிடம், மும்பையில், தனது விசாவை பெற்றார். திரு. ராவ் மற்றும் பிற பக்தர்கள் மும்பை சர்வதேச விமானநிலையத்தில் சாதுவை வழியனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் தென் ஆப்பிரிக்க விமானமான பிளைட் 279-ல் ஜோஹனஸ்பர்பர்கிற்கு பயணித்து, அடுத்தநாள் காலை அங்கு சென்றடைந்தார். டாக்டர் ஹரி கூவர்ஜி மற்றும் திருமதி தாரா கூவர்ஜி சாதுவை சர்வதேச விமானநிலையத்தில் வரவேற்று டர்பனுக்கு செல்ல உள்நாட்டு விமானத்தை ஏற்பாடு செய்தனர். திருமதி. ஷெரிதா கொமல் மற்றும் திரு. டெட்டி கொமல் சாதுவை டர்பன் விமான நிலையத்தில் வரவேற்று, சாது அவர்களோடு நாயக் பள்ளிக்கு காரில் சென்றார். அப்பள்ளியில் இந்து சுயம்சேவக் சங்க்  முகாம் நடைப்பெற்றது. டாக்டர் யஷ்வந்த் பாடக், திரு. கமல் மஹராஜ், திருமதி வனிதா , திரு. சதீஷ் கொமல் மற்றும் லண்டனில் இருந்து வந்த, பாரதீய சுயம்சேவக் சங்கின், டாக்டர் சங்கர் தத்வவாதி ஆகியோர் சாதுவை வரவேற்று அறிமுகப்படுத்தினா். சாது டோங்காட்டில் திருமதி. ஷெரிதா மற்றும் திரு. டெட்டி அவர்களோடு தங்கினார். 

வெள்ளிக்கிழமையன்று சாது ஹிந்து சுயம்சேவக் சங்க் ஏற்பாடு செய்த வானப்ரஸ்திகள் முகாமில் கலந்து கொண்டார். பின்னர் சாது மூத்த மற்றும் இளைய சுயம்சேவகர்கள் இணைந்து கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் ஹிந்து இலட்சியங்கள் குறித்து உரையாற்றினார். இரவில் சுயம்சேவகர்கள் மற்றும் செவிகாக்களின் கூட்டத்தில் செவிகாக்களின் கூட்டத்தில், தத்துவ இயல் விஞ்ஞானம் மற்றும் பண்பாடு போன்ற துறைகளில் ஹிந்துக்கள் உலகிற்கு வழங்கியுள்ள காணிக்கை குறித்த உரை நிகழ்த்தப்பட்டது. சனிக்கிழமை காலையன்று ஸ்ரீ ராமகிருஷ்ணா மையத்தின் சுவாமி சாரதானந்தா உரையாற்றினார். மதியம் சாது சமஸ்கிருத மொழியின் அழகு மற்றும் இந்துக்களின் கல்வி குறித்து பேசினார். உலக ஹிந்து மாநாட்டின் புரவலரும், தொழிலதிபருமான, திரு. ரஞ்சித் ராம்நாராயண், சாதுவை சந்தித்து தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஹிந்துக்களின் விவகாரங்கள் குறித்து விவாதித்தார். மாலையில் சாது சகோதரி நிவேதிதா குறித்தும், பின்னர் இந்து மத மதிப்புகள் குறித்தும் இளைஞர்களிடம் உரையாற்றினார். ஞாயிற்றுக்கிழமை சுயம்சேவக் சங்க் முகாமில் இந்து ஒருங்கிணைப்பு குறித்து பேசினார். அதேநாளில் சாது பிள்ளைகளோடு இளமையின் மதிப்பு குறித்தும், பின்னர் மூத்தவர்களோடு குடும்ப மதிப்புகள் குறித்தும் பேசினார். மாலையில் சாது, “இந்து என்பதில் பெருமை கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இரவில் மூத்தவர்களுக்கு, பாரதத்தின் ஆன்மீக பண்பாடு குறித்து வகுப்பு நடத்தினார். அடுத்தநாள் சாது ஒரு சிறப்பு பிரார்த்தனையை, முகாமில் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளுக்காக, நடத்தினார். சேவிகைகளுக்கு இந்து குறியீடுகள் மற்றும் சடங்குகள் குறித்து உரையாற்றினார். அவர் வனப்ரஸ்தி முதியோர்களிடம் உரையாடினார். மதியம் அவர், “வேதகாலம் முதல் நவீன காலம் வரை தாய் நாடு பற்றிய கருத்து” என்ற தலைப்பில் பேசினார். செவ்வாய்க்கிழமையன்று சௌ. யாஷிகா சிங், தென் ஆப்பிரிக்காவின் தொலைக்காட்சிக்காக, சாதுவிடம் நேர்காணல் மேற்கொண்டார். பிற்பகலில், சாது சுயம்சேவக் சங்க் முகாமில் சுயம்சேவக் பணிகள் குறித்து பேசினார். சாது ஷாகாவில் கலந்து கொண்டதோடு, இரவில் நடைப்பெற்ற கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். வியாழக்கிழமையன்று, முகாமின் நிறைவுநாளில், ஜோஹனஸ்பர்கில் இருந்து டாக்டர் கூவர்ஜி மற்றும் திருமதி தாரா சாதுவுடன் இணைந்தனர். நிறைவு நிகழ்ச்சியில், டாக்டர் ஷங்கர் தத்வவாதி,  டாக்டர் யஷ்வந்த் பாடக், பேரா. சாஸ்திரி, தென் ஆப்பிரிக்காவின் இந்து மகா சபையின் தலைவரான திரு. அஸ்வின் ட்ரிகம்ஜி, ஆர்ய சமாஜின் திரு. ராம்பரஸ் போன்றோரும் பங்கேற்றனர். சுயம்சேவகர்களின் உடற்பயிற்சிகளுக்குப்பின் சாது நிறைவு உரையை வழங்கினார். 

ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் டோங்காட்டில் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. திரு. சுவீராவின் பெற்றோர்களான திரு. ஷம்மிலால் மற்றும் திருமதி. ப்ரமிளா  ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ஹோமத்தில் சாது ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். சாது மாலையில் க்ரேடவுனுக்கு காரில் சென்றார். மாலையில் சத்ய சாய் குழுவினருடன்  டாக்டர் ராம்தாஸ் ஒரு சிறப்பு சத்சங்கத்தை ஏற்பாடு செய்தார். செவ்வாய்க்கிழமையன்று விஷ்ணு மந்திரில், பதினோரு முறை ஹனுமன் சாலீசாவை பாடி ராம நாம ஜப யக்ஞம் நடைபெற்றது. சாது ஹனுமன் சாலீசா குறித்து பேசினார். அடுத்த நான்கு நாட்களுக்கு பக்தர்களின் இல்லங்களில் ராமநாம சத்சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. சாது அங்கெல்லாம் உலக ராமநாம இயக்கம் குறித்து பேசி, பக்தர்களுக்கு ராமநாம தீக்ஷை வழங்கினார். சிவன், வாழ்க்கையின் நோக்கம், ராமன் மற்றும் ராமநாமம், ராமநாம ஜபத்தின் அறிவியல் முக்கியத்துவம், ஆகிய தலைப்புகளில் பேசினார். ஞாயிற்றுக்கிழமை , டிசம்பர் – 28 அன்று, சாது, விஷ்ணு மந்திரில் பக்தர்களிடம், ‘ஹரிஹர சுதாஷ்டகம் மற்றும் பகவான் அய்யப்பன்‘ குறித்து பேசினார். இல்ல சத்சங்களில் சாது, பகுத்தறிவுக்குப் பொருந்தும் இந்து தர்மம், பகவத்கீதை, அனுசூயா கதை, ஆகியவை பற்றி பேசினார். திரு. டேன் சாதுவின் நேர்காணலை ரேடியோ 702-வில் பதிவு செய்தார். சாது சத்யசாய் அமைப்பில் உள்ள பாலவிஹார் குழந்தைகளிடம் பகவான் ராமர் கதையை கூறினார். புதன்கிழமை டிசம்பர் – 31 அன்று ஒரு நள்ளிரவு சத்சங்கம் ஒன்று புத்தாண்டை வரவேற்க நடந்தது. திரு. மைக் பெருமாள் அவர்களின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். அதில் சாது, இந்துக்களின் கால நிர்ணயம் மற்றும் பஞ்சாங்கம் குறித்து பேசினார். 

ஜனவரி 1, 1998 அன்று சாது, ஹொவ்விக் நீர்வீழ்ச்சியில் பக்தர்களோடு தனது நேரத்தை செலவழித்தார். க்ரேடவுனில் அடுத்த மூன்று நாட்களுக்கு சாது,  “இந்து சிந்தனையில் பகுத்தறிவு”, “ராம்நாம் இயக்கம்”, மற்றும் “சகோதரி நிவேதிதா அகாடமி” ஆகியவை குறித்து பேசினார். சகோதரி நிவேதிதா அகாடமியின் கிளை ஒன்று உருவாக்கப்பட்டது. திரு.  D.R. அஹீர் தலைவராகவும், திருமதி பீனா மற்றும் திரு பெருமாள் செயலாளர்களாகவும், திருமதி யசோதா மற்றும் பிறர் செயற்குழுவிலும் இருந்தனர். சாது டோங்காட்டிற்கு திங்கள்கிழமை ஜனவரி 5 அன்று திரும்பினார். வியாழக்கிழமை, சாது, திரு. டெட்டி மற்றும் குடும்பத்தினர் உடன் ஜோஹனஸ்பர்கிர்கு காரில் சென்றார். டாக்டர் கூவர்ஜி அவர்களை வரவேற்றார். அடுத்த இரண்டுநாட்கள் அவர்கள் க்ரூகர் தேசீய பூங்காவில், வன சூழலில் சத்சங்கத்தை நடத்தியதோடு, வனவிலங்குகளை அருகே சென்று பார்த்தனர். ஜனவரி – 11 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று SABC யின் திரு                      மேக் மஹந்தி, சாதுவிடம் ஒரு நேரலை நேர்காணலை, மற்ற மதங்களை சேர்ந்தவர்களோடு, நடத்தினார். திரு. அப்துல் சமத், இஸ்லாம் சார்பிலும், டாக்டர். ரெக்ஸ் கிறிஸ்துவம் சார்பிலும் சமயங்களுக்கு இடையிலான இந்த கருத்துப் பரிமாற்றத்தில் கலந்து கொண்டனர். சாது நேயர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார். விவேகானந்தா ஜெயந்தியான ஜனவரி – 12 அன்று சாது பகவானுக்கு தனது தென் ஆப்பிரிக்கா பயணத்தின் முன்னேற்றம் குறித்து கடிதம் ஒன்றை எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

இன்று காலை சாது சென்னையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பை பெற்றான். அந்த அழைப்பில் தங்கள் ஆசியாலும், கருணையாலும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் சுழற்கேடயத்திற்கான பேச்சுப்போட்டிகள் போன்றவை சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடந்தது என்ற தகவலை பெற்றேன். இந்த புனிதமான நன்னாளில் தங்களின் பாதங்களில் எனது சாஷ்டாங்க நமஸ்காரங்களை சமர்ப்பித்து உங்கள் தெய்வீக வழிக்காட்டுதலை வேண்டுகிறோம். 

தென் ஆப்பிரிக்காவிற்கு சென்ற மாதம் 11 ஆம் தேதி வந்தது முதற்கொண்டு எங்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் உங்கள் கருணை மற்றும் ஆசியால் வெற்றிகரமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் மிட்லேண்ட் பகுதியில் ஒரு வார காலத்திற்கான வானப்ரஸ்திகளுக்கான முகாம் ஒன்று நடைப்பெற்றது. அதில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், அன்னையர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர். அது தவிர்த்து சகோதரி நிவேதிதா அகாடமியின் கிளை ஒன்று க்ரேடவுனில் நிறுவப்பட்டது. சென்னையைப் போன்றே இங்கும் இளைஞர்களுக்கான சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி பேச்சுப்போட்டி, அகாடமியால்  நிறுவப்பட்ட சுழற்கேடயத்திற்காக, ஜனவரி 18 அன்று நடைப்பெற்றது.. அவர்கள் அனைவரும் தங்கள் ஆசி மற்றும் தெய்வீக கருணையை வேண்டுகின்றனர். 

சாது கௌடேங் மண்டலத்திற்கு 8 ஆம் தேதி அன்று வந்தோம். கடந்த இரண்டுநாட்கள் க்ரூகர் தேசீய பூங்கா என்ற 300 கி.மீ சுற்றளவு கொண்ட பெரிய காட்டுப்பகுதியில், இயற்கையோடு இயைந்து அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில், யானைகள், சிங்கம், ஒட்டகச்சிவிங்கி, நீர்யானைகள், வரிக்குதிரைகள் மற்றும் முதலைகள் மிகவும் சுதந்திரமாக நமக்கு மிக அருகாமையில் உலாவி வருகின்ற சூழலில், பலவிதமான பறவைகள் இயற்கை அன்னையின் துதிகளை பாடுவதை கேட்டது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சிறிய பறவைகள் எங்களது உணவு மேஜைக்கு பறந்து வந்து அங்கே சிந்தியிருக்கும் உணவுத்துணுக்குகளை உட்கொள்கையில், பகவான்,. இந்த சாது தங்களைத்தான் நினைத்துக் கொண்டான்.

சென்ற மாலை, இந்த சாது, தென் ஆப்பிரிக்காவின் ஒலிபரப்பு கழகத்தில், மேக் மஹந்தி  நடத்திய,  பல்வேறு மதங்கள் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சி, “மதங்கள் நிகழ்நிலையில்“ என்ற ஒரு நேரடி உரையாடலில், மற்ற பிற பங்கேற்பாளர்களான பைபிள் மையத்தின் டாக்டர் ரெக்ஸ், லெனேஷியா இஸ்லாமிக் மையத்தின் அப்துல் சமத், ஆகியோர்களுடன், இந்த சாது கலந்துகொண்டார். பாரத நாட்டின் ரிஷிகள் மற்றும் துறவிகள் வழங்கியுள்ள, மனித இனம் முழுமைக்கும் பொருந்தும் வாழ்க்கை முல்யங்கள் குறித்து இந்த சாது பேசினார். மீண்டும் இன்று இந்த சாதுவை ரேடியோ ஈஸ்ட்வேவில்  திரு. வினோத் சிபூபாய் அவர்கள் நேர்காணல் மேற்கொள்ள இருக்கிறார். வரும் வாரத்தில் மேலும் இரண்டு நிகழ்ச்சிகள் ரேடியோ லோட்டஸில் “மனித வாழ்வின் லட்சியம்“ மற்றும் “உலக குடும்பம்“ என்ற தலைப்புகளில் பேச இருக்கிறேன். இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும், நாடு முழுவதிலும் இருந்து நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கும் இந்த சாது பதிலளிக்கிறான். 

ராமகிருஷ்ண வேதாந்தா சங்கத்தின் லஷ்மி நாராயண் கோயில் தனது 25 வது ஆண்டுவிழாவை, லெனேஷியாவின் சகோதரி நிவேதிதா அகாடமி மற்றும் லெனேஷியா யுவக் மண்டல் உடன் இணைந்து, ஜனவரி 15 முதல் 23 ஆம் தேதி வரை ஒரு தொடர் நிகழ்ச்சியாக நடத்த இருக்கிறது. அவர்களின் வண்ணமயமான அழைப்பிதழ் உங்களின் ஆசியைபெற அனுப்பப்பட்டுள்ளது. அது உங்களுக்கு ஏர் மெயிலில் வந்து சேர நேரம் எடுத்துக்கொள்ளும். ஆகையினால் இந்த கடிதம் தங்கள் ஆசியைப் பெற எழுதப்பட்டு, சென்னைக்கு ஃபேக்ஸ் செய்யப்பட்டு, தங்களிடம் வந்து சேரும். பிப்ரவரி – 5 அன்று பல்வேறு மதங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு உட்பட, இந்த சாதுவிற்கு, வடக்கு மாநிலத்தில், பிப்ரவரி இறுதிவரை, பல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி உள்ளன. பின்னர் இந்த சாது நேடால் மாநிலத்திற்கு திரும்பி, பிப்ரவரி 15 அன்று, விமானத்தில், கேப்டவுனுக்கு, தெற்கு கேப்  மாநிலத்தில் ஒரு வார நிகழ்வுகளுக்காக, செல்வான். மீண்டும் பிப்ரவரி நான்காவது வாரத்தில் ஜோஹனஸ்பர்கிற்கு விமானத்தை பிடித்து வந்து, பின்னர்  தாய்நாடான இந்தியாவிற்கு மார்ச் 6 அன்று வருவான். 

ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 , 1998 ல் அனைத்து ஆப்பரிக்க ஹிந்து  மாநாட்டை நைரோபி, கென்யாவில், நடத்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகள் மற்றும் அண்டைய,  இந்தியப்பெருங்கடலை சேர்ந்த நாடுகளும் இதில் பங்கேற்கும் என நம்புகிறோம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்பவர்கள் இந்த சாது கென்யாவிற்கு, ஜூலை ஆரம்பத்திலேயே வந்து அவர்களுக்கு மாநாட்டு பணிகளில் உதவ வேண்டும் என விரும்புகிறார்கள். மேலும் கென்யா முழுவதும் பயணித்து ஹிந்து விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த சாது தங்களின் ஆசியை இந்த தாழ்மையான முயற்சியின் வெற்றிக்கு வேண்டுகிறான். 

உங்கள் ஆசி மற்றும் வழிகாட்டுதலினால் யோகி ராம்சுரத்குமார் ஆசிரம பணிகள் விரைவாக முன்னேறி வரும் என்று நம்புகிறேன். இந்த சாது தங்களிடமிருந்து வெகு தொலைவில் விலகி இருப்பினும், ஒவ்வொரு கணமும் தங்களின் இருப்பை உணர்ந்தே வருகிறான். இங்குள்ள பக்தர்களின் இல்லங்களில், அனைத்து பூஜை மற்றும் பிரார்த்தனை அறைகளிலும் இருக்கும் தங்கள் படமானது, நான் பிரார்த்தனைகளில் அமரும் போது எனக்கு ஆசியை வழங்கியே வருகிறது. இங்கு நடைபெறும் உரையாடல்களின் போதும், பக்தர்கள் தங்களைப்பற்றி வினவும் போதும் தங்களையே நினைத்து அவர்களிடம் உங்களின் உயர்வுகளை விவரிக்கிறேன். இந்த சாது அங்கே இல்லாத போதும், தங்களை காண வரும் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களை நீங்கள் ஆசீர்வதித்து தரிசனம் அளிப்பதை குறித்து பலர் கூறுகின்றனர். இந்த நாட்டில் இருந்து மேலும் பலர் இந்தியாவிற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு உங்கள் தரிசனத்தை பெற ஆவலோடு பிரார்த்தவாறு இருக்கின்றனர். அவர்களின் தாழ்மையான பிரார்த்தனைகளுக்கு உங்கள் அனுமதியையும், ஆசியையும் வழங்குங்கள். 

உங்கள் கருணையால் பாரதி, விவேக், நிவேதிதா, ரமேஷ், ஹரிப்ரியா, மற்றும் எங்கள் சகோதரி நிவேதிதா அகாடமியை சேர்ந்த அனைவரும், அங்கே நலமாக இருப்பது இந்த சாதுவிற்கு மகிழ்வை தருகிறது. அவர்கள் அனைவரையும், இந்த சாது அங்கே இல்லாதபோதும், பகவானின் பணியை தொடர்ந்து புரிய ஆசீர்வதியுங்கள். இந்த சாது இந்தியாவிற்கு திரும்பியவுடன், மற்றும், பின்னர், அடுத்த கென்யா பயணத்திற்கு முன்பும்,  தங்கள் தரிசனத்தை பெற ஆவலோடு இருக்கிறான். இங்கிருக்கும் உங்களின் அனைத்து பக்தர்களும் தங்கள் நமஸ்காரங்களை உங்கள் புனித பாதங்களில் சமர்ப்பிக்குமாறு கூறினார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

ஜனவரி – 12 அன்று ராமகிருஷ்ணா வேதாந்த மையம் ஏற்பாடு செய்திருந்த விவேகானந்தா ஜெயந்தி விழாவில் பல ஹிந்து அமைப்புக்களை சேர்ந்தவர்களும், குழுக்களும் கலந்து கொண்டனர். லெனேஷியா யுவக் மண்டலின் அமைப்பாளர்கள் ஒரு யோகா முகாமை இளைஞர்களுக்கு நடத்த நிகழ்ச்சிநிரலை திட்டமிட்டனர். இந்த சாது அவர்களோடு நள்ளிரவு வரை நிகழ்ச்சுகளை இறுதிசெய்ய அமர்ந்திருந்தான். 

ஈஸ்ட் வேவ் வானொலியை சேர்ந்த திருமதி பிரதிபா, சாதுவை, செவ்வாய்க்கிழமை, சாதுவின் தென் ஆப்பிரிக்கா பணி குறித்து, நேர்காணல் மேற்கொண்டார். மாலையில் சாது யோகா மையத்தில் யோகா குறித்து பேசினார். அடுத்தநாள், ரேடியோ 702 ஐ சேர்ந்த திரு. கிளைவ் சிம்கின் சாதுவை நேர்காணல் செய்தார். பின்னர் சாது பிராக்டிகல் ஸ்கூல் ஆஃப் ஃபிலாசஃபியில், ராமகிருஷ்ணா ஹாலில், அத்வைத வேதாந்தா குறித்து பேசினார். வியாழக்கிழமை ஜனவரி 15 அன்று சாது ராமகிருஷ்ணா ஹாலில் நடந்த 25 வது ராமகிருஷ்ணா வேதாந்த சொஸைட்டியின் துவக்கவிழாவில், “கடவுள் எனும் கருத்து –- பகுத்தறிவும், மூடநம்பிக்கையும்” என்ற தலைப்பில்  உரையாற்றினார். வெள்ளிக்கிழமை , ஈஸ்ட் வேவ் வானொலியின்  திரு. சிபு பாய் சாதுவை நேர்காணல் செய்தார். பின்னர் சாது ஹிந்து ஒருங்கிணைப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றினார். சாதுஜி சனிக்கிழமையன்று நாட்டிய பள்ளி மாணவர்களிடம் உரையாற்றினார். திருமதி. அனுஷா அவரை வரவேற்றார். அங்கு, ‘பரதரின் நாட்டிய சாஸ்திரம்’ என்ற தலைப்பில் பேசினார். சுவாமி சித்தயோகானந்தா சாதுவை சந்தித்தார். இரவில், சாது ராமகிருஷ்ணா ஹாலில் நடைப்பெற்ற அஞ்சலி கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

ஜனவரி 18 , ஞாயிற்றுக்கிழமையன்று லெனேஷியா  யுவக் சங்க் மூலம் ஒரு ‘அமைதி பேரணி’ ஏற்பாடு செய்யப்பட்டது. சாது அதனை தலைமையேற்று முன்னடத்தி விஷ்ணு கோயிலில் இருந்து துவக்கினார். அதில் ஹரே கிருஷ்ணா இயக்கம்,  ஆர்யன் கருணை இல்லம், சிவசுப்பிரமணிய கோயில், சத்யசாய் அமைப்பு, மற்றும் பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தின் போது ராமநாமத்தை உச்சரித்தனர். இறுதியில் சாது காயத்ரி ஹோமத்தை ராமகிருஷ்ணா ஹாலில் நடத்தி காயத்ரி மந்திரத்தின் பொருள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும் அங்கு உயிரோட்டமான பஜன் ஒன்றை நடத்தினார். திங்கள்கிழமையன்று சாது, “ஏகாத்மதா ஸ்தோத்திரம்“ மற்றும் “இந்து மதத்தின் பத்து கொள்கைகள்” என்ற தலைப்புகளில் ராமகிருஷ்ணா ஹாலில் உரை நிகழ்த்தி, பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி அடுத்தநாளும் தொடர்ந்தது. “ஏகாத்மதா ஸ்தோத்திரம்” மற்றும் “ஹரிஹரசுதசதகம்” போன்றவைகளை பக்தர்களுக்கு கற்று தந்தார். ஜனவரி – 21 புதன்கிழமை அன்று சாதுஜி, மிக்கி படையாச்சி உடன், கறுப்பின மக்கள் வாழும் பகுதிக்கு சென்று அவர்களது சமுதாய மையம், குழந்தைகள் காப்பகம் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்தார். அனாதை பிள்ளைகளின் இல்லம், ஊனமுற்றோர் மற்றும் மதுஅடிமைகளின் மறுவாழ்வு இல்லத்திற்கும் பயணித்தார். சாதுவின் சமூக மக்களோடான தொடர்பு அவர்களுக்கு உத்வேகத்தை தந்தது. மாலையில் அவர் லஷ்மி நாராயண மந்திர்க்கு பயணித்து அங்கே மந்திர உச்சரிப்பு பயிற்சியை வழங்கினார். இந்த மந்திர உச்சரிப்பு பயிற்சி வகுப்பு, பஜனை வகுப்புகள் மற்றும் இந்துமதம் குறித்த கேள்வி பதில் நிகழ்வுகள் ராமகிருஷ்ணா ஹாலில் வியாழக்கிழமை அன்றும் தொடர்ந்தன. வெள்ளிக்கிழமையன்று சாது ஜோஹனஸ்பர்கில் மனநலம் குன்றியவர்களுக்கான இரண்டாம்நிலை பள்ளிக்கும், M.C. கா்பாய் காது கேளாதோர் பள்ளி மற்றும் முதியோர் இல்லத்திற்கும் சென்றார். சாது, ராமேஸ்வர மஹாதேவ மந்திரில் பிரார்த்தனை நடத்தினார் அங்கே பண்டிட் சந்திரகாந்த் சுக்லா அவரை வரவேற்றார். மாலையில் லஷ்மி நாராயண் மந்திரில் ஹிந்து தர்மம் குறித்த ஒரு கேள்வி – பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், சாது, டாக்டர். கூவர்ஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஹனிடியூவிற்கு சென்று, உடல் மன மைய ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு லெனேஷியா  யுவக் சங்க் ஏற்பாடு செய்திருந்த இளைஞர் முகாம் நடைப்பெற்றது. 

யோகா முகாம் ஜனவரி 24 சனிக்கிழமை அன்று துவங்கியது. யோகா வகுப்புகளை சுவாமி யோகாச்சார்யா நடத்தினார். சாதுஜி இந்து தத்துவம் குறித்து பாடம் எடுத்தார். அவர் பாரம்பரிய ஹிந்து விளையாட்டுகள் குறித்தும் பாடம் எடுத்தார். மதியம் பஜனையை கற்றுத்தந்தார். அவர் உபநிஷத்து மற்றும் புராணங்களில் இருந்து கதைகளை கூறினார். மாலையில் மந்திர ஜபம், பஜன் மற்றும் ஹனுமான் சாலீசா போன்றவற்றை கற்று தந்தார். ஞாயிறு அன்று காலையில இளைஞர்களுக்கு விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தினார் பின்னர் உபநிஷத்துக்கள் மற்றும் தரிசனங்கள் பற்றி வகுப்புகளை நடத்தினார். மதியம் சாது, முகாமின் பங்கேற்பாளர்களை, விட்வாட்டர்ஸ்ராண்ட் பொட்டானிகல் கார்டனுக்கு அழைத்துச் சென்று, பின்னர் ஹனிட்யூ திரும்பினார். முகாமின் முடிவின் போது சாது யோகி ராம்சுரத்குமார் மற்றும் உலக ராம்நாம் இயக்கம் குறித்து பேசி முகாமில் இருந்தவர்களை ஆசீர்வதித்தார். அந்த முகாம் மிக்க வெற்றி பெற்றதோடு, உடல் மன ஆரோக்கிய கேந்திரம் மற்றும் பயிற்சி நிலையம் சார்ந்தவர்கள் அந்த முயற்சியை வெகுவாக பாராட்டினர், 

ஜனவரி 26 அன்று, பார்க் வ்யூ சிவானந்தா யோகா பள்ளியில் அனைத்து வெள்ளைக்கார பக்தர்களும், ஒரு ஆரவாரமான வரவேற்பை சாதுவிற்கு வழங்கினர். ராமநாராயணந்தா மற்றும் கருணானந்தா சாதுவை வரவேற்றனர், மற்றும் ஈஸ்வரமயானந்தா சாதுவை அறிமுகப்படுத்தினார். சாது சகோதரி நிவேதிதா, சர் ஜான் வுட்ராஃப் மற்றும் பால் பிரண்டன் போன்ற மேற்கத்திய ஹிந்து மத சேவகர்கள் குறித்தும் பேசினார். அவர்கள் ஹிந்து பாரம்பரியம் மேற்கில் பரவ உதவினர் என விளக்கினார். செவ்வாய்க்கிழமையன்று , SABC – ன் தொலைக்காட்சி குழுவினர் சாதுவிடம் இரண்டு மணி நேரம் நேர்காணல் செய்தனர். ஹிந்து தர்மம் மற்றும் சமயச் சடங்குகள் குறித்து கேட்ட பல கேள்விகளுக்கு சாது பதிலளித்தார். தென் ஆப்பிரிக்காவில் இருந்த இந்திய தூதரக அலுவலகத்தில் சாதுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது கான்சல் ஜெனரல், திரு. தயாள், துணை கான்சல், திரு. பாடக், மற்றும் திரு. வாத்வா சாதுவை வரவேற்றனர். சாது இந்திய கலாச்சார மையத்தின் சபையில், “இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியம்” குறித்து பேசினார். இரவில் லெனேஷியா  யுவக் மண்டல் சாது உச்சரித்த தினசர்ய மந்திரங்களை பதிவு செய்து, அந்த ஒலிநாடாக்கள் அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டன. அடுத்தநாள் சாது, மேஃபேரில், ஜோஹனஸ்பர்க்  யுவக் மண்டலில் உரையாற்றினார். சத்யசாய் அமைப்பில் ஜனவரி 29, வியாழக்கிழமை அன்று, நடந்த சத்சங்கத்தில், சாது, “சத்தியம், சிவம், சுந்தரம்“ குறித்து பேசினார். அவர் “ஹரிஹரசுதாஷ்டகம்“ பக்தர்களுக்காக பாடினார். வெள்ளிக்கிழமை காலை சாது லயன்ஸ் பார்க் சென்று அங்கே சிங்க குட்டிகளை தனது மடியில் அமர வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாலையில் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சுவாமி பிரேமானந்தா பங்குப்பெற்ற கூட்டத்தில் அங்கிருக்கும் பக்தர்களோடு உரையாற்றினார். சனிக்கிழமையன்று சிவானந்தா யோகா பள்ளியில் ‘ஷட் தர்சனம்’ குறித்து சாது பேசினார். மாலையில் ராம்நாம் சத்சங்கத்தை சாது நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை காலையில் சத்ய சாய் மையத்தில் ஒரு காயத்ரி ஹோமத்தை நடத்தினார். பின்னர் அவர் ஸ்பிரிங்ஸிற்கு  காரில் சென்று ஸ்ரீ விஸ்வேஸ்வரா கோயில் துவக்கவிழாவில் கலந்து கொண்டார். அங்கே பண்டிட் சந்திரகாந்த் சுக்லா சாதுவை வரவேற்றார். சாது அங்கிருந்த கூட்டத்தினரிடையே தலைமை விருந்தினராக சிறப்புரை ஆற்றினார். ராமகிருஷ்ண ஆசிரமத்தின் சுவாமிஜி பிரேமானந்தா, மற்றும் சிவானந்தா யோகா ஸ்கூல் சுவாமிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

லெனேஷியா  சுப்ரமணிய கோயில் சாதுவிற்கு ஒரு வரவேற்பை பிப்ரவரி – 2, திங்கள்கிழமை அன்று வழங்கியது. அங்கே, சாது, சுப்ரமணியர் குறித்தும், காவடி திருவிழா குறித்தும் பேசினார். அவரும் பூஜையில் பங்குபெற்று ஹோமம் நடத்தினார். அடுத்தநாள் சாது மெல்ரோஸ் தமிழ் கோயிலிற்கு சென்றார். அடுத்தநாள் அவர் ரோஷிணி யுவக் மண்டலில் உரையாற்றினார். “மரணத்திற்கு பின் வாழ்க்கை“ என்ற என்ற தலைப்பில், சமயங்களுக்கு இடையேயான கருத்தரங்கம், பஹாய் மையத்தில் நடைபெற்றது. சாதுஜி ஹிந்து தர்மத்தில் மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது பற்றி உரையாற்றினார். ஸ்பிரிங்ஸில் பக்தர்கள் நிரம்பிய சபையில், “ஹிந்துத்வமும், இளைஞர்களும்” என்ற தலைப்பில் பேசினார். சனிக்கிழமை காலையில் அவர் “ஹனுமான் சாலிசா“ குறித்து விஸ்வேஸ்வர் கோயிலில் உரையாற்றினார். லெனேஷியா யுவக் மண்டலில் இளைஞர்கள் ஒன்று திரண்டு, சகோதரி நிவேதிதா அகாடமியின்  இந்து ஒற்றுமை ஏற்படுத்தும் திட்டம் குறித்து விவாதித்தனர். மாலையில் சாது ஆந்திர சபாவில் ராமநாமம் மற்றும் உலக ராமநாம இயக்கம் குறித்து பேசினார். ஞாயிற்றுக்கிழமை சாது ஜோஹனஸ்பர்க்  பக்தர்களிடமிருந்து விடைபெற்று, சபீனா தேசிய விமான சேவை விமானம் மூலம், டர்பன் சென்றார். திரு. டெட்டி கொமல்  , திருமதி. ஷெரிதா கொமல்  மற்றும் குடும்பத்தினர் சாதுவை டர்பன் விமான நிலையத்தில் வரவேற்றனர். 

திங்கள்கிழமையன்று, பீட்டர்மாரிட்ஸ்பர்கின் சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளரான திருமதி. நவநீதம் கவுண்டர் மற்றும் அவரது கணவர் திரு. விஸ் கவுண்டர் சாதுவை பீட்டர்மாரிட்ஸ்பர்கிற்கு அழைத்துச் சென்றனர். அடுத்தநாள் காலை, சாது, திருமதி. மாலா மற்றும் திரு. ராஜன் உடன் க்ரேடவுன் சென்றார். அங்கே அவரை டாக்டர் ராம்தாஸ் மற்றும் திருமதி. ஸ்வப்னா வரவேற்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு “ராகவேந்திரா” என்று சாது பெயரிட்டார். சாது, புதன்கிழமை அன்று, ஆந்திர சபாவில், சகோதரி நிவேதிதா அகாடமி மற்றும் யோகி ராம்சுரத்குமார் குறித்து பேசினார். ஹிந்து பண்பாடு குறித்து பக்தர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்களை பகர்ந்தார். வியாழக்கிழமை அன்று, சாதுவை, இன்டெக்ரல் யோகா மையம், ரிட்ஜ்வ்யூ ஆரம்பபள்ளியில் வரவேற்றனர். சாது ஒரு ஹோமம் மற்றும் ராம்நாம் சத்சங்கத்தை நடத்தினார். “தி நேடால் விட்னஸ்“ என்ற, நேடால் மாநிலத்தின் முன்னணி தினசரி பத்திரிகை, சாதுவின் தென்னாப்பிரிக்கா விஜயம் குறித்து, பெரிய புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தியை, பிப்ரவரி 13 அன்று வெளியிட்டிருந்தது. அன்றைய நாள் மாலையில் சாது, இன்டெக்ரல் யோகா மையத்தில் “ஹரிஹரசுதாஷ்டக”த்தை பக்தர்களுக்கு கற்றுத்தந்தார். மேலும் சாது சுவாமி அய்யப்பன் குறித்து பேசினார். சனிக்கிழமை அன்று சாது, ஹோவிக்கில் ஒரு சத்சங்கத்தில “சுயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமையன்று, சாது டோங்காட் திரும்பி வந்து, வேதாந்த மையத்தில் இளைஞர்களிடம் உரையாற்றினார். 

ஞாயிற்றுக்கிழமை மாலையில், சாது, சன் ஏர் விமானம் மூலமாக, கேப்டவுன் சென்றார். திரு. வஸ்ஸன்  மற்றும் அவரது மகள்கள் சாதுவை விமான நிலையத்தில் வரவேற்றனர். சாது, சகோதரி நிவேதிதா அகாடமியின் கேப்டவுன் ஒருங்கிணைப்பாளர், திருமதி. ப்ரமிளா  வஸ்ஸன்,  அவர்களின் இல்லத்திற்கு வந்தார். திங்கள்கிழமை சாது விஷ்ணு மந்திரில் குழுமியிருந்தவர்களிடம் “மதத்தின் பின்னால் இருக்கும் அறிவியல்“ என்ற தலைப்பில் பேசினார். திருமதி. ப்ரமிளா  வஸ்ஸன் உடன் சாது, பிப்ரவரி 18, புதன்கிழமை அன்று, ராபின் தீவுக்கு அன்று கப்பலில் பயணித்தார். சாது, மிகுந்த பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலைக்கு சென்று, அங்கே அறை எண் 5 மற்றும் 30 அறைகளில் பெரும் தலைவரான நெல்சன் மண்டேலா, அவரது 19 வருடங்களை செலவழித்த இடத்தை பார்வையிட்டார். மண்டேலா அவர்களுடன் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த திரு. ஸ்பாக் என்றவர் சிறையில் சுதந்திர போராளிகள் மற்றும் இதர கைதிகள் அனுபவித்த துன்பம் மற்றும் கொடுமைகள் குறித்து விவரித்தார். சாது அந்த தீவில் இருந்து கேப்டவுன் திரும்பினார். பின்னர் சாது ஆனந்த குடீர் சென்றார் அங்கே மா யோகேஸ்வரி மற்றும் சுவாமி பவித்ரானந்தா போன்றோர் சாதுவிற்கு சிறப்பான வரவேற்பை தந்தனர். அங்கே கூடியிருந்த பக்தர்களிடம் , “காலத்தில் மதங்களின் பரிணாமம்“ என்பது பற்றி பேசினார். அந்த பேச்சு பல வெள்ளையர்களாலும் பாராட்டப்பட்டது. வியாழக்கிழமை அன்று கேப்டவுனின் ஹிந்து மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த  மாணவர்கள் சாதுவிற்கு, வெஸ்டர்போர்டு உயர்நிலை பள்ளியில் சிறப்பான வரவேற்பை அளித்தனர். பல வெள்ளைக்கார மாணவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் ஹிந்து சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை முறை குறித்த பல கேள்விகளுக்கு சாது பதில் அளித்தார். மாலையில் சாது, பெலிக்கன் பார்க்கில், சத்யசாய் குழுவினரிடம் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை காலையன்று சாது, பதஞ்சலி யோக சூத்ரம் குறித்து, ஆனந்த குடீரில் உரையாற்றினார். மா யோகேஸ்வரி சாதுவை வரவேற்று அறிமுகப்படுத்தினார். மாலையில் சாது அத்வைத வேதாந்தம் குறித்து ஸ்கூல் ஆஃப் பிராக்டிகல் ஃபிலாஸஃபியில் பேசினார். திரு. ஸ்டீவ் மேத்யூ சாதுவை வரவேற்று அறிமுகப்படுத்தினார் இரண்டிலும் பெரும்பாலான பக்தர்கள், வெள்ளையர்கள், கலந்து கொண்டனர். அவர்கள் ஆர்வத்துடன் நிறைய கேள்விகளை சாதுவிடம் கேட்டனர். சனிக்கிழமையன்று சாது, “கடவுள் அறிதலின் பாதை“ என்ற தலைப்பில் ராதாகிருஷ்ணன் கோயிலில் பேசினார். ஞாயிற்றுக்கிழமை காலையில் சத்சங்கம் சிவா ஆலயத்தில் நடைப்பெற்றது. சாது அங்கே சிவ வழிபாடு குறித்து பேசினார். 

பிப்ரவரி 22, 1998, ஞாயிற்றுக்கிழமையன்று, கேப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிரில் ஹ்ரோம்நிக் என்ற ஒரு செக் ஆய்வாளர், சாது, ப்ரமிளா  வஸ்ஸன்  மற்றும் பக்தர்களை டேபிள் மவுண்டனின் உச்சியில் இருக்கும் லயன்ஸ் ஹெட்டிற்கு அழைத்துச்சென்றார். பல அடர்ந்த புற்களும், பதர்களும் நிரம்பிய பாதைவழியே சென்று இறுதியாக அவர்கள், தென்னிந்தியாவைச் சார்ந்த ‘சூரி’கள் என்ற பிராமணர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிர்மாணித்த, மிகப் புராதனமான சூர்யலிங்கம் மற்றும் சோமலிங்கத்தை அடைந்தனர். திரு. ஹ்ரோம்நிக், எப்படி உத்தராயணம் துவங்கும் நாளன்று சூரியனானது சரியாக சூரிய லிங்கத்தின் பின்னால் எழுகிறது என்றும், தட்சியாணம் துவங்கும் போது சரியாக சோமலிங்கத்தின் பின்னால் எழுகிறது என்றும், விளக்கினார். சாது, டாக்டர் சிரில் ஹ்ரோம்நிக்குடன், கடந்த காலத்தில் இந்தோ – ஆப்பிரிக்கா தொடர்பு, ஆப்பிரிக்கா கண்டத்தில் இந்திய வானவியலின் தாக்கம், மற்றும் திராவிடர்கள் மற்றும் ஆப்பிரிக்க இனத்தைச் சார்ந்த மக்களின் இணைப்பிலிருந்து தோன்றிய ஹோட்டன்டாட்ஸ் என்ற இனத்தவர்கள் மீது திராவிடப் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் தாக்கம் ஆகியவை குறித்து விவாதித்தனர். டாக்டர். ஹ்ரோம்நிக் இந்த விஷயங்கள் குறித்த சில கட்டுரைகளை சாதுவிடம் “தத்துவ தர்சனா” காலாண்டிதழில் வெளியிடுவதற்காக தந்தார். 

பிப்ரவரி 23, 1998, திங்கள்கிழமையன்று, சாது டர்பனுக்கு பறந்து சென்றார். மாலையில், சார்ட்ஸ்வர்தின், திரு துளஸிதாஸ், சாதுவை வெஸ்ட்ப்ரூக் ஸ்கூலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே சாது, மாணவர்களிடையே  உரையாற்றினார். பின்னர் சாது அடுத்தநாள் டோங்காட்டிற்கு இரவில் சென்றார். அடுத்தநாள் சாது க்ரேடவுன்க்கு சென்றார். அங்கே திருமதி. ராதிகா அஹீர் சாதுவை வரவேற்க, சாது விஷ்ணு மந்திர்க்கு சென்றார். புதன்கிழமையன்று சிவராத்திரி சிவன் கோயிலில் கொண்டாட்டப்பட்டது. சாது, சிவபிரானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை செய்தார். இரவு முழுவதும்,  150 க்கும் மேற்பட்ட பக்தர்களுடன், பஜனையில் கலந்து கொண்டார். சாது விடியற்காலை வரை ஐந்துவேளை  பூஜைகளையும் சாது மேற்கொண்டார். ‘ஆத்மாஷ்டகம்’ குறித்து பக்தர்களிடையே உரை நிகழ்த்தினார். சகோதரி நிவேதிதா அகாடமி மற்றும் திருவண்ணாமலை தவயோகி ராம்சுரத்குமார் பற்றியும் கூறினார். வெள்ளிக்கிழமையன்று சாது டோங்காட் திரும்பினார். சனிக்கிழமையன்று சாது, திரு சண்ணி  பிள்ளை நடத்தும் கராத்தே பள்ளிக்கூடத்திற்கு சென்று கராத்தே பற்றி சொற்பொழிவாற்றினார். கேரளாவில் தோன்றிய களரி எனும் போர்க்கலை, பௌத்த துறவியான போதி தர்மர் காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்து, பின்னர் பழமையான இக்கலையை அவர் திபெத்திற்கு கொண்டுசென்று, ஷாமோலின் கோயிலில் மேலும் அது விரிவாக்கப்பட்டு, பின்னர் அது சைனா மற்றும் ஜப்பானுக்கு சென்றது குறித்து சாது உரையாற்றினார், 

மார்ச் – 1 , 1998 அன்று ஹோட்டல் சோல்னமராவில், வேதாந்த அகாடமியின் வேதாந்தா கல்வி நிலைய டிரஸ்ட் துவக்கவிழாவில் சாது பங்கேற்றார். திரு. தென்னாப்பிரிக்கா இந்து மகாசபையின் தலைவர், திரு அஸ்வின் ட்ரிகம்ஜி, தமிழ் இனத்தவரின் பிரபல தலைவர், திரு.T.P.நாயுடு, மற்றும் பல அமைப்புகளின் தலைவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை சாதுஜி டோங்காட் பக்தர்களிடமிருந்து விடைப்பெற்று, வேதாந்த அகாடமியின் திரு ஜெயராமன் அவர்களுடன் ஜோஹனஸ்பர்கிர்கு சென்றனர். திரு. கூவர்ஜி சாதுவை லெனேஷியாவில் வரவேற்றார். புதன்கிழமை, சாது, SABC -ன் ப்ரைம் டைம் இன்டர்நேஷனல் ஸ்டுடியோவினரால் நேர்காணல் செய்யப்பட்டார். வியாழக்கிழமை அன்று சாது தனது பயணத்தின் இறுதி உரையை, சத்ய சாய் மையத்தில், “மானிட வாழ்க்கையின் மூலியங்களும் குடும்ப வாழ்க்கையின் மூலியங்களும்“ என்ற தலைப்பில் பேசினார். வெள்ளிக்கிழமை, ஜனவரி 6, 1998, அன்று,  தென் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பும் முன், சாது “தினசரி மந்திரங்கள்”, “ஹனுமான் சாலீஸா” போன்றவற்றை பக்தர்களுக்கு பதிவு செய்து தந்தார். திருமதி ஷெரிதா கொமலின் தாயார், சாதுவுடன் இந்தியாவிற்கு பயணித்தார். டாக்டர் கூவர்ஜி, லெனேஷியா  யுவக் சங்க் மற்றும் ராமகிருஷ்ணா வேதாந்த மையத்தை சேர்ந்தவர்கள், சாதுவை ஜோஹனஸ்பர்க்  பன்னாட்டு விமான நிலையத்தில் வழியனுப்பினா். சாது தென்னாப்பிரிக்கா விமான சேவையின் விமான எண் 287 மூலம், சனிக்கிழமை காலை மும்பை வந்தடைந்தார். திரு. வைபவ் தேஷ்பாண்டே மற்றும் அவரது பெற்றோர்கள் சாதுவை மும்பையில் வரவேற்று, பின்னர் அவரை மாலை விமானத்தில் வழியனுப்பினர். மும்பையிலிருந்து ஜெட் ஏர் விமானத்தை பிடித்து, சாது, சென்னைக்கு இரவு 8 மணிக்கு வந்தடைந்தார். 

பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு

வாழிய வாழியவே யோகி ராம்சுரத்குமார் நீவீர்.

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.18

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.18 

தென் ஆப்பிரிக்காவில் பகவானின் அற்புதம்

புனேவை சேர்ந்த பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத், சாதுவை மே 23 , வெள்ளிக்கிழமை அன்று தொலைபேசியில் அழைத்து பேசினார். மறுநாள் சாது தனது நான்காவது தென்ஆப்பரிக்கா பயணத்தை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசியால், அவரது சேதியை பரப்புவதற்காக, மேற்கொண்டார். சனிக்கிழமை மே 24 , 1997 காலை 7.30 மணிக்கு திருமதி. பாரதி, திரு. விவேக், திரு. அனில் ஸுட்ஷி மற்றும் பிறர் சாதுவை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். பம்பாய் சாந்தா க்ரூஸ் விமான நிலையத்தில், சாதுவை பகவானின் பக்தர்களான திரு. ராவ், திரு.மோக்கல், திரு. தேஷ்பாண்டே மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். அவர்கள் அனைவரும் சாதுவை ஸஹர்  விமானநிலையத்திற்கு வழியனுப்பினர். சாது தென் ஆப்பிரிக்கா ஏர்லைன்ஸின் விமானமான 285 ஐ மதியம் 1.30 மணிக்கு பிடித்து, டர்பனை மாலை 7.00 மணிக்கு ( தென் ஆப்பிரிக்கா நேரம் ) அடைந்தார். சாட்ஸ்வர்த் ஐ சேர்ந்த திரு. துளசிதாஸ், திரு. டெட்டி கொமல், திருமதி. ஷெரிதா கொமல்  மற்றும் அவரது பிள்ளைகள், திரு. ரோஜர்ஸ் குடும்பத்தினர், திருமதி. ஹம்ஸா பூலா, திரு. ஆண்டி மஹராஜ் மற்றும் திரு. B.J. பண்டிட்  என, சாதுவை முந்தைய பயணத்தில் வரவேற்று விருந்தோம்பலை மேற்கொண்டவர்கள், இந்தமுறையும் விமானநிலையத்திற்கு அவரை வரவேற்க வந்திருந்தனர். சாது, தென் ஆப்பிரிக்கா சகோதரி நிவேதிதா அகாடமியின் தலைமையகமான, திருமதி. ஷெரிதா கொமல்  அவர்களின் இல்லத்திற்கு சென்றபோது, பக்தர்கள் அவரை வரவேற்றனர். 

சாதுவின் முதல் நிகழ்ச்சியாக சத்ய சாய் நிறுவனத்தினா் நடத்திய சத்யநாராயண கதா,  லா மெர்ஸி கடற்கரையில் நடைப்பெற்றது. பின்னர் சாது டோங்காட் – ல் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் கூடியிருந்த ஹிந்து ஒற்றுமை மன்றத்தின் கூட்டத்தினரிடையே உரையாற்றினார். சாது, டோங்காட்டில் இருந்து கடிதம் ஒன்றை மே – 27 ல் பகவானுக்கு ஃபேக்ஸ் செய்தார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியாலும் சாது நேற்றைய முன்தினம் மாலையில் பாதுகாப்பாக இங்கு வந்திறங்கினான். நேற்று ஒரு பொது வரவேற்பு, இந்து ஒற்றுமை மன்றத்தில், இந்த சாதுவிற்கு அளிக்கப்பட்டது. பல்வேறு இந்து மத அமைப்புகளும் இணைந்து இந்த சாதுவின் அடுத்த மூன்றுமாத நிகழ்ச்சிகளை முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கிளம்புவதற்கு முன், ‘தத்துவ தர்சனா’வின் மே – ஜூலை 1997 இதழ், மற்றும் சிறிய கையடக்க பதிப்பான “ஞான முத்துக்கள்” என்ற நூல், காலஞ்சென்ற எனது தந்தை திரு. S.R. வேணுகோபாலன் முப்பதாண்டுகளுக்கு முன், இந்த சாது தனது இலட்சிய வாழ்க்கையை துவங்கிய காலத்தில், சாதுவிற்கு எழுதிய கடிதங்களில் இருந்து தொகுக்கப்பட்டது, இவை இரண்டும்  மிகுந்த அவசரமாக அச்சிடப்பட்டன. எனது சார்பாக திருமதி பாரதி இவைகளின் முதல் பிரதிகளை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க வருவாள். 

திரு. டெட்டி கொமல்  மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களின் மிகச்சிறந்த கவனிப்பையும், விருந்தோம்பலையும் இந்த சாதுவிற்கு தருகின்றனர். அவர்கள் எப்போதும் உங்களை நினைத்தவண்ணம் உள்ளனர். எல்லா நிமிடமும் இந்த சாது, உங்களால் என்னிடம் வழங்கப்பட்ட பப்பா ராம்தாஸ் மற்றும் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் பணி குறித்து விழிப்புணர்வோடு இருக்கிறான். இங்கு நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த சாது உங்களின் பெயரையும், ராமநாமத்தையும் சொல்லி வருகின்றான். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

மே 27 செவ்வாய்க்கிழமையன்று சாது மவுண்ட் வ்யூ உயர்நிலை பள்ளியில் மாணவர்களிடையே ‘மனித மூல்யங்களும், ஒழுக்கமும்’ என்ற தலைப்பில்  சாது உரையாற்றினார். அங்கிருந்து மூத்த பள்ளி மாணவர்களிடையே ஒரு கேள்வி – பதில் பகுதியும் நடைப்பெற்றது. பின்னர் சாது ஸ்டேங்கர் மேனர் ஆரம்ப பள்ளிக்கு சென்றார். அங்கே ஹிந்தி – தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சி முகாம்  நடைப்பெற்றது. சாது அங்கே , “மொழிகளின் வேத மூலம்“ என்ற தலைப்பில் பேசினார். தென்னாப்பிரிக்கா இந்து சுயம்சேவக் சங்கத்தை சேர்ந்த திரு. சதீஷ் கொமல் சாது உடன் இணைந்தார். அவர்கள் சங்கத்தின் செயல்திட்டம் குறித்து விவாதித்தனர். மாலையில் சங்க சுயம்சேவகர்களின் கூட்டத்தில் சாது, பாரதத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தோற்றம்,  மற்றும் அதின் மாபெரும் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார். பின்னர் சாது சத்ய சாய் அமைப்பின் பிள்ளைகள் கூட்டத்தில் உரையாற்றிய சாது அவர்களுக்கு உணர்ச்சியூட்டும் கதைகளை கூறினார். அடுத்தநாள் இந்து ஒற்றுமை மன்றத்தின் கூட்டமானது டோங்காட் வெங்கடேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. அதில் இந்து மாநாட்டிற்கான திட்டங்கள், ஹிந்துத்துவ வகுப்புகள் மற்றும் சாதுவின் பிற நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களும் விவாதிக்கப்பட்டன. 29 ஆம் தேதியன்று சாது வீரபோக எம்பெருமானார் கோயிலுக்குச் சென்று, ‘கடவுள் மற்றும் வழிபாடு’ குறித்து பேசினார். அடுத்தநாள் சாது சூர்ய நாராயணா கோயிலில் உரையாற்றினார். ஃபினிக்ஸில் சாது , “ ஹிந்து கடவுளும் , மத ஒற்றுமையும் ” குறித்து பேசினார். 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்டேங்கரில் இந்து தர்ம சபா ஹாலில் , “ஹிந்து ஒருமைப்பாட்டில் பெண்களின் பங்கு“ என்ற  தலைப்பில் சாது பேசிய கூட்டத்திற்கு டாக்டர் திருமதி மிஸ்ரா தலைமை தாங்கினார். 

ஜூன் – 1 , 1997 ஞாயிற்றுக்கிழமை அன்று, சாதுவை, லா மெர்ஸியில், சுவாமி சிவானந்தா அந்தர்தேச மையத்தில், தென்னாப்பிரிக்கா டிவைன் லைஃப் சொஸைட்டியின் தலைவரான சுவாமி சகஜானந்தா வரவேற்றார். ரிஷிகேஷை சேர்ந்த சுவாமி தயானந்தா, திரு. ராகவலூ மற்றும் திரு. வெங்கடேஸ்வரலூ மற்றும் பல சிவானந்தாவின் பக்தர்கள் சத்சங்கத்தில் கலந்து கொண்டனர். திரு. ராம கவுண்டர் சாதுவை வரவேற்று உரை நிகழ்த்தினார். சுவாமி சகஜானந்தாவும் சாதுவின் பணிகளை  குறித்து தனது உரையில் குறிப்பிட்டார். பீட்டர்மாரிட்ஸ்பர்கை சேர்ந்த திரு. A.S. கவுண்டர் மற்றும் டர்பனிலுள்ள இந்திய தூதர், திரு. பட்டாச்சார்யா, போன்றோரும் அங்கிருந்தனர். மாலையில், சாது டோங்காட்டின் வேதாந்தா நிறுவனத்தில் குழுமியிருந்தவர்களிடம் உரையாற்றினார். அங்கே திரு. ஜெயராமன் சாதுவை வரவேற்று அறிமுகப்படுத்தினார். சாது, “இயேசு கிறிஸ்துவின் காணாமல் போன வருடங்கள்“ (Lost Years of Jesus Christ) என்ற தலைப்பில் இயேசு கிறிஸ்து ஆரம்பகால வாழ்க்கையில் இந்தியாவில் வந்து வாழ்ந்தது குறித்து விவரித்தார். திங்கள்கிழமை, சாதுவை திரு. நெல்சன் என்பவர் சாட்ஸ்வர்த் மற்றும் ஃபினிக்ஸ் டேப்லாய்ட்டுகளுக்காக பேட்டி எடுத்தார். மாலையில் சாது, பாய்ஸ் டவுன் ஹாலில், சான்றோர் கூட்டத்தில், உரையாற்றினார். அங்கே, தென் ஆப்பிரிக்கா காவல்துறையின் ஹிந்து மதபோதகர், திரு. தனசங்கர் மஹராஜ், சாதுவை அறிமுகப்படுத்தினார். சாது அங்கே கடோபநிஷத் மற்றும் கேனோபநிஷத் குறித்து பேசினார். அடுத்தநாள் காலை சுவாமி சகஜானந்தா சாதுவை சிவானந்த சர்வதேச மையத்தின் குருகிருபாவில் வரவேற்று காணிக்கைகளை வழங்கினார். நேட்டாலின் முன்னாள் கல்வி அமைச்சரான  திரு. தேவன் மற்றும் திரு. ரூப் நாராயண் சாதுவை சந்தித்து, இந்தியாவில் இருக்கும் விவேகானந்தா கேந்திராவைப் போல், தென் ஆப்பிரிக்காவில் விவேகானந்தா மிஷனை அமைப்பது குறித்து பேசினர். திரு. தனசேகர மஹராஜ் சாதுஜியை தென் ஆப்பிரிக்காவின் ஒலிபரப்பு மையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு, திருமதி அனிதா சுஜன் சிங், சாதுவை ‘ரேடியோ லோட்டஸி’ற்காக நேர்காணல் மேற்கொண்டார். சாது அதில் சகோதரி நிவேதிதா அகாடமி குறித்தும், ஹிந்து கலாச்சாரம் மற்றும் எண்ணங்களை தேசீய மற்றும் சர்வதேச அளவில் பரப்புவதற்கான அகாடமியின் திட்டங்கள் குறித்தும் பேசினார். மாலையில் சாது சின்ன திருப்பதி கோவிலில் ஹோமங்களை மேற்கொண்டதோடு அங்கே அவர் ஹிந்து சடங்குகளைப்பற்றியும் பேசினார். புதன்கிழமை , ஜூன் – 4 அன்று சாதுஜி சுவாமி சகஜானந்தாவை லா மெர்சியின் சிவானந்தா சர்வதேச மையத்தின் குருகிருபாவில் சந்தித்தார். சகோதரி நிவேதிதா அகாடமி தென்ஆப்பரிக்காவில் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், திருவண்ணாமலை  யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அருளாசியுடன் நடந்து வரும் அகில உலக ராமநாம இயக்கம் குறித்தும் விவாதித்தார். தென்னாப்பிரிக்காவில் ஹிந்து சுயம்சேவக் சங்கத்தின் பணிகள் குறித்தும் விவாதித்தார். சுவாமி சகஜானந்தா, நீண்ட தூர பயணங்களை சாலை மார்க்கமாக மேற்கொள்வதை தவிர்த்து, முடிந்தவரை விமான மார்க்கமாக பயணிக்கும் படி சாதுவிற்கு அறிவுறுத்தினார். மாலையில் சாது, சுயம்சேவகர்கள் மற்றும் சேவிகாக்களிடம், டோங்காட்டின் இரு இடங்களில் நடைப்பெற்ற சுயம்சேவக்சங்கத்தின் கூட்டங்களில், உரையாற்றினார். 

ஹிந்து அமைப்புக்களான ஹிந்து சுயம்சேவக் சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து மகா சபை மற்றும் சர்வதேச கிருஷ்ணா விழிப்புணர்வு சங்கம் போன்றவை, ஃபினிக்ஸில் ஏற்பாடு செய்திருந்த ஒரு ஊர்வலத்தில், வியாழக்கிழமை , ஜூன் – 5 அன்று சாது கலந்து கொண்டார். இந்த ஊர்வலமானது இவான்ஜிலிக்கல் சர்ச்சின் திரு. சன்னி நாயக்கர் இந்து மதம் குறித்தும், கடவுளர்கள் குறித்தும் இழிவாக பேசியதற்கு எதிராக நடத்தப்பட்டது. சாது அந்த போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டு அந்த பாஸ்டரிடம் கண்டன பத்திரத்தை வழங்கி அவரது தரக்குறைவான மதப்பிரச்சாரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். அடுத்தநாள் சாது ஹிந்து சுயம்சேவக் சங்கத்தின் சுயம்சேவகர்களிடையே உரையாற்றினார். மாலையில், டோங்காட் டவுன் ஹாலில், இசை நாட்டியம் மற்றும் ஆன்மிகப் பண்பாடு குறித்து உரையாற்றினார். பிரபல பாடகர் சௌ. வீணா லட்சுமணன் மற்றும் அவர் குடும்பத்தினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சாது, மொரிஷியஸை  சார்ந்த திரு. கிருஷ்ணா கார்ஸில் அவர்களிடமிருந்து ஒரு சேதியை ஃபேக்ஸ் மூலம் பெற்றார். ஜூன் 7 அன்று சாது, டெரன்ஸ் பார்க் ஆரம்பப் பள்ளி வளாகத்தில், ஹிந்து ஸ்வயம்சேவக் சங்க கூட்டத்தில், ஹிந்துத்துவா மற்றும் சங்க  பத்ததி குறித்து சுயம்சேவகர்களிடம் உரையாற்றினார். வி.எச்.பி.யின் திரு. அனித் மஹராஜ் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். 

ஜூன் – 8 ஞாயிற்றுக்கிழமை, சாது, டோங்காட்டின் சிவன் சபையில் சிவன் குறித்து உரை நிகழ்த்தினார். மதியம் அவர் ராமாயணம் குறித்து இரண்டு பிரிவுகளாக வுட் வ்யூ ஆரம்ப பள்ளியில் பேசினார். திங்கள்கிழமை அன்று சாது HSS – ன் இரண்டு ஷாகாக்களில் உரையாற்றினார். ஃபினிக்ஸ் டேப்லாய்ட் சாதுவின் பணிகள் பற்றிய சிறந்த கட்டுரையை தாங்கி வந்தது. அடுத்தநாள் சாது ஹிந்து தர்மம் குறித்து இஸிபிங்கோ ஹிந்து தர்ம சபையில் பேசினார். 

ஜூன் – 11 அன்று சாது எஸ்கோர்ட்க்கு சென்றார்  அங்கே, எம். எல். சுல்தான் ஆரம்பப் பள்ளியின் திரு. J. ராம்பிரசாத், அவரை வரவேற்றார். சாது அங்கே மொழி ஆசிரியர்களிடம், ஹிந்து கலாச்சாரம் மற்றும் இந்திய மொழிகள் குறித்து உரையாற்றினார். அடுத்தநாள் SABC – ன் திரு. சதீஷ் சாதுவின் நேர்காணலை வீடியோ பதிவு செய்தார். சாதுவின் நேர்காணல் பத்து தலைப்புகளில் SABC – ன் ஜோதி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டது. பின்னர் சாது டோங்காட்டின் ஆசிரியர்கள் மையத்தில் ஆசிரியர்களிடம் இந்துப் பண்பாடு பற்றிய வகுப்புகள் நடத்துவது குறித்து பேசினார். மாலையில் ராஜ்புத் ஹாலில், சாட்ஸ்வர்த் திரு.நாராயணதாஸ் சத்சங்க குழு கூட்டத்தில், உரையாற்றினார். வெள்ளிக்கிழமை , சாது டர்பன் ஆசிரியர்கள் மையத்தில் உரையாற்றினார். மாலையில் ராஜ்புத் ஹாலில், இந்து வாழ்க்கை வழிமுறை, வழிபாடு மற்றும் சமயச் சடங்குகள் குறித்து  உரையாற்றினார். சனிக்கிழமையன்று, திரு துளசிதாஸ் அவர்கள், சாட்ஸ்வர்த் சர்வ தர்ம ஆசிரமம் கட்டுவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்திற்கு சாதுவை அழைத்துச்சென்று, சாது அங்கே காயத்ரி யக்ஞம் நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை ஜூன் – 15 அன்று சாது திராவிட சங்க ஹாலில் தமிழ் பக்தர்களிடம் உரையாற்றி தமிழ் மற்றும் ஹிந்து பாரம்பரியம் குறித்து பேசினார். மதியம், லா மெர்ஸியின் சிவானாந்த சர்வேத மையத்தில், ஹிந்து ஸ்வயம்சேவக சங்க ஸ்வயம்சேவகர்களிடையே உரையாற்றிவிட்டு, அந்த மையத்தில் நிறுவப்பட்ட ஒரு புனிதமான நீச்சல்குளத்தில் அன்னை கங்கையை ஆவாகனம் செய்ய, டிவைன் லைஃப் சொஸைட்டியின் ஆன்மீக தலைவரான சுவாமி சகஜானந்தா முன்னிலையில், சாது விசேஷ பூஜையை மேற்கொண்டார். அவரது நேர்காணல் ரேடியோ லோட்டஸ்ல் ஒலிபரப்பாகியது. பின்னர் அவர் இஸ்பிங்கோ கோயிலில், “தந்தையும், அன்னையும்“ என்ற தலைப்பில் பேசினார். திங்களன்று, டோங்காட் பாய்ஸ் டவுனில், பக்தர்களிடையே, சாது, சதாசிவ பிரம்மேந்திரரின் தூங்கதரங்கே கங்கேபாடலை விளக்கினார். செவ்வாய்க்கிழமையன்று சாது, பீட்டர்மாரிட்ஸ்பர்க் TPI ஆரம்ப்பள்ளியில், மொழி ஆசிரியர்களிடையே, உரையாற்றினார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர், டாக்டர் யஸ்வந்த் பாடக், ஹிந்து சுயம்சேவக் சங்கத்தின் திரு. சதிஷ் கொமல்  மற்றும் திரு. கமல் மஹராஜ் போன்றவர்கள், சாது மீண்டும் தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், மற்றும் கென்யாவிற்கு, நவம்பரில், பயணிப்பது குறித்து பேசினர். மாலையில் சாது ஒரு ஹோமத்தை கோபால் லால் கோயிலில் நடத்தினார். பின்னர் அவர் இந்து சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்து பேசினார். அந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதன்கிழமை சாது ஃபினிக்ஸ் ஆசிரியர்கள் மையத்தில், ஆசிரியர்களிடம், இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் குரு என்ற தத்துவத்தை விளக்கினார். மாலையில் சாது கோபால் லால் கோயிலில் சனாதன தர்மம் குறித்து பேசினார். ஜூன் – 19 அன்று சாது சாட்ஸ்வர்த்தின் ஆசிரியர்கள் மையத்தில், ஆசிரியர்களிடம் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டார். ஒரு கிறிஸ்தவ பாஸ்டர் உட்பட பிற மதத்தை சேர்ந்தவர்களும் அதில் கலந்து கொண்டனர். மதியம் HSS – ன் சுயம்சேவகர்கள் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் பேசினார். பின்னர், கோபால் லால் கோயிலில் ‘பகவத்கீதை’ குறித்து பேசினார். 

சாது தென் ஆப்பிரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் நடைப்பெற்ற கூட்டத்தில் யோகி ராம்சுரத்குமார் பெயரையும் , ராமநாமத்தையும் உச்சரித்து பரப்பினார். ஜூன் – 20 வெள்ளிக்கிழமை அன்று சாது , “மாணவர்களின் வாழ்க்கையில் ஒழுக்கம்” என்பது குறித்து பஃபர்டேல்ஸ் இரண்டாம் நிலை பள்ளியில் மாணவர்களிடையே உரையாற்றினார். அதே பள்ளியில் சீனியர் மாணவர்களிடையே உரையாற்றுகையில், “ஆதர்ச மாணவனின் வாழ்க்கை“ என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் அங்கே ஒரு கேள்வி – பதில் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும் அவர் ஆசிரியர்களுக்காகஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில்  உரையாற்றுகையில் , “ஆசிரியர்களின் பங்களிப்பு“ குறித்து பேசினார். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலும் வழங்கினார். மதியம், தேவி சமாஜின்  துவக்க விழாவில் சாது “ மாத்ரு சக்தி “ குறித்து பேசினார். சனிக்கிழமை அவர் “ பாரத மாதா “ குறித்து டெரென்ஸ்  பார்க் பள்ளியில் உரை நிகழ்த்தினார். பின்னர், திருமதி. வனிதா மஹராஜ் இல்லத்தில், ஹிந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் சேவிகைகள்  இடையே உரையாற்றினார். ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை, மியர்பேங்க் சைவ சிந்தாந்த சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், சாது “சைவம்” குறித்து பேசினார். பின்னர், டோங்காட் ஹிந்து  முன்னணியில், ஹிந்து பிரசாரகர்களை  ஒருங்கிணைப்பது குறித்து உரையாற்றினார். தென்னாப்பிரிக்கா ஒளிபரப்பு கழகம், ஜோதி நிகழ்ச்சியில், “காமசூத்திரம்” என்கின்ற தலைப்பில்  சாதுவின் உரையை ஒளிபரப்பியது. திங்கள்கிழமை அன்று, “ஹிந்து சமூகத்திற்கான அச்சுறுத்தல்கள்” என்ற தலைப்பில் விஸ்வரூப கோயிலில் பேசினார். செவ்வாய்க்கிழமை அன்று சாது ஒரு விரிவான கடிதம் ஒன்றை சுவாமி சச்சிதானந்தர் மற்றும் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு ராம்நாம பிரச்சார முன்னேற்றம் குறித்து எழுதினார். மாலையில், விஸ்வரூப கோயிலில், காயத்ரி ஹோமம் நடத்தி சனாதன தர்மம் குறித்து பேசினார். டாக்டர் யஷ்வந்த் பாடக், ஜோஹனஸ்பர்க் வழியாக நைரோபி செல்லும் முன், சாதுவின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். வியாழக்கிழமை ஜூன் – 26 அன்று க்ரேடவுன் கம்யூனிட்டி ஹாலில் சாதுஜி ஒரு பெரும் கூட்டத்தில்  கலந்து கொண்டு இந்து ஒற்றுமை குறித்து பேசினார். இந்து முண்ணனியின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ராம்தாஸ் சாதுவை வரவேற்றார். வெள்ளிக்கிழமை, ரைட் ஹானரபில் திரு ஸ்ரீனிவாச சாஸ்திரி நிறுவிய, க்ரேடவுன் ஆரம்ப பள்ளி மற்றும் இரண்டாம்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே, சாது “இளைஞர்களின் இலட்சியங்களும், ஒழுக்கமும்” என்ற தலைப்பில் பேசினார். மாலையில், லா லூசியாவில், சாது ஒரு ராம நாம சத்சங்கம் நிகழ்த்தி, ‘பாரதமாதா’ குறித்து பேசினார். 

தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் யோகி ராம்சுரத்குமார் கருணையையும் , ஆசியையும், அவரை நேரில் காணாமலேயே பெற்ற சம்பவம், திரு ஷம்மிலால் மற்றும் திருமதி ப்ரமிளா  தம்பதியினரின் மகனான சுவீரா பகவான் அருளால் அற்புதமான முறையில் குணமாக்கப் பட்ட பொழுது நிகழ்ந்தது. சனிக்கிழமை ஜூன் – 28 , 1997 அன்று பகவான் சத்யசாய்பாபாவின் பக்தர்கள், திரு ராபின் மற்றும் அவரது குடும்பத்தினர், கிங் ஜார்ஜ் மருத்துவமனை யில் இருந்து வந்து சாதுவை சந்தித்து, அந்த குழந்தையின் அவசரமான நிலையை குறித்து தெரிவித்தனர். அந்த குழந்தைக்காக பிரார்த்தனை செய்ய சாதுவை உடன் அழைத்துச் சென்றனர். சாது அந்த குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சந்தித்தார். சாது, பகவானின் ஒரு சிறிய படத்தையும், பகவான் ஆசீர்வதித்து தந்த துளசி ஜபமாலையையும் அந்த குழந்தையின் தாயிடம் தந்தார். அந்த படத்தை குழந்தையின் அருகே வைத்து. ராமநாம ஜபத்தையும், பகவான் நாம ஜெபத்தையும்  இடைவிடாது மேற்கொள்ளுமாறு அந்தத் தாயிடம் கேட்டுக்கொண்டார். பகவான் ஆசீர்வதித்து தந்த புனிதமான விபூதி மற்றும் குங்குமத்தையும் அந்த குழந்தையின் நெற்றியில் வைத்தார். அடுத்தநாள் காலை அந்தக் குழந்தையின் தந்தை தொலைபேசியில் அழைத்து குழந்தை விரைவாக குணமடைந்து வருவதாகவும் விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவான் என்றும் கூறினார். ஞாயிற்றுக்கிழமை ஜூலை 6 , 1997 அன்று சாது சென்னையிலிருந்து, திரு. முகிலன் என்பவரிடம் இருந்து, ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றார். அவர் பகவான் தன்னிடம் தென் ஆப்பிரிக்காவில் என்ன நிகழ்கிறது என்பது குறித்து சாதுவிடம் பேசி அறியுமாறு கூறியதைப்பற்றி தெரிவித்தார். ஆனால், பகவான் என்ன கேட்க விரும்புகிறார் என்பதைப்பற்றி அறியாதபோதிலும், அவர் சாதுவின் உடல்நலம் குறித்து கேட்டிருக்கலாம் என்று எண்ணினார். திரு. முகிலன் சாதுவின் தொடர்பு எண்ணை சாதுவின் மகன் திரு. விவேகானந்தனிடம் இருந்து பெற்றிருந்தார். மேலும் அவர் சாதுவிடம் அனைத்தும் சரியாக இருக்கிறதா என வினவினார். சாது அவரிடம் தான் நலமாக இருப்பதாகவும், தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களும் யோகியின் இருப்பை உணர்வதாகவும் தெரிவித்தார். சாது பகவானுக்கும், பாரதிக்கும் சில தகவல்களை முகிலன் வழியாக, ஃபேக்ஸ் மூலம் அனுப்பினார். பகவான், தனது சிஷ்யன் மூலம் ஆன்மீக ஆற்றலை ஒரு பக்தன் மீது செலுத்தி அவனை குணப்படுத்த முடியும் என்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமல்ல. பகவான் சுவாமி சிவானந்தா இது குறித்து பேசுகையில் அதனை , சக்தி சஞ்சார்”  என்று குறிப்பிடுகிறார்: 

சக்தி சஞ்சார் — ஒரு ஆரஞ்சை நீங்கள் இன்னொரு மனிதனுக்கு தருவதைப் போல ஆன்மீக சக்தியையும் ஒருவர் இன்னொருவருக்கு வழங்க முடியும். இத்தகைய ஆன்மீக மாற்றம் சக்தி சஞ்சார் எனப்படும். சக்தி சஞ்சாரில் சில ஆன்மீக அதிர்வுகளை சத்குரு தனது தனது சீடனின் மனதிற்கு அவர் மாற்றிவிட்டார். அவர் அல்லது நினைத்த மாத்திரத்திலேயே மாற்றிவிடுவார். சக்தி சஞ்சாருக்கு தகுதி உடையவர் என யாரைக் கருதுகிறாரோ அன்த  முறையான சிஷ்யனுக்கு குரு ஆற்றலை மாற்றுகிறார். குரு சீடனை, ஒரு பார்வை , ஒரு தொடுகை , ஒரு எண்ணம், ஒரு வார்த்தை அல்லது வெறும் விருப்ப ஆரவ்த்தால் மாற்ற முடியும். சக்தி சஞ்சார் குரு பரம்பரை மூலம் வருவது. அது மறை ஞான அறிவியல். அது குரு மூலம் சீடனுக்கு வழங்கப்படுவது. ஜீசஸ் தனது ஆன்மீக சக்தியை தொடுகை மூலம் தனது சில சீடர்களுக்கு வழங்கினார். சமர்த்த ராமதாசரின் சீடர் தனது ஆன்மீக ஆற்றலை தன்மீது அன்பு கொண்ட ஒரு நடனமாதுவின் மகளுக்கு வழங்கியுள்ளார். அந்த சீடன் அவளை பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்கு சமாதி நிலையை வழங்கினார். அவளின் வேட்கை அழிந்தது. அவள் மிகுந்த சமயப் பற்றும் ஆன்மீக ஆர்வமும் கொண்டவள் ஆனாள். பகவான் கிருஷ்ணர் சூர்தாஸின் குருடான கண்களை தடவினார். அவரது அகக்கண்கள் திறந்தன. அவருக்கு பாவ சமாதி கிட்டியது. பகவான் கௌராங்கா அவரது தொடுகை மூலம் பல பேருக்கு ஆன்மீகத்தை ஊட்டி அவரது பக்கத்தில் சேர்த்தார். அவரது தொடுகையால் நாத்திக வாதிகளும் பரவசநிலை அடைந்து தெருக்களில் ஹரியின் பாடல்களை பாடி ஆடினார்கள். குருவிடம் இருந்து சக்தியைப்பெற்றப்பின் சீடனுக்கு ஓய்வு என்பது கிடையாது. அதன்பின் அவன் கடுமையான சாதனாக்களில் ஈடுபட்டு பூரணத்துவத்தையும் மேலும்  ஆற்றல்களையும்  அடைய போராட வேண்டியிருக்கும். திரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி விவேகானந்தரை தொட்டார். சுவாமி விவேகானந்தா பேருணர்வு அனுபவத்தை பெற்றார் அந்த தொடுகைக்குப்பின் அவர் பூரணத்துவத்தை அடைய ஏழு வருடங்களுக்கு மேலாக கடுமையாக போராடினார்.”

ஞாயிற்றுக்கிழமை ஜூன் 29 அன்று சாது மரியன் ஹில்லில் வேதாந்த நிறுவனம் நடத்திய ஒரு சபையில், “இந்தியாவில் ஜீசஸ் வாழ்க்கை“ என்ற தலைப்பில் பேசினார். அடுத்தநாள் சாது டஸ்ஸேன்ஹாக் கம்யூனிட்டி ஹாலில் , “ஹிந்து தர்மத்தில் கடவுள்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். ஜூலை – 1 அன்று சாது செயல்முறை வேதாந்தம் குறித்து டோங்காட் வேதாந்தா நிறுவனத்தில் பேசினார். அடுத்தநாள் லா மெர்ஸியின் மித்ர மண்டல் சத்சங்கத்தில் இதிகாசம், புராணங்கள் குறித்து பேசினார். செவ்வாய்க்கிழமை , ஜூலை – 3 அன்று , “ மனித வாழ்க்கையின் இலக்கு” என்ற தலைப்பில் சத்யசாய் மையத்தில் ஸ்டேங்கரில் சாது ஒரு சபையில் பேசினார். அடுத்த நாள் நிகழ்ச்சியை ஹிந்து சபையின் தலைவரான திரு. B.J. பண்டிட், ஸ்டாங்கர் ஹிந்து சபா ஹாலில் ஏற்பாடு செய்திருந்தார். அடுத்தநாள் காலை சாது “ நாரீ சக்தி “ என்ற தலைப்பில் பெண் சக்தியைப் பற்றி சபா ஹாலில் தாய்மார்களிடையே பேசினார். மதியம், “பிராணாயாமம், தியானம், கடவுள், சடங்குகள் மற்றும் விழாக்கள்” குறித்து பேசினார். ஜூலை – 6, ஞாயிறு அன்று, சாதுஜி ஃபினிக்ஸ் பராசக்தி கோயிலில் சாது உரையாற்றியதை கேட்க ஏராளமானோர் குழுமினர். அடுத்த நாள், சாது ஷெல் க்ராஸின் சிவன் கோயிலில் உரையாற்றினார். 

சாதுவின் கேப் மாநில நிகழ்ச்சிகள் அவர் கேப் டவுனுக்கு ஜூலை 8 , 1997 ல், சன் விமான சேவை மூலம் பறந்து சென்றபோது துவங்கியது. திருமதி ப்ரமிளா  வஸ்ஸன்  , சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், கேப்டவுனில் சாதுவை வரவேற்று தனதுஇல்லத்தில் தங்க வைத்தார், சாது கேப் மாநில நிகழ்ச்சிகளை, கேப் டவுன் விஷ்ணு கோவிலில், பகவான் விஷ்ணு குறித்து, புதன்கிழமை அன்று நிகழ்த்திய விரிவுரையுடன் துவக்கினார். வியாழக்கிழமை அன்று அவர் , ‘ சத்தியம், சிவம், சுந்தரம்’ என்ற தலைப்பில் சத்யசாய் மையத்தில் பேசினார். அடுத்தநாள் காலை சாது ஆனந்த குடீரில், “ஒருங்கிணைந்த யோகா” (Integral Yoga) என்ற தலைப்பில் உரையாற்றினார். மா யோகேஸ்வரி சாதுவை வரவேற்று அறிமுகப்படுத்தினார். மாலையில், சாது, பகவான் கிருஷ்ணர் குறித்து, கிருஷ்ணர் கோயிலில் பேசினார். சனிக்கிழமை, சாது, தியாசஃபிகல் சொஸைட்டியில், “ மனிதனின் மதம் “ என்ற தலைப்பில் பேசினார். தபஸ்வி பாபா அவதூதின் பக்தர், மற்றும் ‘தத்துவ தர்சனா’வின் தொடர் பங்களிப்பாளரான திருமதி ஐனஸ் லோலர், சாதுவை பக்தர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஞாயிற்றுக்கிழமை சாது, சிவன் கோயிலில், ‘கிரஹஸ்த தர்மம்’ குறித்து பேசினார். மாலையில் சாது சத்சங்கத்தை திருமதி. ப்ரமிளா  வஸ்ஸன்  அவர்களின் இல்லத்தில் நடத்தினார். சாது சுவாமி விவேகானந்தர் மற்றும் சகோதரி நிவேதிதா குறித்தும் சுவாமிஜியின், “எனது பிரச்சார திட்டம்“ (My Plan of Campaign) குறித்தும் பேசினார். 

திங்கள்கிழமை, ஜூலை – 14 , 1997 அன்று, சாது டர்பனுக்கு போர்ட் எலிசபெத் வழியாக, விமானம் மூலம், முற்பகலில் வந்தடைந்தார். மாலையில் சாது ரேடியோ லோட்டஸில் ஒரு நேர்முக பேட்டி ஒன்றை தந்தார். அதில் அவர், “ குரு பஸ்டர்ஸ்” என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஹிந்து ஆன்மீக குருமார்களை நிந்திப்பது குறித்து, கடுமையாக சாடினார். ஜூலை 15 முதல் 17 வரை சாட்ஸ்வர்த்தின் பிரேம சாந்தி ஆசிரமத்தில் ராமாயணம் குறித்த ஒரு தொடர் உரை ஆற்றினார். ஜூலை 18 அன்று சனாதன தர்மம் குறித்து சாது ஒரு உரையை ஃபினிக்ஸ் விஷ்ணு கோவிலில் நடத்தினார். ஜூலை 19 அன்று சாது, வேதாந்த நிறுவனத்தில், ஒரு ஹோமத்தை நடத்தி அங்கே “குடும்ப மதிப்புகள்” (Family Values) குறித்து உரை நிகழ்த்தினார். ஞாயிற்றுக்கிழமை அன்று, பகவானின் கருணையால் அதிசயமான முறையில் காப்பாற்றப்பட்ட குழந்தை சுவீராவின் தாயாரான  ப்ரமிளா  தனது பெற்றோர் மற்றும் குழந்தையோடு வந்து சாதுவின் ஆசியை வேண்டினர். மதியம் சாது பெல்விடேர் ஹாலில் இந்து சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்து பேசினார். பின்னர் சாது பீட்டர்மாரிட்ஸ்பர்க் சென்று சத்ய சாய் மையத்தில் குரு பூர்ணிமா குறித்து உரையாற்றினார். அடுத்தநாள் சாது கூல்ஏர் – ல் உள்ள சிவன் கோயிலில் உரையாற்றினார். செவ்வாய்க்கிழமை ஜீலை 22 -ல் சாது பீட்டர்மாரிட்ஸ்பர்க் – ல் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் இருப்பவர்களிடையே, “ வாழ்வின் இலக்கு” குறித்து பேசினார். மாலையில் ஜோதி நிலைய சத்சங்கத்தில் சாது ‘விஞ்ஞானம்,  ஆன்மீகம், மற்றும் மூடநம்பிக்கை’ என்ற தலைப்பில் பேசினார். அடுத்த நாளும் ஜோதி நிலையத்தில் ஹிந்து வாழ்க்கை மூல்யங்கள் குறித்துப் பேசினார். ஜூலை 24 அன்று வியாழக்கிழமை சாது , “ கடவுள் அறிதலின் பாதைகள் “ என்ற தலைப்பில் ரிட்ஜ்வ்யூ ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சத்சங்கத்தில் பேசினார். வெள்ளிக்கிழமை சாது “ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி” குறித்து ஜோதி நிலையத்தில் பேசினார். சனிக்கிழமை அவர் சங்கரநாராயண சத்சங்க குழுவில் ஹிந்து வழிபாடுகள் மற்றும் சடங்குகள் குறித்து பேசினார். பின்னர், ரிட்ஜ்வ்யூ ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற இன்டெக்ரல்  யோகா சென்டரின் சத்சங்கத்திலும் உரையாற்றினார்.

பீட்டர்மாரிட்ஸ்பர்கின் வேத் தர்மா சபா ஜூலை 27 அன்று நடத்திய யோகா முகாமில் சாது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சாது அங்கே ராம் நாம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஆசியுடன் நடக்கும் உலக ராம்நாம் இயக்கம் குறித்து உரையாற்றினார். ரேடியோ மாரிட்ஸ்பர்கின் டாக்டர் சிவராமா சாதுவுடனான ஒரு நேரடி நேர்காணலை மேற்கொண்டார். திங்கள்கிழமை, பீட்டர்மாரிட்ஸ்பர்கின்  சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளரான திருமதி நவநீதம் கவுண்டர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற விசேஷ சத்சங்கத்தில், குருதேவ் சிவானந்தா அவர்களின் சமாதி நாள் கொண்டாடப்பட்டது. சாது, நர்ஸி மேத்தாவின் பாடலான , வைஷ்ணவ ஜன் தோ தேனே கஹியே…” குறித்து பேசினார். ஜூலை – 29 அன்று, க்ரேடவுனின் சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளரான திரு. தயாராம் அஹீர், சாதுவை க்ரேடவனுக்கு அழைத்துச் சென்றார். க்ரேடவுன் ஆரம்ப பள்ளியில் “கடவுள்” குறித்து சாது பேசினார். மாலையில், விஷ்ணு மந்திரில், ஒரு ஹோமம் நடத்தி, தினசரி கடமைகள் குறித்து சொற்பொழிவாற்றினார். புதன்கிழமை, சாது, க்ரேடவுனின் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற, ஹிந்தி ஆசிரியர்கள் கூட்டத்தில், “துளசி ராமாயணத்தில்  லட்சுமணன் – பரசுராம் உரையாடல்“ குறித்து பேசினார். மாலையில், சாது, பெருமாள் கவுண்டர் அவர்களின் இல்லத்தில், ருஹானி சத்சங்கத்தில், சீக்கியம் மற்றும் இந்து மறுமலர்ச்சி குறித்து பேசினார். அடுத்தநாள் மாலையில் சாதுஜி ஷால்கிராஸ் சத்யசாய் மையத்தில் , “சத்தியம், சிவம், சுந்தரம்“ குறித்து பேசினார். ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை அன்று,  சாது, டர்பனில் உள்ள சிவன் கோயிலில் “ இந்து வாழ்க்கையின் நித்திய மூல்யங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். சனிக்கிழமை சாது போர்ட் ஷெப்ஸ்டோன் – க்கு காரில் சென்று, ஷெப்ஸ்டோன் இரண்டாம்நிலை பள்ளியில், ஒரு சத்சங்கத்தில், உரையாற்றினார். பெல்வடேர் ஹாலில் ஆகஸ்ட் 3, 1997 அன்று, ஹிந்து தர்மம் குறித்த கருத்தரங்கு ஒன்று நடைப்பெற்றது. சாது உடன், ராமகிருஷ்ணா மையத்தின் சுவாமி சாரதானந்தா , டாக்டர். தில்லைவேல் நாயுடு, பேரா. சுப்பிரமணியம் மற்றும் பிற அறிஞர்கள் அதில் பங்கேற்றனர். 

சாதுஜி, திருமதி ஷெரிதா கொமல்  உடன், ஆகஸ்ட் 4 , 1997 அன்று,  விமானம் மூலம் , ஜோஹனஸ்பர்க் சென்றார். டாக்டர் ஹரி கூவர்ஜி மற்றும், கௌடங் இந்து ஒருங்கிணைப்பு கவுன்சலின் அதிகாரிகள், சாதுவை, கௌடங் ஏர்போர்ட்டில் வரவேற்றனர். ராமகிருஷ்ணா ஹாலில் சாதுவிற்கு ஒரு பெரிய வரவேற்பு வழங்கப்பட்டது. அதில் பல ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சாது, அதில், இந்து ஒற்றுமை குறித்து பேசினார். ஆகஸ்ட் – 5 அன்று சாது பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதனை டாக்டர் கூவர்ஜி, பகவானுக்கு, ஃபேக்ஸ் செய்தார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் இந்த சாதுவின் தென் ஆப்பிரிக்கா பயணம் மிகுந்த வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. அனைத்து இடங்களிலும் நாங்கள் நமது தாழ்மையான இந்து தொண்டுக்கான மிக சிறந்த வரவேற்பை பெற்றோம். கேப்டவுன், பீட்டர்மாரிட்ஸ்பர்க், க்ரேடவுன், கூல்ஏர், மற்றும் பிற முக்கிய நகரங்கள் மற்றும் மாநகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். சில இடங்களில் வெள்ளை மற்றும் கறுப்பின மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளும் நிகழ்வுகளை பலருக்கு கொண்டுசேர்த்தன. 

இத்துடன் கௌடேங் இந்து மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் இணைக்கப்பட்டுள்ளது.  நாங்கள் உங்கள் அளவற்ற ஆசிகளை, ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைக்கும் எங்களது முயற்சிக்கு, வேண்டுகிறோம். ஒரு வண்ணமயமான, விவரமான துண்டுப்பிரசுரம், இந்து ஒருங்கிணைப்பு கமிட்டி வெளியிட்டுள்ளது, தங்களுக்கு ஏர் மெயில் தபாலில் அனுப்பியுள்ளோம். இந்த சாதுவை அர்ப்பணிப்போடு டாக்டர் கூவர்ஜி கவனித்துக் கொள்கிறார். நேற்று மாலை இந்த சாது ஜோஹனஸ்பர்கிற்கு சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளரான திருமதி ஷெரிதா கொமல்  உடன் விமானத்தில் வந்தடைந்தான். இந்த சாது டர்பனுக்கு ஆகஸ்ட் – 14 அன்று திரும்புகிறான். இந்தியாவின் 50 வது சுதந்திரதினம் மற்றும் மஹாயோகி ஸ்ரீ அரவிந்தரின் 125 வது ஜெயந்தி விழாவினை மிக சிறப்பாக கொண்டாட இருக்கிறோம் அதற்கான அழைப்பிதழை நாங்கள் ஏற்கனவே தங்களுக்கு ஃபேக்ஸ் செய்துள்ளோம். நாங்கள் உங்கள் ஆசியை அதற்கு வேண்டுகிறோம். 

தென் ஆப்பிரிக்காவின் இந்து சுயம்சேவக் சங்கத்தை சேர்ந்த திருமதி வனிதா மற்றும் திரு. கமல் மஹராஜ் இப்போது இந்தியாவில் ஒரு முகாமில் கலந்து கொள்ள வந்துள்ளனர்கள் அவர்கள் சென்னைக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி வருவதோடு திருவண்ணாமலைக்கு தங்கள் தரிசனம் பெறவும் வருவார்கள். இந்த சாது இன்னொரு பக்தரான திரு. ஷண்முகம் மெய்யப்பன் மூட்லே உடன், இந்தியாவிற்கு, ஆகஸ்ட் 20 அன்று, விமானம் மூலம் திரும்பி வர திட்டமிட்டிருக்கிறோம். சென்னைக்கு ஆகஸ்ட் 21 அன்று வருவோம். நாங்கள் உங்களை இந்தியா திரும்பியவுடன் சந்திக்க ஆவலாக உள்ளோம். 

இந்த சாது வீட்டில் இல்லாதபோது, திருமதி பாரதி, அகாடமி மற்றும் ராம்நாம் இயக்கத்தின் பணிகளையும் கவனித்துக் கொள்கிறாள். தங்கள் ஆசிகளை அவளுக்கும், திரு.விவேக் மற்றும் சௌ. நிவேதிதாவிற்கும் வழங்கவும். தங்கள் ஆசிகளும், கருணையும் அவர்களின் தாழ்மையான ஹிந்து தொண்டு பணிகள்  தொடர்ந்து செய்ய மிகவும் தேவை. 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் , தங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

சாதுஜி, லெனேஷியா வில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் – 5 , 1997 அன்று, விஜயம் செய்தார். சாது மற்றும் திருமதி ஷெரிதா இருவரையும் சுவாமி த்ரிபுவனானந்தா  வரவேற்றார். பின்னர் சாது , பாரத் சாரதா பள்ளியில் உள்ள பிள்ளைகளிடம் கடோபநிஷத், கேனோபநிஷத் கதைகளை கூறினார். சாது, ஆதிசங்கரர் ஆசிரமத்திற்கும் சென்று சுவாமி சங்கரானந்தா, அன்னை கிருஷ்ணப்ரியா, திரு. பெருமாள் மற்றும் பிறர் சாதுவை வரவேற்றனர். மதியம் சாதுவை, ரேடியோ ஈஸ்ட் வேவில், திரு. வினோத் என்பவர் ஒரு நேர்காணலை ஒரு மணி பதினைந்து நிமிட நேரத்திற்கு மேற்கொண்டார். சாது நேயர்களிடம் இருந்து தொலைபேசி மூலம் வந்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார். புதன்கிழமை அன்று விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைகழகத்தின் இந்து மாணவர்கள் சங்கத்தில் சாது, “அறிவியலும், ஆன்மீகமும்“ என்ற தலைப்பில் பேசினார். டாக்டர் கூப்பர், சாதுவை  அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் கேள்விகளுக்கு சாது பதில்களை வழங்கினார். சாது சிவானந்தா யோகா மையத்திற்கு சென்றபோது, சுவாமி ஈஸ்வரமயானந்தா , அன்னை ராமாநாராயனந்தா மற்றும் பிற பக்தர்கள் சாதுவை வரவேற்றனர். சாது ஆதி சங்கரர் ஆசிரமத்திற்கு சென்று பின்னர் ராமகிருஷ்ணா ஹாலுக்கு வந்து, மாலையில், “ஹிந்து வாழ்க்கை முறை” என்ற தலைப்பில் பேசினார். அங்கே பக்தர்களின் ஒரு பெரும் கூட்டம் சாதுவின் உரையை கேட்டனர். 

தென் ஆப்பிரிக்காவின் ஒலிபரப்பு கழகத்தை சேர்ந்த சௌ. யாஷிகா சிங், ஆகஸ்ட் – 7 ஆம் தேதி, சாதுவுடன் ஆயுர்வேதம் குறித்து, ஒரு தொலைக்காட்சி நேர்காணலை மேற்கொண்டார். பின்னர் சாது, திருமதி சாந்தி அவர்களின் இல்லத்தில் நடந்த ஒரு சத்சங்கத்தில் குடும்ப மூல்யங்கள் குறித்து பேசியதோடு , ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் சாரதா தேவி பற்றியும் உரையாற்றினார். ராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த திரு. சுவாமி த்ரிபுவனானந்தா வும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பக்தர்களின் விருப்பத்தின் படி, சாது, அன்னை மாயி மற்றும் யோகி ராம்சுரத்குமார் பற்றியும் பேசினார். வெள்ளிக்கிழமை, திருமதி சாருபென் என்பவர், ரேடியோ ஈஸ்ட் வேவில் சாதுவை ஒரு நேரடி ஒலிபரப்பில் நேர்காணல் மேற்கொண்டார். சாது, ஒண்ணேகால் மணி நேர நிகழ்ச்சியில், “ஹிந்து நாகரீகத்தில் பெண்கள்” என்ற தலைப்பில் பேசி, நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். பின்னர் சாது ஸ்ரீ பாரத் சாரதா மந்திர் பள்ளியின் மாணவர்களிடையே உரையாற்றினார். ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கதைகளைகூறியும், பின்னர்  உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஹிந்து கலாச்சாரம்  பற்றியும் உரையாற்றினார். அவர்களுக்கு ராமநாம ஜெபத்தையும், உலக ராம நாம இயக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். 

கௌடங் ஹிந்து  ஒருங்கிணைப்பு கவுன்சில், சாதுஜியை சிறப்பு விருந்தினராக கொண்டு, ஒரு மூன்றுநாள் இந்து மாநாட்டை ஆகஸ்ட் 8, 1997 வெள்ளிக்கிழமை அன்று லெனசியா ராமகிருஷ்ணா ஹாலில் துவங்கியது. அதன் முதல் நாள் நிகழ்வில், “ஹிந்து நாகரீகத்தில் பெண்களின் பங்களிப்பு“ என்ற தலைப்பில் சாது பேசினார். அன்னை ராமநாராயணானந்தாவும் பேசினர். இந்த நிகழ்ச்சி, இசை, நாட்டியம், தியானம் மற்றும் நேரடியான வினா – விடை அமர்வு போன்றவற்றுடன் இரவு 10.30 மணிவரை நடைப்பெற்றது. லெனேஷியா  யுவக் சங் மீண்டும் இந்த வருட இறுதியில் சாதுவை நாட்டிற்கு அழைக்கும் திட்டத்தை அறிவித்தது. இரண்டாம் நாள் மாநாட்டில் சாது ஹிந்து கடவுள்களின் குறியீட்டுவாதம், புராணங்கள் மற்றும் திருமறை நூல்கள் குறித்து பேசினார். ஆதி சங்கரர் ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி சங்கரானந்தா, ராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி த்ரிபுவனானந்தா  போன்றோரும் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் – 10 அன்று மாநாட்டின் மூன்றாம் நாளில் அரங்கு நிறைந்த மக்கள் கூட்டம் இருந்தது. சாது ஒரு பெரும் காயத்ரி ஹோமத்தை நடத்தினார். அதனை SABC ஒளிபரப்ப வீடியோ ரெக்கார்டிங் செய்தது. சாதுவை SABC-யின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், சௌ. யாஷிகா சிங் பேட்டியெடுத்தார். மதிய வேளையில் சிவானந்தா ஸ்கூலின் சுவாமி ஈஸ்வரமயானந்தா பங்குபெற்றார். நேரடி கேள்வி-பதில் அமர்வின்போது, பலர் சாதுவிடம் கேட்ட கேள்விகளுக்கு சாது பதிலளித்தார். சாது, ரேடியோ 702-வில், இன்னொரு நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தமையால், இந்த நிகழ்ச்சியை விரைவாக முடித்துவிட்டு கிளம்பினார். திருமதி. கேட் டர்கிங்டன் சாதுவை நேர்காணல் மேற்கொண்டபோது ஹிந்து தர்மம் குறித்தும் , இயேசுவின் இந்திய வாழ்க்கை குறித்தும் வினவினார். பல ஹிந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் நேயர்களிடமிருந்து தொலைபேசி மூலம் வந்த கேள்விகளுக்கு சாது பதில் அளித்தார். 

சாதுவை ஆகஸ்ட் – 11 , 1997 திங்கள்கிழமை அன்று ஜோஹனஸ்பர்கின் தத்துவயியல் பள்ளியில் (School of Philosophy) திரு. T.E. தோம்லின்சன் அவர்கள் வரவேற்றார். பின்னர், ஸ்ரீ பாண்டுரங்க சாஸ்திரி அதாவளே அவர்களின் பக்தர், திரு. ரஜினிகாந்த் பாய் என்பவர் சாதுவை வரவேற்று அவரோடு சிறிது நேரத்தை செலவழித்தார். மதியம், சாது மேஃபேர் கல்சரல் அகாடமி சென்டரில் இந்து சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை விளக்கினார். 12 ஆம் தேதி, சாது டாக்டர் கூவர்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் இடம் விடைப்பெற்று பெனோனிக்கு சென்றார். அங்கே திரு கரீப் பாய் , திரு மகன் மிட்டல் மற்றும் பிற பக்தர்கள் அவரை வரவேற்றனர். ராம் மந்திரில் கூடியிருந்த பக்தர்களிடம் சாது யோகி ராம்சுரத்குமார் பற்றியும், ராம்நாம் குறித்தும் உரையாற்றினார். டாக்டர் ராஜ் கோலப்பன் மற்றும் குடும்பத்தினர் சாதுவை புதன்கிழமை காலையில் தங்களது இல்லத்தில் வரவேற்றார். பின்னர் சிவ ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர்.  சாது, திரு மகாலிங்கம் கோலப்பன் உட்பட, கூட்டத்தினரிடையே உரையாற்றினார். ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை டாக்டர் கோலப்பன் மற்றும் திருமதி ப்ரமிளா  கோலப்பன் சாதுவை ஜோஹனஸ்பர்க் விமானநிலையத்திற்கு கூட்டிச் சென்றனர். அங்கே டாக்டர். கூவர்ஜி மற்றும் குடும்பத்தினரும் சாதுவை காண வந்தனர். சாது டர்பனுக்கு விமானத்தை பிடித்து சென்றார். திரு. சண்முகம் மூட்லே சாதுவை விமானநிலையத்தில் வரவேற்று அவரை திரு. டெட்டி மற்றும் ஷெரிதா கொமல்  அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். மாலையில் சாது சத்யசாய் மையத்திற்கு சென்று , “சத்தியம் , சிவம், சுந்தரம்” குறித்து பேசினார். 

ஆகஸ்ட் 15, 1997 வெள்ளிக்கிழமை சாது, திரு ராம் கோபிசந்த் மற்றும் திரு சதீஷ் ஆகிய SABC குழுவினர்க்கு, ஒரு நேர்காணலை வழங்கினார். “கிருஷ்ணா” குறித்து பேசினார். தென் ஆப்பிரிக்காவின் சகோதரி நிவேதிதா அகாடமி ஒரு பெரும் விழாவை இந்திய சுதந்திர நாளில் மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் ஜெயந்தி நாளில்,  வேதாந்த அகாடமியில், கொண்டாடியது. சாதுஜி அதில் உத்வேகத்தை தரக்கூடிய ஒரு உரையை நிகழ்த்தினார். பீட்டர்மாரிட்ஸ்பர்க், க்ரேடவுன், சாட்ஸ்வர்த், மற்றும் நேடாலின் பிற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். சனிக்கிழமை, சாது, அம்ஷின்டோவில் இருக்கும் விஷ்ணு கோயிலில் ஹிந்து தர்மம் குறித்து உரையாற்றினார். டோங்காட் கோகுல ஹாலில், ஞாயிறு அன்று, பக்தர்கள் சாதுவிற்கு வழியனுப்பு விழா நடத்தினர். அங்கு அவர்கள் நடத்திய பஜனை நிகழ்ச்சியில், இஸ்ப்பிங்கோவை சார்ந்த திரு சோமா  மற்றும் டர்பனை சார்ந்த திரு தீப்லால் ஆகியோர் சாதுவுடன் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை, புனிதமான சிராவண பூர்ணிமா நாளில், சாது யக்ஞோபவீதம் மற்றும் காயத்ரி மந்திர தீக்ஷையை திரு. டெட்டி கொமல்  மற்றும் அவரது பிள்ளைகள், ஓம் தத் மற்றும் ஷ்யாம், திரு. துளசிதாஸ் மற்றும் திரு. பாலசிங், மற்றும் திருமதி. மாலதியின் பிள்ளைகளான திரு. நீல் ஆகாஷ் மற்றும் அவரது சகோதரருக்கு வழங்கினார். பகவான் கருணையால் காப்பாற்றப்பட்ட குழந்தை சுவீரா மற்றும் அதன் பெற்றோர் மற்றும் பாட்டி, தாத்தா போன்றவர்கள் வருகை தந்தனர். சாது அச்சிறுவனுக்காக ஒரு சிறப்பு ஆயுஷ்ஹோமத்தை நடத்தினார்.  மாலையில் சாது, கில்லிட்டில், டிவைன் லைஃப் சொஸைட்டியில், ஒரு சத்சங்கத்தில், ஹிந்து வாழ்க்கை வழிமுறை குறித்து பேசினார். செவ்வாய்க்கிழமையன்று சாது ஒரு விஷ்ணு ஹோமத்தை சத்ய சாய் மையத்தில் நடத்தினார். அங்கே கிருஷ்ண வாசுதேவா குறித்து பேசினார். 

தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாதுவை தொலைபேசியில் அழைத்து அவருக்கு பிரிவு உபசாரம் செய்து பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்தினர். ஆகஸ்ட் 20, 1997, புதனன்று, சாது, திரு. டெட்டி கொமல்  மற்றும் திரு. டெரன்ஸ் ஆகியோரிடம் விடைபெற்றார். திருமதி. ஷெரிதா மற்றும் ட்ரிஷேன், சாதுவோடு இணைந்து டர்பன் விமான நிலையத்திற்கு வந்தனர். திரு  D.H. மஹராஜ், திருமதி மாலதி, திரு ஜெயராம், திரு B.J. பண்டிட், திரு ஜெயந்திலால், திருமதி ஜெயஸ்ரீ, திரு. துளசிதாஸ் மற்றும் அவரது பக்தர்கள் குழுவினர், திரு. S.M. மூட்லேவின் குடும்பம் மற்றும் பல பக்தர்கள் விமானநிலையத்திற்கு வந்து சாதுவை வழியனுப்பினா். திரு.ஷண்முகம் மூட்லே மற்றும் சாது SAA வின் பிளைட் 278 ல் மும்பைக்கு  பயணித்து, இந்தியாவில் 12.30 மணிக்கு சேர்ந்தனர். திருமதி லதா தேஷ்பாண்டே, திரு. தேஷ்பாண்டே மற்றும் திரு. வைபவ் தேஷ்பாண்டே மற்றும் மும்பையின் பக்தர்கள் சாதுவை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் வரவேற்றனர். சாது மற்றும் ஸண்ணி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பிடித்து வியாழக்கிழமை ஆகஸ்ட் – 21 அன்று சென்னை விமான நிலையத்திற்கு காலையில் வந்தனர். திருமதி. பாரதி அவர்களை சென்னை விமானநிலையத்தில் வரவேற்று அழைத்துச் சென்றார். கமல் மஹராஜ் மற்றும் வனிதா ஆகியோர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து, சாதுவின் இல்லத்திற்கு வருகை தந்தனர். 

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீ ராம பக்த ஜன சபாவின் தலைவரான திரு. ஏகாம்பரம், சாதுவிற்கு ஒரு பெரும் பொது வரவேற்பை வழங்கினார். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் தலைவர், டாக்டர் C.V. ராதாகிருஷ்ணன், உபதலைவர் திரு. K.N. வெங்கடராமன், திரு விவேகானந்தன், திருமதி பாரதி மற்றும் பக்தர்கள், சாது மற்றும் தென் ஆப்பிரிக்காவின் விருந்தினர்களான திரு. கமல் மஹராஜ், திருமதி வனிதா மற்றும் திரு. சண்முகம் மூட்லே ஆகியோரை வரவேற்றனர். சாது, தென் ஆப்பிரிக்காவின் பயணம் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார். விருந்தினர்களும், சாதுவின் தென் ஆப்பிரிக்கா பயணத்தின் பொழுது அவருக்கு அங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பேசினார்கள். தென் ஆப்பிரிக்கா பயணத்தின் பெரும் வெற்றியும் அதன் எல்லா புகழும் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் கருணையையே சாரும். 

தென் ஆப்பிரிக்காவின் சாட்ஸ்வர்த், சர்வ தர்ம ஆசிரமத்தின் யோகி ராம்சுரத்குமார் ராம்நாம் பரிக்ரமா மந்திர்.

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.17

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.17 

வெளிநாட்டிற்கு போகும் முன் சாதுவிற்கு புதிய பொறுப்புகள்

ஜனவரி – 1 , 1997 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் சாது பெங்களூரை அடைந்தார்.  சாதுவை நிவேதிதா மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். சாது சென்னையில் உள்ள சுவாமி ராக்கால் சந்திரா பரமஹம்சா உடன் தொலைபேசியில் பேசி அவரை சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவின் சிறப்பு விருந்தினராக அழைத்தார். திரு. டெட்டி , திரு. ட்ரிசேன் மற்றும் பிற தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் புட்டபர்த்திக்கு சென்று பின்னர் பெங்களூர் வந்தனர். அவர்களை நிவேதிதாவின் குடும்பத்தினர் வரவேற்றனர். சாது ஜனவரி 3 அன்று காஞ்சன்காட்டில் உள்ள ஆனந்தாஸ்ரமத்திற்கு பயணம் செல்ல திட்டமிட்டார். அன்று காலையில் சாது, திரு. டெட்டி, திரு. ட்ரிசேன், நிவேதிதாவின் மாமனார் திரு. விஜயராகவன், மாமியார் திருமதி. சரோஜா போன்றவர்கள் ஒரு காரில் பெங்களூரில் இருந்து மங்களூர் மற்றும் காஸர்கோடு வழியாக காஞ்சன்காடு சென்றனர். சுவாமி சச்சிதானந்தர் மற்றும் பிற பக்தர்கள் இவர்களை வரவேற்றனர். சாதுஜியும் மற்றவர்களும் தங்கள் பிரார்த்நனைகளையும், நமஸ்காரங்களையும் பப்பா மற்றும் மாதாஜியின் சமாதிகளில் சமர்ப்பித்து, பஜனையிலும் பங்கு கொண்டனர். சனிக்கிழமை அவர்கள் சுவாமி நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்று பின்னர் பெங்களூர் திரும்பினர். ஞாயிற்றுக்கிழமை, சாது, திரு. டெட்டி, மற்றும் திரு. ட்ரிசேன்,  நிவேதிதாவின் குடும்பத்தினரிடம் விடைப்பெற்று குர்லா எக்ஸ்பிரஸ் மூலம் புனேவிற்கு சென்றனர். 

பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் மற்றும் டாக்டர். ஜோஷி சாது மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களை புனே சந்திப்பில வரவேற்றனர். அவர்கள் பாபாவின் இல்லத்திற்கு பயணித்தபோது பல பக்தர்கள் வரவேற்றனர். செவ்வாய்க்கிழமை , ஜனவரி 7 அன்று அவர்கள் திரு. G.C. அஸ்நானி அவர்களின் பங்களாவிற்கு சென்றனர். நியூசிலாந்தை சேர்ந்த திரு. ஹரீஷ் ஹரி என்பவரை அங்கே சந்தித்தனர். திரு. அஸ்நானி அவர்களின் உதவியாளர், சாதுவின் புராணம் பற்றிய கட்டுரையை தட்டச்சு செய்ய ஏற்பாடு செய்தார். டாக்டர். ஸ்ரீரங்க் கோட்போலே சாதுவை சந்தித்தார். சாது, புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான திரு. P.N. ஓக் அவர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். மாலையில், சாது, மாநகராட்சி மன்ற உறுப்பினர், திரு மிலிந்த்   எக்போடே அவர்களின் இல்லத்தில் ஒரு ராமநாம சத்சங்கம் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் அதில் கலந்து கொண்டனர். சாதுஜி பூஜ்ய தபஸ்வி பாபா அவர்களோடு தங்கினார். 

திரு.டெட்டி மற்றும் திரு. ட்ரிசேன்  இருவரும் சாது மற்றும் பூஜ்ய பாபாவிடம் விடைப்பெற்று பம்பாய்க்கு டெக்கான் எக்ஸ்பிரஸ் மூலம் பயணித்தனர். சாது அவர்களுக்கு, மும்பையில் பகவானின் பக்தர் மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர், திரு.A.R. ராவ், அவர்களின் இல்லத்திற்கு செல்லும் வழிகளை கூறினார். பின்னர், சாது, தபஸ்வி பாபாவின் மகள், டாக்டர் திருமதி அனுபா  தப்லியால், இல்லத்திற்கு சென்றார். பிறகு, பேராசிரியர் அஸ்நானியின் இல்லத்தில், சாது, திரு. சுக்ராம் அஸ்நானி மற்றும் தீபாவால் வரவேற்கப்பட்டார்.. ஜனவரி – 9 அன்று பூஜ்ய தபஸ்வி பாபா, சாதுவிற்கு, ஒரு புனிதமான கமண்டலத்தை பரிசளித்தார். அது பாபாவின் குரு பரம்பரையில் வந்ததாகும். சாது அவரிடமிருந்து விடைப்பெற்று சென்னைக்கு இரவில் சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் கிளம்பினார். சாது தனது இல்லத்தை வெள்ளிக்கிழமை இரவில் வந்தடைந்தார். 

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தால், சிறப்பான முறையில், தேசீய இளைஞர் தினத்தில், மாநகர மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் உடன், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 12 , 1997 அன்று, கொண்டாடப்பட்டது. பல இளைஞர்கள் அதில் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு போட்டியை வெகு சிறப்பாக நடத்தினார்கள். மாலை நடந்த நிறைவு விழாவில் சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்ஸா தலைமை தாங்கி யோகி ராம்சுரத்குமார் சுழற்கேடயங்களை  மற்றும் பரிசுகளை, வழங்கினார். சாது நிறைவுரை ஆற்றினார். திருமதி அம்மனா நாயுடு மற்றும் அவள் மகள், நிரஞ்சனா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 16 வெள்ளிக்கிழமை அன்று வந்தனர். ஜனவரி 17 அன்று, சாது, தனது சீடனான திரு. ஹேமாத்ரி ராவ் உடன் மதுரை பயணித்தார், திரு. ஹேமாத்ரி ராவ் மற்றும் சௌ.  ஆண்டாள் திருமண விழா, ஜனவரி – 19 அன்று சிறப்பாக நடைபெற்றது. சாது, பகவானின் பக்தர் திரு. தேவி பிரசாத் அவர்களின் இல்லத்திற்கு சென்று ராம்நாம் சத்சங்கத்தை அவரது இல்லத்தில் நடத்தினார். மாலை சென்னைக்கு மஹால் எக்ஸ்பிரஸில் கிளம்பி திங்கள்கிழமை வந்து சேர்ந்தார். பகவானின் பக்தர்கள், திரு. அனில் ஸுட்ஷி மற்றும் அவரது நண்பர் திரு. பாலசுப்ரமணியம், சாதுவை சந்தித்து, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களை திருவண்ணாமலையில் சந்தித்தது குறித்து தகவல் தெரிவித்தனர். சாதுவின் சகோதரர் திரு. லக்ஷ்மிகாந்தன், எர்ணாகுளத்தில் இருந்து வந்த அவர்களின் பால்ய கால நண்பரான திரு. N.S. திவாகரன் நாயர் அவர்களை சாதுவின் இல்லத்திற்கு ஜனவரி 23 அன்று அழைத்து வந்து சிறிது நேரம் செலவழித்தனர். 

நேதாஜி நூற்றாண்டு விழா  கமிட்டி, கல்கத்தா, அவர்களின் நூற்றாண்டு விழா நினைவு மலரில், சிந்தனையை தூண்டும் சாதுவின் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி மறுத்து கேள்வி எழுப்பி இருந்தார் செவ்வாய்க்கிழமை , ஜனவரி 28 அன்று சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்: 

”பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி , தேசீய இளைஞர் தினம் பேச்சுப்போட்டி, நகரத்தின் பள்ளிப்பிள்ளைகளுக்கு யோகி ராம்சுரத்குமார் சுழற்கேடயம் மற்றும் பரிசுகள் வழங்குவதற்காக, ஜனவரி 12, 1997 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்த சாது காஞ்சன்காடு , பெங்களூர் மற்றும் புனே போன்ற இடங்களுக்கு தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களோடு பயணித்துவிட்டு, சென்னைக்கு, விழா நடப்பதற்கு முன்பாகவே, வந்து சேர்ந்தான். தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் அவர்களின் நாட்டிற்கு மிகுந்த மகிழ்ச்சியோடு, உங்கள் ஆசியை பெற்ற நிறைவோடு, திரும்பினார்கள். அவர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து தங்களின் உளம் கனிந்த நன்றியுணர்வை தொலைபேசி மூலம் வெளிப்படுத்தினார்கள். 

இந்தசாது புனேவில் மகா அவதூதரான பூஜ்ய தபஸ்வி பாபா உடன் தங்குவதற்கான வாய்ப்பை பெற்றான். தாழ்மையும், எளிமையும் நிறைந்த அந்த தபஸ்வி ஆழமான அன்பும், பக்தியும் தனது தர்மத்தின் மீதும் தாய்நாட்டின் மீதும் கொண்டுள்ளார். அவரோடு இருந்தது மிகுந்த உத்வேகத்தை தருவதாக இருந்தது. அவரும் உங்கள் புனித தன்மையை பற்றி கேட்பதில் ஆவல் கொண்டிருந்தார். அவர் தனது வணக்கத்தை உங்களுக்கு தெரிவிக்குமாறு கூறினார். நாங்கள் இந்து தர்மத்தையும் தாய் திருநாட்டையும்  பாதுகாக்க, இந்து சமுதாயத்தைச் சார்ந்த அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பெரும் இயக்கத்தை நடத்துவது குறித்து விவாதித்தோம். பாபாஜி மற்றும் பேரா. G.C. அஸ்நானி இந்த இயக்கத்திற்கான, அர்ப்பணிப்பான, தலைவர்களாக இருப்பார்கள். இதில் பல ஆயிரக்கணக்கான சாதுக்களையும், துறவிகளையும், மகாத்மாக்களையும் , பூஜாரிகளையும் மற்றும் பணியாளர்களையும் இந்த பொது நோக்கத்திற்காக இணைக்கும் பணியில் இந்த சாதுவின் ஒத்துழைப்பை அவர்கள் கோரியபோது, இந்த சாது, உங்கள் கருணையால் இந்த பணியை செய்ய இயலும் என அறிவித்தான். புனே கிளம்பும் முன் பாபாஜி தனது கமண்டலத்தை இந்த சாதுவிடம் அவருடைய ஆசியுடன் ஒப்படைத்தார். அவர் நாங்கள் சென்னை திரும்பிய பிறகு கடிதம் ஒன்றையும் எழுதினார். அதன் பிரதியை இத்துடன் இணைத்துள்ளோம். அவருக்கு இந்த சாது எழுதியுள்ள பதில் கடிதத்தின் நகலையும் இணைத்துள்ளோம் . அதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் புனேவில் விவாதிக்கப்பட்டவை குறித்து இந்த சாதுவின் கருத்துக்களை வெளியிட்டுள்ளேன். ஒன்று காயத்ரி ஜபம் சொல்லவும் பிற ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்ளவும் விரும்புபவர்களுக்கு, அவர்களின் வர்ணம் எதுவாக இருப்பினும், அவர்களுக்கு யக்ஞோபவீதம் தருதல், இரண்டாவது பிற மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களை சேர்ந்தவர்கள், வேறு நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் இந்த பாரத தேசத்தை தர்மபூமி, கர்மபூமி, மோக்ஷபூமி என கருதி நமது தர்மத்தில் உண்மையான, சத்தியமான  பக்தி பூண்டவர்கள் எனில் அவர்களை நம்முடன் இணைத்துக் கொள்ளுதல். இந்த காலத்திற்கான தேவை இந்து சக்திகளை ஒன்றிணைத்தல். ஏனெனில் அந்நிய மதவாத சக்திகள், மதப் பிரசாரம் மற்றும் மிஷனரி பணிகளின் மூலம், இந்த நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் உங்கள் ஆசியையும் வழிகாட்டுதல்களையும் எங்களுடைய எளிய முயற்சிகளுக்கு வேண்டுகிறோம்.

தென் ஆப்பரிக்காவின் பக்தர்கள் அந்த நாட்டிற்கு நமது அடுத்த பயணத்திற்கான பணிகளை துவங்கிவிட்டார்கள். அவர்கள் அதற்கான நிகழ்ச்சிநிரல்களை ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதனை அவர்கள் விரைவில் அறிவிப்பார்கள். 

நமது ராமநாம பணி வேகமாக நடந்து வருகிறது. நாக்பூரின் சங்கட் மோசன் ஹனுமான் மந்திரின் வருடாந்திர அகண்ட ராமநாம ஜபம் சென்ற மாதம் 125 கோடி ஜப எண்ணிக்கையை கொண்டு வந்து கொடுத்தது. பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா நமது பணியில் மிகுந்த மகிழ்வோடு இருப்பதாக எனது காஞ்சன்காடு பயணத்தின் போது கூறினார். 

‘தத்துவ தர்சனா’வின் நவம்பர் – 96 – ஜனவரி – 97 இதழ் அச்சில் உள்ளது அது இந்த வாரத்தில் தயாராகிவிடும் என நினைக்கிறேன். நாங்கள் அங்கே உங்கள் தரிசனத்தையும், ஆசியையும் பெற விரைவில் வருவோம் என நம்புகிறேன். 

விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, ஒரு சர்வதேச கருத்தரங்கு பம்பாய் பல்கலை கழகத்தில், புராணங்கள் குறித்து, நடைப்பெற்றது. அதற்கு நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோம். சென்னையில் விவேகானந்தர் ஜெயந்தி நடைபெறுவதால் அதில் நேரில் கலந்து கொள்ள முடியாதபோதும், நாங்கள் எங்களின் உரையை, “புராணங்களில் தாய்நாடு குறித்த வேத கருத்துக்கள்“ என்பதை அனுப்பி வைத்தோம். அதன் பிரதியை உங்கள் பார்வைக்காக தனியாக புத்தக அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளோம். 

இந்த சாதுவின் கட்டுரையான, “அயல்நாட்டில் இந்திய புரட்சியாளர்கள்”, நேதாஜி நூற்றாண்டு சிறப்பு தொகுப்பில், நேதாஜி நூற்றாண்டு விழா கமிட்டி, மகாராஷ்டிரா, வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பிரதியும் தங்களின் பார்வைக்கு அனுப்பட்டுள்ளது. 

திருமதி. பாரதி, சிரஞ்சீவி. விவேக் மற்றும் சௌ. நிவேதிதா தங்களின். வணக்கங்களை உங்களுக்கும், மா தேவகி மற்றும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்கச் சொன்னார்கள். நிவேதிதா, ரமேஷ் மற்றும் அவர்கள் குழந்தை சிவா, பெங்களூரில் நலமாக உள்ளனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன் 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

சாதுஜி ஒரு ஃபேக்ஸ் செய்தியை தென் ஆப்பிரிக்காவின் சகோதரி நிவேதிதா அகாடமியில் இருந்து ஜனவரி 29 அன்று பெற்றார் அதில் சாதுவை தங்களது நாட்டிற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். சாது ஒரு ஃபேக்ஸ் கடிதத்தை தென் ஆப்பிரிக்கா ஹை கமிஷனுக்கு அனுப்பி வைத்தார். சாது சென்னையில் உள்ள அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில், பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை, ‘இந்திய தேசீயம் – கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம்’ என்ற தலைப்பில் பேசினார். 6 ஆம் தேதி சாது,  திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்தில் விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நூற்றாண்டு கொண்டாட்டத்தில் உரையாற்றினார். சாது பகவானுக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அழைப்பு குறித்து கடிதம் ஒன்றை எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

தென் ஆப்பரிக்காவின் சகோதரி நிவேதிதா அகாடமியிலிருந்து, 15-2-1997 முதல் 15-6-1997 வரை அவர்கள் நாட்டில் பயணிக்க, இந்த சாதுவிற்கு அழைப்புக் கடிதம் வந்துள்ளது. இத்துடன் அதன் நகலை இணைத்துள்ளேன். இந்த சாது விசாவிற்கு விண்ணப்பிக்க விமான டிக்கெட்களுக்காக காத்திருக்கிறான். ஒருவேளை அது கிடைக்க காலதாமதம் ஏற்படலாம். ஆகையினால் இந்த மாத இறுதியில்தான் இந்த சாது கிளம்ப இயலும். நாங்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ‘தத்துவ தர்சனா’ நவம்பர் – 96 – ஜனவரி – 97 இதழ் தயாராகி அதன் முதல் பிரதி உங்களின் பார்வைக்கு நூல் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. விசாவிற்கு ஏற்பாடு விரைவில் நடைப்பெற்றப்பின் இந்த சாது உங்கள் ஆசியை பெற திருவண்ணாமலைக்கு வருவான். நாங்கள் உங்கள் ஆசிக்கும் , கருணைக்கும் பிரார்த்திக்கிறோம். இந்தமுறை இந்த சாது மட்டும் தனியே செல்ல இருக்கிறான். திருமதி. பாரதி இங்கேயே இருந்து நமது பணியை கவனித்துக் கொள்வார்.  லீ யின் பாடல்களான “உடைந்த உள்ளத்தின் பாடல்கள் – பாகம் – 2“ என்ற நூலின் கணிணி தட்டச்சு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகள், இந்த சாது, இந்நாட்டில் இருந்து கிளம்பும் முன் முடிந்துவிடும் என நம்புகிறான். திருமதி. நிவேதிதா நமது கணிணி பணிகளை பெங்களூரில் மேற்கொண்டு வருகிறாள். இந்த சாது விரைவில் அங்கே செல்வான்.

இன்று, சுவாமி விவேகானந்தர், சிகாகோ சர்வசமய பாராளுமன்றத்திற்கு பிறகு, சென்னை வந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், ராமேஸ்வரத்திலிருந்து எக்மோர் ரயில் நிலையத்துக்கு வருகின்ற சுவாமிஜியின் படத்தை வரவேற்க, சிரஞ்சீவி விவேகானந்தன் அங்கு சென்றுள்ளான்.. இந்த சாது நேற்றிலிருந்து மூன்றுநாள் உரையை, அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் நடத்திவருகிறார். 

திருமதி. பாரதி தனது வணக்கங்களை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். நாங்கள் உங்கள் அளவற்ற ஆசியை எங்களின் முயற்சிகளின் வெற்றிக்கு வேண்டுகிறோம். 

தாழ்மையான வணக்கங்களுடன் , உங்கள் சீடன் , 

சாது ரங்கராஜன்.” 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மாதாந்திர அகண்ட ராமநாமம் சாதுவின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 9 அன்று நடைப்பெற்றது. பிப்ரவரி 18 அன்று சாது பெங்களூருக்கு சென்றார். அடுத்தநாள் சகோதரி நிவேதிதா அகாடமியின் மைசூர் ஒருங்கிணைப்பாளரான திரு. பிரபாகரா மற்றும் திருமதி. சுமா அவர்களின் கிரகப்பிரவேசத்திற்கு, மைசூருக்கு சென்றார். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 23 அன்று சாது பெங்களூர் திரும்பினார் டாக்டர். R.V. ராம்தாஸ், திரு. மதுசூதன் பாடக், மற்றும் திரு. நாயக் மும்பையிலிருந்து சாதுவின் இல்லத்திற்கு பிப்ரவரி 24 திங்கள்கிழமை வந்தார்கள். மார்ச் – 5 அன்று சாது தென் ஆப்பிரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டை பெற்றவுடன் விசாவை பெறுவதற்கான விண்ணபத்தை அனுப்பினார். மார்ச் – 8 ஆம் தேதி சாது, பாரதி மற்றும் விவேக் தான்தோன்றி மலையை அடைந்தனர். அங்கே நிவேதிதா, ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் அவர்களை வரவேற்றனர். அனைவரும் ஹரிப்ரியா வின் முடி காணிக்கை அளிக்கும் விழாவில் கலந்து கொண்டனர். அடுத்தநாள் நிவேதிதாவின் மாமனார் மற்றும் மாமியாரின் சஷ்டியப்தபூர்த்தி விழாவில் சாது கலந்து கொண்டார். மார்ச் 20 அன்று, மகாகவி பாரதி குறித்த ஆய்வுகளை புரிந்த திரு. R.A. பத்மநாபன் அவர்களின் சதாபிக்ஷேகத்தில் கலந்து கொண்டார். மார்ச் – 22 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடுங்கையூர் விவேகானந்தா வித்யாலயாவில் ஒரு உரை நிகழ்த்தினார். விவேகானந்தா கல்வி சங்கத்தின் பொது செயலாளர் ஆன  திரு. B. கோவிந்தராஜ் சாதுவை வரவேற்றார். அந்த பள்ளியின் புரவலர், எஸ்.கே. இன்டர்நேஷனலை சேர்ந்த திரு. ஜெயராஜ், தலைமை விருந்தினராக இருந்தார் . சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான திரு. கிருஷ்ணசாமி ரெட்டியார் விழாவிற்கு தலைமை தாங்கினார். வியாழக்கிழமை , மார்ச் 27 , 1997 அன்று சாது பகவானுக்கு கடிதம் ஒன்றையும், ‘தத்துவ தர்சனா’ இதழின் பிரதிகள் மற்றும் ‘ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல்’ இதழின் பிரதிகளையும் அனுப்பினார். ஏப்ரல் – 8 அன்று சாது மீண்டும் கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினார். அதில் தமிழ் வருடப்பிறப்பு அன்று, ஏப்ரல் 13, 1997-ல், சகோதரி நிவேதிதா அகாடமியின் இருபதாவது ஆண்டுவிழாவிற்கான அழைப்பிதழை இணைத்து, பகவானின் அருள் ஆசிகள் கோரி, அனுப்பியிருந்தார். 

சென்னை அண்ணாநகரில் உள்ள மல்லிகேஸ்வரர் கோயிலில், சகோதரி நிவேதிதா அகாடமியின் இருபதாம் ஆண்டு விழா, ஏப்ரல் 13, 1997-ல்,  நடைப்பெற்றது. நிகழ்ச்சி அகண்ட ராமநாமத்துடன் காலையில் துவங்கியது. பூஜ்ய தபஸ்வி பாபாஜி அவதூத் புனேயில் இருந்து ஒரு விசேஷ சேதியை அனுப்பியிருந்தார் அதனை டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் தலைவர், வாசித்தார். புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும் மகாகவி பாரதி பற்றிய ஆராய்ச்சியாளரும் ஆன, திரு. பெ.சு. மணி, ஒரு உத்வேகம் தரும் உரையை, சகோதரி நிவேதிதா குறித்து வழங்கினார். சாது, இந்திய தேசீயம் குறித்தும், கடந்த இருபது ஆண்டுகளாக தேசப்பற்று, தேசீயம் மற்றும் இந்து பாரம்பரியம் மற்றும் இந்திய கலாச்சாரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பரப்புவதற்கு, சகோதரி நிவேதிதா அகாடமி ஆற்றிவரும் பணிகள் குறித்தும், உரையாற்றினார். மேலும் அவர் பகவான் யோகி ராம்சுரத்குமார் வழங்கிவரும் ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து பேசுகையில், பகவான் தன்னைப்பற்றிய நூல்கள் அகாடமி  மூலமாக வெளியிட வேண்டும் என்று விரும்புவதையும் குறிப்பிட்டார்.. திரு. K.N.வெங்கடராமன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் துணைத்தலைவர், நன்றியுரை ஆற்றினார். சென்னை தொலைக்காட்சி நிலையம் சகோதரி நிவேதிதா அகாடமியின் இருபதாவது ஆண்டுவிழாவை படம்பிடித்து இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்புசெய்தார்கள். திரு. R.A. பத்மநாபன் மற்றும் பூஜ்ய தபஸ்வி பாபா இருவரும் அடுத்தநாள் காலையில் தொலைபேசியில் அழைத்து தங்கள் மகிழ்வை தெரிவித்தனர். டாக்டர் T.S. ராமனாதன் மற்றும் திருமதி. ராமனாதன் மற்றும் அவர்களின் பிள்ளை ஜெயேந்திரா ஆகியோரை பகவான் யோகி ராம்சுரத்குமார், ,திரு. சக்திவேல் உடன் அனுப்பியிருந்தார். டாக்டர். ராமனாதன் ‘தத்துவ தர்சனா’வின் வாழ்நாள் சந்தாதாரர் ஆனார். 

ஏப்ரல் – 16 புதன்கிழமை அன்று ராமநவமி விழா, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் புதிய வளாகத்தில், ராமநாம ஜபம், மற்றும் யோகி ராம்சுரத்குமார் நாம ஜபத்துடன் நடைபெற்று, ஹனுமன் சாலீசா பாடப்பட்டு ஆரத்தியுடன் சிறப்பாக முடிவுற்றது. பகவானின் பல பக்தர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர். திரு. அனில் ஸுட்ஷி திருவண்ணாமலைக்கு சென்று பகவானின் தரிசனத்தை பெற்று, ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் – 19 அன்று, பகவானின் ஆசிகளை கொணர்ந்தார். லீ யின், “உடைந்த உள்ளத்தின் பாடல்கள் – பாகம் – 2“ அச்சகத்தில் இருந்து வந்தது. சாது, ராஜி மணியிடம் ஏப்ரல் 30 அன்று தொலைபேசியில் பேசி, பகவானிடம், அடுத்தநாள் பிரதிகளோடு வருவதாக தகவல் தெரிவிக்கச் சொன்னார். 

வியாழக்கிழமை, மே – 1 , 1997 அன்று சாது திரு. அனில் ஸுட்ஷி உடன் திருவண்ணாமலைக்கு சென்று பகவானின் இல்லத்தை காலை 10.30 மணிக்கு அடைந்தார். பகவான் அவர்களை வரவேற்று சாதுவிடம் எப்போது தென் ஆப்பிரிக்கா செல்கிறாய் என்று கேட்டார்.  சாது தனது விசா விண்ணப்பத்தை தென் ஆப்பிரிக்காவின் உள்துறை செயலகம் ஏற்றுக் கொண்டுவிட்டதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், எனவே விசா ஒரு வாரத்தில் கிடைக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். அதன்பின் விமானங்கள் 10 , 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் இருப்பதில் ஏதேனும் ஒன்றை, இருக்கைகளின் இருப்பை பொருத்து, பிடிக்கவேண்டும் என்றார். பகவான் சாதுவிடம் இந்த நாட்டைவிட்டு கிளம்பும் முன் சாது, ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களை சந்திக்க வேண்டும் என்றும் அவர் தனது டெல்லி பயணத்தை முடித்துவிட்டு 8 அல்லது 9 தேதியில் சென்னை   வருவார் என்றும் கூறினார். மா தேவகி, காஞ்சி பரமாச்சார்யா தொடர்பாக ஒரு  விழா காஞ்சிபுரத்தில் நடக்க இருப்பதாகவும், ஜஸ்டிஸ் தலைமையேற்க வர இருப்பதாகவும் தெரிவித்தார். சாது பகவானிடம் தான் இந்த நாட்டை விட்டு கிளம்பும் முன் திரு அருணாச்சலத்தை சந்திப்பதாக கூறினார். 

பகவான் சாதுவை பிரார்த்தனை கூடத்தில் அமர்ந்து ராமநாமத்தை உச்சரிக்குமாறு சொன்னார். திரு. அனில் சாதுவுடன் இணைந்தார். குமாரகோவிலை சேர்ந்த திரு. முருகதாஸ்,  பூஜ்ய ஓம் பிரகாஷ் யோகினி, ராஜபாளையத்தை சேர்ந்த திரு. பாலகிருஷ்ண ராஜா குடும்பத்தினர் போன்றோர் அங்கே இருந்தனர். அங்கே சாது சிறிது நேரத்திற்கு ராமநாம ஜெபத்தை செய்தார் பின்னர் பகவான் சாது மற்றும் அனிலை அழைத்து அவர்களை தன்னருகே அமரவைத்தார். சாது அனிலை அறிமுகப்படுத்த, பகவான் அவரை ஏற்கனவே சந்தித்ததை நினைவு கூர்ந்தார். சாது, தான் அனிலை முன்னதாகவே பகவானிடம் அனுப்பி, தனது விசா தாமதம் ஆனது பற்றியும், லீ யின் புத்தகம் தயாராகி வருவது பற்றியும்,, அடுத்தவாரம் தான் வருவதைப்பற்றியும், செய்தி அனுப்பி இருந்ததை நினைவு கூர்ந்தார்,

சாது லீ யின் புத்தக கட்டுக்களை பகவானின் முன்பு வைத்தார். பகவான் சாதுவை கட்டுக்களை பிரித்து ஒரு புத்தகத்தை தருமாறு கூறினார். பகவான் ஏதேனும். ஒரு பாடலை படிக்கச் சொல்லி அதனை மூன்றுமுறை படிக்குமாறு கூறினார். சாது பகவானிடம் தான் 120 பிரதிகளை கொண்டுவந்ததாக கூறினார். பகவான் ஐந்து பிரதிகளை எடுத்துக்கொண்டு நகைச்சுவையாக, “இந்தப்பிச்சைக்காரன் இதற்கு பணம் தரமாட்டான்” என்று கூற, சாது பகவானிடம் இவையனைத்தும் பகவானின் பணம் என்றார். பகவான் சாதுவின் கரங்களை பிடித்து, தனதருகே இழுத்து, அவரை பதினைந்து நிமிடங்களுக்கு ஆசீர்வதித்தார். பகவான் சாதுவிடம், இந்த நாட்டைவிட்டு கிளம்பும்முன், 8 அல்லது 9 ஆம் தேதி, மீண்டும் திரு. அருணாச்சலம் அவர்களுடன் வரச்சொன்னார். சாது அவ்விதமே செய்வதாக கூறினார். பகவான் பத்து பிரதிகள் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்திற்காக கையொப்பம் இட்டு தந்தார். யோகி சாதுவிடம் ‘ ‘பதிப்புரை’ யை படிக்குமாறு கூறினார். சாது அதனை படித்தார். 

சாது பகவானிடமிருந்து விடைபெறும் முன் அவரது தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்து தந்தார். பின்னர் அவர் மீண்டும் சாதுவிடம் நினைவு படுத்தும் வகையில், “ நீ மீண்டும் இந்தப்பிச்சைக்காரனை, அருணாச்சலத்துடன் சந்திக்காமல், தென் ஆப்பிரிக்காவிற்கு போகக்கூடாது,” என்றார். சாது, மீண்டும், பகவானிடம் தான் அருணாச்சலத்துடன் வருவேன் என உறுதியளித்தார். சென்னை திரும்பியவுடன் சாது, திருமதி அருணாசலம் மற்றும் அவரது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பகவான் கூறிய தகவலை தெரிவித்தார். சனிக்கிழமை, மே – 10 அன்று, ஜஸ்டிஸ் அருணாச்சலம், சாதுவை  தொலைபேசியில் அழைத்து, திருவண்ணாமலை பயணத்திட்டத்தை உறுதிசெய்தார். 

மே – 13 அன்று ஜஸ்டிஸ் அருணாச்சலம் காலையில் தொலைபேசியில் அழைத்து, பின்னர் சாதுவை அவரது இல்லத்தில் இருந்து அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றார். அவர்கள் திரு. அருணாச்சலம் அவர்களின் குடிலை மாலை 3 மணிக்கு அடைந்தனர். பகவான் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்தார் அவர் சாதுவையும் அருணாச்சலத்தையும் தனதருகில் எதிரெதிரே அமரவைத்தார். அவர் இருவர் கைகளையும் சிறிது நேரம் பிடித்து ஆசீர்வதித்தார். பின்னர் அவர் மணியையும் அழைத்தார். பகவான், ஜஸ்டிஸ் அருணாச்சலத்திடம். ஆசிரமத்தின் பதிவு செய்யப்பட்ட டிரஸ்ட் பத்திரத்தில், சாது மற்றும் சௌ. விஜயலட்சுமி ஆகிய இருவரது பெயர்களையும் இணைக்க, ஒரு தீர்மானம் ஒன்றை தயார் செய்ய கூறினார் திரு. அருணாச்சலம் அதைத் தயார் செய்தவுடன் சாதுவும் மற்றவர்களும் அதில் கையொப்பமிட்டனர், பகவான் சாதுவை மா தேவிகி மற்றும் சுதாமா சகோதரிகளிடம் கையொப்பம் பெற்று வரச்சொன்னார். அவர்களும் கையொப்பம் இட்டனர். பகவான் சாதுவை குடலிலிருந்து மண்டபத்திற்க்கும் அங்கிருந்து திரும்பி குடிலிற்க்கும் தனது காரில்  பயணிக்க செய்தார். மா தேவகி மற்றும் சுதாமா சகோதரிகள் சாதுவை வணங்கி வரவேற்றனர். சாதுவும் அவர்களை வணங்கினார். 

பகவான் சாதுவிடம் ஒரு வேதபாடசாலையை மா தேவகியின் விருப்பப்படி திறப்பது குறித்து விவாதித்தார். பகவான் கூறுகையில், “அதற்கு சிறிது காலம் ஆகும், ஆனால் இது அவரது விருப்பம். அவர் கையில் சிறிது பணம் இருக்கிறது. அதை அவரது பெயரில் சேமிக்கப்பட வேண்டும்,“ என்றார். பகவான், டிரஸ்ட் அவரது வங்கி கணக்கின் வாரிசாக நியமிக்கப்பட வேண்டும் என்றார். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரி அழைக்கப்பட்டு அதற்குரிய விண்ணப்பங்கள் தயார் செய்யுமாறு கூறப்பட்டது. அவர் அவைகளை தயார் செய்வதாக உறுதியளித்தார். பகவான் எங்களிடம் இருந்து விடைப்பெற்றார், சாது ஆசிரம குடிலில் தங்கினார். சாது சென்னையில் இருந்து அவரது விமான பயணச்சீட்டு உறுதியான தகவலைப்பெற்றார். அடுத்தநாள் காலை சாது, பகவான் ஆசிரம வளாகத்திற்கு வருகையில் அவரை வரவேற்றார். பகவான் செம்பருத்தி மலர்க்கொத்துக்களை சாதுவிற்கு வழங்கினார். சாது பகவானிடம் தனது விமான பயணச்சீட்டு, தென் ஆப்பிரிக்காவிற்கு. மே – 24 ஆம் தேதி பயணிக்க உறுதியானதை குறிப்பிட்டார். பகவான் சாதுவை ஆசீர்வதித்து, “என் தந்தை உன்னை ஆசீர்வதிக்கிறார். நீ செய்யும் பணி எனது தந்தை பப்பா ராம்தாஸ் மற்றும் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானது. பப்பா எப்போதும் உன்னோடு இருப்பார். எல்லா இடங்களுக்கும் சென்று ராமநாமத்தை உலகெங்கும் பரப்பு,” என்றார். சாது பகவானிடம் கிருஷ்ணா கார்ஸில், இந்த சாது இந்தியா திரும்பும் முன், மொரீஷியஸிற்க்கு  விஜயம் செய்ய வேண்டும் என நினைக்கிறார் என்று கூற, பகவான், “என் தந்தை உன்னை வழி நடத்துவார். என் தந்தையின் ஆசீர்வாதங்கள் உனக்கும், கிருஷ்ணா கார்ஸிலுக்கும்,” என்றார்.

சாது பகவானிடம். விவேக் சீனியர் டிசைன் இன்ஜினியராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார் என்ற தகவலை தெரிவித்து பகவானின் ஆசீர்வாதங்கள் வேண்டினார். பகவான், “என் தந்தை விவேக்கை ஆசீர்வதிக்கிறார்“ என்றார். சாது பகவானிடம் நிவேதிதா மற்றும் அனில் ஸுட்ஷி ஆகியோரும் தங்கள் வணக்கங்களை பகவானுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள் என்றார். “என் தந்தை அனைவரையும் ஆசீர்வதிக்கிறார்!“ என்று கூறி யோகி எங்களிடம் இருந்து விடைப்பெற்றார். காரை நோக்கி நடக்கையில் அவர் அருணாச்சலத்தின் கரங்களைப்பற்றி அவரிடம், “ரங்கராஜன் எப்போதும் இந்தப்பிச்சைக்காரனுக்கு இந்த உதவிக்கரத்தை தருவார்“ என்றார். சாது அவரது இடது கையை பற்றியிருந்தார். மணி நகைச்சுவையாக, “அருணாச்சலமும், ரங்கராஜனும் உதவிக்கரங்களை தருவார்கள், மணி அல்ல,“ என்றார். பகவான் சிரித்தார். பகவான் ஆசிரம வளாகத்தில் இருந்து கிளம்பியபின் சாது தனது குடிலுக்கு வந்தார். 10 மணிக்கு பகவான் மீண்டும் வந்தார் அவர் குடிலுக்கு வந்தார். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மேலாளர் மற்றும் அதிகாரிகளான, திரு. வெங்கரசுப்ரமணியம், மற்றும் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர். சாது ரூ. 1 லட்சத்திற்கான நிரந்தர வைப்புத்தொகைக்கான படிவங்களை மா தேவகியின் பெயரில் நிரப்பினார். பகவான் சாதுவை தேவகியிடம் சென்று அதில் கையொப்பங்களை பெற்றுவருமாறு கூறினார். சாது பகவானின் காரில் மண்டபத்திற்கு சென்று அவரது கையொப்பத்தை பெற்று வந்தார். சாது மா தேவகியிடம், “இந்த வேதபாடசாலை வெளிநாட்டினரிடமிருந்து நல்ல வரவேற்பை பெறும்“ என்றார். மா தேவகி பதிலளிக்கையில், “நாங்கள் உங்களது பாதுகாப்பான அயல்நாட்டு பயணத்திற்கு வாழ்த்துகிறோம்.” என்றார். மற்ற சகோதரிகளும் சாதுவின் வெற்றிகரமான அயல்நாட்டு பயணத்திற்கு வாழ்த்தினா். சாது அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு பகவானிடம் வந்தார். பகவான் சாதுவிடம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அலுவலர்களோடு சென்று நிரந்தர வைப்புத்தொகையின் ரசீதை பெற்றுவருமாறு கூறினார். சாது அவர்களுடன் சென்று ரசீதை பெற்று வந்தார். ஒரு அதிகாரி வந்து மா தேவகியின் கையொப்பத்தை வாரிசுக்காக பெற வேண்டும் என்றார். பகவான் சாதுவை மீண்டும் தனது காரில் சென்று அதனை தேவகியிடம் பெற்று வருமாறு கூறினார். சாது அதனை செய்தார். சுதாமா சகோதரிகளிடம்  விடைபெற்று மீண்டும் பகவானிடம் வந்தார். ஆவணங்களை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.. பகவான் வங்கி அதிகாரிகளை அனுப்பிவிட்டு மணியிடம் , “ ரங்கராஜன் மற்றும் அருணாச்சலம் சென்னையில் செய்யவேண்டிய பணிகள் பல உள்ளதால், இந்தப்பிச்சைக்காரன் இப்போது அவர்களுக்கு விடை தருகிறான்,” என்றார்.

பகவானிடம் விடை பெறுவதற்கு முன் சாது அவரை விழுந்து வணங்கி, தனது தென் ஆப்பிரிக்கா பயணம் வெற்றிகரமாக நடைபெற  மீண்டும் ஆசி வேண்டினார். பகவான் பதிலளிக்கையில், “ உனது பயணம் மிக வெற்றிகரமாக அமையும். எனது தந்தை உன்னோடு இருக்கிறார். நீ அவரது பணியை செய்கிறாய்” என்றார். சாது பகவானிடம் தான் ஆகஸ்ட் மாதம் இந்தியா திரும்புவேன் என்றார். பகவான் உத்தரவிடும் தொனியில், “என் தந்தை எப்போது உன்னை திரும்ப அழைத்து வருகிறாரோ, அப்போது வா“ என்றார். சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை ஆசீர்வதித்து தந்தார். சாது அவரிடமிருந்து விடைப்பெற்று அருணாச்சலம் அவர்களோடு சென்னை திரும்பினார். திரு. சக்திவேல் அவர்களையும் எங்களோடு இணைந்து கொள்ளுமாறு கூற அவரும் எங்களோடு பயணித்தார். நாங்கள் சாதுவின் இல்லத்தை அடைந்தவுடன் ஆசிரமத்திற்கு நாங்கள் பாதுகாப்பாக வந்தடைந்த தகவலை தொலைபேசி மூலம் தெரிவித்தோம். திரு. அருணாச்சலம் மற்றும் திரு. சக்திவேல் சாதுவின் இல்லத்தில் காபி அருந்திவிட்டு, சாதுவிடம் விடைபெற்றனர். திரு. அனில் ஸுட்ஷி சாதுவின் இல்லத்தில் இருக்கும் பகவானின் படத்திற்கு ஒளிரும் விளக்குகளை தயார் செய்து கொண்டுவந்தார். 

வெள்ளிக்கிழமை , மே – 16 , 1997 அன்று, சாது பெங்களூருக்கு ‘தத்துவ தர்சனா’, மற்றும் “ஞான முத்துக்கள்” என்ற நூலின் முன்னுரை, கணினியில் தட்டச்சு செய்ய ஏற்பாடு செய்ய சென்றார். சாது 19 ஆம் தேதி பெங்களூரில் அனைவரிடமிருந்தும், தென் ஆப்பிரிக்காவிற்கான தனது பயணத்திற்காக, விடைப்பெற்று சென்னை திரும்பினார்.


ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.16

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.16 

பகவானின் சார்பாக “தினமலர்” பத்திரிகைக்கு பதில்

திருவண்ணாமலையில் இருந்து உடனே திரும்பி வந்தவுடன் சாதுஜி தமிழில் திரு. R. கிருஷ்ணமூர்த்தி தினமலர் நாளிதழின் ஆசிரியர்க்கு பகவானின் வழிக்காட்டுதல்களின் படி அக்டோபர் – 9 , 1996 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்:

“திரு. R. கிருஷ்ணமூர்த்தி ,

நிர்வாக ஆசிரியர் , “தினமலர்” 

சென்னை – 600 002 

பேரன்புடையீர்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! குருநாதன் அருளாசிகள் தங்களுக்கு உரித்தாகுக !இந்த எளியே சாதுவின் நல்வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளவும்!

தினமலர் நாளிதழின் ஆரம்பகாலம் தொட்டு இதை படித்து வரவும், தரமான மற்றும் உண்மையான செய்திகளை வெளியிடும் நாளிதழ் ஆகவும்,  நம் நாட்டின் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் போற்றுகின்ற பத்திரிகையாகவும் அது வளருவதை கண்டு வரவும், வாய்ப்பு பெற்றவன் இந்த சாது. அதன் ஸ்தாபகர் திரு ராமசுப்பையர் காலத்தில் அவருடன் தொடர்பு கொள்ளவும் நமது நாட்டின் தேசபக்தர்கள் மற்றும் சமயப் பெரியார்கள் இடம் அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பு மற்றும் பேரன்பை காணவும் வாய்ப்பு பெற்றவன். அவரது  பாரம்பரியத்தை நிலைநிறுத்த தாங்களும் தங்களுடைய நிறுவனத்தைச் சார்ந்தவர்களும் அயராது உழைப்பதையும் நாம் அறிவோம். ஆகையால் தங்களுடைய பத்திரிக்கையில் ஒரு தவறான செய்தி அல்லது தரக்குறைவான செய்தி வந்தால் அதை சுட்டிக்காட்டி தங்களது கவனத்தை ஈர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

“தினமலர்” அக்டோபர் 6, 1996, இதழின் இணைப்பு ‘வாரமலரி’ ன் 30-ம் பக்கத்தில் ‘விவகாரம்’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள திரு ஹரிச்சந்திரன் வழங்கியுள்ள செய்தியை கண்ணுற்றோம். தொன்று தொட்டு மாபெரும் தபோதனர்களின் உறைவிடமாக திகழ்ந்து வரும் திருவண்ணாமலையில், ரமணர் மற்றும் மகான் சேஷாத்ரி சுவாமிகளுக்கு பிறகு, இன்று திகழ்ந்து வரும் மாபெரும் தவப்புதல்வர் மற்றும் அடியேனுடைய தீக்ஷா குருவும் ஆகிய, யோகிராம்சுரத்குமார் அவர்கள் பற்றிய செய்தி ஆகையால், அவர் பெயரில் அங்கு இன்று அமைந்து வரும் ஆசிரமத்தின் ஒரு டிரஸ்டி என்ற முறையில், அவருடைய அனுமதியுடன் இந்த விளக்க கடிதத்தை தங்களுக்கு அனுப்புகிறோம்.

79 ஆண்டுகள் முன் கங்கைக்கரையில் ஒரு சிறு கிராமத்தில் தோன்றி, மகாயோகி அரவிந்தra ல் ஈ ர்க்கப்பட்டு தெற்கே வந்து ரமண பகவானின் காலடியில் அமர்ந்து, பின் காஞ்சங்காடு சுவாமி இராமதாசர் இடம் தீக்ஷை பெற்று, 1952 முதல் பரதேசி கோலத்தில், பாரதம் முழுவதும் சுற்றி, பிறகு திருவண்ணாமலை வந்தடைந்து, புகைவண்டி நிலையத்தின்  முன் ஒரு புன்னை மரத்தடியில் பிச்சைக்கார கோலத்திலேயே பல்லாண்டு காலம் தவம் புரிந்த இந்த மகானை அடையாளம் கண்டுகொண்டு பாமாலைகளால் அவரைப் போற்றி புகழ்ந்த தமிழறிஞர்கள், வாகீச கலாநிதி கி . வா. ஜெகன்நாதன், திரு தெ. போ.  மீனாட்சி சுந்தரனார் மற்றும் பெரியசாமித்தூரன் போன்றவர்கள். திருக்கோயிலூர் ஞானானந்தகிரி சுவாமிகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவரை காஞ்சி பெரியவரும் பாராட்டியுள்ளார். ரிஷிகேசத்தைச்  சார்ந்த சுவாமி சிதானந்தர்  இவரை “மறைந்து நிற்கும் மாபெரும் தவயோகி” என போற்றியுள்ளார். கடந்த 40 ஆண்டு காலமாக ஒரு பிச்சைக்காரனை போல் திருவண்ணாமலை கோயில் திண்ணை, கடை திண்ணை, தேர்முட்டி திண்ணை, மற்றும் சன்னதி தெரு வீட்டு திண்ணை, என்று எளிய வாழ்வு வாழ்ந்து வந்துள்ள இவரை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பெரியோர்கள், சாதாரண மக்கள், மற்றும் உள்ளூரிலேயே இருக்கும் ஏழை எளிய மக்கள் ஏராளம். உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர் பதவியில் உள்ளவர்கள் ஆயினும் சரி பாமர பாட்டாளி மக்கள் ஆயினும் சரி, பாகுபாடு  பாராமல் அனைவரையும் அவர் அணைத்து ஆசீர்வதித்து வந்துள்ளது, நாடறியும். அப்படி வந்த பக்தர்களில் பிரபலமான ஒரு சிலர் தான், திரு இளையராஜா, திரு ஏசுதாஸ் மற்றும் திரு பாலகுமாரன் போன்றவர்கள். பகவானின் அருள் பெற்று அவர்கள் பெருமை அடைந்தனரேயன்றி அவர்கள்  புகழாரங்களால்  பகவான் “பிரசித்தி” பெறவில்லை.

இத்தகைய பெரியவரை தரிசிக்க திருவண்ணாமலைக்கு வந்து சன்னதி தெரு வீட்டுத்திண்ணையின் முன், வீதியில் கால்கடுக்க வெயிலிலும் மழையிலும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்து நிற்கின்ற காட்சிகள் கண்ட சில பெரியவர்கள், அந்த பக்தர்களின் வசதிக்காக ஒரு ஆசிரமத்தை ஏற்படுத்த, பகவான் அனுமதிக்காக மன்றாடி, அவர் அனுமதியும் ஆசியும் பெற்று, இன்று அக்ரஹார கொல்லையில்  யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் எழுந்து வருகிறது. தெய்வ சங்கல்பத்தால் ஏராளமான பக்தர்கள் நிதி வாரி வழங்கி,  2 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில், 4000 பேர் அமர்ந்து வழிபடும் வசதிகொண்ட, பிரம்மாண்டமான அரங்கம் என்று ஆசிரமத்தில் அமைந்து வருகிறது.  ஆசிரமப்பணி துவங்கியது முதல் பகவான் ஆசிரமத்திலேயே  பக்தர்கள் மத்தியில் அமர்ந்து, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இன்றி தினசரி காலையிலும் மாலையிலும் தரிசனம் அளித்து வந்துள்ளார். தாங்கள்கூட  அவரை தரிசித்து உள்ளீர்கள்,

தற்பொழுது முக்கிய மண்டபத்தில் பணி வெகுவிரைவில் முன்னேறி வருவதால், அந்த மண்டபத்தின் மத்தியில் தான் தனிமையில் அமர்ந்து தன் அருள் வழங்க விருப்பம் கொண்ட பகவான், தான் ஆசிரமத்திற்குள் வரும்பொழுதும் அங்கிருந்து செல்லும் பொழுதும்  மட்டும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு, மற்ற நேரம் பக்தர்கள் அமைதியாக தரிசன மந்திரத்தில் அமர்ந்து, கூட்டமாக நாம ஜெபம் செய்ய பணித்துள்ளார். இந்த கட்டுப்பாடு விதிகளை ஆசிரமத்திற்கு வரும்  பக்தர்கள் எல்லோரும் பின்பற்றுகின்றனர். பக்தர்கள் பகவானை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தங்களது பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைக்குப் புறம்பானதாகும்.

பகவானே ஒரு கைதியை போல் காரில் கொண்டு வந்து பிறகு காரில் அழைத்துச் செல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது பகவானின் பக்தர்களுக்கு மிகவும் மன வேதனை ஏற்படுத்துகிறது. பகவான் ஆசிரமத்திற்கு அருகாமையில் இருக்கும் ‘சுதாமா’ என்னும் இல்லத்தில், அவருடைய அருட் புதல்விகளும்  சுதாமா சகோதரிகள் என்று பக்தர்களால் அறியப்படுபவர்களுமாகிய,  அன்னை தேவகி, அன்னை விஜயலட்சுமி, அன்னை ராஜலட்சுமி, மற்றும் அன்னை விஜி அக்கா ஆகியோருடன் வசிக்கின்றார். கல்லூரிப் பேராசிரியர்களாகவும், வருமானவரித் துறையில் மிக உயர்ந்த I.R.S. அதிகாரியாகவும் எல்லாம் பதவி வகித்துள்ள இந்த தாய்மார்கள், பகவானுக்கு தொண்டு புரிவதையே தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் ஏற்று, தங்களது பதவி மற்றும் உற்றார் உறவுகளை  எல்லாம் துறந்து, இரவு பகல் என்று பாராமல் பகவானுக்கு சேவை செய்து வரும் தபஸ்வினிகளாவர். அவர்கள் இருக்கின்ற இல்லத்தில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆகையினால் தினசரி காலையிலும் மாலையிலும் பகவான் ஆசிரமத்திற்கு வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க பக்தர் ஒருவர் கார் ஒன்று வழங்கியுள்ளார்.

ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களிடம் ஆசிரம நிதிக்காக ரூபாய் ஆயிரம் வசூலிப்பதாக எழுதியுள்ளதும்  விஷமத்தனமான செய்தியாகும். பகவானின் பணிக்காக லட்ச லட்சமாக வாரி வழங்க பக்தர்கள் ஏராளமாக முன்வந்துள்ளனர். ஆசிரம நிதிக்காக சுமார் ஐநூறு பக்கங்கள் கொண்ட பல வண்ணப் படங்கள் நிறைந்த, பல பெரியோர்கள் மற்றும் பக்தர்களின் கட்டுரைகள் நிறைந்த, விசேஷ  மலர் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. ரூபாய் 1000, மற்றும் அதற்கு மேலே நன்கொடை அளித்த பக்தர்கள், பகவானிடம் அதை பெற்றுக் கொண்டனர் என்பதுதான் உண்மை. இந்த ஆசிரம டிரஸ்டின்  நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் பகவானால் நியமிக்கப்பட்டவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக செயல் புரிந்த ஜஸ்டிஸ் டி. எஸ். அருணாசலம், ‘சுதாமா சகோதரிகள்’, இந்த சாது,  மற்றும் இன்று ஆசிரமப்  பணிகளை கவனித்து வரும் திரு என்.எஸ்.மணி ஆகியவர்கள் தான். பகவானை நிர்வாகம் கைதி ஆக்கவில்லை, மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் உள்ளங்களில் பகவான் தன்னையே கைதியாக்கி கொண்டுள்ளார்.

இன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பகவானின் எண்ணற்ற பக்தர்களின் சார்பிலும், பகவானின் அனுமதியுடன் ஆசிரமத்தின் டிரஸ்டீ என்ற முறையிலும், நாம் எழுதியுள்ள இந்த உண்மை விளக்கத்தை தங்களது மேலான தினசரியில் வெளியீடு “தினமலர்” என்றும் உண்மையே பேசும் பண்புள்ள தரமான ஒரு பத்திரிகை என்பதை நிலைநிறுத்த பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

பகவானின் தொண்டில்,

தங்கள் அன்புள்ள,

சாது பேராசிரியர் வே.  ரங்கராஜன்,

அறங்காவலர் , யோகி ராம்சுரத்குமார் ஆசிரம டிரஸ்ட்,

திருவண்ணாமலை. “

திரு.S.G. பத்மநாபன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர், மற்றும் எங்கள் குடும்ப நண்பரான திரு.S.G. பத்மநாபன், திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் குடும்ப நண்பரான அவர்,  திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களை, சென்னை ‘தினமலர்’ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை , அக்டோபர் 11 அன்று சந்தித்து, அங்கிருந்து தொலைபேசி மூலம் சாதுவிடம் தொடர்பு கொண்டார். தொடர்புகொண்டார். திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் சாதுவிடம் பேசினார். தனது கவனத்திற்கு வராமல் பத்திரிகையில் வந்த சேதியை குறித்து மன்னிப்பை கோரினார். சாதுஜி அவரை சந்திக்க ஒரு நேரத்தை நிச்சயித்து, திரு. S.G. பத்மநாபன் உடன் அடுத்தநாள் சென்று அவரை சந்தித்து, பகவானின் வழிக்காட்டுதலின் படி கடிதம் ஒன்றை ஒப்படைத்தார். அவர் அந்த தகவலை ஆசிரமத்திலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராஜி மற்றும் மணியிடமும் தெரிவித்தார். 

சனிக்கிழமை அன்று ஆவடியில் முரளி கிருஷ்ண மந்திரில் ஒரு பெரிய ராம்நாம் சத்சங்கம் நடைப்பெற்றது. வழக்கம்போல் சாதுவின் இல்லத்தில் மாதாந்திர அகண்ட ராமநாமம் நடைப்பெற்றது. அதில் பலர் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை , அக்டோபர் – 14 அன்று சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்: 

பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

திருவண்ணாமலையில் இருந்து இந்த சாது திரும்பி வந்தவுடன் ‘தினமலர்’ பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் திரு. R. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்,  திரு S.G. பத்மநாபன், மூலமாக தொடர்பு கொண்டான்.. திரு. S.G. பத்மநாபன் எனக்கும் , திரு. R. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் குடும்ப நண்பர் ஆவர். திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களே என்னிடம் தொடர்பு கொண்டு அவரது பத்திரிக்கையில் அத்தகைய சேதி வெளிவந்ததைக் குறித்து, தனது அதிர்ச்சியை தெரிவித்தார். அவர் தான் அதனை பதிப்பிக்கும் முன் பார்க்கவில்லை யென்றும் , நாம் குறிப்பிட்ட பின்னரே அவர் அதை கவனித்தார் என்றும், பகவானின் ஒரு பக்தராகிய தான் இதை பெரும் அபசாரரமாக கருதுவதாகவும், தனக்குத் தெரியாமல் அந்த செய்தி வெளியானதற்கு மிகவும் வருந்துவதாகவும் கூறினார். அதற்காக மனமுவந்து மன்னிப்பு கேட்டார். அவர் நமது தெளிவுகளை வெளியிட ஒப்புக் கொண்டார். நானும், திரு. S.G. பத்மநாபனும் அவரை நேரில் சந்தித்து, 12-10-1996 அன்று எழுதப்பட்ட இந்த சாதுவின் கடிதத்தை கொடுத்தோம். அவர் அதைப் படித்துவிட்டு சில சிறிய மாற்றங்களுடன் அதை வெளியிட ஒப்புக்கொண்டார். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம். அவர் தனிப்பட்ட முறையில் பகவானை சந்தித்து இந்த தவறுக்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். இந்த சாது இத்துடன் அவருக்கு எழுதிய கடிதத்தின் நகல் மற்றும் அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பை பகவானின் பார்வைக்காக அனுப்பியுள்ளேன். எங்களின் அந்த சந்திப்பின் போது, ஆசிரமத்திற்கு வந்திருந்த சில பொது மக்களுடன் நடந்து கொள்ளப்பட்ட விதம், மற்றும் அவர்கள் உணர்ச்சிகள் குறித்து அறிந்து கொண்டோம். அந்த தகவல்கள் வருத்தம் அளிப்பதாக இருந்தன. இருப்பினும் நமது விளக்கங்கள் பல பொதுமக்களின் மனங்களில் இருக்கும் தவறான புரிதல்களை நிவர்த்தி செய்திருக்கும். நாங்களும் சில தகவல்களை பெற்றிருக்கிறோம். ஆசிரமம், பொது மக்களோடு தொடர்பு கொள்ளும் இடமாக இருப்பதனால், அதற்கு பொதுமக்களுடன் கனிவோடும் பக்குவமாகவும் தொடர்பு கொள்ளும் ஒரு மக்கள் தொடர்பு அலுவலர் தேவை என இந்த சாது நினைக்கிறான். 

திரு. கேசவன்  என்பவர் தினமும் ஆன்மீக தொடர்பாகவும், சாதுக்கள், துறவிகள் மற்றும் மதம் தொடர்பான கட்டுரைகளையும்  “இந்தியன் எக்ஸ்பிரஸி”ல் எழுதி வருகிறார். அவருக்கு, அந்த இதழின் ஆசிரியர், பகவான் குறித்து எழுதுமாறு கூறியிருக்கிறார். அவர் எங்களை சந்தித்து தனது பிரார்த்தனையை பகவானிடம் தெரிவிக்குமாறு கூறினார். ஒரு வாரத்திற்குள் அவர் ஆசிரமத்திற்கு வருகை தருவார். அவரது வேண்டுகோளை நாங்கள் திருமதி. ராஜி மணி அவர்களிடம் தொலைபேசியில் தெரிவித்தோம். 

இந்த சாது ஜான்சிக்கு இன்றிரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்று பிரயாகையை அக்டோபர் 16 அன்று அடைவான். நமது உ.பி.யின் ராமநாம இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. T.S. சின்ஹா ஒரு அறுவைசிகிச்சையை , வயிற்றிலிருந்து கல்லை நீக்க, செய்து கொள்ள இருக்கிறார். அவர் பகவானின் ஆசியை வேண்டியிருக்கிறார்.  

நாங்கள் சுவாமி ராம்தீர்த்தா அவர்களின் ஜெயந்தி விழாவிற்காக  லக்னோவிற்கு சென்று, அக்டோபர் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கலந்து கொள்ள இருக்கிறோம். மேலும் சில இடங்களுக்கு ராம்நாம் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு சென்னைக்கு நவம்பர் 1 ஆம் தேதி திரும்புவோம். இதற்கிடையே, நமது விளக்கங்கள் ‘தினமலரி’ல் வந்தால் அதன் பிரதியை பாரதி பகவானுக்கு அனுப்புவார். நாங்கள் பகவானை உ.பி. சுற்றுப்பயணத்திற்குப்பின் சந்திப்போம் என நம்புகிறோம். 

மஹாலய அமாவாசை நாளில் நாங்கள், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பணிகளுக்காக, ஒரு புதிய வாடகை வீட்டை எடுத்துள்ளோம். பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய் ஜெயந்தி தொடர்பான ஒரு சபையில் நாங்கள் உரையாற்றினோம். நேற்று நாங்கள் அகண்ட ராமநாமத்தை நடத்தினோம். 

சௌ. நிவேதிதா மற்றும் அவளின் குட்டி சிவா இருவரும் நலம். அவளும், விவேக் மற்றும் பாரதி தங்கள் வணக்கத்தை பகவான், மா தேவகி மற்றும் சுதாமா சகோதரிகளுக்கு தெரிவித்திருக்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன் , 

சாது. பேரா. V.ரங்கராஜன் 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

சாது, அக்டோபர் 19 சனிக்கிழமை அன்றுதான் லக்னோவிற்கு புறப்பட முடிந்தது. அவர் அங்கே 21 ஆம் தேதி சென்றடைந்தார். அவர் சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் தலைவரான  திரு. R.K. லால் உடன் தங்கினார். செவ்வாய்க்கிழமை அக்டோபர் 22 அன்று சாது சுவாமி ராம் தீர்த்தா ஜெயந்தியின் துவக்கவிழாவில் உரையாற்றினார். வழக்கம்போல் ப்ரதிஷ்டானின் குழுவினரோடு கலந்துரையாடல் புதன்கிழமை காலையன்று நடந்தது. மாலையில், சாது, கங்கா பிரசாத் ஹாலில் பொது மக்களிடையே ஹிந்தியில் உரையாற்றினார். அடுத்தநாள் நிறைவு விழாவில் உரை ஆற்றினார். வெள்ளிக்கிழமை சாது சுவாமி கல்யாணனந்தா மற்றும் பிரதிஷ்டானின் மற்ற விருந்தினர்களுடன் தனது நேரத்தை செலவழித்தார். சனிக்கிழமை சாது பனாரஸ் சென்றார். அங்கே ராமாபதி ராம் ஸ்ரீவாஸ்தவ் மற்றும் திரு. விஜய் போன்றோர் சாதுவை வரவேற்றனர். திரு. முல்தானி அவர்களின் இல்லத்தில் பிரம்மாண்ட ராம்நாம் சத்சங்கம் நடைப்பெற்றது. அதில் பலர் கலந்து கொண்டனர். சாது அங்கே ஹிந்தியில் உரையாற்றினார். மாலையில் ஓய்வூதியம் பெற்றுவருபவர்கள் சங்கத்தினர்  மற்றும் வயதானவர்கள் இடையே சாது ஆங்கிலத்தில் பேசினார். திங்கள்கிழமை சாது பிரயாகையை அடைந்தார். அங்கே T.S.சின்ஹா அவர்களும் குடும்பத்தினரும்  சாதுவை வரவேற்றார்கள். அடுத்தநாள் அன்னையர்கள் “கர்வா சவுத்” விழா கொண்டாடினர். தென்னகத்திற்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சாது பிரயாகையில் தங்கினார். சனிக்கிழமை நவம்பர் 2 அன்று சாது, புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸில், ஜான்சிக்கு புறப்பட்டு சென்றார். சாது, திரு. L.R. மிட்டல் மற்றும் குடும்பத்தினர் உடன் தங்கினார். திங்கள்கிழமை, சாது, ஜான்சி கோட்டைக்கு சென்று, அங்கே 1857 ல் இந்திய சுதந்திரத்திற்கான முதல் போரை மேற்கொண்ட ஜான்சியின் ராணி மற்றும் பல தேசபக்தர்கள் உயிர் தியாகம் செய்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய இடங்களை பார்வையிட்டார். நவம்பர் 5, செவ்வாய்க்கிழமை அன்று, சாது. சௌ. அஞ்சு சக்ஸேனா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடன் ஓர்ச்சா ராம் மந்திர்க்கு சென்று அங்கே ராம் தர்பாரில் ராம்நாம் ஜபத்தை மேற்கொண்டார். மாலையில் சாது அனைத்து பக்தர்களிடமும் விடைப்பெற்று கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு வியாழக்கிழமை வந்துசேர்ந்தார். சாது கடிதம் ஒன்றை, பகவானுக்கு,  வெள்ளிக்கிழமை , நவம்பர் 8 அன்று எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

இந்த சாது லக்னோ பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பனாரஸ், பிரயாக், ஜான்ஸி மற்றும் ஓர்ச்சாவிற்கும் சென்று, பிறகு, நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தான். அந்த ஊர்களில் இருந்த அனைத்து பக்தர்களும் தங்கள் வணக்கங்களை உங்களுக்கு தெரிவித்தனர். புயலின் காரணமாக ஆந்திரா வழியாக பயணிக்கும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக மாற்றுப்பாதை வழியாக விடப்பட்ட ரயில்களினால் எங்களின் திரும்பும் பயணம் ஒரு வாரம் தாமதமானது. இருப்பினும், உங்கள் கருணை மற்றும் ஆசியால் நாங்கள் அந்த நேரத்தை உ.பி.யில் ராம்நாம் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டோம். நமது ராம்நாம் இயக்கத்தின் உ.பி.யின் ஒருங்கிணைப்பாளர் திரு.T.S.சின்ஹா தனது சாஷ்டாங்க நமஸ்காரங்களை தங்களுக்கும், சுதாமா சகோதரிகளுக்கும் கூறுமாறு சொன்னார். 

23-10.-1996 தேதியிடப்பட்ட ‘தினமலர்’ பதிப்பில் ஆசிரமம் குறித்து முன் எழுதியவற்றுக்கான நமது விளக்கங்களை வெளியிட்டுள்ளது. அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். அவர்கள் நமது விளக்கத்தை சற்று திருத்தி அமைத்து, அதன் இறுதியில், அந்தப் பத்திரிகையின் நிருபர் கூறியுள்ள விளக்கத்தையும் இணைத்துள்ளனர். அந்த நிருபர், இந்த சேதி தான் நேரில் கண்டறிந்த அனுபவம் என்றும், திருவண்ணாமலைக்கு விஜயம் செய்த பகவானின்  பக்தர்கள்,  பகவானின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத காரணத்தால் அவர்கள் உள்ளத்தில் எழுந்த குமுறல்களையே தான் செய்தியாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த சாதுவை, பூஜ்ய ஓம் பிரகாஷ் யோகினி, குமாரகோவிலில் 28 – 11 – 1996 அன்று நடைபெற இருக்கும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் உரையாற்ற, அழைத்திருக்கிறார். திரும்பி வந்த உடன்,  இந்த சாது, காலை முதல் மாலைவரை அகண்ட ராமநாம பஜனுடன் நடைபெறும் டிசம்பர் – 1 யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவிற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மைசூரில் உள்ள பக்தர்கள் ஒரு தொடர் உரையாற்ற அழைத்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் டிசம்பர் – 1 க்கு பிறகே அங்கு  செல்வோம். நமது ‘தத்துவ தர்சனா’வின் ‘யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி இதழ்  1996’ தயாராகி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பக்தர்கள் டிசம்பர் 14 அன்று இங்கே வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாங்கள் அவர்களோடு பகவானின் தரிசனத்தை பெற அங்கே வருவோம். அதற்கு உங்கள் ஆசிகளை வேண்டி பிரார்த்திக்கிறோம். மேலும் அடுத்த வருட துவக்கந்தில் திட்டமிடப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் சுற்றுப்பயணத்திற்கும் உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

பிரான்சின் திரு. கிருஷ்ணா கார்ஸில், மொரீஷியஸில் இருந்து தொலைபேசியில் அழைத்து, தனது சென்னை வருகை குறித்து  தெரிவித்தார்.  10-11-1996 அன்று அவர் சென்னைக்கும் , 12-11-1996 அன்று திருவண்ணாமலைக்கும் வருவார். சௌ. நிவேதிதா இந்த சேதியை சென்றவாரம் பெற்று, இதனை பகவானிடம் உடனே தெரிவிக்குமாறு நமது ஆசிரமத்தை சேர்ந்த திரு. ரவியிடம் தெரிவித்தார். இந்த தகவலை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என நான் நம்புகிறேன். 

திரு. D.S.கணேசன் இங்கிருந்து ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளில் எங்களுக்கு உதவி வருகிறார். அவர் தனது சாஷ்டாங்க நமஸ்காரங்களை பகவானுக்கு தெரிவிக்குமாறு கூறினார். திருமதி. பாரதி, திரு. விவேகானந்தன் மற்றும் சௌ. நிவேதிதா ஆகியோர் தங்கள் வணக்கங்களை பகவான் மற்றும் சுதாமா சகோதரிகளிடம் தெரிவிக்குமாறு கூறினார்கள். குழந்தை ஷிவா பகவானின் கருணையால் நலமாக இருக்கிறாள். அவளது தந்தை திரு. ரமேஷ் இங்கே தீபாவளிக்காக வந்திருந்தார். நாங்கள் அனைவரும் இந்த நன்னாளில் பகவானின் ஆசிகளுக்கு பிரார்த்திக்கிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் , உங்கள் தாழ்மையான சீடன் , சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

திரு. கிருஷ்ணா கார்ஸில் நவம்பர் – 10 அன்று மொரீஷியஸில் இருந்து வந்து சேர்ந்தார். தென் ஆப்பிரிக்காவின் ராம்பரன்ஸ் ஆசிரமத்தை சேர்ந்த  மனோஜ் மற்றும் யோகேஷ் நவம்பர் – 14 அன்று வந்து சேர்ந்தனர். யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழ்கள் தயாராகின, சாது பகவானுக்கு மீண்டும் நவம்பர் – 20 அன்று ஒரு கடிதம் எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் அளவற்ற கருணை மற்றும் ஆசிகளால் நாங்கள் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவை இந்த வருடமும் வழக்கம்போல் அகண்ட ராமநாம ஜபம், ஆயுஷ் ஹோமம் , ஆவஹந்தி ஹோமம், கணபதி பூஜை இன்னும் பிறவற்றுடன் சென்னையில், கிராமோதயா ஆலயத்தில் (சாமியார் மடம்), நடத்த இருக்கின்றோம். நாங்கள் இத்துடன் அழைப்பிதழின் ஒரு பிரதியை இணைத்துள்ளோம். நாங்கள் உங்கள் ஆசியை விழாவின் வெற்றிக்கு வேண்டுகிறோம். 

இந்த சாது குமாரகோவிலுக்கு 27-11-1996 அன்று கிளம்பி, 28 – 11 – 1996 அன்று ராம்ஜி ஆசிரமத்தில் நடக்க இருக்கும்  யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் பங்குபெற இருக்கிறான். நாங்கள் 30-11-1996 அன்று, யோகி ஜெயந்தி விழாவிற்கு முன்னதாகவே, இங்கே திரும்பி வருவோம். இதற்கிடையில் சௌ. நிவேதிதா சௌ. பாரதியுடன் தங்களை வந்து தரிசித்து அவளது குழந்தை சிவாவிற்கு ஆசிபெற ஆவல் கொண்டுள்ளார் . அவள் உங்கள் தரிசனத்திற்கும் , ஆசிக்கும் பிரார்த்தனை செய்கிறார். 

சௌ.பாரதி , சிரஞ்சீவி. விவேக் மற்றும் சௌ. நிவேதிதா தங்கள் வணக்கங்களை தங்களுக்கும், மா தேவகி மற்றும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் , உங்கள் தாழ்மையான சீடன் ,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

வெள்ளிக்கிழமை , நவம்பர் 22, 1996 அன்று சாது அவரது சகோதரர் மகள், சௌ. விஜயலட்சுமி மற்றும் சிரஞ்சீவி மதுசூதனன் திருமணத்தில் கலந்து கொண்டார்.  அந்த திருமணம்,  சென்னை பரங்கிமலையில் ஆதி லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடைப்பெற்றது. பின்னர் அவர் நங்கநல்லூரில் உள்ள ஆதிவ்யாதிஹர ஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்றார். அங்கே அவர் கோயில் மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார். 

புதன்கிழமை , நவம்பர் 27 , 1996 அன்று, சாது, கன்னியாக்குமரிக்கு சென்றார். திருமதி கீதா மூர்த்தி, பகவானின் பக்தர், சாதுவை நாகர்கோவிலில் அடுத்தநாள் காலையில் வரவேற்றார். சாது குமாரகோவிலை அடைந்தார்.  பூஜ்ய ஓம் பிரகாஷ் யோகினி சாதுவை ராம்ஜி ஆசிரமத்தில் வரவேற்றார். சாதுஜி அனைத்து பக்தர்களின் கூட்டத்தினரிடையே மாலையில் உரையாற்றினார். திரு. தேவன் ஷர்மா மற்றும் திரு. சந்திர பிரகாஷ் போன்றோர் பேசினர். திரு. விஸ்வநாதன் வரவேற்புரை ஆற்றினார். திரு. விசிறி சங்கர் நன்றியறிவித்தார். அடுத்தநாள் காலை சாதுஜி யோகி ராம்சுரத்குமார் நாம ஜபத்தை ஒரு மணி நேரத்திற்கு முன்  நடத்தினார். பின்னர் நாகர்கோவிலுக்கு சென்று அங்கே அவர் கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸை பிடித்து, நவம்பர் 30 காலையில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். 

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி கொண்டாட்டம் டிசம்பர் – 1 , 1996 ல் ஒரு பிரம்மாண்ட விழாவாக நடந்தது. சாது மற்றும் பாரதி விழா நடைபெறும் சாமியார் மடத்தை அதிகாலையில் அடைந்தனர். திரு. K.N. வெங்கடராமன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் துணைத் தலைவர், அவர்களை வரவேற்றார். சுவாமி ஹம்ஸானந்தா பகவானுக்கு ஆரத்தி எடுத்தார். அகண்ட ராமநாமம் துவங்கியது. ஆயுஷ் ஹோமம் , ஆவஹந்தி ஹோமம் மற்றும் கணபதி பூஜையும் நடைப்பெற்றது. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் நாமஜெபத்தில் பங்கேற்றனர். அதனை திருவள்ளூரில் இருந்து வந்த குழு முன் நடத்தியது. நிவேதிதா , விவேக் மற்றும் ஜெயா இணைந்தனர். மதிய உணவு பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலையில் கிருஷ்ணாபாயின் ஆரதிக்கு பிறகு, நவ சக்தி பஜன் மண்டலியின் பக்தர்கள் மற்றும் திருமதி. வசந்தா துரைராஜ் பஜனையை நடத்தினார்கள். திரு. ஜவந்திநாதன் பக்தி பாடல்களைப்பாடி உரையாற்றினார். சாது நிறைவு உரையை ஆற்றினார். நிகழ்ச்சி மகா ஆரத்தியுடன் நிறைவுற்றது. 

1967 மற்றும் 1968 களில் சாது,  ஹிந்துஸ்தான் சமாச்சார் செய்தி நிறுவனத்தின் ஆசிரியராக டெல்லி, பாட்னா மற்றும் நாக்பூரில் பணியாற்றினார். அந்தக் காலத்தில், அவரது தகப்பனார், திரு. S.R. வேணுகோபாலன், தன் மகனுக்கு,  சிரத்தை  மற்றும் அர்ப்பணம் நிறைந்த ஒரு வாழ்க்கைக்கு வழிகாட்டி, பல கடிதங்கள் எழுதி யிருந்தார். “ஞான முத்துக்கள் என்ற தலைப்பில், சாதுவின் மதிப்பிற்குரிய தந்தை சாதுவிற்கு எழுதிய கடிதங்களில் இருந்து உத்வேகம் அளிக்கக்கூடிய பகுதிகள் எடுத்து தொகுக்கப்பட்டன. அது ஒரு சிறிய கையடக்க புத்தகமாக வெளியிடப்பட்டது. அதற்கு சாதுவின் சிறிய தகப்பனார், திரு. S.R. லக்ஷ்மிநரசிம்மன், முன்னுரை எழுதினார். இந்த சிறிய புத்தகம் சகோதரி நிவேதிதா அகாடமியால், நாட்டிற்காகவும், சமூகத்திற்காகவும் சுயநலமின்றி பணிபுரிபவர்களுக்கு வழிகாட்டியாக அமைய, வெளியிடப்பட்டது. 

டிசம்பர் – 4 புதன்கிழமை அன்று, சாது, மைசூருக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் மூலம் கிளம்பினார். அங்கே மைசூரின் சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளரான திரு. பிரபாகரன் வரவேற்றார். வியாழக்கிழமை, சாது, பகவத்கீதை பற்றிய தனது தொடர் சொற்பொழிவுகளை, மஹாஜன பள்ளியின் சுப்புலட்சுமி ஹாலில் நடத்தினார். தியாசஃபிகல் சொஸைட்டியின் திரு. G.V. கோபாலகிருஷ்ண ஷெட்டி, சாதுவின் பகவத்கீதை விரிவுரைகளை  மாலையிலும்,  பஜகோவிந்தம் விரிவுரைகளை காலையிலும் ஏற்பாடு செய்திருந்தார். சாது பஜகோவிந்தம் வகுப்பை வெள்ளிக்கிழமை டிசம்பர் – 6 அன்று சத்சங்க பவனில் துவக்கினார். இரண்டு நிகழ்வுகளுக்கும் நல்ல பக்தர்கள் கூட்டம் கூடியது. சாது பகவானுக்கு டிசம்பர் – 6 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் இந்த சாதுவின், 28-11-96 ல் நடந்த குமாரகோவில் நிகழ்ச்சி, மற்றும் 01-12-96 அன்று சென்னையில் நடந்த யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா, இரண்டும் மகத்தான வெற்றியடைந்தது.  நாங்கள் மைசூருக்கு 04-12-96 அன்று வந்தோம். இங்கு 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி டிசம்பர் வரை, ஒரு வார காலத்திற்கு தியாசஃபிகல் சேவை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள,   தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்த உள்ளேன். அதன் அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விரிவுரைகள் வெற்றிபெற உங்களின் ஆசியை வேண்டி பிரார்த்திக்கிறேன். நாங்கள் பகவான் மற்றும் ராமநாம பணிகள் குறித்தும் பேசி, அவர்களை நாம ஜெபம் செய்ய ஊக்குவிப்போம். நாங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையேயும் இந்த ஒரு வார காலம் உரைகள் ஆற்ற இருக்கிறோம். 

சௌ. நிவேதிதா மற்றும் திருமதி. பாரதி, குழந்தை சிவா உடன், சமீபத்தில் உங்களிடம் வந்து, தரிசனம் மற்றும் ஆசி பெற்றதில் மிக்க மகிழ்வோடு இருக்கிறார்கள். 

தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியில் அவர்கள் சென்னைக்கு 14-12-96 ல் வருவதாக கூறியிருக்கிறார்கள். இந்த சாது பெங்களூருக்கு 12-12-96 ல் சென்று சௌ. நிவேதிதாவை பார்த்தப்பின் சென்னைக்கு 13-12-96 அன்று திரும்புவேன். நான் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களோடு திருவண்ணாமலைக்கு வருவோம். நாங்கள் வருவது குறித்து முன்னரே பகவானுக்கு அறிவிக்கிறோம். அந்த பக்தர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தில் பப்பா ராம்தாஸ் அவர்களின் ஆசிரமத்திற்கும் விஜயம் செய்வார்கள். அவர்கள் பகவானின் தரிசனம் மற்றும் ஆசியை பெற ஆவலோடு இருக்கிறார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் , உங்கள் தாழ்மையான சீடன் ,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

டிசம்பர் – 10 செவ்வாய்க்கிழமை, சாதுஜி, மகாஜன உயர்நிலை பள்ளியில் மாணவர்களின் கூட்டத்தில் உரையாற்றினார். திருமதி லீலாவதி, பள்ளியின் முதல்வர், சாதுவை வரவேற்று அவரை அறிமுகப்படுத்தினார். புதன்கிழமை, சாதுஜி, மகாஜன் ஜூனியர் கல்லூரியின் மாணவர்களிடையே, “உன் வாழ்க்கை உன்னுடையது, அதை உருவாக்கு அல்லது அழி” என்ற தலைப்பில் உரையாற்றினார். டாக்டர். V.N. நாயக், கல்லூரியின் முதல்வர், சாதுவை வரவேற்று அறிமுகப்படுத்தினார். மாலையில், சாது “பகவத்கீதை”  நிறைவு உரை ஆற்றினார். அடுத்த நாள் காலையில் “பஜகோவிந்தம்” உரையையும் நிறைவு செய்தார். பல முக்கிய பக்தர்கள் உரைகளில்  பங்கேற்றதோடு, அனைத்து நாட்களிலும் ராமநாம ஜெபத்தில் ஈடுபட்டனர். சாது பெங்களூருக்கு வியாழக்கிழமை இரவு திரும்பி வெள்ளிக்கிழமை இரவு சென்னை திரும்பினார். 

திரு. டெட்டி கொமல், திரு. ட்ரிஷேன், திரு. ரோஜர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், திரு. சன்னி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகிய  தென் ஆப்பரிக்காவின் பக்தர்கள், டிசம்பர் – 14 ஆம் தேதி சனிக்கிழமை அன்று, எயர் லங்கா விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். சாது அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை YRYA வின் புதிய வாடகை வீட்டில் செய்தார். படுக்கைகள் இன்னும் பிறவற்றை அவர்களுக்காக வாங்கினார். சாது, மணியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அடுத்தநாள்  தானும், தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களும் பகவானை தரிசிக்க வருவதாக தகவலை பகவானிடம் பரிமாறுமாறு கூறினார். டிசம்பர் – 15 அன்று சுவாமி ஹம்ஸானந்தா மற்றும் திருவண்ணாமலையின் சௌம்யா, மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள், சாதுவுடன் ஆசிரமத்தை மாலையில் அடைந்தனர். அங்கே பெருமளவில் பக்தர்கள் இருந்தனர். சாது மற்றும் விருந்தினர்கள், தர்சன் ஹாலில் வரிசையில் சென்று, பக்தர்களின் பின் வரிசையில் அமர்ந்து கொண்டனர். இதனை மா தேவகி பகவானிடம் சுட்டி காட்ட, பகவான் உடனடியாக சாதுவை அழைத்து, “எத்தனை பேர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருக்கிறார்கள்?“ என்று வினவினார். சாது, “எட்டு பேர்கள், பகவான்,“ என்றார். பகவான், “எட்டு பேரையும் அழை“ என உத்தரவிட்டார். சாது அவர்களை அழைத்தார். பகவான் இரண்டு பாய்களை அவர்களுக்காக போடச் சொன்னார். அவர்கள் பகவானின் முன்னால் அமர்ந்தார்கள். பின்னர் பகவான் சாதுவிடம் திரும்பி, “நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப்பிச்சைக்காரன் உனது ராமநாமத்தை கேட்க விரும்புகிறான். நீ ஜபிக்க மற்றவர்கள் பின்தொடரட்டும்“ என்றார். 

வழக்கம்போல் சாது பகவான் பற்றிய பிரார்த்தனை பாடலை பாடி பதினைந்து நிமிடங்களுக்கு நாமஜெபம் பாடினார். பகவான் புன்னகைத்தாவாறும், சிரித்தவாறும் இருந்தார். சாது நிறுத்திய போது, பகவான், “இந்தப்பிச்சைக்காரன் ஜபம் தொடரவேண்டும் என விரும்புகிறான்,“ என்று உத்தரவிட்டார். சாது மேலும் பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்தார். பகவான் சந்தோஷப்பட்டார். பின்னர். பகவான் தனது உதவியாளரான ஒரு சிறுவனை அழைத்து தனது அருகில் சாதுவிற்கு ஒரு நாற்காலியை போடுமாறு கூறினார். திரு. லீ லோசோவிக் மற்றும் திரு. கிருஷ்ணா ஆகியோர் அங்கே ஏற்கனவே இருந்தனர். பகவான் லீயின் பக்தர் ஒருவரை பாடுமாறு கூறிவிட்டு, சாதுவிடம் லீ மற்றும் கிருஷ்ணாவிடம் நமது நிகழ்ச்சிகள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்குமாறு கூறினார். இதற்கிடையில் பகவான் தென் ஆப்பிரிக்காவின் திரு. டெட்டி கொமல்                              அவர்களை தனது அருகே அழைத்து தனது ஆசிகளை முழு அரைமணி நேரத்திற்கும் பொழிந்தார். பகவான் அவரிடம் எப்படி, ஏன் இந்த பெயரினை பெற்றீர்கள் என்றும், தென். ஆப்பிரிக்காவின் ஹிந்துக்கள் பற்றியும் கேட்டார். அவர் அங்கே நடந்த சாதுவின் பணி குறித்தும் கேட்டார். பின்னர் அங்குள்ள மக்களின் வரவேற்பு குறித்து கேட்டதோடு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் சகோதரி நிவேதிதா அகாடமியின் பணிகளுக்கும் தனது ஆசியை வழங்கினார். அவர் டெட்டியிடம் தனது சிகரெட்டை பற்ற வைக்குமாறு கூறினார். அவர் டெட்டியிடம்  சத்யசாய் பாபா குறித்தும், அவரது நாட்டில் பாபாவின் இயக்கத்துடன் அவருடைய தொடர்பு குறித்தும், விசாரித்தார். பின்னர் அவர் டெட்டியிடம் , “ உனக்கு பகவான் பாபாவின் ஆசிகள் கிடைத்திருக்கிறது. சுவாமி சச்சிதானந்தாவின் ஆசிகள் மற்றும் ரங்கராஜனின் வழிக்காட்டுதல் கிடைத்திருக்கிறது. இதைவிட வேறென்ன இந்தப் பிச்சைக்காரன் உனக்கு தர இயலும்?“ என்றார்.

பகவான் கிருஷ்ணாவிடம் ராமநாமத்தை ஜபிக்குமாறு சொன்னார். விடைபெறும் முன் சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்காவின் திரு. ப்ரேம் சிங் அளித்துள்ள காசோலையை, “தென்னாப்பிரிக்கா பக்தர் ஒருவர் பகவானின் பெயரில் ரூபாய் எட்டாயிரத்துக்கான காசோலையை தந்துள்ளார். அவருடைய பெயரும் விலாசமும் இதில் இருக்கிறது” என்று கூறி பகவானிடம் சேர்ப்பித்தார். பகவான் அதனைப் பெற்று தன்னுடன் வைத்துக்கொண்டார். பின்னர் சாது பகவானிடம், “பகவான், நீங்கள் அனுமதித்தால் நான் கிளம்ப விரும்புகிறேன். மணி இங்கே தங்குவதற்கான இடங்கள் போதுமானதாக இல்லை என்று கூறினார்,” என்று கூற, சிறிது நேரம் யோசித்த பகவான், “இந்தப்பிச்சைக்காரன் உன்னை கிளம்புவதற்கு அனுமதித்து விட்டான் என்று மணியிடம் கூறிவிடு” என சொல்லி, சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை வழக்கம்போல் எடுத்து ஆசீர்வதித்து தந்தார். பின்னர் பகவான் சாதுவின் கரங்களைப்பற்றி எழுந்து காரை நோக்கி நடக்கத்துவங்கினார் மற்ற பக்தர்கள் அமர்ந்திருந்தனர். யோகி காரில் அமர்ந்தப்பின் சாது அவரிடம், “பாரதி, விவேக் மற்றும் நிவேதிதா தங்கள். நமஸ்காரங்களை தங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள்” என்றார். பகவான் புன்னகைத்தவாறே பதிலளிக்கையில், “அவர்கள் எப்போதும் மகிழ்வோடு இருப்பார்கள். ஒருபோதும் அவர்களுக்கு கவலைகள் இல்லை என நீ அவர்களிடம் கூறிவிடு“ என்றார். கிளம்பும் முன் அவர், “ ஏதோ…” என சொல்லி சிறிது நேரம் நிறுத்தினார். அவர் ஏதோ சொல்ல நினைத்தார். சாது விசாரிக்க அருகே சென்றார். பின்னர் அவர் சிரித்தவாறே, “ஒன்றுமில்லை” என்று கூற, கார்  நகர்ந்து சென்றது.

சாது திரு. ராமச்சந்திரா உடன் உடுப்பி பிருந்தாவன் ஓட்டலுக்கு சென்றார். பிற பக்தர்களும் பின்தொடர்ந்தனர். அவர்கள் அங்கே இரண்டு அறைகளை எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோயிலுக்கு சென்றனர். சாது ராமச்சந்திர உபாத்யாவின் காரை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆசிரம வளாகத்திற்கு சென்று திரு. லீ லோசோவிக் அவர்களை சந்தித்தார்.  அவர் தனது புத்தகத்திற்காக $ 400 தந்திருந்தார். சாது அவருக்கு புத்தகங்களை வழங்கினார். சாது சுவாமி ஹம்ஸானந்தா மற்றும் சௌம்யாவை சந்தித்தார். அவர்கள் சாதுவிற்கு  பிக்ஷை மற்றும் தென் ஆப்பிரிக்கா பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்கள். சாது அடுத்தநாள் திரு. ராமசந்திர உபாத்யாயா அவர்களிடம் இருந்து விடைப்பெற்றார். அவர் ஹோட்டல் அறைகளுக்கான வாடகையை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.  சாது, தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களோடு வேலூர் வந்து அங்கிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்தார். மும்பையின் பாரதீய இதிகாச சங்கலன் யோஜனாவின் டாக்டர் ரவீந்திர ராமதாஸ் மற்றும் அவரது மனை வி சாதுவிற்காக காத்திருந்தனர்.  டாக்டர் ராம்தாஸ் அவர்களை சந்தித்தப்பின், சாது மற்ற தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களை மெரீனா கடற்கரைக்கு அழைத்துச் சென்று, இரவை YRYA வளாகத்தில் செலவழித்தார். டெட்டி மற்றும் ட்ரிசேன் அடுத்தநாள் விடைப்பெற்றனர். 

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, யோகி ராம்சுரத்குமார் சுழற் கேடயம் மற்றும் பரிசுகளுக்கான, சுவாமி விவேகானந்தர் குறித்த பேச்சுப்போட்டிக்கான ஏற்பாடுகள் துவங்கின. ஜனவரி 12-ற்கான நிகழ்ச்சிக்கு, சாது, இந்து மேல்நிலைபள்ளி வளாகத்தை முடிவு செய்தார். சுற்றறிக்கை நகரத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. டாக்டர் ரவீந்திர ராம்தாஸ் டிசம்பர் 25 ஆம் தேதி காலையில் வந்தார், மீண்டும் அவர் திரு. B. கோவிந்தராஜ் உடன் டிசம்பர் 30 அன்று வந்தார். அடுத்தநாள் சாது பெங்களூருக்கு சென்றார். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.15

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.15 

“ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” – பகவான் வெளியிட்ட ஜெர்மன் மொழிபெயர்ப்பு

இந்தியாவிற்கு திரும்பியபின் சாது தனது முதல் நிகழ்ச்சியாக, அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலாயவின் கல்வி அமர்வினை, ஜூன் – 12 , 1996, புதன்கிழமை அன்று, துவக்கி வைத்தார். சாதுஜி குழந்தைகளின் வித்யாரம்பத்தில் கலந்து கொண்டு அவர்களது பெற்றோர்களிடையே உரையாற்றினார். அதனை நிறுவிய திரு.ஜெய்கோபால் கரோடியா அகர்வால் அவர்களையும் சாது சந்தித்தார். சாது பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை அன்று சென்றார். திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் துவங்குவதற்கு கருவியாக இருந்த திரு. எஸ்.பி. ஜனார்த்தனன் தனது மனை வியோடு, திருமதி நிவேதிதாவின் இல்லத்திற்கு வந்து, சாதுவை சந்தித்தார். சாது சென்னைக்கு ஜூன் – 18 செவ்வாய்க்கிழமை அன்று திரும்பினார். மொரீஷியஸின் திரு. ராஜ்நாராயண் கத்தீ, 1986 ல் சாதுவின் நிகழ்ச்சிகளை அவர்களின் நாட்டில் ஏற்பாடு செய்தவர், கடிதம் ஒன்றை அவரது மைத்துனி திருமதி. ஊர்வசி மூலம் அனுப்பியிருந்தார் அவர் சாதுவை அவரது உறவுனர்களுடன் சந்தித்தார். சாது பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு ஜூன் – 21 , 1996 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

இந்த சாது மற்றும் திருமதி. பாரதியும் உங்கள் அளவற்ற கருணையாலும் ஆசியாலும் இந்தியாவிற்கு 10 – 06 – 96 அன்று திரும்பி வந்தோம். தென் ஆப்பிரிக்காவின் எல்லா மூலையிலும் எங்கள் பணி சிறப்பாக நடைப்பெற்றது யோகி ராம்சுரத்குமார் பெயரும், ராமநாமமும் காட்டுத்தீ போல் பரவியுள்ளது. ஹிந்து கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த நமது அகாடமியில் பாடத்திட்டம் தென் ஆப்பிரிக்காவில் நுவங்கப்பட்டன. தென் ஆப்பிரிக்காவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்டனர். தென் ஆப்பிரிக்காவின் கல்வித்துறையும் இதற்கு தனது ஒத்துழைப்பை தந்து, இந்து மத கல்வியை பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தி, அதற்கான ஆசிரியர்களை பயிற்றுவிக்க முன்வந்துள்ளது. நாங்கள் எங்கள் விசாவிற்கான நீட்டிப்பை இம்மாத இறுதிவரை கேட்டிருந்தோம். அது அனுமதிக்கப்பட்டு எங்கள் நிகழ்ச்சிகளும் உறுதி செய்யப்பட்டன. ஆனால் ஏர் இந்தியா எங்கள் பயணச்சீட்டின் அடுத்த இருபது நாட்கள் நீட்டிப்பிற்கு மிக அதிகமான தொகையை கேட்டது. தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் அந்த அதிகப்படியான தொகையை தர தயாராக இருந்தபோதிலும் நாங்கள் அதனை மறுத்துவிட்டோம். அது அங்கு சென்று வருவதற்கு சமமான தொகையாக இருந்தது. நாங்கள் அங்கிருந்த பக்தர்களை அனைத்து நிகழ்ச்சிகளையும் அடுத்த வருடத்தின் துவக்கத்திற்கு மாற்றி வைக்குமாறும் அப்போது மிக நீண்ட பயணத்தை மேற்கொள்வதாகவும் கூறினோம். மிகுந்த தயக்கத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் எங்களை திரும்புவதற்கு அனுமதித்தனர். இருப்பினும் அவர்கள் நமது ராம நாம பணியை அங்கே தொடர்ந்து வருகிறார்கள். பல தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் இந்த ஆண்டு டிசம்பரில் இங்கே வந்து தங்கள் தரிசனத்தைப் பெறவும், இங்கே யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தை சிறப்பாக நிறுவி உலகம் அனைத்திற்கும் இந்து கலாச்சாரத்தை பரப்ப மிகுந்த பயனுள்ள அமைப்பாக மாற்றவும் எண்ணம் கொண்டுள்ளனர். தற்சமயம் நூற்றுக்கணக்கான ஆண்களும் , பெண்களும், குறிப்பாக பல ஆசிரியர்கள். நமது விஞ்ஞான பாரதி பாடத்திட்டத்தில் சேர விருப்பம் கொண்டுள்ளனர். அங்கிருக்கும் நமது அகாடமி முழுவீச்சில் இயங்கி வருகிறது. உங்கள் கருணை மற்றும் ஆசியால் பல கறுப்பின மற்றும் வெள்ளைக்காரர்கள் கூட இதில் ஈர்க்க பட்டுள்ளனர் நாங்கள் உங்கள் ஆசியை நமது பணியின் வளர்ச்சிக்கு வேண்டுகிறோம். 

சௌ. நிவேதிதா அக்டோபரில் அவளது பிள்ளையை பெறுவாள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவள் தங்கள் மற்றும் மா தேவகியின் ஆசிகளை வேண்டி பிரார்த்திக்கிறாள். திருமதி. பாரதி மற்றும் சிரஞ்சீவி விவேகானந்தன் ஆகியோரும் தனது வணக்கங்களை தெரிவிக்கின்றனர். வரும் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நாங்கள் உங்கள் தரிசனத்திற்கு வருவதற்காக பிரார்த்திக்கிறோம். 

வணக்கங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். 

ஜூன் 25, செவ்வாய்க்கிழமை சாதுவும் பாரதியும் யோகியின் இல்லத்தை மாலையில் அடைந்தனர். பகவான் அவர்களை கட்டுமானத்தில் இருக்கும் மெயின் ஹாலில் வரவேற்று தனதருகில் அமர வைத்தார். பகவான் சாதுவிடம் நீ எந்த கிறிஸ்துவ இறையியல் கல்லூரியில் பாடம் நடத்தினாய்? அது எங்குள்ளது என்று கேட்டார். சாதுஜி அவரிடம் தனது சேவை சத்திய நிலையம் புனித இருதய கல்லூரி, திருவான்மியூர், சென்னை, என்றார். யோகி சாதுவிடம் நீ நுண்பொருள் கோட்பாட்டியல் (Metaphysics) பற்றி பாடம் எடுத்தாயா? என்று கேட்க, சாது ‘ஆம்’ என்றார். பின்னர் அவர் , “நுண்பொருள் கோட்பாட்டியல் என்பது என்ன?“ எனக்கேட்டார். சாது விளக்கமளிக்கையில், “இயற்பியலுக்கு அப்பாற்பட்ட அறிவியல். அதாவது, அது பிரபஞ்ச அறிவுக்கும், காரணங்களுக்கும் அப்பாற்பட்ட மெய்ப்பொருள் பற்றிய அறிவு” என்றார். பகவான் சாதுவிடம் புனித இருதய கல்லூரி குறித்து கேட்டார். சாது பகவானிடம் நூறு வருடங்களுக்கு முன். செண்பகனூரில் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியாக துவங்கப்பட்டு பின்னர் திருவான்மியூருக்கு மிகப்பெரிய வளாகத்தில் மாற்றப்பட்டதாகவும் கூறிய சாது, “அவர்கள் கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக செய்யும் பணிகளை கண்ட பின்னரே, இந்து மிஷனரிகளுக்கும் இது போன்ற பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்ற உத்வேகத்தை நான் பெற்றேன்”, என்றார். சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து சமயப்பிரச்சாரகர்களுக்கு பயிற்சி அளிக்க எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் குறித்தும், ஹிந்து சமயம் மற்றும் பண்பாடு குறித்த “விஞ்ஞான பாரதி” வகுப்புகள் குறித்தும் கூறினார். ராமநாமம் அந்த நாட்டில் வேகமாக பரவி வருவது குறித்து பகவான் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அனைத்து இடங்களிலும் பகவான் படமானது வைக்கப்பட்டு ராமநாமம் பரப்பப்பட்டு வருவதாக சாது கூறினார். பகவான், “நீ எனது குருநாதரின் பணியை செய்து வருகிறாய். சச்சிதானந்தா சுவாமி மிகவும் மகிழ்வார்“ என்றார். பகவான் சாதுவை ஆசீர்வதித்தார். பகவான் சாதுவை தனதருகே இழுத்து அவரது கரங்களைப்பற்றி அழுத்தினார். சாது பகவானிடம் ஹிந்து தரிசனங்கள் பற்றிய வகுப்புகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது பற்றி குறிப்பிட்டார். பகவான் சாதுவிடம் ஷட் தரிசனங்கள் குறித்து கேட்டார். சாது, ஆறு தரிசனங்கள் மற்றும் உபநிஷத்தின் தத்துவங்களுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து விளக்கினார். சாது பகவானிடம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் உடன் ஒப்பிடுகையில், ஹிந்து தர்மத்தின் உலகளாவிய மதிப்புக்களை உணர்த்துவதில் தங்களது முயற்சிகள் குறித்து கூறினார். கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிற்கு, ஹிந்து தர்மத்தின் மூலத் தொடர்பு உள்ளது குறித்து லெவி மற்றும் ப்ரூட்டோய் கூறியுள்ளது பற்றி சாது  குறிப்பிட்டார். பகவான் சாதுவிடம் லெவி மற்றும் ப்ரூட்டோய் அவர்களின் பணிகள் குறித்து கேட்டார். சாது அவரிடம் விளக்கினார். 

பகவான் பாரதியிடம் தென் ஆப்பிரிக்கா பயணத்தை நீ மகிழ்வோடு அனுபவித்தாயா என்று கேட்டார். பாரதி மிக அருமையாக இருந்ததாக பதில் அளித்தார். சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு பகவானின் தரிசனத்திற்காக வருவதைப்பற்றி கூற, பகவான் எத்தனைப்போ் எப்போது வருகிறார்கள் என வினவினார். சாது பகவானிடம் 10 அல்லது 12 பக்தர்கள் டிசம்பர் – ஜனவரியில் வருவார்கள் என்றார்.  பகவான் சாதுவிடம் அவர்கள் நீ அங்கே போவதற்கு முன்னர் வருவார்களா என வினவினார். சாது ‘ஆம்’ என பதிலளித்தார். சாது பகவானிடம் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தின் நூலகம் மற்றும் அச்சுப்பணிக்காக ஒரு இடத்தையும் வேண்டி பகவானிடம் ஆசியை கோரினார். அதற்கு யோகி, “ எனது தந்தை உனது முயற்சிகளை ஆசீர்வதிக்கிறார் நீ இடத்தை பெறுவதில் வெற்றியடைவாய் “ என்றார். யோகி சாதுவிடம் ‘தத்துவ தர்சனா’வை தற்சமயம் அச்சிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டார். சாது சொந்தமான ஒரு அச்சகம் இருக்கவேண்டிய அவசியம் பற்றி யோகியிடம் விளக்கினார். பகவான் எங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்து, பின்னர் மோனோஃபோட்டோ ஃபிலிம் செட்டர் மெஷின் குறித்து கேட்டார். சாது அது இன்னமும் திருமதி வள்ளியம்மை ஆச்சி அவர்களின் இல்லத்தில் இருப்பதாக கூறினார். அதனை நாங்கள் விற்றுவிட முயற்சிக்கிறோம், அது எங்கள் பணிக்கு உதவாது என்றும், நிவேதிதாவின் இடத்தில், பெங்களூரில் கணிணி மற்றும் பிரிண்டர் நிறுவப்பட்டிருப்பதையும் தெரிவித்தார். 

பகவான் சாதுவிடம் நிவேதிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். சாது அவள் நலமாக இருப்பதாக கூற, யோகி அவளை பாதுகாப்பான பிரசவத்திற்கு ஆசீர்வதித்தார். பின்னர் அவர. விவேக் குறித்து விசாரித்தார். சாது விவேக்கின் சென்னை பணி குறித்து கூறினார். அதன் முழு விவத்தை யோகி கேட்டார். மணி விவேக்கின் பணி குறித்து பகவானிடம் விளக்கினார். பகவான் சாதுவிடம் சென்னையில் அவர் இல்லாதபோது அவர் பணியை யார் செய்கிறார்கள் என வினவினார். சாது பாரதியின் மாமன் மகன் திரு. அனந்தன் குறித்து கூறினார். பகவான் அவரது பெயரை திரும்ப சொல்லுமாறு கூறினார். சாது பெயரை கூறியபின் அவர் எங்களோடு வர நினைத்தார், ஆனால் நாங்கள் வர இருக்கும் ‘தத்துவதர்சனா’ பிரதி தயாரானபின் அத்துடன் வருமாறு கூறி அவரை சென்னையில் விட்டுவிட்டு வந்தோம் என்றார். பகவான் அவரது வருகைக்கு அனுமதி அளித்தார். 

சாது பகவானிடம், தென் ஆப்பிரிக்காவில், கேப் டவுனை சார்ந்த மா யோகேஸ்வரி  மற்றும் இலாவோவை  சார்ந்த  சுவாமி வெங்கடேஸ்வரானந்தா, யோகியை பற்றி விசாரித்து தங்கள் வணக்கத்தை அவருக்கு தெரிவிக்குமாறு கூறியதை தெரிவித்தார். பகவானும் தனது வணக்கங்களை அவர்களுக்கு தெரிவிக்குமாறு சாதுவை பணித்தார். பகவான், சாது , பாரதி, நிவேதிதா, விவேக் ஆகியோர்களை, சாது கிளம்பும், முன் மீண்டும் ஒருமுறை ஆசீர்வதித்தார். வழக்கம்போல் சாதுவின் தண்டம் மற்றும் கமண்டலத்தை எடுத்து ஆசீர்வதித்து அவரிடம் தந்தார். சாது பின்னர் சென்னைக்கு திரும்பினார். 

வெள்ளிக்கிழமை, ஜூன் -28 அன்று சாதுஜி பகவானின் பக்தரான டாக்டர். ராஜலட்சுமி அவர்களின் இல்லத்திற்கு சென்றார். பின்னர் முகப்பேரில் உள்ள மார்கண்டேஸ்வரர் கோயிலுக்கு திரு. S. ராமமூர்த்தியுடன் சென்றார். அங்கே பிரதோஷ பூஜையை முன்னிட்டு நடைப்பெற்ற சத்சங்கத்தில் யோகி ராம்சுரத்குமார் குறித்து சாது  உரையாற்றினார். ஞாயிற்றுக்கிழமை அன்று ஜஸ்டிஸ் திரு. T.S.அருணாச்சலம் அவர்களை சாது  தொலைபேசி மூலம் அழைத்து அவர் தற்காலிக தலைமை நீதியாக ஆனதற்காக வாழ்த்தி பகவான் ஆசியையும் வேண்டினார். பகவானின் கருணை மற்றும் ஆசியால் சாதுவின் சகோதரி அலமேலு அவர்களின் மகன் திரு. சுந்தருக்கு திருமணம் சௌ. பத்மபிரியா உடன் சென்னை வேளச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. மணமக்களை சாது வாழ்த்தினார். சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை ஜூலை 10-ம் தேதி எழுதினார். அத்துடன் சௌ. நிவேதிதாவின் சீமந்த அழைப்பிதழையும் அனுப்பி அவரது ஆசியை வேண்டினார். சாதுவின் வெற்றிகரமான தென் ஆப்பரிக்கா விஜயத்திற்கு பின் திரும்பி வந்ததை வரவேற்க, பகவானின் பக்தர்கள் ஏற்பாடு செய்திருக்கும்  சிறப்பு சத்சங்கத்தைப்பற்றியும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

இத்துடன் 18-7-1996 அன்று பெங்களூரில் நடக்க இருக்கும் சௌ. நிவேதிதாவின் சீமந்த அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் தங்களின், மா தேவகி மற்றும் சுதாமா சகோதரிகளின், ஆசிகளை வேண்டி பிரார்த்திக்கிறோம். 

14-7-1996 அன்று அசோக் நகரில் ஒரு சிறப்பு சத்சங்கத்தில் இந்த சாது அவனது தென் ஆப்பிரிக்கா அனுபவங்களை பகிர அழைக்கப்பட்டிருக்கிறேன். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் , உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

அசோக் நகர் சத்சங்கம் சிறப்பாக நடைபெற்றது. சாது, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் குறித்தும், இந்துமதம் மற்றும் ராமநாமம் ஆகியவற்றை பற்றியும், தென் ஆப்பிரிக்காவில் பரப்பியதை விளக்கமாக கூறினார். தென் ஆப்பரிக்காவின் டோங்காட்டை சேர்ந்த வேதாந்த ஆசிரமத்தின் திரு. ஜெயராம் அவர்களும் அந்த கூட்டத்தில் உரையாற்றினார். 15 ஆம் தேதி சாது மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெங்களூரை அடைந்தனர். நிவேதிதாவின் சீமந்தம் மற்றும் வளைகாப்பு சிறப்பாக பகவானின். ஆசியால் நடைப்பெற்றது. சாது சென்னைக்கு 19 ஆம் தேதியும், நிவேதிதா மற்றும் பாரதி 28 ஆம் தேதியும் திரும்பினர். திரு. ஜெயந்திலால் மற்றும் ஜெயஸ்ரீ தென்ஆப்பரிக்காவில் இருந்து ஆகஸ்ட் – 1 அன்று வந்தார்கள். 

‘தத்துவ தர்சனா’ வின். பன்னிரண்டாவது ஆண்டிதழ் பகவானின் முன் அர்ப்பணிக்கப்படுவது குறித்து சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை 5-8-96 அன்று எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் அளவற்ற கருணையாலும் ஆசியாலும் ‘தத்துவ தர்சனா’வின் பன்னிரண்டாவது ஆண்டு மலர் திருமதி. நிவேதிதா ரமேஷால் நமது பெங்களூர் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யப்பட்டு, சென்னையில் அச்சிடப்பட்டு, வெளி வருகிறது. அதன் முதல் பிரதி இப்பொழுது உங்கள் பாதங்களில் காணிக்கை ஆக்கப்பட்டுள்ளது. திரு. அனந்தன் நமது காரியங்களுக்காக மிகவும் அர்ப்பணிப்போடு பணிபுரிந்து வருகிறார். அவர் தங்களின் முன் நூல்களை சமர்ப்பிக்க எங்களின் சார்பாக, சென்றமுறை நாங்கள் தெரிவித்ததைப் போல், அங்கே வருகிறார். நாங்கள் உங்கள் குறைவற்ற ஆசியை அவருக்கும், அவரை ஊக்குவித்து உதவும் அவரது அன்னைக்கும், வழங்குமாறு பிரார்த்திக்கிறேன். 

இந்த சாது மற்றும் குடும்பத்தினர் திருமதி. நிவேதிதாவின் சீமந்தத்தை முன்னிட்டு 18-7-1996 அன்று பெங்களூரில் இருந்தோம். திருமதி நிவேதிதா இங்கே அவளது எம்.ஃபில். தேர்வு எழுதுவதற்காக இங்கே வந்திருக்கிறாள். அது இந்தமாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும். அவள் தங்கள் ஆசியை வேண்டுகிறாள். உங்கள் கருணையால் நிவேதிதா “டிப்ளமோ இன் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்”-ல் கா்நாடகாவில் முதல் ரேங்க் பெற்றுள்ளாள். இந்த கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு ஆப்டெக் நடத்தியது. அதில் அகில இந்திய அளவில்  மூன்றாவது  இடத்தை நிவேதிதா பெற்றாள். 

சிரஞ்சீவி. விவேகானந்தன் M/s. ஃபிஷ்நர்  என்ற ஒரு ஜெர்மன் கம்பெனியில் சென்னையில் ஒரு வடிவமைப்பு பொறியாளராக சென்றமாதம் இணைந்துள்ளான். அவன் உங்களது ஆசியை தனது வாழ்க்கையின் வெற்றிக்கு கோரியிருக்கிறான். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் , உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

திரு. அனந்தன் திருவண்ணாமலைக்கு 7 ஆம் தேதி சென்று, பகவான் யோகி ராம்சுரத்குமார் தரிசனம் பெற்று, ‘தத்துவ தர்சனா’வின் முதல் பிரதியை பகவானிடம் சமர்ப்பித்தார். பகவான் அவர் மீதும் அவரது அன்னை, சாது, மற்றும் சாதுவின் குடும்பத்தினர் மீதும் ஆசிகளை பொழிந்தார். அடுத்தநாள் அவர் சென்னை திரும்பினார். திரு. அனந்தன் பகவானின் கையொப்பம் இடப்பட்ட இதழ்களை, வழக்கம்போல், யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்க, கொண்டு வந்தார். மாதாந்திர அகண்ட ராமநாமம் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 11 அன்று நடந்தது. ஆகஸ்ட் 21 அன்று, புதன்கிழமை, ஒரு அமெரிக்க பக்தர், திரு. டோட் ( தபோவன் ) அவரது நண்பரோடு வந்திருந்தார். மாலையில், மொரிஷியஸின் சௌ. ஊர்மிளா, சௌ. ப்ரீதா மற்றும் திரு. குருநாதன், சாதுவின் இல்லத்திற்கு வந்தனர்.

ஆஸ்திரியாவின் திரு. ஹெர்பர்ட் வாக்னர், அரவிந்தர் ஆசிரமத்தின் பக்தர் மற்றும் யந்த்ரா என்ற வெளியீட்டு நிறுவனத்தின் பதிப்பாளர், “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற சாது ரங்கராஜன் அவர்களின் நூலை ஜெர்மன் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்து, மிக அழகாக செக் குடியரசில் அச்சிட்டு, வெளிக் கொண்டு வந்தார். அவர் ஒரு பிரதியை பகவானின் பாதங்களில் வைப்பதற்காக அனுப்பியிருந்தார். சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை ஆகஸ்ட் – 26, திங்கள்கிழமை அன்று எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் அளவற்ற கருணை மற்றும் ஆசியால், நீண்ட கால காத்திருப்பான ஜெர்மன் மொழிப்பெயர்ப்பான, “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” ஆஸ்திரியாவின் யந்த்ரா வால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மிகவும் அற்புதமாக அதை  செக் குடியரசில் அச்சிட்டு உள்ளார்கள். அவர்கள் அந்த புத்தகத்தை ஜெர்மனி மற்றும் ஸ்விட்ஸர்லாந்தில் அனைவருக்கும் வினியோகித்து வருகின்றனர். 

இந்த சாது உங்களை சந்தித்து முதல் பிரதியை தங்களுக்கு வழங்க விருப்பப்படுகிறான். சுவாமி சச்சிதானந்தா இந்த மாதம் எழுதிய கடிதத்தில் அவர் திருவண்ணாமலைக்கு இந்த மாத கடைசியில் ரமணாச்ரமத்தின் அழைப்பின் பேரில் வருவதாகவும் அவர் உங்களையும் சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் நமது ஆசிரமத்திற்கு வந்திருப்பார் என நம்புகிறேன். நாங்கள் உங்கள் தரிசனத்தைப் பெறவும் விரைவில் அங்கு வருகிறோம்.

நமது ராம்நாம் பணி மிகவும் வேகமாக உலகம் எங்கும் பரவி வருவது குறித்து சுவாமி சச்சிதானந்தர் தனது மகிழ்வை தெரிவித்தார். மொரீஷியஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து சில பக்தர்கள் இங்கு வந்துள்ளனர். இப்பொழுது நாங்கள் ஒரு முறையான வீட்டை யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்திற்கும், நூலகம், அச்சகம், மற்றும் பிறவற்றிற்கும் தேடிக் கொண்டிருக்கிறோம். அதன்பின் உள்நாட்டிலும்  மற்றும் வெளிநாட்டிலும்  உள்ள தொண்டர்களுக்கு ஹிந்து தர்மம் மற்றும் பண்பாட்டை பரப்பும் ஆசிரியர் பயிற்சி தர வேண்டும். நாங்கள் உங்கள் ஆசியை எங்களின் முயற்சியின் வெற்றிகளுக்கு வேண்டுகிறோம்.

சௌ. நிவேதிதா நன்றாக இருக்கிறாள். அவள் உங்கள் ஆசியை அவளின் சுகப்பிரசவத்திற்கு வேண்டுகிறாள். அவளும் சிரஞ்சீவி விவேகானந்தன் மற்றும் திருமதி. பாரதி தங்கள் வணக்கத்தை உங்களுக்கும், மா தேவகி மற்றும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்குமாறு சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் , உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

செப்டம்பர் – 3 அன்று பாண்டிச்சேரியின் ரவீந்திரபாண்டியன் பகவான் படங்களுடன் கூடிய நாட்காட்டிகளை பக்தர்களுக்கு வினியோகிக்க கொண்டுவந்தார். ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் தேதி செப்டம்பர் அன்று அகண்ட ராமநாமம் நடைப்பெற்றது. நிவேதிதா மற்றும் ரமேஷ் பெங்களூரில் இருந்து வந்து கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 15 அன்று சாதுஜி விவேகானந்தா கேந்திரா வேதிக் விஷன் ஃபவுண்டேஷனில் நடந்த ஒரு கூட்டத்தில் சாது கலந்து கொண்டார். அதில் திரு.C. சுப்பிரமணியம் , திரு.M. அனந்தகிருஷ்ணன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22, 1996 அன்று, சௌ. நிவேதிதா ஒரு பெண்குழந்தையை, அதிகாலை 2.55 மணிக்கு, பெற்றெடுத்தாள். சாது அந்த சேதியை ராஜி மணி மூலம் பகவானுக்கு தெரிவித்து ஆசிரமத்தில். உள்ள அனைவரின் ஆசியையும், தாய்க்கும், சேய்க்கும் கோரினார். 

பகவானின் கருணை மற்றும் ஆசியால், மைசூரின் சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் திரு. பிரபாகரா மற்றும் தியஸாஃபிகல் சொஸைட்டியின்  திரு. கோபாலகிருஷ்ணன், சாதுவின் ஒரு தொடர் விரிவுரையை மைசூரில் ஏற்பாடு செய்தனர். சாது செப்டம்பர் 29 ஆம் தேதி பெங்களூரை அடைந்து பின்னர் மைசூருக்கு சென்றார். திங்கள்கிழமை செப்டம்பர் – 30 அன்று சாதுஜி, தியஸாஃபிகல் அமைப்பில், இந்திய கலாச்சாரம் குறித்து பேசினார். மதியம், சாது விவேகானந்தா ஹாலில், சிறந்த ஒரு கூட்டத்தில், இந்திய மதங்களின் தத்துவங்கள் குறித்து பேசினார். அக்டோபர் – 1 அன்று சாது “வலிய தாக்கும் ஹிந்து மதம்” குறித்து பேசினார். மதியம் சாது பெங்களூருக்கு திரும்பி அங்கிருந்து சென்னைக்கு இரவில் கிளம்பினார். அக்டோபர் 4 ஆம் தேதி சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள். கருணை மற்றும் ஆசியால் சௌ. நிவேதிதா  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.55 மணிக்கு 22-9-96 ஆம் ஆண்டு, பூராட நட்சத்திரம் , சுக்ல தசமியில், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். நாங்கள் திருமதி. ராஜி மணிக்கு உடனடியாக இந்த செய்தியை பகவானிடம். தெரிஙிக்கமாறு தொலைபேசியில் தெரிவித்தோம். அந்த குழந்தை மஞ்சள்காமாலை தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தமையால் நாங்கள் அவளை குழந்தைகள் மருத்துவமனை யில் சேர்ந்தோம். நிவேதிதா மற்றும் பாரதி அவர்களை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு இந்த சாது ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட நிகழ்ச்சியான பிரச்சார கூட்டத்திற்கு மைசூருக்கு சென்றான். கிளம்பும் முன் நாங்கள் பகவானின் ஆசியை வேண்டி தொலைபேசியில் மணியிடம் கூறினோம். நாங்கள் அக்டோபர் 2 தேதி திரும்பிய போது நிவேதிதாவின் குழந்தை. பகவானின். கருணை மற்றும் ஆசியால்,  நல்ல உடல்நிலையோடு வீட்டிற்கு மருத்துவமனை யில் இருந்து திரும்பி இருந்தாள். பகவானின் பக்தரான, குழந்தைநல சிறப்பு மருத்துவரான டாக்டர். ஏழுமலை மூலம், குழந்தையை கவனித்து கொண்டமைக்கு மிக்க நன்றி பகவான். 

அக்டோபர் 2 ஆம் தேதி குழந்தையின் நாமகரணம் நடைப்பெற்றது. ரமேஷ் மற்றும் அவரின் பெற்றோர்கள் இங்கே இருந்தனர். நாங்கள் குழந்தைக்கு ஹரிப்ரியா என்ற பெயரை வைத்தோம். நாங்கள் பகவானின் ஆசியை குழந்தைக்கும் , சௌ. நிவேதிதாவிற்கும் வேண்டுகிறோம். 

‘தத்துவ தர்சனா’ ஆகஸ்ட் – அக்டோபர் 96 இதழ் தற்போது அச்சிடப்பட்டு அச்சகத்தில் இருந்து வந்தது. நாங்கள் அதன் பிரதிகளுடன் அங்கு வர விரும்பினோம். ஆனால் 6-10-96  ஞாயிறு அன்று பகவான் யோகி ராம்சுரத்குமார் நாம ஜப சத்சங்கம் திருமதி வள்ளியம்மை ஆச்சி அவர்களின் மகனான திரு. ராமனாதன் அவர்களின் இல்லத்தில் நடைபெற இருக்கிறது. அவர் நேற்று எங்களை சந்தித்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார். எனவே நாங்கள் திருவண்ணாமலைக்கு ‘தத்துவ தர்சனா’ மற்றும் யோகி ராம்சுரத்குமாரின் ஜெர்மன் மொழி சரிதத்தை திங்கள்கிழமை 7-10-96 அன்று அங்கு கொண்டு வர தங்கள் ஆசியை வேண்டுகிறோம். மேலும் அக்டோபர் – 14 அன்று முதல் எங்களின் உத்திர பிரதேசத்தின் சுற்றுப்பயணம் நடைபெறும்  அதற்கான ஆசியையும் வேண்டுகிறோம்.

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தாழ்மையான சீடன் , 

சாது ரங்கராஜன். “

யோகி ராம்சுரத்குமார் நாம ஜெபம் திரு. ராமனாதன் அவர்களின் இல்லத்தில் மிகச்சிறப்பாக அக்டோபர் – 6 ஆம் தேதி அன்று நடைப்பெற்றது. திருமதி. சாரதாமணி சின்னசாமி, திரு. பாலகுமாரன் , திரு. பொன்ராஜ் மற்றும் பல பகவானின் பக்தர்கள் குடும்ப அங்கத்தினர்களுடன் அதில் பங்கேற்றனர். திங்கள்கிழமை காலையில் சாது , திரு. ரமேஷ் உடன் திருவண்ணாமலைக்கு கிளம்பினார். பகவானின் இல்லத்திற்கு 11.30 மணிக்கு சென்றனர். பகவான் சாதுவிற்காக காத்திருந்தார். சாது அங்கே சென்றவுடன் அவர் பகவானின் முன்னிலையில் அழைத்துச் செல்லப்பட்டார். யோகி சற்றே சில நிகழ்வுகளின் காரணமாக மனவருத்தம் கொண்டிருந்தது போல் இருந்தார். யோகி மணியிடம் “தினமலர்” நாளிதழை சாதுவிடம் தருமாறு கூறினார். அதில் இருந்த வாரமலர் பகுதியை படித்து அது குறித்த எனது கருத்தை கூறுமாறு சொன்னார். அதில் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு ஒன்றை அந்த கட்டுரையாளர் தெரிவித்திருந்தார். அதில் யோகி ராம்சுரத்குமார் அவர்களை யாரும் இலவசமாக சென்று தரிசிக்க இயலவில்லை என்றும், ரூ.1000 ரூபாய் நன்கொடை தருபவர்கள் மட்டும் அவரை பார்க்க அனுமதிக்கப்படுவதாகவும், அவர் ஒரு பிச்சைக்கார துறவியாக கோயிலருகே சுற்றிக்கொண்டிருந்தவர் இன்று ஆசிரம நிர்வாகிகளால் ஒரு வி.ஐ.பி கைதியைப் போல் நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் ஆசிரம இடத்திற்கு காரில் கொண்டுவரப்பட்டு, காரில் அழைத்துச் செல்லப்படுவதாகவும், எழுதியிருந்தது. சாது அந்த செய்தி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் பகவானிடம், “இந்த பத்திரிக்கையின் ஆசிரியர், திரு. கிருஷ்ணமூர்த்தியை எனக்கு தெரியும். அவருக்கு பகவானைப் பற்றியும் மிக நன்றாக தெரியும். ஒருவேளை அவர் இந்த சேதியை பார்த்திருக்கவேமாட்டார். எப்படியாயினும் நாம் அவருக்கு பதில் அனுப்பி விடலாம்.“ என்றார். பகவான் மணியிடம் அவர் எழுதிய வரைவு கடிதத்தை சாதுவிடம் காட்டுமாறு கூறினார். யோகி, ரங்கராஜன் அதனை பார்த்தப்பின் அதனை அனுப்புவது குறித்து முடிவு செய்யலாம் என்றார். மேலும், “ரங்கராஜன் விரும்பினால் அதனை மாற்றம் செய்யலாம், அல்லது இன்னொரு புதிய கடிதமும் எழுதலாம்,“ என்றார் பகவான். 

சாது தன்னோடு வந்த பாரதியின் சகோதரர் ரமேஷை பகவானிடம் அறிமுகப்படுத்தினார். பகவான் சாதுவிடம் நிவேதிதாவின் குழந்தைப்பற்றி கேட்டார். சாது அவரிடம்  தற்சமயம் நலமாக இருக்கிறாள் என்றார். சாது பகவானிடம், “சென்னை குழந்தைகள் மருத்துவமனை யில்  குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நான் மைசூர் செல்லவேண்டியிருந்தமையால், நான் அனைத்தையும் பகவானிடம் விட்டு சென்றேன். திரும்பி வருகையில் குழந்தை நலமாக இருந்தது,” என்றார். அதனைக்கேட்ட  பகவான், “அனைத்தும் தந்தையின் கருணை” என்றார். சாது பகவானிடம் நிவேதிதா குழந்தைக்கு பகவான் ஒரு பெயரை வைக்க வேண்டும் என விரும்புவதாக கூறினார். பகவான், “ஏற்கனவே ஹரிப்ரியா என்ற பெயர் தரப்பட்டுள்ளது. அதுவே நல்லபெயர். அதுவே இருக்கட்டும்,“ என்றார். சாது, “அந்தப்பெயர் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக தரப்பட்டது. ஆனால் நிவேதிதா  குழந்தையை அழைப்பதற்கு பகவான் ஒரு பெயரை வைக்க வேண்டும் என நினைக்கிறாள்“ என்றார். பகவான் பதிலளிக்கையில், “நிவேதிதா குழந்தையை  “சிவா” என்றழைக்கலாம். சிவா  அன்னை பார்வதியின் பெயர்,“ என்று கூறி பகவான் குழந்தையை ஆசீர்வதித்தார். 

சாது பகவானிடம் “Eindrucke von einem groBen Yogi” என்ற ஜெர்மன் மொழியாக்கம் செய்யப்பட்ட  “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” புத்தகத்தை அவரின் பாதங்களில் சமர்ப்பித்தார். பகவான் சாதுவிடம் எங்கே இது அச்சிடப்பட்டது என்று கேட்டார். சாது “செக் குடியரசில்” என்று பதிலளித்தார். சாது மேலும் இந்த நூல் ஆஸ்திரியா, ஜெர்மன் மற்றும் ஸ்விட்சர்லாந்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். செக்கஸ்லோவாக்கியா என்ற நாட்டின் மொழியென்ன என வினவினார். சாது ஒருவேளை அது ‘செக்’ மொழியாக இருக்கும் என்றார். யார் இந்த புத்தகத்தை ஜெர்மனியில் வெளியிட்டநு என பகவான் கேட்டார். சாது , “ஹெர்பர்ட் வேக்னர்” என்ற ஒரு பக்தர் என்று  கூறினார். 

சாது பகவானிடம் “விவேகானந்த கேந்திர பத்திரிகா“ இதழை வழங்கினார். அதில் சாதுவின் கட்டுரையான “தேசப்பற்று – சுதேசியின் அடிப்படை“ என்பது வெளியாகி இருந்தது. பகவான் சாதுவிடம் அந்த கட்டுரையை காட்டுமாறு கூறினார். சாது அதைத் திறந்து அதன்  பக்க எண்ணெய் குறிப்பிட்டார். பகவான் சாதுவிடம் உன்னிடம்  இந்த நூல்களின் பிரதிகள் உள்ளனவா என்று கேட்டார். சாது பகவானிடம் இந்த இரண்டும் தங்களுக்கே என்றார். பகவான் அவைகளை ஆசீர்வதித்து மா தேவகியிடம் அனுப்பி வைத்தார். 

பகவான், லீ லோசோவிக் அவர்களின் பாடல்கள் நிறைந்த ஒரு கட்டினை சாதுவிடம் தந்து, “உடைந்த உள்ளத்தின் கவிதைகள்” இரண்டாவது தொகுப்பினை கொண்டுவருமாறு சாதுவிடம் கூறினார். யோகி கூறுகையில், “ரங்கராஜன் அவரது சுற்றுப்பயணத்தை முடித்தப்பின் ஓய்வாக இந்த வேலையை செய்யலாம். ஆனால் இந்தப்பிச்சைக்காரன் ரங்கராஜன் இதில் பிழைத்திருத்தம் பார்க்க வேண்டும் என விரும்புகிறான்,” என்றார். சாது தான் அதனை மேற்கொள்வதாக பகவானிடம் கூறினார். சாது பகவானிடம் தனது சுற்றுப்பயணம் அக்டோபர் 13 ஆம் தேதி துவங்குகிறது என்றும் நவம்பர் முதல் வாரத்தில் திரும்புவேன் என்றும் கூறினார். பகவான் சாதுவின் சுற்றுப் பயண திட்டத்தை ஆசீர்வதித்தார். பகவான் தான் ‘தத்துவ தர்சனா’வின் இதழ்களை நான்கு மணிக்குப்பின் எடுத்துக்கொள்வதாக கூறி, சாதுவிடம் இன்று ஒருநாள் நீ இங்கு இருப்பாயல்லவா என வினவினார். சாது பகவானிடம், “பகவான் விரும்புவதைப்போல் நான் செய்வேன்“ என்றார். ரமேஷ், சென்னையில் தனது வீடு வாங்கும் திட்டத்திற்கு, பகவானின் ஆசியை வேண்டினார். பகவான் அவரை ஆசீர்வதித்து அவரை அந்த முயற்சியை தொடருமாறு கூறினார். பின்னர் அவர் சாது மற்றும் ரமேஷ் இடம் தர்சன் ஹாலுக்கு சென்றுவிட்டு அவர்களின் குடிலுக்கு செல்லுமாறு கூறினார். 

உணவிற்குப்பின், மதிய நேரத்தில் ஓய்வெடுத்தப்பின், சாதுவும் ரமேஷும்  பகவானை மீண்டும் சந்தித்தனர். மணி பகவானிடம் “தினமலரு”க்கான தனது வரைவுக்கடிதம் ஒன்றை தந்தார். பகவான் சாதுவிடம் நீ இதனை படித்தாயா என வினவினார். சாது ‘ஆம்’ என்றார். பகவான் சாதுவிடம் கடைசி பக்கத்தில் இருக்கும் மணியின் குறிப்பை படித்தாயா என்று கேட்டார். சாது “இல்லை” என்றார். மணி தான் சாதுவிற்கு தந்த பிரதியில் அதனை இணைக்கவில்லை என்றார். பகவான் சாது அதனை படிக்க வேண்டும் என்று விரும்பினார். மணி தன்னால் ஆசிரமத்திற்கு அவப்பெயர் வருவதை தான் விரும்பவில்லை என்று கூறி தான் விலகிக்கொள்ள தயார் என்று சமர்ப்பித்திருந்தார். பகவான் சாதுவிடம் இந்த கடிதம் குறித்து நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டார். சாது, தான் பதிலினை தமிழில் எழுதி “தினமலரு”க்கு அனுப்புவதாக கூறினார். பகவான் விரும்பினால் மணியின் கடிதத்தையும் தினமலருக்கு அனுப்பலாம் என்றார். பகவான், மணியிடம் இந்த விவகாரத்தை ரங்கராஜனிடம் விட்டுவிடும்படியும் அவர் பொருத்தமான பதிலை அனுப்புவார் என்றும் கூறினார். பகவான் சாதுவின் பதிலை தான் பார்க்க விரும்புவதாக கூற, சாது, தான் அனுப்பும் தமிழ் பதிலின் நகலை ஆங்கில மொழியாக்கத்துடன் அனுப்புவதாக கூறினார். பகவான் “தந்தையின் விருப்பம்” என்றார். 

மணி மிகுந்த வருத்தப்பட்டு தன்னை பகவான் விடுவிக்க வேண்டும் என விரும்பினார். அவர் சாதுவிடம், “நீங்களும் ஒரு டிரஸ்டி என்பதால் நீங்களும் முடிவெடுத்து பகவானிடம் வலியுறுத்தலாம்“ என்றார். மேலும் அவர், “நான் உங்கள் தயாரிப்பு, நான் உங்கள் மூலமே இங்கே வந்தேன்,” என்று கூற, சாது புன்னகைத்து பகவானிடம், “என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அது குறித்து எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் நான் ஆச்சரியப்படுவது அது “தினமலர்” பத்திரிகையில் வெளிவந்ததைக் குறித்துத்தான்” என்றார். இத்தகைய பேச்சுக்கள் நீண்ட காலமாக இந்த சூழலில் இருக்கிறது. அதனை நான் சென்றமுறை இங்கே வந்தபோதே கேட்டிருக்கிறேன்,” என்று சாது கூற, அதனைக் கேட்ட மணி வருத்தம் கொண்டார். மணி கூறுகையில் தான் பகவான் உத்தரவிட்டதையே செய்வதாக கூறினார். சாது பகவானிடம், “மணியை பொதுமக்களின் தொடர்புகளுக்கோ, கூட்டத்தை கட்டுப்படுத்தவோ அனுப்பக்கூடாது. அவைகளை மற்ற சிறுவர்களிடம் கொடுத்துவிட்டு, மணியை நாம் சற்று பொதுமக்களிடமிருந்து விலக்கி வைக்கலாம்.” என்று சாது கூற, மணி மேலும் வருத்தம் கொண்டு கேட்கையில், “என்னால் செய்ய இயலாதபோது, எப்படி இந்த சிறுவர்கள் இந்த வேலையை செய்ய இயலும்? சிலசமயம் நானே மக்கள் மிகவும் மோசமாக பேசும் போது வருத்தம் கொள்வேன்,” என்று கூறினார். சாது, “பிரச்சனையே அங்குதான் உள்ளது. நீங்கள் பக்தர்களை கையாள வேண்டியது இல்லை,” என்று கூற, மணி வருத்தமுற்றார். பகவான் அமைதியாக இருந்தார். சாது தொடர்ந்து, “நம்மால் பொது மக்களின் வாயை அடைக்க இயலாது. இங்கே நாம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் வெளியே இருந்து கொண்டு அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதனை பேசுவார்கள்,“ என்றார். பகவான் சாதுவிடம், மிகவும் பணிவான ஒரு பதிலை, எவருடைய உணர்வுகளும் புண்படாமல், எழுதுமாறு கூறினார். சாது தானும் அவ்விதமே எழுதுவதாக கூறினார். பகவான் கூறுகையில், “எனக்கு தெரியும். நீ மிகச்சரியான முறையில் எழுதுவாய். நீ அதனை மேற்கொள்ளலாம். தந்தையின் கருணை உடனிருக்கும்,” என்றார். 

பகவான், ரமேஷ் கொண்டு வந்த ‘தத்துவ தர்சனா’ புத்தகத்தையும், ஜெர்மன் மொழி புத்தகத்தையும்  எடுத்துக்கொண்டு, சாதுவிடம் பேனாவை தருமாறு கேட்டார்.  பேனாவை வாங்கி பகவான், சாதுவிடம் “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பில் கையொப்பம் இட்டு சாதுவிடம் தந்தார். பின்னர் அவர் ‘தத்துவ தர்சனா’ இதழ்களின் பிரதிகளிலும் கையொப்பம் இட்டார். பதினொரு பிரதிகளை சாதுவிடம் வழங்கினார். ஒரு பிரதியை மணியிடமும், ஒன்றை ரமேஷிடமும் தந்து ஒன்றை அவர் தன்னிடம் வைத்துக் கொண்டார். அவர் மற்ற பிரதிகளை ரமேஷிடம் திரும்ப தந்தார். 

சாது, பகவானிடம் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்திற்காக  திருவல்லிக்கேணியில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்திருப்பதாக தெரிவித்தார். யோகி அதன் வாடகை என்னவென்று கேட்க,  சாது அதன் வாடகை ரூ.1300/- என்றும் மேலும் அது தனது இல்லத்திற்கு அருகாமையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ரமேஷ், அந்த வீட்டில் இருந்து பார்த்தசாரதி கோவில் கோபுரம் தெரியும் என்று கூறினார். பகவான் தனது கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்களின் உதவியோடு சொந்த இடம் ஒன்றை வாங்குவதற்கான முயற்சிகளை செய்து வருவதாகவும் அதற்கு ஆசீர்வதிக்கும்படி பகவானிடம் கேட்டார். பகவான் கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் உதவுகிறார்களோ இல்லையோ என் தந்தை நிச்சயமாக உனது தேவைகளை பார்த்துக் கொள்வார். நீ அவரது பணியை செய்து வருகிறாய்.“ சாது, பகவானிடம் விவேக் தனிப்பட்ட முறையில் சில திட்டப்பணிகளை செய்வதற்கான முயற்சிகளை துவக்கி வருகிறான் என்றார். பகவான் ஆசீர்வதித்து “விவேகானந்தனுக்கு என் தந்தையின் ஆசீர்வாதங்கள்“ என்றார். பகவான் சாதுவிடம் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் எப்போது வருகிறார்கள் என வினவ. “ டிசம்பர் 11 வாக்கில் “ என்று சாது கூறினார். 

சாது பகவானிடம் “தினமலர்” இதழில் தனது பதில் வெளியிடப்பட்டால், தான் விரைவாக வந்து சந்திப்பதாக கூறினார். பகவான் ஆசீர்வதித்து, “தந்தையின் கருணை“ என்றார். சாது பின்னர் பகவானிடம் ரமேஷ் மாலையில் கிளம்ப விரும்புகிறார் என்றார். பகவான் மணியிடம், “அவர் கிளம்புகிறார். ரங்கராஜனுக்கும் நிறைய வேலை இருக்கிறது. அவர் மிகந்த வேலைகள் நிறைந்தவர். அவர் விரும்பினால் இன்றே அவர் கிளம்பலாம்“ என்றார். சாது பகவானிடம் அனுமதி வாங்கி ரமேஷ் உடன் கிளம்ப தயார் ஆனார் யோகி பிரசாதங்களை இருவருக்கும் வழங்கி, வழக்கம்போல் சாதுவின் தண்டம் மற்றும் கமண்டலத்தை ஆசீர்வதித்து அவரிடமே தந்தார். பின்னர் யோகி சாதுவிடம், “நீ தர்சன் ஹாலிற்கு சென்று அங்கிருக்கும் பக்தர்கள் இடையே ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற ஜபத்தை  ஒரு அரைமணி நேரத்திற்கு முன்னின்று நடத்து” என உத்தரவிட்டார். சாது அதனை ஏற்று தர்சன் மந்திர் ஹாலுக்கு சென்றார். ராமநாம ஜபத்தை அரைமணி நேரத்திற்கு நடத்தினார். பின்னர் ஆரத்தி எடுத்துவிட்டு ராஜி மற்றும் மணியிடம் விடைப்பெற்று கிளம்பினார். மணி இன்னமும் பகவானின் முன்னிலையில் நடந்த உரையாடல்களை முன்னிறுத்தி குறிப்பிடுகையில், “நீங்கள் இங்கே இருந்தால் இந்த காவி உடையை கடந்தும் நீங்கள் உங்கள் பொறுமையை இழந்துவிடுவீர்கள். இங்கே வருபவர்கள் உங்களை நாயே என அழைத்தால் , நீங்கள் சும்மாயிருப்பீர்களா? நீங்களும் அவர்களுக்கு அதே வழியில் பதிலளிப்பீர்கள்,” என்று மணி கூற, சாது எளிமையாக புன்னகையையே பதிலாக அளித்தார். பின்னர் டிரைவரிடம் எங்களை ஆட்டோ ஸ்டேண்டில் பேருந்தைப்பிடிக்க அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு, மணி சாதுவிடம் “இன்னா செய்தாரையும் ஒறுத்தல்” என்ற திருக்குறளை கூறினார். சாது மீண்டும் புன்னகைத்து அவரிடமிருந்து விடைப்பெற்றார். 

சுதாமாவில் , யோகி ராம்சுரத்குமார் தென்ஆப்பரிக்காவில் இருந்து வந்த தம்பதியரை ஆசீர்வதிக்கிறார்.

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.14

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.14 

தென் ஆப்பிரிக்காவில் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் பணி

1996 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை தென் ஆப்பிரிக்காவில் சாது ரங்கராஜன் மற்றும் பாரதி ரங்கராஜன் தங்கியிருந்த காலம், பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பணியை பரப்ப மிகவும் பயனுள்ள சுற்றுப்பயண காலமாக அமைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் செயலும் அந்த தொலைதூர நிலத்தில் நூற்றுக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்து கொண்டுவந்தது, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் கருணையே இவ்விருவரின் மூலமும் செயல்பட்டதாகும். அவர்கள் வருகைக்கு அடுத்த நாளே, மார்ச் – 11 அன்று, சாது, நேடாலின்  கோஸ்டல் வீக்லி என்ற இதழ் மூலம், அவரது இலக்கு மற்றும் நோக்கம் குறித்து நேர்காணல் செய்யப்பட்டார். டோங்காட் வேதாந்தா ஆசிரமத்தில் வேதாந்தம் குறித்து சாது உரையாற்றியதோடு ஒரு சத்சங்கம் ஒன்றையும் நடத்தினார். செவ்வாய்க்கிழமை அன்று ஸ்டேங்கரின் இந்து சபாவின் தலைவரான திரு.B.J. பண்டிட் சாதுவை சந்தித்தார். வேதாந்த ஆசிரமத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பஜ கோவிந்தம் குறித்து சாது ஒரு தொடர் விரிவுரையாற்றினார். 15 ஆம் தேதி சாது, எமோனா பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளிடமும், பின்னர் வெஸ்ட்வில்லே பல்கலைக்கழகத்தின் பணியாளர்களிடமும் உரையாற்றினார். ரிசர்வாயர் ஹில்ஸில், டிவைன் லைஃப் சொஸைட்டியின் தலைவரான சுவாமி சகஜானந்தாவை சாது சந்தித்தார். சனிக்கிழமை, சாது, வேதாந்தா ஆசிரமத்தில் தனது தொடர் சொற்பொழிவு தொடர்வதற்கு முன், டோங்காட் ஹிந்து யூனிட்டி ஃபாரமில் உரை நிகழ்த்தினார். ஞாயிற்றுக்கிழமை காலையில் சாதுஜி சத்யசாய் யோகா முகாமில் சத்தியம், சிவம், சுந்தரம்குறித்து உரையாற்றினார். பின்னர் அவர் ஸ்டேங்கரில் உள்ள சிவாலயத்திற்கு காரில் சென்று அங்கிருந்த பக்தர்களிடம் உரையாற்றினார். சாது யோகி ராம்சுரத்குமாருக்கும், சுவாமி சச்சிதானந்தருக்கும் தனது சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் குறித்து கடிதம் எழுதி அவர்களது ஆசியை வேண்டினார். சாது தனது உரையை சிவன் கோவிலில் திங்கள்கிழமையும் தொடர்ந்தார். திங்கள்கிழமை அன்று பெண் பக்தர்களின் சத்சங்கத்தில் திருமதி பாரதி, ஜப யோகம் குறித்து பேசினார். சாதுவும் யோகா மற்றும் தியானம் குறித்து பேசினார். மாலையில் ஹிந்து சபா அரங்கில் கூடிய பெரும் கூட்டத்தில் சாது, “மதமும், வாழ்க்கையும்” என்ற தலைப்பில் பேசினார். அடுத்தநாள் ஹிந்து சபா ஹாலில் நடந்த கூட்டத்தில் பலர் பங்கு கொண்ட ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் சாது பங்கேற்று, கேள்விகளுக்கு விடையளித்தார். பின்னர் சாது, ஸ்டேங்கர் மேனர் பள்ளியில் பிள்ளைகளிடம் உரையாற்றினார். மாலையில் ஸ்டேங்கரின் சனாதன தர்ம மந்திரில் ராமநவமி விழாவில் உரை நிகழ்த்தினார்.

ஒவ்வொரு வருடமும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் நடத்தும் விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள சென்னை வரும், நேடாலின் சைவ சிந்தாந்த சங்கத்தின் தலைவரான திரு. N.C. நாயுடு, காலமானார் என்ற சேதி வியாழக்கிழமை காலையில் கிடைத்தவுடன் சாதுவும் பாரதியும் டர்பனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றனர். சாது, அவரது இறுதி ஊர்வலத்திற்கு முன் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், அவரது ஹிந்து கொள்கை மற்றும் எண்ணம் குறித்தும், தமிழ் பேசும் மக்களிடையே அவர் தென் ஆப்பிரிக்காவில் செய்த சேவைகள் பற்றியும் உரையாற்றி, அவரது ஆன்மா அமைதியுற பிரார்த்தித்தார். பின்னர் அவர்கள் ஸ்டேங்கரில் உள்ள சபா ஹாலில், கேள்வி பதில் நிகழ்ச்சியை மீண்டும் தொடர்ந்து நடத்தினார். சாது பகவானின் படத்தை பக்தர்களுக்கு வழங்கி, ராமநாம ஜபத்தை இடையறாது மேற்கொள்ள ஆர்வம் காட்டும்படி கேட்டுக்கொண்டார். மாலையில் சாதுஜி டோங்காட் சத்யசாய் மையத்தில் ராமாயணம் குறித்து பேசினார். 

மார்ச் – 22 வெள்ளிக்கிழமை அன்று சாதுஜி ராமர் கோயிலின் கோகலே ஹாலில் ராமாயணம் குறித்து பேசினார். அடுத்தநாளும் அதனை தொடர்ந்த சாது ஞாயிற்றுக்கிழமை அன்று அதனை நிறைவு செய்தார். சில பக்தர்களின் இல்லத்தில் சாது காயத்ரி ஹோமத்தை நடத்தினார். திங்கள்கிழமை அன்று ஃபினிக்ஸின் சத்ய சாய் அமைப்பில் ராமாயணம் குறித்து பேசினார். செவ்வாய்க்கிழமை அன்று சாதுஜி ஸ்டோன்ப்ரிட்ஜ் கம்யூனிட்டி ஹாலில், “ராமாயணத்தின் மூல்யங்கள்“ என்ற தலைப்பில் பேசினார். புதன்கிழமை அவர் ரெட்ஃபர்ன் கம்யூனிட்டி ஹாலில் ராமாயணம் குறித்த இறுதி உரை ஆற்றினார். 

ராமநவமியை முன்னிட்டு, மார்ச் – 28 அன்று, காலை முதல் மாலை வரை, அகண்ட ராமநாம ஜபம் சிவன் கோயிலில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி, யோகி ராம்சுரத்குமார் மற்றும் ராமநாம இயக்கம் பற்றிய சாதுவின் உரை, ஹனுமான் சாலீஸா பாடல் மற்றும் ஆரத்தியுடன் முடிவுற்றது. சென்னையில் ராமநவமியை முன்னிட்டு யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் நடத்திய விழாவும் சிறப்பாக நடைப்பெற்றது என்ற தகவல் சாதுவிற்கு தொலைபேசி மூலம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று சாதுஜி வெருலம் முதியோர் இல்லத்தில் உரையாற்றினார். வெருலம் கோயிலில் ராமநாமம் குறித்து பேசினார். சனிக்கிழமை டோங்காட் சிவன் கோயிலில் நடந்த காவடி விழாவில் கலந்து கொண்டதோடு அங்கே சுப்ரமண்ய கடவுள் குறித்து பேசினார். 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சாது, பாரதி மற்றும் அனைத்து சத்யசாய் பக்தர்களும், டர்பன் கடற்கரைக்கு, விடுமுறை தின சுற்றுலா சென்றனர். அவர்கள் கடற்கரையில் பெரிய அளவில் ராமநாம ஜபத்தை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் ஜூலூலேண்ட்டில் உள்ள ரிச்சர்ட்ஸ் பே – விற்கு வந்தனர். ஏப்ரல் – 1 அன்று திங்கள்கிழமை சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை ரிச்சர்ட்ஸ் பே – யில் இருந்து எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணையாலும் ஆசியாலும் பரபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் செயல்களுக்கு இடையேயும் இந்த சாதுவும், பாரதியும் நலமாக இருக்கிறார்கள். மார்ச் -28 ராமநவமியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் இந்த சாது ராமாயணம் குறித்து பல இடங்களில் பேசினான். ஐம்பது வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவின் பரமஹம்ஸ சச்சிதானந்தா யோகேஸ்வரா அவர்களால் நிறுவப்பட்ட, நேடால் , டஃப்ஸ் ரோடில் உள்ள சிவன் கோயிலில் ராமநவமி விழா சிறப்பான முறையில் நடைப்பெற்றது. சில வருடங்களுக்கு முன் நாங்கள் தங்கள் முன்னிலையில் ஓயா மடத்தில் நடத்தியதைப்போல் அகண்ட ராமநாமத்தை இங்கும் நடத்தினோம். பக்தர்கள், ராம – லக்ஷ்மண – சீதா – ஹனுமன், பப்பா – மாதாஜி – யோகி படங்களால் சூழப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட,  குத்துவிளக்கு வைத்து அதனை நாம ஜபம் செய்து கொண்டு வலம் வந்தனர். ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி ராம நாமத்தை நாள் முழுவதும் பாடினர். மாலையில் இந்த சாதுவின் உரை, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், மற்றும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு லட்சம் நாமஜெபம் அன்றைய நாளில் நடைப்பெற்றது. பலர் ராம நாம ஜப இயக்கத்தில் இணைந்தனர். ஸ்டேங்கரில் பாரதியும் ராமநாமம் குறித்து பேசினார். நாங்கள் இப்பொழுது ஜூலுலேண்ட் – ல் இருக்கிறோம். இங்கே பெரும்பான்மையான இந்துக்கள் ஏற்கனவே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டனர். நமது முயற்சி இந்துக்களுக்கு இந்து மதத்தின் வியாபகத்தன்மை பற்றி கூறி பயனற்ற மதமாற்றத்தை தடுத்தலாகும். நாங்கள் இங்கு நாடு முழுவதும் அடுத்த பன்னிரண்டு வாரங்களுக்கு பயணிக்க இருக்கிறோம். இந்த மாதம் நேடால் மாநிலம், பின்னர் ட்ரான்ஸ்வால், ஜோஹனஸ்பர்க் , ப்ரீட்டோரியா, மொபாதோ மற்றும் லூயிஸ் ட்ரிசார்ட், ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு பிறகு, நாங்கள் கேப்டவுனுக்கு விமானம் மூலம் பயணிப்போம். கேப் மண்டலத்தில் ஒரு வாரம் இருந்தபின், நாங்கள் போர்ட் எலிசபெத், கிழக்கு லண்டன், ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு மே இறுதியில் டர்பனுக்கு பயணிப்போம். நமது மே இறுதி மற்றும் ஜூன் மாத நிகழ்ச்சிகள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. நாங்கள் ஜூன் இறுதிவரை இந்நாட்டில் தங்கக்கூடும்.

ஆசிரம பணிகள் வேகமாக நடைப்பெற்று வரும் என நான் நம்புகிறேன். நமது ஆசிரமத்தில் நிலவறை அமைக்கப்பட்டால் அதில் லிகித ராம நாமத்தை வைக்கலாம். இதன்மூலம் உலகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மகிழ்வோடு ராமநாம லிகித ஜபத்தை ஆசிரமத்திற்கு காணிக்கை அளிப்பார்கள். அவை ஆசிரமத்தில் பாதுகாக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைவார்கள்.

வணக்கம் மற்றும் அடிபணிதல்களோடு , உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். ”

சாதுஜி ரிச்சர்ட் பே – ல் கட்டுமானத்தில் இருக்கும் அன்னை கோயிலில் பக்தர்களிடம் உரையாற்றி விட்டு பின்னர் மாலையில் ஸ்டேங்கர் சென்றார். செவ்வாய்க்கிழமை மாலையில் அவர் ராம்நாம் சத்சங்கத்தை சபா ஹாலில் நடத்தினார். சீ டைட்ஸ் – ல் சத்யசாய் அமைப்பினரால் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது அதில் சாது ஹனுமன் ஹோமத்தை நடத்தி ஹனுமன் குறித்து பேசினார். அடுத்தநாள் சாது மற்றும் பாரதி  சைடன்ஹாம் – ல் உள்ள விஷ்ணு மந்திர்க்கு சென்று அங்குள்ள பக்தர்களிடம் , “சமயம் மற்றும் பகுத்தறிவு“ என்ற தலைப்பில் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை, சாது நாராயணதாஸ் சத்சங்கத்தில் , “சமயத்தின் அறிவியல்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். திரு. துளசிதாஸ் சாதுவை திரு. ராமநாயுடு சத்சங்கத்திற்கு வழங்கிய இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே சாது பூமிபூஜையை எதிர்கால சர்வ தர்ம ஆசிரமத்திற்காக நடத்த ஏற்பாடாகியது. அடுத்தநாள் சாது மரியம் ஹாலில் கூட்டத்தினரிடையே உரையாற்றினார். 

ஞாயிற்றுக்கிழமை புத்துணர்வு முகாம் ஏப்ரல் 7 அன்று வேதாந்தா அகாடமியில் நடந்தது. சாது  அன்னை அனுசூயா, அத்ரி ரிஷி மற்றும் ஸ்ரீ தத்தாரேயர் அவர்களின் அவதாரம் குறித்து பேசினார். அங்கு கூடியிருந்த அன்னையர்களுக்கு, ஆதி சங்கர பகவத் பாதரின் தோத்திரப் பாடல்களை கற்றுத்தந்தார். திங்கள்கிழமை சௌ. வீணா லட்சுமண் மற்றும் திரு. தீப்லால் அவர்களின் குடும்பத்தினர் உடன் ஸீ டைட்ஸ் – ல் சாதுவை சந்தித்தார்கள். “பிள்ளைகளுக்கான யோகா பாடங்கள் “ என்ற நூலை எடிட் செய்ய, 1985 – 86 ல், சாது தென்னாப்பிரிக்கா வந்திருந்த பொழுது, அவர்கள் சாதுவுடன் டிவைன் லைஃப் சங்கத்தினர் ஏற்பாடு செய்த சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் ஆன்மாவை கிளரும் பஜன் பாடல்களை பாடினார்கள். செவ்வாய்க்கிழமை சாது அவோகா கோயிலில் பக்தி குறித்து பேசினார். 1995 ஆம் ஆண்டு உலக ஹிந்து மாநாட்டிற்கு சாதுவின் தென்னாப்பிரிக்கா வருகையை ஏற்பாடு செய்த, திரு. அனித் மஹராஜ், அவரது இல்லத்தில், ஏப்ரல் – 10 , 1996 ல் ஒரு சத்சங்கத்தை ஏற்பாடு செய்தார். சாது “வாழ்க்கையின் நோக்கமும், அர்த்தமும்“ என்ற தலைப்பில் அங்கே பேசினார். ஏப்ரல் – 11 அன்று, சாது, ஃபினிக்ஸ் முருகன் கோயிலில் ஒரு சத்சங்கத்தில் , “மதம், கலாச்சாரம் மற்றும் நாகரீகம்“ என்ற தலைப்பில் பேசினார். வெள்ளிக்கிழமை , ஏப்ரல் – 12 அன்று, சாது, ஃபினிக்ஸ் சத்சங்க ஹாலில் ஒரு கூட்டத்தில், “கடோபனிஷத்” பற்றி உரை நிகழ்த்தினார். 

ஏப்ரல் – 13 சனிக்கிழமை அன்று பீட்டர்மாரிட்ஸ்பர்க் – ன் சிவா கோயிலில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அங்கு சாது ஹிந்து காலண்டர் மற்றும் ஹிந்து வாழ்க்கை முறையையும் விளக்கினார். அங்கு பஜனுக்குப்பின் ஒரு கேள்வி – பதில் நிகழ்ச்சி நடந்தது. அடுத்தநாள் சாது , “ஷட் தரிசனங்கள் மற்றும் அறிவியல்“ என்ற தலைப்பில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் -ன் இன்டெக்ரல் யோகா மையத்தில் பேசினார். ஏப்ரல் – 15 , திங்கள்கிழமை அன்று “நேடால் விட்னஸ்“ என்ற தினசரியின் திரு. ஸ்டீஃபன் கோஹன் சாதுவை நேர்காணல் செய்தார். மாலையில் சாது இன்டெக்ரல் யோகா மையத்தில் பஜகோவிந்தம் தொடர் சொற்பொழிவு தொடங்கினார். செவ்வாயன்று சாது இந்த பஜகோவிந்தம் உரையை தொடர்ந்தார். புதன்கிழமை காலை சாது மூத்த குடிமக்கள் இல்லத்தில், “ஹிந்து வாழ்க்கை முறை“ குறித்து பேசியதோடு  மாலையில் இன்டெக்ரல் யோகா மையத்தில் பஜகோவிந்தம் உரையை தொடர்ந்தார். இந்த பஜகோவிந்தம் உரையை அவர் வியாழக்கிழமை அன்று முடித்தார். வெள்ளிக்கிழமை ஏப்ரல் – 19 அன்று சாது பீட்டர்மாரிட்ஸ்பர்க் -ல் உள்ள T.P.A. ஹாலில் மிட்லேண்ட் – ன் ஹிந்து சங்கத்தில், இளைஞர்களின் முன்னிலையில், “ஆன்மீகமும், அறிவியல் பாரம்பரியமும்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். 

சாது மற்றும் பாரதி சனிக்கிழமை, ஏப்ரல் 20 அன்று க்ரேடவுனுக்கு சென்றனர். திருமதி ராதிகா மற்றும் விஷ்ணு மந்திரின் திரு தயாராம் அஹீர் ஆகியோர் அவர்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். விஷ்ணு மந்திரில் சாது, “கன்னியாக்குமரியின் அன்னை மாயி“ குறித்து பேசினார். ஞாயிற்றுக்கிழமை அன்று சாது, மந்திரில், ராமநாம ஹோமம் நடத்தினார். அதில் பல பக்தர்கள் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை ஏப்ரல் 22 ல் சாதுஜி, மாண்புமிகு திரு ஸ்ரீனிவாச சாஸ்திரி அமைத்த க்ரேடவுன் ஆரம்ப்பள்ளிக்கும், க்ரேடவுன்  உயர்நிலை பள்ளிக்கும் சென்றார். அங்குள்ள மாணவர்களிடையே உரையாற்றினார். மதியம் டால்டனில் உள்ள பக்தர்கள் நடத்திய ராம்நாம் சத்சங்கத்தில் உரையாற்றினார். கூல் ஏர் ஹாலில் சாது , “மதமும், பகுத்தறிவும்” என்ற தலைப்பில் பேசினார். 23 ஆம் தேதி சாது “சனாதன தர்மம்” என்ற தலைப்பில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் – ல் உள்ள சனாதன தர்ம சேவக் சங்கத்தில் உரையாற்றினார். அடுத்தநாள் அவர் சத்ய சாய் அமைப்பின் மத்தியக் குழு சனாதன தர்ம ஹாலில் ஏற்பாடு செய்திருந்த  ஒரு சிறப்பு சத்சங்கத்தில், “சத்தியம், சிவம், சுந்தரம்” என்ற தலைப்பில் பேசினார். வியாழக்கிழமை ஏப்ரல் 25 அன்று சாது, ரிச்மண்ட்-ல், வேத தர்மா சபாவில், ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை அன்று சாது, குரு ராம்பரண்ஸ் ஆசிரமத்தில் பக்தர்களிடையே “தியாகமும், தன்னுண்மை உணர்வும்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். 

சனிக்கிழமை, ஏப்ரல் 27 அன்று, சாது மற்றும் பாரதி. டர்பனில் உள்ள வெஸ்ட்வில்லே பல்கலைகழகத்திற்கு சென்றனர். சாது நேஷனல் யூத் ஹிந்து ஃபெடரேஷனில் “இலட்சிய ஹிந்து இளைஞர்கள்“ குறித்து பேசினார். ஞாயிற்றுக்கிழமை அன்று சாது ஒரு யோகா முகாமை ராம்பரண்ஸ் ஆசிரமத்தில் துவக்கி வைத்தார். அங்கே “ வேதாந்தமும், யோகாவும்“ என்ற தலைப்பில் பேசினார். மாலையில் சாதுஜி ஒரு கேள்வி – பதில் நிகழ்ச்சியை இன்டெக்ரல்  யோகா மையத்தில் நடத்தினார். பின்னர் அவர் பீட்டர்மாரிட்ஸ்பர்க் – ன் வானொலி நிலையத்திற்கு சென்று அங்கே டாக்டர். சிவராமன், சாதுவின் ஒரு நேரலை நேர்காணல் நடத்தினார். 29 ஆம் தேதியன்று சாது இன்டெக்ரல் யோகா மையத்தின் பக்தர்களிடம், திரு. கென்னி பிள்ளை என்பவரின் இல்லத்தில், “யோகி ராம்சுரத்குமார்“ குறித்து பேசினார். 30 ஆம் தேதி சாதுவும் பாரதியும், ந்யூகேஸிலின் சத்ய சாய் மையத்தின்,  திரு. ராஜேஷ் மற்றும் திரு. ஆஷா உடன், ந்யூகேஸிலுக்கு சென்றனர். 

மே – 1 , 1996 புதன்கிழமை அன்று சாதுஜி ந்யூகேஸிலில் நடந்த ஹிந்து ஒருங்கிணைப்பாளர் கமிட்டி கூட்டத்தில் சாது உரையாற்றினார். பிரம்மகுமாரிகளின் அமைப்பை சார்ந்த பிரம்மச்சாரினி உஷா, சுவாமி நிர்மலானந்தாஜி ஆகியோரும் அங்கே உரையாற்றினர். தென் ஆப்பிரிக்காவின் ஒளிபரப்பு கழகத்தி்ன் தொலைக்காட்சி குழுவினை சேர்ந்த திரு. சதீஷ் ரியாமா மற்றும் குழுவினர், சாதுவின் ஒரு வீடியோ நேர்காணலை சிவா கோயில் வளாகத்தில் எடுத்தனர். பின்னர் இந்து ஒருங்கிணைப்பாளர் கமிட்டியினரோடு ஒரு கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அடுத்தநாள் சாது சத்யசாய் மையத்தினரிடையே ஒரு உரை நிகழ்த்தினார். “இந்து ஒற்றுமைக்கான சத்ய சாய்பாபாவின். சிவராத்திரி சேதி“ குறித்து பேசினார். வெள்ளிக்கிழமை அன்று S.E. வத்வா ஆரம்ப பள்ளியின் பிள்ளைகளை இரண்டு தனித்த குழுவாக்கி பேசினார். ந்யூகேஸிலில் இருக்கையில் சில பக்தர்களின் இல்லத்தில் சாது ஹோமங்களையும் நடத்தினார். மே 6 ஆம் தேதி சாதுஜி சத்ய சாய் பாலவிகாஸ் பிள்ளைகளிடம் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார். 7 ஆம் தேதி சச்சிதானந்தா சபாவில் இருந்த கூட்டத்தினரிடையே உரையாற்றினார். அவர் “ஷட் தரிசனங்கள்” குறித்த வகுப்புக்களை பக்தர்களுக்கு எடுத்தார். 

வியாழக்கிழமை , மே – 9 சாது மற்றும் பாரதி,  லூயிஸ் ட்ரிகார்ட் சென்றனர். அங்கே திரு. அனில் தேசாய் மற்றும் திருமதி மது, அவர்களை வரவேற்று அவர்கள் பங்களாவில் தங்க வைத்தனர். சாது ஹிந்து சமாஜத்தில் ஹிந்து நாகரீகம் குறித்து அங்கே கூடியிருந்தவர்களிடம் பேசினார். 10 ஆம் தேதி சாதுவும், பாரதியும் ஜோஹன்னஸ்பர்க் அடைந்தனர். அங்கே பகவான் சிவானந்தா அவர்களின் பக்தரான திரு. பிக்கு நாயக் மற்றும் குடும்பத்தினர் சாதுவை வரவேற்றனர். மே – 11 , சனிக்கிழமை அன்று சாதுவும் பாரதியும் கேப்டவுனுக்கு பறந்தனர். அங்கே திருமதி. ப்ரமிளா வஸ்ஸன், சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், மற்றும் அவர் குடும்பத்தினர் சாதுவை வரவேற்றனர். பிற்பகலில் சாது SABC ஸ்டூடியோவிற்கு காரில் பயணம் மேற்கொண்டார். அங்கே திருமதி ஆருஷியா மூட்லியர் சாதுவை ரேடியோ லோட்டஸிற்காக பேட்டி  எடுத்தார். பின்னர் அவர் ராதாகிருஷ்ண மந்திர்க்கு சென்று அங்கே உரையாற்றினார். மே – 12 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினமாக அமைந்தமையால் சாது நகரத்தின் மூன்று இடங்களில் மூன்று நிகழ்ச்சிகளில் உரையாற்றினார். சிவா கோயிலில் சைவ சித்தாந்தம் குறித்தும், ராதாகிருஷ்ணன் கோயிலில் வைஷ்ணவம் குறித்தும், அன்னையர்கள் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். மாலையில் கூடியிருந்த பெரும் கூட்டத்தில் தியாசஃபிகல் சொஸைட்டி ஆஃப் கேப்பில் அவர் “புத்தரின் அவதாரம்“ குறித்து பேசினார். 

சாதுஜி பகவானுக்கு கடிதம் ஒன்றை மே 13 , 1996, திங்கள்கிழமை அன்று எழுதினார். அதில் அவர் தென் ஆப்பிரிக்காவின் சகோதரி நிவேதிதா அகாடமி, இந்து கலாச்சாரம் குறித்த விஞ்ஞான பாரதி பாடத்திட்டத்தை துவக்கியுள்ளது குறித்தும், ஹிந்து தர்மம் பற்றிய பயிற்சி பட்டறையை மே 13 முதல் 20 வரை கேப்டவுனின்  ரைலேண்டஸ் உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடத்த இருப்பது   குறித்தும் தெரிவித்திருந்தார். அதில் பல தேடல் மிகுந்த ஆர்வலர்கள் முதல்நாளன்றே விண்ணப்பம் செய்திருந்தனர். திருமதி ப்ரமிளா வஸ்ஸன் சகோதரி நிவேதிதா அகாடமி பற்றிய அறிமுக பிரசுரத்தையும் விண்ணப்ப படிவங்களையும் வினியோகம் செய்தார். சாது அறிமுக உரையில், ஹிந்து தத்துவ சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் புவியியல் பின்னணி குறித்து பேசினார். இரண்டாவது நாள் தலைப்பு, வேத சிந்தனை. அடுத்தநாள் மாலை, வைதீக வாழ்க்கை முறை மற்றும் வர்ண தர்மம் குறித்து பேசினார். மே 16 அன்று சாதுவின் குழுவினர் டேபிள் மவுண்டனின் உச்சிக்கு சென்று அங்கிருந்து தென் அட்லாண்டிக் கடல், தென் கடல், மற்றும் இந்தியக் கடல் மூன்றும் சங்கமிப்பதை பார்த்தார்கள். மாலையில் சாது, வேதங்கள் மற்றும் உபநிஷத்துகள் குறித்து பேசினார். வெள்ளியன்று காலையில், ஆனந்த குடீறின்,  மா யோகேஸ்வரி, சாதுவை, அவர்கள் ஆசிரமத்தில் வேதாந்தம் குறித்து உரையாற்ற அழைத்தார். சாது, உபநிஷத்துகள் குறித்து பேசினார். பல வெள்ளைக்கார பக்தர்கள் இந்த விஷயத்தில் தங்களது ஆர்வத்தை காட்டினர். மாலையில் சகோதரி நிவேதிதா அகாடமியில் சாது ராமாயணம் குறித்து பேசினார். ஆனந்த குடீறின் அனைத்து வெள்ளைக்கார பக்தர்களும், திருமதி. ப்ரமிளா வஸ்ஸன் அவர்களின் வீட்டிற்கு சனிக்கிழமை காலையில் “புருஷ ஸூக்தம்” சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ள வந்திருந்தனர். மாலையில் சாது மஹாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பகவத்கீதை குறித்து பேசினார். சாது இரவில் “நவக்ரஹ ஸ்தோத்திர”த்தை திருமதி. ப்ரமிளா  குடும்பத்தினர்க்கு கற்று தந்தார். 19 ஆம் தேதி காலை சாதுஜி சிவா கோயிலுக்கு சென்று பக்தர்களிடம் “கர்மா” குறித்து பேசினார். வொர்ஸஸ்டரில், திரு. பிக்காவின் இல்லத்தில், ஒரு சத்சங்கம் மற்றும் கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது, மாலையில் சாது, ரைலேண்ட் உயர்நிலை பள்ளியில், பயிற்சிபட்டறையில், பகவத்கீதை பற்றிய சொற்பொழிவு தொடர்ந்தார். திங்கள்கிழமை, 20 ஆம் தேதி, ஷட் தர்சனா பற்றிய இறுதி சொற்பொழிவின் போது நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு சிறப்பு மிக்க ராம நாம சத்சங்கம் நடைபெற்றது. திரு. தேவன், சாதுவின் அனைத்து விரிவுரைகளின் வீடியோக்களையும் அவருக்கு பரிசளித்தார். பக்தர்கள் சாதுவிற்க்கு வழியனுப்பு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அடுத்தநாள் காலை சாது, ப்ரமிளாவின் இல்லத்தில் ஹோமத்தை நடத்தி, அவளது பிறந்தநாள் கொண்டாடினார். பின்னர் அவரது குடும்பத்தினர் சாதுவையும், பாரதியையும் கேப்டவுன் விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். சாதுவும், பாரதியும் அங்கிருந்து போர்ட் எலிசபெத்திற்கு விமானத்தைப் பிடித்தனர். 

திரு ரெக்கி நாயுடு மற்றும் குடும்பத்தினர் சாது மற்றும் பாரதியை போர்ட் எலிசபெத்தில் வரவேற்றனர். மாலையில் சத்சங்கம், சாதுவின் உரை மற்றும் இந்து கலாச்சாரம் குறித்த கேள்வி – பதில் நிகழ்ச்சி போன்றவை நடைப்பெற்றது. மே – 22 புதன்கிழமை அன்று சாது வுட்ரோப் இரண்டாம்நிலை பள்ளியின் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே “ஹிந்துத்துவத்தின் அறிவியல் அடிப்படைகள்” குறித்து உரையாற்றினார். அவர் சிவ சுப்பிரமணியம் ஆலயத்திற்கு விஜயம் செய்தார். 23 ஆம் தேதியன்று சத்ய சாய் மையத்தில் , “பகவான் சத்ய சாய் பாபாவின் சேதி“ என்ற தலைப்பில் உரையாற்றினார். வெள்ளிக்கிழமையன்று SABC – ன் சௌ. யாஷிகா சிங், சாதுவிடம் ஒரு வீடியோ பேட்டியை ஹிந்து சமாஜ் மந்திரில் மேற்கொண்டார். பின்னர் சாது எடுஃபின் பில்டிங்கிற்கு சென்று, சமய கல்வி போதனை குழுவினர் கூட்டத்தில், “மதங்களின் உலகளாவிய தன்மை“ என்ற தலைப்பில் உரையாற்றினார். மாலையில் “வேதம் மற்றும் சைவ சித்தாந்தத்தில்  இந்துமதம்“ என்ற தலைப்பில், சன்மார்க்க சங்கத்தின் கோயிலில் உரையாற்றினார். ஞாயிற்றுக்கிழமை சாதுஜி சுப்ரமண்யர் கோயிலில் நடந்த சத்சங்கத்தில் நசிகேதன் மற்றும் ஹிந்து தர்மம் குறித்து உரையாற்றினார். மாலையில் ஹிந்து தர்ம சபையில் நடந்த பிரிவுபசார விழாவில் சாது வேத பாரம்பரியம் குறித்து பேசினார். 

மே – 27 திங்கள்கிழமை சாது மற்றும் பாரதி விமானத்தைப்பிடித்து டர்பனுக்கு சென்றனர். அங்கே வேதாந்த ஆசிரமத்தின் திரு.ஜெயராமன் அவர்களை வரவேற்றார். மாலையில் சாது, வைபேங்க் சிவன் கோவிலில், சிவானந்தா சத்சங்கத்தில், இந்து மதத்தின் சிறப்பும் மகிமையும் என்ற தலைப்பில் பேசினார். அடுத்தநாள் அவர் சாட்ஸ்வர்த்தில் உள்ள சிவன் கோவிலில், சத்யசாய் குழுவினர் மற்றும் சிவானந்தா சத்சங்கத்தில் சாது உரையாற்றினார். புதன்கிழமை சாது ட்ருரோ ஹவுஸுக்கு சென்றார் அங்கே திரு. விக் பிள்ளை, திரு. G.K. நாயர் மற்றும் திரு.M.M. மூட்லீ ஆகியோர் அவரை வரவேற்றனர். சாது ஒரு மணி நேரம் சமயக்  கல்வியை பள்ளிகளில் வழங்குவது குறித்து விவாதித்தார். பின்னர் சாது மற்றும் பாரதி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மையத்திற்கு சென்றனர். மையத்தின் தலைவர் சுவாமி சாரதானந்தா. அவர்களை வரவேற்றார். வியாழக்கிழமை, சாது மற்றும் பாரதி, திருமதி மூட்லீ அவர்களை சந்தித்தனர். அவர்களே சாதுவின் முதல் தென் ஆப்பிரிக்கா விஜயத்திற்கு நிதி உதவி அளித்தவர். அவர்களின் குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவழித்தனர். 

சாதுஜி வெள்ளிக்கிழமை மே – 31 அன்று ஃபினிக்ஸ் -ல் உள்ள சுப்பிரமணியன் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை கொண்டாடினர் அதில் அவர் “சுப்பிரமணிய கடவுள்“ குறித்து பேசினார். ஜூன் – 1 ஆம் தேதி சௌ. காஷ்மீரா, சாது மற்றும் பாரதியை பீட்டர்மாரிட்ஸ்பர்க் – ல் உள்ள சாலிகிராம் ஹாலிற்கு அழைத்துச் சென்றார். திரு. லகானி, திரு.T.S. மஹராஜ் மற்றும் குரு ராம்பரன்ஸ் ஆசிரமத்தின் தலைவரான  திரு. தனிலால் அங்கே சாதுவை வரவேற்றனர். அங்கே சாது “சோம யாகம்”, யோகி ராம்சுரத்குமார் மற்றும் ராமநாம இயக்கம் குறித்து பேசினார். ஜூன் -2 ஞாயிற்றுக்கிழமையன்று சாது எலாவோ கோயிலில், டிவைன் லைஃப் சொஸைட்டியின் பக்தர்களிடம் பேசினார். சுவாமி வெங்கடேஸ்வரானந்தா அங்கே சாதுவை வரவேற்றார். மாலையில், இஸிபிங்கோ ஹிந்து கோயிலில் திரு. பாலகிருஷ்ணா மற்றும் குடும்பத்தினர் சாதுவிற்கு இசைவிருந்து கொடுத்து மகிழ்வித்தனர். ஜூன் – 3 அன்று சாது டுர்வெஸ்ட் ஆரம்ப பள்ளிக்கு சென்று அங்கிருந்த பிள்ளைகளிடம் உரையாற்றினார். பின்னர், வரலாற்று சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் கூட்டத்தில், சாது, “ஹிந்துத்துவம் – உலகளாவிய வாழ்க்கை முறை“ என்ற தலைப்பில் உரையாற்றினார். மாலையில் சாதுஜி அன்கோமாஸ் சத்ய சாய்  மையத்தில் “உலகளாவிய மதத்தின் சேதி “ என்ற தலைப்பில் பேசினார். அதில் இலாவோவை சார்ந்த சுவாமி வெங்கடேஸ்வரானந்தா கலந்து கொண்டார். டர்பன் வெஸ்ட்வில்லே பல்கலைகழகத்தை சார்ந்த திரு சுப்பிரமணியம் அவர்கள் இல்லத்தில். செவ்வாய்க்கிழமையன்று, சாது, “தென். ஆப்பிரிக்காவில் இந்துக்களின் இறுதிச்சடங்கு சம்பிரதாயம்” குறித்து உரையாற்றினார். தென்னாப்பிரிக்கா காவல் துறையைச் சார்ந்த ஹிந்து புரோகிதர், திரு தனசங்கர் மகராஜ், மற்றும் பலர் கலந்துரையாடலில் பங்குபெற்றனர், மாலையில், அம்ஷின்டோ விஷ்ணு கோயிலில், சாது, “நடராஜ தத்துவம்“ குறித்து பேசினார். ஜூன் – 5 அன்று சாது இரண்டு வெவ்வேறு சத்சங்க குழுவினரிடையே “ ஹிந்து வாழ்க்கை மூல்யங்கள்” மற்றும் “தமிழ் சித்தர்களின் செய்தி“ என்னும் தலைப்புகளில் உரையாற்றினார். வியாழக்கிழமை ஜூன் 6 அன்று சேட்ஸ்வர்த்தில் உள்ள சத்யசாயி மையத்தில் ஓர் பெரும் கூட்டத்தில் பகவான் சத்ய சாய்பாபாவின்  சேதிகள் என்ற தலைப்பில் பேசினார். வெள்ளிக்கிழமை சாது ஃபினிக்ஸ் -ல் ஆசிரியர்கள் மையத்திற்கு விஜயம் செய்தார். அங்கே திரு. K.H. மஹராஜ் சாதுவை வரவேற்றார். அங்கே,  ஹிந்து தத்துவம் மற்றும் பண்பாடு போதித்தல் குறித்து பேசினார். மாலையில் சாது மியர்பேங்க் வூனதி சபாவில், கூட்டத்தினரிடையே, “வாழ்வின் இலக்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார். சனிக்கிழமை, ஜூன் – 8 அன்று, சாதுஜி சில்வர்க்லன் கலாச்சார சங்கத்தின் பிரிவுபசார சத்சங்கத்தில், ருத்ரசிவா மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசினார். அவர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் திருவண்ணாமலையின் கடவுளின் குழந்தை யோகி ராம்சுரத்குமார் குறித்தும் குறிப்பிட்டார்.

ஜூன் – 9, 1996, அன்று சாதுவிற்கும், பாரதிக்கும் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் ஒரு சிறப்பான வழியனுப்பதலை வழங்கினர். ஸ்டேங்கரின் இந்து சபாவை சேர்ந்த திரு. B.J. பண்டிட், வேதாந்தா ஆசிரமத்தின் திரு. ஜெயராமன், குரு ராம்பரன்ஸ் ஆசிரமத்தின் திரு. தானிலால், திருமதி ப்ரமிளா, திரு. துளசிதாஸ், திரு. ஜெயந்திலால் ப்ரேம்ராஜ் மற்றும் பல பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பெருமளவில் திரண்டு, சாது மற்றும் பாரதியை, பீட்டர் போத்தா விமான நிலையத்தில் வழியனுப்ப வந்திருந்தனர். பிள்ளைகள் சாதுவின் முன்னிலையில் ஆடிப்பாடினர். சாதுவும் அவர்களுக்காக பாடினார். திருமதி ஷெரிதா, திரு. டெட்டி கொமல் மற்றும் திரு. ஜெயராம் போன்றோர் சாதுவும் பாரதியும் விமானம் ஏற உதவினர். திரு. சேகரன் சுப்பிரமணி என்பவர் விமானத்தில் இவர்களோடு ஜோஹனஸ்பர்கில் இணைந்தார். சாதுவும், பாரதியும் பாரத அன்னையின் மடியில் திங்கள்கிழமை காலை 4.50 மணிக்கு ஜூன் – 10 தேதி 1996 ல் வந்து சேர்ந்தார்கள். 

திரு A.R. ராவ், சாது மற்றும் பாரதியை, மும்பையில் வரவேற்று அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். சாது சென்னைக்கு இரவு விமானத்தை பிடித்தார். புகழ்பெற்ற கடம் வித்வானான திரு. விநாயக் ராம் அவரும் ஆப்பரிக்கா கண்டத்திலிருந்து திரும்பிவந்தார். அவரும் சாதுவோடு இணைந்தார். விமானம் சென்னைக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்தது. சாதுஜி திருவல்லிக்கேணியில் திரு. வினாயக் ராம் அவர்களை அவரது இல்லத்தில் விட்டுவிட்டு, தனது இல்லத்திற்கு வந்தார். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.13

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.13 

தென் ஆப்பிரிக்கா செல்லும் தனது தூதரை ஆசீர்வதித்த பகவான்

1996 ஆம் ஆண்டின் புத்தாண்டு நாளில் சாதுவின் பயணமானது திருமதி. பாரதி மற்றும் திரு. D.S. கணேசன் உடன் திருக்கோயிலூரை நோக்கி துவங்கியது. அங்கே அவர்கள் உலகளந்த பெருமாள் கோயில் த்ரிவிக்ரம சுவாமியை வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் ஞானானந்தகிரி தபோவனத்திற்கு வந்தனர். அங்கே அவர்களை திரு.D.S.சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு. சீத்தாராமன் போன்றோர் வரவேற்றனர். மதிய உணவிற்குப்பின் அவர்கள் திருவண்ணாமலையை அடைந்து பகவானின் இல்லத்திற்கு மதியம் 4.00 மணிக்கு சென்றனர். சாதுஜி பகவானின் முன் “குருநாதன் பாதங்களில் கதம்பமாலை” என்ற யோகி ராம்சுரத்குமார் பற்றிய திரு. D.S.சிவராமகிருஷ்ணன் அவர்களின் பாடல்களை கொண்ட, பகவானின் உத்தரவுப்படி  சகோதரி நிவேதிதா அகாடமி வெளியிட்ட, நூலின் புத்தகக்கட்டினை வைத்தார். பகவான் சாதுவின் முகத்தை சில நிமிடங்களுக்கு மலர்ந்த புன்னகையோடு உற்று நோக்கினார். அவர் பாரதியை அமருமாறு கூறினார். சாது அவர்முன் ஹவாயிலிருந்து “ஹிந்துயிசம் டுடே” வில் இருந்து வந்த கடிதம் மற்றும் லக்னோவில் இருந்து அனுப்பப்பட்ட சுவாமி ராம்தீர்த்தா டைரியை வைத்தார். பகவான் புத்தக கட்டில் இருந்து ஒரு கதம்பமாலை நூலை எடுத்து மா தேவகியிடம் கொடுத்தார். அவர் அந்த புத்தகத்திலிருந்த உள்ளடக்கங்களை பகவானிடம் கூறினார். பின்னர் அவர் சாதுவிடம் ஒரு நூலை கொடுத்து அதிலிருந்த, சாது எழுதிய பதிப்புரை,  ஜஸ்டிஸ் திரு. T.S. அருணாச்சலம் , திரு. G. சங்கர்ராஜூலு  மற்றும் பேரா. பெருமாள் ராஜூ எழுதிய  அணிந்துரைகளை படிக்குமாறு கூறினார். பின்னர் திரு. D.S. சிவராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய முன்னுரையை படிக்குமாறு கூறினார். இவைகள் அனைத்தையும் படித்து முடிக்க ஒருமணி நேரம் தேவைப்பட்டது. பின்னர் அவர் சாதுவிடம் எத்தனை பிரதிகள் உன்னுடன் நீ கொண்டு வந்தாய் என வினவினார். சாது 50 பிரதிகளை திரு. D.S. சிவராமகிருஷ்ணனிடம் தந்த பிறகு, தான் 250 பிரதிகளை கொண்டு வந்ததாக பதிலளித்தார். பகவான் 50 பிரதிகளை எடுத்து சாதுவிடம் கொடுத்து அவைகளை அங்கிருந்த திரு. சங்கர்ராஜூலு உட்பட அனைத்து பக்தர்களுக்கும் வினியோகம் செய்யுமாறு கூறினார்.  பகவான் மீதமிருந்த பிரதிகளை திருமதி. ராஜி மணி அவர்களிடம் தந்து அவைகளை ஆசிரமத்தில் பாதுகாக்குமாறு கூறினார். மேலும் யோகி, ஆசிரம டிரஸ்ட்டின் நினைவு மலரை சில பக்தர்களுக்கு வழங்கினார். ஆசிரமத்தில் இருந்து சுதாமாவிற்கு கிளம்புகையில் பகவான் சாதுவை ஆசிரமத்தில் இரவு தங்குமாறு கூறினார். திரு. சங்கர்ராஜூலு , திரு. சின்னப்பன் , திரு. ராஜசேகரன் மற்றும் பிற பக்தர்கள் அங்கே இரவு தங்கினர். சாது மற்றும் பாரதி , திருமதி. பிரபா அவர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்துவிட்டு பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். அங்கே திரு ராமச்சந்திர உபாத்யாயா, அவர்களை வரவேற்று கருவறைக்கு தரிசனத்திற்கு அழைத்துச் சென்றார். 

ஜனவரி – 2 செவ்வாய்க்கிழமை, சாது குருவை ஆசிரமத்தில் வரவேற்று அவரோடு காலை சிற்றுண்டியை உட்கொண்டார். ராஜலட்சுமி ராமநாமத்தை பாடினார். பின்னர் குரு திரு. சங்கர்ராஜூலுவிடம் அவருடன் இருக்கும் நண்பர்களை அறிமுகப்படுத்துமாறு கூறினார். பகவான் திரு. சங்கர்ராஜூலு அவர்களின் இருப்பு ஆசிரமத்தில் தேவைப்படுகிறது  என்பதால் அவரது நண்பர்கள் அவரது பள்ளியை கவனித்துக் கொள்ளவேண்டும் என்றார். குரு சாதுவிடம் திரும்பி, பின்னர் அனைவரையும் நோக்கி, ஒரு முறை இந்தப்பிச்சைக்காரன் ரங்கராஜனை இங்கே தங்கி ஆசிரமத்தை கவனித்துக் கொள்ளவேண்டும் என்றான். ஆனால், இந்தப்பிச்சைக்காரன் அவருக்கு ராமநாமத்தை பரப்பும் பணியை தந்தான். அப்பணி ஆசிரமத்தின் பணியை விட முக்கியமானது. அது பப்பாவின் பணி அதனை இந்தப்பிச்சைக்காரன் தொல்லைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் , இப்போது இந்தப்பிச்சைக்காரன் ரங்கராஜனிடம் அந்தப்பணியை சிலரிடம் ஒப்படைத்துவிட்டு ஆசிரமத்தின் பணிகளுக்கு வர சொல்லாமா என நினைக்கிறான். ரங்கராஜனை அவன் எப்போது வேண்டுமானாலும் அழைப்பான், அப்போது ரங்கராஜன் எந்தசமயத்திலும் வருவதற்கு தயாராக இருப்பான் என்றே நம்புகிறான்,“ என்றார்.

சாதுஜி அதற்கு உடனடியாக , “ எந்த நேரத்தில் பகவான் விரும்பினாலும் , நான் உங்கள் சேவையில் இருப்பேன், பகவான்” என்று உறுதி அளித்தார்.

பகவான் : “அது நன்று. ரங்கராஜன் எந்த நேரத்திலும் வர தயாராக இருக்கிறார்.“ பகவான் தேவகியிடம் திரும்பி கூறுகையில், “உடனடியாக இல்லை. ஆனால் எந்த நேரத்திலும் இந்தப்பிச்சைக்காரன் அழைப்பான். அவர் மிக முக்கியமான பணியை செய்து வருகிறார். நீ அவருக்கு சாரதா கல்லூரியில் இருக்கும் போது உதவி வந்தாய். ராஜலட்சுமியும் அவருக்கு உதவினார். அவர் செய்வது பப்பாவின் பணி. தற்சமயம் மணி மற்றும் சங்கர்ராஜூலு இங்கே நிர்வகிக்கட்டும். நேரம் வரும்போது , இந்தப்பிச்சைக்காரன் ரங்கராஜனை அழைப்பான். “ 

ராஜகுமாரி முருகேசன் , அவளது நண்பர்கள் மற்றும் பலர் அங்கே இருந்தனர். பகவான் சாதுவிடம் தூத்துக்குடிக்கு நீ பயணித்திருக்கிறாயா என வினவினார். சாது “ஆம்“ என பதிலளித்தார். யோகி சாதுவிடம் நீ ராஜகுமாரியின் இல்லத்திற்கு சென்று இருக்கிறாயா என்று கேட்க, சாது இல்லை என பதிலளித்தார். பகவான் மணியிடம் திரு. சங்கர்ராஜூலு உடன் ஒத்துழைக்குமாறு கூறினார். மணி, “நான் தங்களுக்கு கீழ்படிவேன் பகவான்“ என்று கூற பகவான் மணியின் தொடையில் தட்டினார். 

பகவான் ஆசிரமத்தில் இருந்து சீக்கிரமாகவே கிளம்பினார். சாது பகவானிடம் தான் 3 ஆம் தேதி முதல் தொடர் விரிவுரையை வழங்க வேண்டியிருப்பதால் தான் சென்னைக்கு கிளம்புவதாக கூறினார். பகவான் சாதுவிடம் என்ன தலைப்பு என்று கேட்டார். சாது , “வேதம் முதல் விவேகானந்தர் வரை,“ என்றார். பகவான் சாதுவின் விரிவுரைக்கும், விவேகானந்தர் ஜெயந்தி நிகழ்ச்சி மற்றும் பேச்சு போட்டிக்கும் தனது ஆசியை வழங்கினார். சாது பகவானிடம் தன்னோடு தென் ஆப்பிரிக்கா பயணிக்க இருக்கும் பாரதிக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆசியை கோரினார். சாது பகவானிடம் தானும் , பாரதியும் பிப்ரவரி – 15 அன்று இந்தியாவில் இருந்து கிளம்புவோம் என்றார். சாது பகவானிடம் நிவேதிதா பெங்களூர் ஆப்டெக்கில் விரிவுரையாளராக யோகி ஜெயந்தி நாளில் இணைந்ததைப் பற்றி குறிப்பிட்டார். அவர் நிவேதிதாவை ஆசீர்வதித்து எப்போது அவள் ஆசிரமத்திற்கு வருவாள் என வினவினார். சாது , “பொங்கலுக்கு பிறகு” என்று பதிலளித்தார். யோகி விவேக் குறித்து விசாரித்ததோடு ஆசியையும் அவனுக்கு வழங்கினார். பின்னர் யோகி சாதுவிடம் அவரது தண்டம் மற்றும் சிரட்டையை பெற்று அதனை ஆசீர்வதித்து வழங்கினார். சாது பகவானிடம் விடைப்பெற்று சென்னை திரும்பினார். மாலையில் சென்னை வந்து சேர்ந்த சாது, அடுத்தநாளே, பகவானுக்கு கடிதம் எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் குறைவற்ற ஆசி மற்றும் அளவற்ற நம்பிக்கையை இந்த தாழ்மையான வேலைக்காரன் மீது வைத்தமைக்கு இந்த சாதுவின் இதயம் நன்றியுணர்வில் ததும்புகிறது.

இத்துடன் பூஜ்ய சுவாமி சச்சிதானந்தாஜி அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றை இணைத்துள்ளேன். அதில் அவர் சென்றமாதம் வழங்கிய 205 கோடி ராமநாமத்தை ஏற்று ஒப்புகை வழங்கியுள்ளார். இவையனைத்தும் தங்கள் கருணையாலேயே சாத்தியமாயின. 

அதோடு தேசீய இளைஞர் தினம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயத்திற்கான பேச்சுப்போட்டி குறித்து நகரத்தின் பள்ளிப்பிள்ளைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையையும் பார்க்கவும். நாங்கள் உங்கள் ஆசிக்காக பிரார்த்திக்கிறோம். 

வணங்குதலோடு, உங்கள் தாழ்மையான சீடன், சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

சாதுஜியின் தொடர் விரிவுரை, “இந்து பாரம்பரியம் வேதகாலம் முதல் விவேகானந்தர் வரை”, ஜனவரி – 3 முதல் சென்னை திருவல்லிக்கேணி சிங்வி ஜெயின் ஹாலில் நடைப்பெற்றது. நேரடி கேள்வி – பதில் நிகழ்ச்சிகளும் இந்த விரிவுரை காலத்தில் நடைப்பெற்றன. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் நாட்காட்டி சிறப்பாக  அச்சிடப்பட்டு அதன் வினியோகம் ஜனவரி – 5 முதல் துவங்கியது. திருமதி பாரதி, பாஸ்போர்ட் பெறுவதற்காக, வழக்கறிஞர் திரு சம்பத்குமார் மூலம் அஃபிடவிட் பெற்று தனது பெயர் திருமதி. பாரதி ரங்கராஜன் என்று அறிவித்து “மக்கள் குரல்” நாளிதழில் விளம்பரம் வெளியிட்டாள். திரு. R.A. பத்மநாபன், மகாகவி பாரதியார் பற்றிய ஆராய்ச்சி வல்லுநர், இந்த சாதுவை சந்தித்து மகாகவி பாரதியின் பாடல்களின் நகல்களை பெற்றுச் சென்றார். ஜனவரி 12 ஆம் தேதி சிங்வி ஜெயின் ஹாலில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம் மற்றும் பரிசுகள் வெற்றி பெற்றவர்களுக்கு பேரா. C.V. ராதாகிருஷ்ணன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் தலைவர், அவர்களால் வழங்கப்பட்டன. 

ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி – 14 அன்று, ஆவடியை சேர்ந்த திரு. விஸ்வநாதன் ஒரு பெரும் ராமநாம சத்சங்கத்தை நடத்தினார். திரு. விஸ்வநாதன் சாதுவை பாதபூஜை செய்து வரவேற்றார். சௌ. வரலஷ்மி வைரம் ஒன்றை தந்தையின் பணிக்காக  வழங்கினார், ஆனால் சாது அவரிடம் அதனை தந்தையின் ஆசீர்வாதமாக அவரிடமே வைத்துக்கொள்ளுமாறு திருப்பி அளித்தார். சாது  சௌ. கிருஷ்ணாபாய் ராம்தாஸ் அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்ப உறுப்பினர்களை ஆசீர்வதித்தார். 

ஜனவரி – 27 , 1996 அன்று, சாது பகவானுக்கு, பகவானின் படத்தை அச்சிட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்வது குறித்து, கடிதம் ஒன்றை எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள ராம்நாம் பக்தர்கள், நாங்கள் பிரசாதமாக அவர்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் தங்கள் புகைப்பட அட்டைகளை கேட்கிறார்கள். எங்களிடம் இருக்கும் அனைத்து புகைப்பட அட்டைகளும் தீர்ந்து போனதன் காரணமாக, நமது மாநில ராம்நாம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு. D.S. சிவராம கிருஷ்ணனின் சகோதரர்  திரு.D.S.கணேசனின் மகனான திரு. சீத்தாராமன், புகைப்பட அட்டைகளை அச்சிட முன்வந்திருக்கிறார். நாங்கள் சற்று பெரிய புகைப்பட அட்டையை, கீதையின் மேற்கோள் மற்றும் உங்கள் ராமநாம அழைப்பையும் அதில் சேர்த்து, அச்சிட்டுள்ளோம். திரு. சீத்தாராமன் மற்றும் திரு. D.S. கணேசன் இருவரும் அந்த பிரதிகளை கொண்டுவந்து உங்கள் பாதங்களில் வைதது ஆசிகளை பெறுவார்கள். அவர்கள் 29-01-1996  திங்கள்கிழமை அன்று மதியம் தங்கள் ஆசியை பெற அங்கு வருவார்கள். நாங்கள் உங்கள் குறைவற்ற ஆசியையும் , கருணையையும் எங்களின் ராமநாமத்தை பரப்பும் தாழ்மையான முயற்சிக்கு வேண்டி பிரார்த்திக்கிறோம். 

தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் இந்த சாதுவும் , பாரதியும் அங்கே பிப்ரவரி 12 ஆம் தேதி வந்து சேரவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பாரதிக்கான பாஸ்போர்ட் இன்னமும் கிடைக்கவில்லை. அதன்பின்னரே விசாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு டெல்லிக்கு ஒரு அவசரபயணம் மேற்கொள்ளப்படவேண்டும். நாங்கள் இந்த நாட்டை விட்டு கிளம்பும் முன் உங்களை சந்தித்து ஆசி பெறுவோம் என நம்புகிறேன். 

சிரஞ்சீவி விவேகானந்தன் ஃபோர்ப்ஸ் இன்ஜினியரிங் ( இந்தியா ) லிமிடெட்டில் டிசைன் இன்ஜினியராக வேலையில் உறுதி செய்யப்பட்டுள்ளான். சௌ. நிவேதிதாவும் ஆப்.டெக் கம்யூட்டர் இன்ஸ்டிட்யூட்டில் தனது வகுப்புக்களை எடுத்து வருகிறார். அவர்கள் திருவண்ணாமலைக்கு தங்கள் ஆசியை பெற விரைவில் வருவார்கள் என்றே நம்புகிறோம். நாங்கள் இப்போது ஒரு கணிணியை ‘தத்துவதர்சனா’ இதழை தட்டச்சு செய்ய பெங்களூரில் நிறுவ இருக்கிறோம். அதற்கு உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

பிப்ரவரி – 4 அன்று, சாது, சென்னை ராணி சீதை ஹாலில் கம்பன் கழகத்தினரால் நடத்தப்பட்ட பெரிய புராணம்  குறித்த பேச்சுப் போட்டியின் நடுவராக செயல்பட்டார். பின்னர் சாதுஜி பார்வை திறனற்றவர்களின் சேவை சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். பிப்ரவரி 11 ஆம் தேதி மாதாந்திர அகண்ட ராமநாம ஜபம் நடைப்பெற்றது. பிப்ரவரி 12 ஆம் தேதி ஜஸ்டிஸ் திரு. அருணாச்சலம் பாரதியை தொலைபேசியில் அழைக்க அவள் உயர்நீதி மன்றம் சென்றாள். அங்கிருந்து திரு. வெங்கடேசன் பாரதியை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட்டை ஏற்பாடு செய்தார். சாதுஜி பகவானுக்கு கடிதம் ஒன்றை அதே நாளில் எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உப தலைவர் மற்றும் “மேக் ஹிஸ்டரி“ என்ற இதழின் பதிப்பாளர், திரு. K.N.வெங்கடராமன் அவர்களின் மகள் சௌ. நாராயணிக்கு, சிரஞ்சீவி. K. காசிவிஸ்வநாதன் என்கிற ரமேஷ் உடன் 21-2-1996 புதன்கிழமை அன்று திருமணம் நடக்க இருக்கிறது. திரு. வெங்கடராமன் இந்த திருமண அழைப்பிதழை உங்கள் ஆசியையும், கருணையையும் பெறுவதற்காக என்னிடம் தந்து உங்களுக்கு அனுப்புமாறு கூறினார். அழைப்பிதழ் ராமநாம தாரக மந்திரம், உங்கள் புனித நாமம், மற்றும் புகைப்படத்தையும் தாங்கியுள்ளது. 

நாங்கள் பாரதியின் பாஸ்போர்ட்டை 14-2-1996 ல் பெறுவோம், இதற்கான உதவியை செய்த மாண்புமிகு ஜஸ்டிஸ் திரு. T.S.அருணாச்சலம் அவர்கள் எங்களது நன்றிக்குரியவர் ஆவார். நாங்கள் விசாவை பெறுவதற்காக டெல்லியில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் தூதரகத்திற்கு செல்ல இருக்கிறோம். பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு அன்று சென்னையிலிருந்து மும்பைக்கும், பிப்ரவரி 28 ஆம் தேதி காலை அன்று மும்பையிலிருந்து டர்பனுக்கும் எங்களின் பயணம் ஏர் இந்தியா மூலம் அமையும். டெல்லியிலிருந்து திரும்ப வருவதில் எங்களுக்கு ஏதேனும் தாமதங்கள் ஏற்படும் எனில் எங்கள் பயணம் மார்ச் முதல் வாரத்திற்கு மாற்றப்படும். நாங்கள் கிளம்புவதற்கு முன் அங்கு வந்து தங்களின் தரிசனத்தை பெறுவதற்கு மிகுந்த ஆவலோடு இருக்கிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன் 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி “

தென் ஆப்பிரிக்காவின் ராமகிருஷ்ண ஜோதியின் திரு. ராம்பிரசாத் சாதுவின் இல்லத்திற்கு பிப்ரவரி 12 ஆம் தேதி விஜயம் செய்தார். ஆஸ்திரேலியாவின் திரு. மிஷேல் அடுத்தநாள் சாதுவை சந்தித்தார். 

சனிக்கிழமை, பிப்ரவரி -17 அன்று சாதுஜி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லிக்கு சென்று அங்கே 19 ஆம் தேதி காலையில் சென்றடைந்தார். வி.எச்.பி.- யை சேர்ந்த திரு. தீர், சங்கட் மோசன் ஆசிரமத்தில் சாதுவை வரவேற்று, ஆச்சார்யா தர்மேந்திரா உடன் தங்க வைத்தார். சாது, திரு. தீர்ஜி உடன் தென் ஆப்பிரிக்காவின் தூதரகத்திற்கு சென்று விசாவிற்கான படிவத்தை சமர்ப்பித்தார். பின்னர் சாதுஜி கான்ஸ்டிட்யூஷன் க்ளப்பில் நடந்த ஒரு கூட்டத்தில் பசு வதைக்கு எதிராக உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் – ன் திரு. ரஜ்ஜு பையா , வி.எச்.பி.யின் தலைவர் திரு. அசோக் சிங்கல், ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் , திரு. தர்மேந்திரா, திருமதி. மேனகா காந்தி மற்றும் பிற முக்கியமான தலைவர்களும் அந்த கூட்டத்தில் உரையாற்றினர். சாதுஜி சென்னைக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி திரும்பினார். 

சனிக்கிழமை பிப்ரவரி – 24 ஆம் தேதி சாதுஜியும், பாரதியும் பெங்களூர் சென்றனர். நிவேதிதா செரிப்ரா என்ற கணிணி மற்றும் பனாசோனிக் பிரிண்டர் போன்றவற்றை சகோதரி நிவேதிதா அகாடமிக்காக நிறுவியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை சாதுஜி ஒரு கடிதம் ஒன்றை பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு, கணிணியில் தட்டச்சு செய்து, அதனை புதிய பிரிண்டரில் செவ்வாய்க்கிழமை அன்று பிரிண்ட் எடுத்து, அதனை புதன்கிழமை பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று பெங்களூரிலிருந்து அனுப்பி வைத்தார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

தங்கள் அளவற்ற கருணையாலும், ஆசியாலும் சகோதரி நிவேதிதா அகாடமி  இன்று அதன் சொந்த கணினி மூலம் பலமடைந்துள்ளது. செரிப்ரா பிசி / ஏடி 486 கணினியும் பனாசோனிக் பிரிண்டரும் தங்கள் புனித பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. 

இந்த முதல் கடிதம் உங்களுக்கு இந்த கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, எங்கள் இதயம் நிறைந்த பிரார்த்தனைகள் உடன், எங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் உங்கள் ஆசியை வேண்டி, அனுப்பப்படுகிறது. இந்த கணினி பெங்களூரில் நிறுவப்பட்டுள்ளது. அதனை அகாடமிக்காக, நிவேதிதா பயன்படுத்துவார். அனைத்து பணிகளிலும் நீங்கள் எதிர்பார்க்கும் அழகும், நேர்த்தியும் இனி எங்கள் எதிர்கால வெளியீடுகள் அனைத்திலும் வெளிப்படும் என நம்புகிறோம். 

இந்த சாது டெல்லியில் இருந்து சென்ற வெள்ளிக்கிழமை சென்னைக்கு திரும்பினான்  தென் ஆப்பிரிக்காவின் ஹை கமிசனில், விசாவிற்கான படிவம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கான காரணம் மூன்று மாதங்களுக்கு அங்கே யோகா மற்றும் மதம் சார்ந்த உரையாற்றுதல் என்பதால் அவர்கள் அதனை அவர்களது தென் ஆப்பிரிக்காவின் ஹோம் டிபார்ட்மெண்ட் இடம் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளனர். விசாவானது வழங்கப்பட 15  நாட்கள் ஆகும். எனவே இந்த சாதுவும், பாரதியும், மார்ச் மாதம் இரண்டாம் பகுதியில் மட்டுமே தென் ஆப்பிரிக்கா பயணிக்க இயலும். நாங்கள் எங்கள் பாஸ்போர்ட், விமான டிக்கெட் போன்றவற்றை ஹை கமிஷனிடம் ஒப்படைத்துள்ளோம். விரைவில் தகவல் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். 

நாங்கள் சென்னைக்கு திரும்பிய  உடன், நீங்கள் எங்களை திருவண்ணாமலைக்கு அழைத்த தகவலை அறிந்தோம். நாங்கள் திரு. மணியிடமும், மாண்புமிகு ஜஸ்டிஸ் T.S.அருணாச்சலமிடமும்  பேசினோம். நாங்கள் உங்கள் முன்னிலையில் சனிக்கிழமை அன்று வர விருப்பம் கொண்டுள்ளோம். 

இந்த சாது மற்றும் பாரதி இங்கே சௌ. நிவேதிதாவை காண்பதற்காக வந்திருந்தோம். சௌ.நிவேதிதா கருவுற்றிருக்கிறாள். அவள் இனிய தாய்மையை உணர உங்கள் ஆசியை வேண்டி பிரார்த்திக்கிறோம். சௌ. நிவேதிதா  தங்களுக்கும் மா தேவகி அவர்களுக்கும் உங்களிருவரின் ஆசியை வேண்டிய தனது பிரார்த்தனையை தெரிவிக்குமாறு சொன்னாள். அவளும் திரு. ரமேஷூம், ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு, அங்கு வருவார்கள். 

சிரஞ்சீவி விவேகானந்தன் இங்கிருக்கிறான். அவன் சென்னையின் எல் & டி யில் ஒரு நேர்காணலை முடித்திருக்கிறான். அவனும் உங்கள் ஆசியை வேண்டி பிரார்த்திக்கிறான். சௌ. நிவேதிதாவின் மாமனார், திரு.விஜயராகவன், மாமியார் சௌ. சரோஜா, சௌ. ஸ்ரீவித்யா, மற்றும் திரு. ரமேஷ் ஆகியோர் தங்களின் வணக்கங்களை உங்களுக்கும், மா தேவகி அவர்களுக்கும் தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். ”

வியாழக்கிழமை, பிப்ரவரி 29 அன்று, விவேக் , ஜஸ்டிஸ் T.S.அருணாச்சலத்திடம் இருந்து ஒரு சேதியை, திரு. முகிலன் மூலமாக, கொண்டு வந்தான். சாது பகவானின் இல்லத்தில் சனிக்கிழமை காலையே  எதிர்ப்பார்க்கப்படுகிறார் என்று கூறப்பட்டது. எனவே சாது திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை காலையே கிளம்ப முடிவு செய்தார். சாது பாரதியிடம்  நிவேதிதா , மாப்பிள்ளை ரமேஷ் மற்றும் அவர்களது பெற்றோர்களை திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை அழைத்துவருமாறு கூறினார். அவர் பகவானின் இல்லத்திற்கு முற்பகலில் வந்து சேர்ந்தார். பகவான் சாதுவை வரவேற்று தனது மேடையில் அருகே அமரவைத்தார். பல பக்தர்கள் அவரது தரிசனத்தை பெற காத்திருந்தனர். பகவான் சாதுவிடம் நீ பெங்களூரில் இருந்தா வருகிறாய் என்று வினவ, சாது தனக்கு ஜஸ்டிஸ் அருணாச்சலம் மூலம் கிடைத்த சேதியை தெரிவித்து, அதனால் தான் முன்னதாகவே கிளம்பி வந்ததாகவும், பாரதியோடு மற்றவர்கள் நாளை வருவார்கள் என்றும் தெரிவித்தார். பகவான் சாதுவின் வெளிநாட்டு பயண ஏற்பாடுகள் குறித்து கேட்டார். ஏற்பாடுகள் குறித்து சாது பகவானிடம் விளக்கமாக கூறினார். பகவானுக்கு தான் அனுப்பிய கடிதம் குறித்தும் சொன்னார். குரு, இந்த தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கு யார் நிதி உதவி அளிக்கிறார்கள், சாது மற்றும் பாரதி இருவருக்குமா, மேலும் எத்தனை மாத பயணம் என்றெல்லாம் கேள்விகள் கேட்டார். சாது அனைத்தையும் விளக்கமாக கூறினார். 

பகவான் சாதுவிடம், திரு. T.S.அருணாச்சலம் எதையாவது சாதுவிடம் விவாதித்தாரா என்று கேட்டார். சாது , தான் சேதியை திரு. முகிலனிடம் இருந்து பெற்றதாகவும், திரு. அருணாச்சலம் அங்கே பிற்பகலில் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறார் என்றார். பகவான் சாதுவின் கரங்களைப்பற்றி எழுந்து, நடந்து, ஹாலில் ஒரு பக்கமாகச் சென்று நாங்கள் இருவரும் அமர்ந்தோம். அவர் மணியையும் அழைத்தார். பகவான் தான் திரு. T.S.அருணாச்சலம் அவர்களுக்கு சில பொறுப்புகளை தர இருப்பதாகவும் சாதுவும், மணியும் அவருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கூறினார். திரு. அருணாச்சலம் அவர்களும் வந்தார். பகவான் அவரை சாது மற்றும் மணியோடு அமருமாறு சொன்னார். திரு. அருணாச்சலம் மற்றும் அவரது சகோதரர் டாக்டர் ராமனாதன் அவர்களும் எங்களோடு அமர்ந்தார். மணியிடம் பகவான் அனைத்தையும் அருணாச்சலத்திடம் விட்டுவிடும்படி கூறுகையில் மணி சிறிது வருத்தத்துடன் காணப்பட்டார். மணி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக் கோரினார், ஆனால் பகவான் திரு. அருணாச்சலத்திடம் மணி மற்றும் ராஜி தங்கள் பணிகளை இப்போதைப்போல் தொடர்வார்கள் என்றும் நாம் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பை தர வேண்டும் என்றும் கூறினார். 

திரு. அருணாச்சலம் பகவானிடம் டிரஸ்டின் புதிய சட்ட வரைவைப்பற்றி கூறினார். சாது, தேவகி உட்பட்ட சுதாமா சகோதரிகள், அருணாச்சலம் மற்றும் மணி ஆகியோர் டிரஸ்டிகளாகவும், தன்னை பகவானின் விருப்பப்படி ஆன்மீக தலைவராகவும் அதில் அறிவித்திருந்தார். நாளை அது இறுதி செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது. பகவான் தான் ஆசிரமத்தின் கட்டுமானத்தில் அது  நிறைவடையும் வரை இருப்பேன் என்றும் அதன்பின் தந்தை என்னை அழைத்துக்கொள்ளலாம் என்றும் குறிப்பை தந்தார். சாதுவின் கரங்களைப்பற்றி பகவான் அருணாச்சலத்திடம், “இந்தப் பிச்சைக்காரன் மிக முக்கிய பணியான ராமநாமத்தை பரப்பும் பணியை ரங்கராஜனிடம் தந்துள்ளான். அது தந்தையின் பணி. ரங்கராஜன் தனது இதயம் மற்றும் ஆன்மாவை இந்த பணிக்கு தந்துள்ளார். அவர் ஜூன் மாதம் வரை இங்கிருக்க மாட்டார்” என்றார். திரு. அருணாச்சலம், சாதுவின் சார்பில் முடிவுகளை எடுக்க  அங்கீகாரம் பெற்ற நபர் கடிதத்தை பெற்றுக்கொள்வதாக கூறினார். பகவான், தந்தை பணிகள் சிறப்பாக நகர்வதைப் பார்த்துக்கொள்வார் என்றார். பகவான் சென்றபிறகு சாது, ஜஸ்டிஸ் அருணாச்சலத்தோடு அமர்ந்து, எதிர்கால பணிகள் குறித்து விவாதித்தார். சாது பகவானுக்கு ஆரத்தி எடுத்து, அனைவருக்கும் தீர்த்தம் கொடுத்தார். பண்ருட்டியை சேர்ந்த திருமதி. ஆண்டாள் வந்து சிறிது நேரத்தை செலவழித்தார். சாது பின்னர் மணி, அருணாச்சலம் மற்றும் ரகு ஆகியோருடன் உரையாடினார். சென்னையிலிருந்து ஜெயா என்பவர் சாதுவை தொடர்பு கொண்டு தென்ஆப்பரிக்காவின் பக்தர்கள் சாதுவை மார்ச் – 4 ஆம் தேதி கிளம்பவேண்டும் என விரும்புவதாக கூறினார். சாது அது சாத்தியமற்றது என்றும் இனிவரும் தென்ஆப்பரிக்கா தொலைபேசி அழைப்புக்களை திருவண்ணாமலைக்கு தன்னிடம் திருப்பி விடுமாறும் கூறினார். 

சனிக்கிழமை , மார்ச் – 2 அன்று பகவானின் டிரைவர் வந்து பகவான் சாதுவிற்காக காத்திருப்பதாக கூறினார். சாது பகவானுடன் காலை உணவிற்கு இணைந்தார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் , டாக்டர். ராமநாதன் மற்றும் பிறரும் அங்கே இருந்தனர். ராம்நாம் ஜபம் அங்கே நடந்தது. பகவான் ராம்நாம் பணி குறித்து பேசினார். “ரங்கராஜன் துவக்கினார். தேவகி அவருக்கு உதவினார். பின்னர் ராஜலட்சுமி அதனை எடுத்துக் கொண்டார்.” சாது குறுக்கிட்டு, “இப்பொழுது பேரா. கமலம் அதனை செய்து வருகிறார்“ என்றார். பகவான் சிறிய ஓய்விற்காக சென்றார். நாங்கள் அனைவரும் மீண்டும் காலை 9.30 மணிக்கு ஸ்வாகதம் ஹாலில் கூடினோம். அருணாச்சலம் தீர்மானங்களை எழுதுவதில் மும்முரமாக இருந்தார். திருமதி. பிரபா வந்தார். பகவானும் வந்து சேர்ந்தார். திருமதி். ப்ரபா ட்ரஸ்டில் இருந்து விலகுவதற்கான தனது பதவி விலகல் கடிதத்தை தந்து அவர் ஜஸ்டிஸ் அருணாச்சலத்திற்கான வழியை ஏற்படுத்தினார். ப்ரபா உணர்ச்சிவசப்பட்டிருந்த நிலையில் பகவான் அவளது பதவி விலகல் கடிதத்தை ஏற்றார். பகவானும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார்.  ப்ரபாவை தனது காரில் வழியனுப்பி வைத்தார். புதிய டிரஸ்ட் போர்ட், சாது , தேவகி உள்பட பிற சுதாமா சகோதரிகள், மணி மற்றும், ஜஸ்டிஸ் அருணாச்சலம் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும் வரை  அவருக்கு பதிலியாக டாக்டர். ராமனாதன், ஆகியோரை உட்கொண்டு கட்டமைக்கப்பட்டது. பகவான், திரு. T.S. அருணாச்சலம் டிரஸ்டின் தலைவர் மற்றும் ஆன்மீக தலைவர் ஆக இருப்பார் என அறிவித்தார். மேலும் அவர், “ரங்கராஜன் மூன்று மாதங்கள் தொலைவில் இருப்பதனால் இந்த காலக்கட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சாது விடமிருந்து அங்கீகாரம் பெற்ற நபர் கடிதத்தை அருணாச்சலம் பெற்றுக் கொள்வார்” என்றார்.  

நாங்கள் அனைவரும் உணவு கூடத்திற்கு வந்தோம். பகவான் எங்கள் அனைவரையும் அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். பின்னர் பக்தர்கள் உள்ளே வர அனுமதிக்கப்பட்டனர். சத்சங்கம் மற்றும் ஜபம் துவக்கப்பட்டது. பகவான் சாதுவிடம் எப்போது நிவேதிதா வருகிறாள் என வினவினார். சாது அவர்கள் பகலில் வந்து சேர்வார்கள் என்றார். சாது பகவானிடம் பாரதியின் சகோதரரான  திரு.ரமேஷ் மற்றும் அவரது மனை வி திருமதி. வசந்தா ஆகியோரும் சென்னையிலிருந்து பகவான் கேட்ட சில புத்தக பிரதிகளுடன் வருவதாக கூறினார். அவர்கள் வந்து சேர்ந்தவுடன், திருமதி பாரதியும் திருமதி. நிவேதிதா, திரு. ரமேஷ், அவரது தாய் திருமதி சரோஜா ஆகியோருடன் வந்து சேர்ந்தாள்.. 

காபி இடைவேளைக்குப்பின், மாலை சந்திப்பு தொடங்கியது. பகவான் மதியம் மிகுந்து உணர்ச்சிவசப்பட்டு இருந்தார். சில சமயம் கண்ணீர் விட்டு அழுதார். அவர் சுதாமா சகோதரிகள் தனது உடல் வாழ்வை நிலை நிறுத்துகிறார்கள் என்றும், தேவகி அவருக்கு சேவை செய்யும் உறுதியை வெளிப்படுத்தி யுள்ளதாகவும் கூறினார். அவர் சுதாமா சகோதரிகளை தனது அன்னையர்கள் என்றழைத்து, “யார் இவர்களை பார்க்கிறார்களோ அவர்கள் இந்தப் பிச்சைக்காரனையே பார்க்கிறார்கள்,”  என்றார். பின்னர் யோகி தான் ஜஸ்டிஸ் அருணாச்சலத்திற்கு இந்த டிரஸ்ட்டின் தலைவர் மற்றும் தனது ஆன்மீக வாரிசு என்ற அங்கீகாரத்தை அளிப்பதாக அறிவித்தார். மேலும் அவர், ஜஸ்டிஸ் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்ய முன் வந்ததாகவும், ஆனால் தான் அவரை, அவர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பதவியை பெறக்கூடிய வாய்ப்புள்ளதால், பணியில் தொடருமாறு கூறியதாகவும் தெரிவித்தார். பின்னர் அவர் இந்த சாதுவைப்பற்றி கூறுகையில், “இந்தப்பிச்சைக்காரன் ஒருபோதும் எவருக்கும் தீக்ஷை அளித்ததில்லை, ஆனால், ஒருமுறை ரங்கராஜன் வலியுறுத்தியதால் அவருக்கு ராமநாம மந்திரத்தை தீக்ஷை அளித்தேன். அவர் ஏற்கனவே சுவாமி சின்மயானந்தாவிடம் தீக்ஷை பெற்றிருந்தாலும், இந்தப்பிச்சைக்காரன் அவருக்கு தீக்ஷையளித்தான்.“ சாது இடைமறித்து, சுவாமி சின்மயானந்தா எனது சிக்ஷா குரு மட்டும்தான் என்றார். தேவகியும் சாதுவின் வார்த்தைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார். பகவான் சிரித்துவிட்டு பின்னர் தொடர்ந்தார், “சரி , இந்தப்பிச்சைக்காரன் அவருக்கு தீக்ஷை அளித்தப்பின் அவர் இந்தப்பிச்சைக்காரனிடம் தான் என்ன செய்ய வேண்டும் என வினவினார். இந்தப்பிச்சைக்காரன் அவரை ராமநாமத்தை பரப்பும்படியும், மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் 15,500 கோடி ஜப யக்ஞத்தை நிறைவு செய்யும்படியும் கூறினான். ரங்கராஜன் தனது இதயத்தை இந்தப்பணிக்கு கொடுத்து, இந்தியாவில் மட்டும் ராமநாமத்தை பரப்பவில்லை, உலகம் முழுவதும் பரப்புகிறார். அவர் இப்போது தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறார். அவர் பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பல நாடுகளிலும் பரப்பி வருகிறார். அவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளபோதிலும் மறுபடியும் இப்பொழுது போக இருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் , என் தந்தை அவரோடு எப்போதும் இருப்பார். தந்தை சாதுவின் பணி வெற்றியடைவதை பார்த்துக்கொள்வார்.“ பகவான் சாதுவிடம் திரும்பி தனது ஆசியை பொழிந்தார். பின்னர் தொடர்ந்து, “ரங்கராஜன் இந்தப்பணியை 15,500 கோடி ராமநாம ஜபம் முடியும் வரை தொடர்வார்.“ பகவான் ராஜி மற்றும் மணி அவர்களின் பணியை குறித்தும் கூறிவிட்டு, “இவன் எல்லோரிலும் இருக்கிறான் “ என்றார். மேலும் மிகுந்த உணர்ச்சியோடு அவர், “இந்தப்பிச்சைக்காரன் ஆசிரம கட்டுமானப்பணி நிறைவடையும் வரையில் இருப்பான். பின்னர் என் தந்தை இந்தப்பிச்சைக்காரனை அழைத்துக்கொள்வார்,“ என்றார். அனைவரும் அவர் இதனை கூறுகையில் கண்ணீர் சிந்தினர். 

அவர் நிவேதிதா மற்றும் ரமேஷை அழைத்து அவர்களை ஆசீர்வதித்தார். அவர் ராஜலட்சுமியை பரான்ஞ்பேயின் கதையான, “ தி சூஃபி “ யை இருமுறை படிக்க சொன்னதோடு, சாதுவையும், டாக்டர். ராமனாதனையும் படிக்கச் சொன்னார். பின்னர் அவர் அங்கிருந்த பரான்ஞ்பே  அவர்களிடம் அந்த கதையை படிக்குமாறு கூறியதோடு அதைக்குறித்தும் பேசுமாறு சொன்னார். யோகிஜி எப்படி தான் பரான்ஞ்பே புத்தகத்தை பெற்றேன் என்றும், அந்த கதையை பார்த்தேன் என்றும், அவரை அழைத்ததையும், அவர் தன்னை சந்தித்ததையும் பற்றி கூறினார். யோகிஜி பின்னர் சாதுவிடம் திரும்பி, சாது வழக்கமாக தனது சொற்பொழிவுகள் ஆற்றும்பொழுது துவக்கத்தில் பாடும் தோத்திரத்தை பாடுமாறு கூறினார்: 

வேத ரிஷய: சமாரப்ய, வேதாந்தாச்சார்யா: மத்யமா:, 

யோகி ராம்சுரத்குமார ப்ரயந்தம் வந்தே குருபரம்பராம்.

(புனித நிலமாகிய பாரத நாட்டின் வேத ரிஷிகள் தொடங்கி, வேதாந்த ஆச்சார்யர்கள் வழியாக, எனது தீக்ஷா குரு, திருவண்ணாமலையின் யோகி ராம்சுரத்குமார் வரையான, அனைத்து குருமார்களுக்கும் எனது வணக்கங்கள்) 

பகவான் சாதுவிடம் அதனை இரண்டுமுறை திரும்ப கூறுமாறு சொன்னார். பின்னர் கூறுகையில், “ரங்கராஜா, இந்தப்பிச்சைக்காரன் மீதுள்ள பக்தியின் காரணமாக இந்தப்பிச்சைக்காரன் ஒரு அழுக்கு பாவியாக உள்ளபோதிலும், அவனை ரிஷிகளின் பரம்பரையில் ஒருவராக கூறுகிறார்.” பின்னர் அவர் சிரித்து தனது ஆசியை சாதுவிற்கு பொழிந்தார். அவர் அருணாச்சலம், பரான்ஞ்பே, டாக்டர் ராமனாதன் மற்றும் சாதுவை அவர்களுக்கு பழங்களை பரிசளித்து ஆசீர்வதித்தார். பின்னர் அவர் ராஜேஸ்வரி மற்றும் நிவேதிதாவை அழைத்து, “அருணாச்சல சிவ….” வை பாடச் சொன்னார். அவர்கள் பாடிக்கொண்டிருக்கையில் அவர் எழுந்து கிளம்பினார். சாது ஆரத்தி எடுத்தார். பின்னர் சாது, பாரதி, நிவேதிதா மற்றும் பிறருடன் ரமணாச்ரமம், சேஷாத்திரி ஆசிரமம் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். 

ஞாயிற்றுக்கிழமை , மார்ச் – 3 அன்று சாது பகவானுடன் காலை உணவின் போது இணைந்தார். திரு. பரான்ஞ்பே மற்றும் பிறர் அங்கே இருந்தனர். பகவான் ராஜலட்சுமியை ராஜாஜியின் பாடலான, “குறையொன்றுமில்லை….” என்ற பாடலை பல முறை பாடச் சொன்னார். அவர் பரான்ஞ்பேயிடம் ராஜாஜி மற்றும் பரமாச்சார்யாவின் எழுத்துக்களை படித்ததுண்டா என வினவினார். அவர் அவர்களை ரிஷி என்றழைத்தார். சாது பகவானிடம் பரமாச்சார்யாவின் பேச்சுக்கள் ஆங்கிலத்தில் வந்துவிட்டன என்றார். பகவான் பராஞ்பேயிடம்  இடம் அதை வாங்கி படிக்குமாறு கூறினார் அவர் தனக்கு ராஜாஜியின் கதைகளின் மீதான தனது அனுபவத்தை பகிர்ந்தார். அவர் திரு. K.M. முன்ஷி உடனான சந்திப்பைப் பற்றியும் குறிப்பிட்டார். ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது பகவான் தான் அன்னையை சந்தித்த போதிலும் ஸ்ரீ அரவிந்தரை சந்திக்கவில்லை என்றும், தனது பித்துநிலையின் காரணமாக அவருடன் தனது சந்திப்பிற்காக ஒதுக்கப்பட்ட நேரம் நீக்கப்பட்டதையும் தெரிவித்தார். பகவான் முன்ஷி ப்ரேம் சந்த் அவர்களின் கதைகளை படித்ததையும் கூறினார். 

காலை உணவிற்குப்பின் பகவான் சாதுவிடம் கிளம்ப வேண்டுமா என்று கேட்டார். சாது தான் டெல்லியில் உள்ள தென் ஆப்பிரிக்கா ஹை கமிசனிடம் இருந்து அந்த நாட்டிற்கு பயணம் செய்வதற்கான விசாவை பெற வேண்டும் என்றார். யோகி சாதுவையும், பாரதியையும் ஆசீர்வதித்து கூறுகையில், “எங்கே ரங்கராஜன் இருந்தாலும், என் தந்தை அவரை ஆசீர்வதிப்பார்,“ என்றார். அவர் பாரதியை ஆசீர்வதித்து கூறுகையில், “மா பாரதிக்கு வணக்கங்கள்” என்றார். அவர் மைதிலி சரண் குப்தாவின் புத்தகமான, “பாரத பாரதி“ யை நினைவு கூர்ந்தார். 

பகவானிடமிருந்து விடைப்பெற்றப்பின், சாது, பாரதி, நிவேதிதா, பாரதியின் சகோதரர் ரமேஷ், மற்றும் வசந்தா, நிவேதிதாவின் கணவன் ரமேஷ் மற்றும் அவரது அன்னை திருமதி. சரோஜாவையும் பெங்களூருக்கு வழியனுப்பிவிட்டு சென்னைக்கு பிற்பகலில் வந்து சேர்ந்தனர். 

சாது மற்றும் பாரதிக்கான விசா கிடைத்தவுடன் சாது மும்பைக்கான விமானத்தை 9 ஆம் தேதியும், டர்பனுக்கு விமானத்தை மார்ச் -10 ஆம் தேதிக்கும் பதிவு செய்தார். சாது திரு. பாலு என்பவரின் இல்லத்தில் சத்யநாராயண பூஜையை மார்ச் – 5 அன்று செய்தார். 9 ஆம் தேதி காலையில் சாது ஆசிரமத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் 9 ஆம் தேதி மும்பைக்கும், 10 ஆம் தேதி டர்பனுக்கும் விமானத்தில் பயணிக்க இருக்கும் தகவலை பகவானிடம் தெரிவிக்கச் சொன்னதோடு அவரிடம் தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கான ஆசியை கோருமாறு கேட்டுக் கொண்டார். சென்னையிலிருந்த பக்தர்கள் திரு.D.S.கணேசன் உட்பட சிலர் சாதுவையும், பாரதியையும் விமான நிலையத்தில் வழியனுப்பினா். அவர்கள் சிங்கப்பூர் – மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் 449 – ல்  இரவு 7.30  க்கு கிளம்பினர். குமாரி. ரஜினி பாக்வே, குமாரி. டயானா மற்றும் பலர் சாது மற்றும் பாரதியை மும்பையில் வரவேற்றனர். 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு அவர்கள் டர்பனுக்கு ஏர் இந்தியா விமானம் 217 ஐ பிடித்து தென் ஆப்பிரிக்காவின் நேரப்படி மாலை 4.30 மணிக்கு சென்றனர். இன்டெக்ரல் யோகா சென்டரின் திரு. கென்னி பிள்ளை , வேதாந்த ஆசிரமத்தின் திரு.  ஜெயராம், சகோதரி நிவேதிதா அகாடமியின் திருமதி ஷெரிதா கொம்மல்  ஆகியோர் சாதுவையும், பாரதியையும் வரவேற்று அவர்களை டோங்காட்டில் உள்ள வேதாந்த ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே சாதுவிற்கும் பாரதிக்கும் அளிக்கப்பட்ட ஒரு வரவேற்பு சத்சங்கத்தில் சாது உரையாற்றினார்.