ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.23

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.23 

தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் சாதுவின் தர்ம பிரசாரம்

சாதுவின் தென் ஆப்பிரிக்காவின் முதல் நிகழ்ச்சி வெட்ஸ்டோன் விஷ்ணு கோயிலில் நடைபெற்ற சீதா ஜெயந்தி விழா ஆகும். திரு. துக்கான் அவர்களின் சுந்தர காண்டம் வாசிப்பு நடைப்பெற்றது. அங்கே சாது “ராமாயணத்தின் முக்கியத்துவம்” குறித்து பேசினார். அவர், சீதாய சரிதம் மஹத் – “சீதாவின் பெரும் வரலாறு” என்று ராமாயண காவியம் போற்றப் படுவதாக குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை , ஏப்ரல் 25 அன்று தென் ஆப்பிரிக்காவின் விஷ்வ ஹிந்து பரிஷத் சாதுவிற்கு நார்த்க்ராஃப்ட் ஹிந்து சபாவில் பெரும. வரவேற்பை தந்தது. சாது விஷ்வ ஹிந்து பரிஷத் உருவெடுத்தது குறித்தும் ஹிந்து ஒற்றுமை குறித்தும் பேசினார். சாது ஒரு அமைதி பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார். அங்கே அவர் திரு. ராஜ்பன்ஸி என்ற இந்திய சமூகத்தின் தலைவரை சந்தித்தார். 27 ஆம் தேதி சாது திரு. சோம பிள்ளை வீட்டில் நடந்த சத்சங்கத்தில் இந்திய மொழிகள் மற்றும் மத அமைப்புகள் இடையேயான ஒருமைப்பாடு குறித்து பேசினார். அடுத்தநாள் அவர் ஹிந்து ஸ்வயம்சேவக  சங்கத்தின் விஷ்ணு மந்திர் சாகாவில், சுயம் சேவகர்களிடம் உரையாற்றினார். வியாழக்கிழமை 29 ஆம் தேதி அன்று சாது ஆசிரியர்கள் மையத்தில் ஏப்ரல் 29 அன்று ஃபினிக்ஸில் ஆசிரியர்கள் மையத்தில், “இந்திய மொழிகளின் பொது மூலம் மற்றும் ஹிந்து கலாச்சாரம்“ குறித்து பேசினார். மாலையில், டோங்காட்டில், சத்ய சாய் மையத்தில், சாது, “பகவான், அவதாரம் மற்றும் மனித விதி“ குறித்து பேசினார். பின்னர் அங்கே ஒரு நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. வெள்ளிக்கிழமை அன்று சாது ஸீடைட்ஸ் லைப்ரரி ஹாலில், “வாழ்க்கையின் இலக்கு“ குறித்து பேசினார். சனிக்கிழமை அன்று, பெலவிடேரில்  நடந்த சத்சங்கத்தில், சாது,  “ஹிந்து தர்மத்தில் கடவுள் கோட்பாடு” என்பது குறித்து பேசினார். மே – 2 ஞாயிற்றுக்கிழமையன்று, சாது, ஓவர்போர்ட் நாகரி பிரச்சாரினி சபையில் நடைபெற்ற பஞ்ச பூஜா விழாவில் உரையாற்றினார். நோர்த்கிராஃப்ட் ஹிந்து தர்ம சபாவின் ஹிந்து தினவிழாவிலும்  சாது உரை நிகழ்த்தினார். திங்கள்கிழமை மே – 3 அன்று, சாது, பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர் தனது தென்னாப்பிரிக்கா நிகழ்ச்சிகள் மற்றும் பணியில் முன்னேற்றங்கள் குறித்து எழுதி திரு. டெட்டி கொமல்  மூலம் ஃபேக்ஸ்  செய்தார். ஹிந்து ஸ்வயம் சேவக சங்க கூட்டத்தில் சாது உரையாற்றினார். பின்னர் விஸ்வரூப்  மந்திரில் “ஹிந்து புனரெழுச்சி” குறித்து பேசினார். செவ்வாய்க்கிழமையன்று சாது தென் ஆப்பிரிக்கா ஹிந்து காவல்துறையினர் சங்கக் கூட்டத்தில் “மதமாற்றம் மற்றும் தண்ட நீதி” குறித்து உரையாற்றினார். மாலையில் விஸ்வரூப் கோயில் சத்சங்கத்தில்  இரண்டாவது நாளாக உரை நிகழ்த்தி, ஒரு பெரும் கேள்வி பதில் நிகழ்ச்சியையும் நடத்தினார்.

மே – 5 அன்று புதன்கிழமை , 1999 அன்று சாது க்ரேடவுன்க்கு காரில் சென்றார். சாது அடுத்தநாள் மாலை பக்தர்களிடையே “ஹிந்துத்துவம் 21 ஆம் நூற்றாண்டில்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை இரண்டு தனிச்சபைகளில் சுயம்சேவக் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் சாது விஷ்ணு மந்திரில் உரையாற்றினார். அடுத்தநாள் திரு. ஓரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற சத்சங்கத்தில் சாது, “ஹிந்து மதிப்புகள்” குறித்து பேசினார். ஞாயிற்றுக்கிழமை மே – 9 அன்று சாது அனைத்து பக்தர்களோடு மேதில் லேக் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்று அங்கே அவர் காயத்ரி, துர்கா மற்றும் த்ரயம்பகா ஹோமங்களை நடத்தி, பின்னர், ஹிந்து தர்மம் குறித்து உரையாற்றினார். திங்கள்கிழமையன்று அவர் ஹிந்தி சிக்‌ஷன் சம்ஸ்தாவை சார்ந்த ஹிந்தி மாணவர்களிடையே  உரையாற்றினார். மற்றும் மாலையில் அவர் “பஜகோவிந்தம்” குறித்த தொடர்  உரையை விஷ்ணு மந்திரில் துவக்கி, சனிக்கிழமைவரை நடத்தினார். புதன்கிழமை மே – 12 அன்று, பிருந்தாவன் ஹாலில் நடைபெற்ற ஹிந்து சுயம்சேவக் சங்கத்தின் கூட்டத்தில் சாது, “இலட்சிய ஹிந்து இளைஞன்” குறித்து சுயம்சேவகர்கள் இடையே பேசினார். வியாழக்கிழமை அன்று கூல்ஏரில் சத்யசாய் குழுவினர் இடையே, “21 ஆம் நூற்றாண்டில் ஹிந்து தர்மம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை அன்று, HSS சுயம்சேவகர்களிடையே “சங்க ஒழுக்கம்“ குறித்து பேசினார். பஜகோவிந்தம் இறுதிநாள் உரையில் பல பக்தர்கள் கலந்து கொண்டு சாதுவிற்கு குரு தட்சணை வழங்கினார்கள். 

சாது டர்பனுக்கு ஞாயிற்றுக்கிழமை மே 16 அன்று திரும்பி ஃபினிக்ஸில் பஞ்ச பூஜை விழாவில் உரையாற்றினார். அவர் மே 17 அன்று வெருலம்  கோபால் லால் கோவிலில் சாது, “பஜகோவிந்தம்” குறித்து தொடர் உரை துவக்கினார். செவ்வாய்க்கிழமை, திரு தனசங்கர் மஹராஜ், தென் ஆப்பிரிக்காவின் காவல்துறை ஹிந்து சாப்ளின், சாதுவை டர்பன் , பைன்டவுன் மற்றும் சாட்ஸ்வர்த்தில் உள்ள காவல்துறையை சேர்ந்த ஹிந்து காவலர்கள் சத்சங்கங்களில் உரையாற்ற அழைத்து சென்றார். சாது, அந்த கூட்டங்களில், ஹிந்துத்துவம் என்பது என்ன என்ற தலைப்பில் உரையாற்றி, கேள்வி-பதில் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். மே – 19, புதன்கிழமையன்று, வெருலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழுவைச் சார்ந்த திருமதி அனிதா சுஜன் சிங், சிறுவர்களுக்கான ஒரு சத்சங்கத்தை ஏற்பாடு செய்தார். அதில் ஹிந்து தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகள் குறித்து சாது விளக்கினார். வியாழக்கிழமை அன்று சாது, ஸ்டேங்கர் இரண்டாம்நிலை பள்ளியில், மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே, “கல்வியின் இலட்சியம்“ குறித்து உரையாற்றினார். மாலையில் சாது தனது “பஜகோவிந்தம்” உரையை கோபால் லால் கோயிலில் தொடர்ந்தார். வெள்ளிக்கிழமையன்று சாது “பஜ கோவிந்தம்“ குறித்த இறுதி உரையை நிகழ்த்தினார். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மே – 23 அன்று, சாது, மதமாற்றம் குறித்து ஒரு பயிற்சிப்பட்டறையை, வெருலம் கோயில் ஹாலில் நடத்தினார். திங்கள்கிழமை அவர் ந்யூலாண்ட்ஸ்  ஹிந்து சபாவில் வேத பாரம்பரியம் குறித்து பேசினார். செவ்வாய்க்கிழமையன்று அவர் ரிவர்டைனில் ஹிந்து தர்மம் குறித்து உரையாற்றினார். மே – 26 அன்று சாது, பகவானுக்கு, தனது ஜோஹனஸ்பர்க் செல்வதற்கான திட்டம் மற்றும் கௌதங் மாநிலத்தில் தனது நிகழ்ச்சிகள் குறித்து கடிதம் எழுதி, அதனை ஃபேக்ஸ் செய்தார். 

மே – 27, வியாழக்கிழமை அன்று, சாதுஜி, ஸ்டேங்கர் சிவன் கோயிலில், சத்யசாய் குழுவின் சத்சங்கத்தில் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை சாது பிரிட்டிஷ் ஏர்வேஸ் கோமேர் விமானத்தை பிடித்து ஜோஹனஸ்பர்க் சென்றடைந்தார். திரு  கோர்க்கி சிங் மற்றும் குடும்பத்தினர் சாதுவை விமான நிலையத்தில் வரவேற்றனர். சாது, ஸ்ரீ ராமகிருஷ்ண மையத்தில் சுவாமி பிரேமானந்தா,  மற்றும் ஆதிசங்கர ஆசிரமத்தில் சுவாமி சங்கரானந்தா, ஆகியோர்களை  சந்தித்த பிறகு, ரேடியோ ஈஸ்ட் வேவில், ஹிந்து தர்மம் குறித்த தனது நேர்காணலை வழங்கி, தொலைபேசி மூலமாக நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து,  கௌதங் மாநிலத்தில் தனது நிகழ்ச்சிகள் குறித்து அறிவித்தார். சனிக்கிழமை சாது சுப்ரமண்ய கோயிலில், “இந்துக்களின் சடங்குகளும், சம்பிரதாயங்களும்“ என்ற தலைப்பில் பேசினார். மே – 30 ஞாயிற்றுக்கிழமை அன்று, சாது, சனாதன வேத தர்ம சபாவின் கோயிலில் இளைஞர்களிடையே, “இளைஞர்களும், சத்சங்கமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மாலையில், சாது, ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து ஒற்றுமை குறித்தும் உரையாற்றினார். ஜூன் – 1 அன்று, சாது, தெற்கு லெனேசியாவில் ஈஸ்வரன் கோயிலில், அங்கிருந்த பெரும்திரளான மக்களிடம், “புத்தாயிரமாண்டில் ஹிந்து தர்மம்“ என்ற தலைப்பில் பேசினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மையத்தின் சுவாமி பிரேமானந்தா அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். லெனேசியா  தக்ஷிண  சேவா சமாஜில்,  சாது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், “பாரதிய பெண்மையின் முல்யங்கள்” என்ற தலைப்பில் பேசினார். பின்னர், ஷீரடி சாய்மந்திரில், பகவான் சாய்பாபா பற்றி உரை நிகழ்த்தினார். ஜூன் – 4 வெள்ளிக்கிழமையன்று, சாது மீண்டும் “புத்தாயிரமாண்டில் ஹிந்து தர்மம்“ என்ற தலைப்பில், வேதா மந்திரிலும் உரையாற்றினார். சனிக்கிழமை ஜூன் – 5 அன்று, சாதுஜி,  பினோனி ஹிந்து தலைவரான, திரு. கரீப் பாய் அவர்களின் 60 வது பிறந்தநாள் விழாவில், வேத  மந்திரில், “இந்து வாழ்வியல் முறை“ குறித்து பேசினார். ஞாயிற்றுக்கிழமை பினோனி குஜராத்தி மண்டலில், மற்றும் விஸ்வநாத் மந்திரில், சிறுவர்களுக்கான சத்சங்கங்களில் உரையாற்றினார். மாலையில் விஸ்வநாத் மந்திரில் பக்தர்களிடையே, “வெற்றியின் ரகசியம்“ குறித்து பேசினார். திங்கள்கிழமை, மிட்ரண்டில், திரு. ரபின் ரகுநண்ணன் அவர்களின் இல்லத்தில் நடந்த சிறுவர்கள் சத்சங்கத்தில் அவர் உரையாற்றினார். லாடியம் விஷ்ணு மந்திரில்,  சாது, “21  – ஆவது நூற்றாண்டில் ஹிந்து தர்மம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். செவ்வாயன்று, திரு ரபின் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற சத்சங்கத்தில்  “ஹிந்து வாழ்க்கை மூல்யங்கள்”  குறித்து பேசினார்.

சாது ரங்கராஜன் காரில் பயணித்து, தென் ஆப்பிரிக்காவின் எல்லையை கடந்து, சுங்க அதிகாரிகளின் சோதனைகளுக்குப்பின், போட்ஸ்வானா குடியரசில் நுழைந்து, அவர் போட்ஸ்வானாவின் தலைநகரான கேபொரோனை ஜூன் – 9 , 1999, புதன்  அன்று அடைந்தார். அவரை போட்ஸ்வானா சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், திருமதி ஜெயஸ்ரீ, மற்றும் திரு ரவிக்குமார் குடும்பத்தினர் வரவேற்றனர். லோபாட்ஸேயில் நடந்த ஒரு பிரம்மாண்டமான சத்சங்கத்தில் சாது, “புத்தாயிரமாண்டில் ஹிந்துத்துவம்“ என்ற தலைப்பில் வியாழக்கிழமை அன்று பேசினார். சாது SOS கிராமத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள குழந்தைகளிடையே உரையாற்றி, அவர்களுக்கு பழங்களை வழங்கினார் பிறகு அங்குள்ள ஹிந்து ஹாலில் நடைபெற்ற சத்சங்கத்தில் உரையாற்றினார். மேன்மைதங்கிய திரு. மித்தல், இந்தியாவின் ஹைகமிஷனர், அந்த விழாவில் கலந்து கொண்டார். டாக்டர் B.D. சர்மா சாதுவை அறிமுகப்படுத்தினார். சாது “ஹிந்து தர்மமும் அறிவியலும்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். சனிக்கிழமை ஜூன் – 12 அன்று, சாது, மணி A. புலா பள்ளியில் சிறுவர்களிடையே உரை நிகழ்த்தினார். மாலையில், தோர்ன்ஹில் பள்ளியில் ஒரு சத்சங்கத்தில் ”ஹிந்துத்துவம் – இலக்கும், பாதையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஞாயிற்றுக்கிழமையன்று, மணி A. புலா பள்ளியில் மீண்டும் சிறுவர்களிடையே உரையாற்றி, அங்கே நசிகேதனின் கதை மற்றும் துணிவுமிக்க பாரத சிறுவர்கள் குறித்து பேசினார். அவர்களுக்கு தினசரி பிரார்த்தனைகளை கற்பித்தார். பின்னர் சாது, ராமாயாண குழுவினரிடம், ஹிந்து சபா ஹாலில், ராமாயணம் குறித்து பேசினார். ஸ்ரீ அரவிந்தர் மையத்தில் “ வேதாந்தம் –- வேதம் முதல் ஸ்ரீ அரவிந்தர்  வரை” என்ற தலைப்பில் பேசினார். சத்யசாய் குழுவினரிடம் சாது பேசுகையில், “சத்தியம், சிவம், சுந்தரம்“ என்ற தலைப்பில் பேசினார். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. 

போட்ஸ்வானா குடியரசில் சாதுவின் சாதனைகளுக்கு மரியாதை தெரிவித்து, நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான திரு. ஷங்கர் எழுதினார்:

“சாது பேராசிரியர் ரங்கராஜன் (சாதுஜி) அவர்களின் போட்ஸ்வானா விஜயம் குறித்து  எழுதும் வாய்ப்பு பெற்ற நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி.  அவரது இந்தப்பயணத்தின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து மட்டும் நான் எழுத விரும்புகிறேன்.

ஒரு பிரம்மசாரி மாணவனாகவும், பின்னர் ஒரு குடும்பஸ்தனாகவும் தனது கடமைகளை திறம்பட நிர்வகித்த பிறகு சாது முற்றும் துறந்து தாழ்மையான கடவுள் மற்றும் மனிதகுலத்தின் பணியாளனாகவே பயணித்துள்ளார்.

அவர் இவையனைத்தையும் சாதித்துள்ளது, வெளித்தோற்றத்திற்கு மிக முற்போக்கானதும், மனித வாழ்க்கை மிகவும் எந்திரமயமானதும் உலகாயத இன்பங்களில் கட்டுப்பாடில்லாது தொடர்ந்து மூழ்கியிருப்பதுமான, இந்த நவீன உலகத்தில் இருந்துகொண்டுதான். ஆக, சாதுஜி சாதாரண மனிதத் தன்மையில் உறங்கிய நிலையில் இருக்கும் உண்மையான, வேகம் மிகுந்த, ஒரு  பேராற்றலின் சின்னமாக திகழ்கிறார்.

அனைத்து மக்களும், புத்தி பூர்வமாக, கடமைப்பட்டிருக்கிறார்கள்–. 1) மிகக் கடினமானதாகிலும் கண்டிப்பாக அடையக்கூடிய ஒரு லட்சியத்தின்  உருவகமாக அவரை ஏற்றுக்கொள்ள, 2) அவரது குணங்களை ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்ற. அவர் பல மெய்ஞானிகள், ரிஷிகள் மற்றும் அவதார புருஷர்கள் போதித்துள்ள பாடங்கள் குறித்து ஆழ்ந்த ஞானத்தை பெற்றிருப்பவர் ஆவர்.

அவர், இந்த அனைத்து ஆசாரியர்களின் போதனைகளையும் எளிமையாக உண்மையாக, மற்றும் தீவிரமாக ஆதரிப்பதற்கு ஆற்றல் கொண்டவர் ஆவர். இந்த ஆசிரியர்களின் போதனைகள் சில சமயம் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதாக, மாறுபட்டதாக, வெளித்தோற்றத்திற்கு இந்த ஆசிரியர்களின் போதனைகள் சில சமயம் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதாக மாறுபட்டதாக வெளித்தோற்றத்திற்கு ஒன்றை மற்றொன்று எதிர்ப்பதாகவும் தென்பட்டாலும் அவற்றை ஒருங்கிணைத்து அவைகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு ஆற்றல் அவரிடம் நிரந்தரமாக உள்ளது காண்கிறோம். இந்த ஒருங்கிணைக்கும் ஆற்றல்  இயற்கையாக அவரிடம் உள்ளது அவரது தனித்தன்மை ஆகும். அனைத்து ஆசிரியர்களின் போதனைகளிலும் உள்ள பொதுவான உயர்ந்த கருத்துக்கள், வெளித்தோற்றத்திற்கு தெரியும் இவைகள் இடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து, ஒருங்கிணைந்த ஒரு தத்துவ கோட்பாடாக இவர் மூலம் வெளிப்படுகிறது. எல்லாவற்றையும் அகப் படுத்திய விரிந்த  உளப்பாங்கு இவரின் உருவகமாக திகழ்கிறது.

இந்துத்துவத்தை போட்ஸ்வானாவில் பரப்புவதற்கு தெளிவான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்துடன் அவர் இங்கு வந்தார். அனைவரையும் கவரும் எளிமை மூலமாக அவர், குறுகிய மனப்பான்மை கொண்ட இதயங்களை விரிவடையச் செய்து தனது சாதனையின் முதல்விதைகளை இங்கு பதித்துவிட்டார், ஒன்றோடு மற்றொன்று மோதிக் கொண்டிருக்கும் ஹிந்து பிரிவினர்களிடையே ஒரு ஆற்றல்மிக்க ஒருங்கிணைப்பு உண்மையிலேயே ஏற்பட அவருடைய வருகை வழி வகுத்துள்ளது,”

ஜூன் – 15 , 1999 அன்று  திரு வெங்கடேசுலு அவர்களின் இல்லத்தில் சாதுவிற்கு வழியனுப்புதலை தந்தனர். திரு ராம்தாஸ், இந்திய ஹை கமிஷனின் முதல் செயலர், அவரது மனைவி, திரு ரவி, திருமதி. ஜெயஸ்ரீ மற்றும் குடும்பத்தினர் சாதுவோடு மதிய உணவிற்கு இணைந்தனர். பின்னர் சாது தென் ஆப்பிரிக்காவிற்கு காரில் பயணித்து திரும்பினார். சாது, தென் ஆப்பிரிக்காவின் வடக்கு மாநிலம் ஆகிய மாஃபிகெங்கிலுள்ள மம்பாத்தோ வந்து அடைந்தார். அங்கே, திருமதி. சங்கீதா தவே, சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், அவரது குடும்பத்தினர், மற்றும் வடமேற்கு ஹிந்து சபாவின் செயலாளரும் மம்பாத்தோ பல்கலைகழகத்தில் பேராசிரியருமான, திரு M. ராமனாதன் சாதுவை வரவேற்றனர். மாஃபிகெங்கிற்கு சாது விஜயம் செய்தது குறித்து, பேராசிரியர் ராமநாதன், “தத்துவ தரிசனம்” இதழில் பின்வருமாறு எழுதினார்:

“சுவாமி ரங்கராஜன் மாஃபிகெங்கிற்கு, போட்ஸ்வானாவின் காபொரோனில் இருந்து, செவ்வாய்க்கிழமை ஜூன் 15 , 1999 ல் வந்தார். அவர் இங்கு ஒரு புதிய பார்வையாளர் அல்ல. சுவாமியின் சிறப்பும், திறனும் மாஃபிகெங் -ல்  பலர் அறிந்த ஒன்று. வடக்கு ஹிந்து சபா தி மெயில் என்ற செய்திதாளோடு இணைந்து, இவரது வருகை குறித்த பெரும் விளம்பரத்தை செய்திருந்தது. மாஃபிகெங் வாழ்வாசிகள் ஆன்மீக தேடலோடு இருந்தார்கள், ஏனெனில் எந்த ஆன்மீக குருவோ  சமயத் தலைவரோ  உலகத்தின் இந்த பகுதிக்கு வருவதில்லை. மாஃபிகெங்-ன் ஹிந்து மக்கள் சாதுவை இங்கு கடவுள் அனுப்பிய பரிசாகவே நினைக்கிறார்கள். திருமதி. சங்கீதா தவே, சுவாமியின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். 15 ஆம் தேதி சாது தனது ஆன்மீக உரைகளை சாந்தி மந்திரில் துவக்கினார். அவர், “நான் ஏன் இந்து என்பதில் பெருமை கொள்கிறேன்?“ என்பது குறித்து பேசினார். அடுத்த நாள் “அறிவியலும், ஹிந்துத்துவமும் 21 ஆம் நூற்றாண்டில்“ என்ற தலைப்பிலும், 17 ஆம் தேதி, “ஹனுமான் சாலீசாவும், சுந்தரகாண்டமும்“ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். 18 ஆம் தேதி, மாநில பிரதமர், மேன்மைதங்கிய போபோ மொளேஃபே   அவர்களின் பதவியேற்பு துவக்க விழா, மம்பாத்தோ கரோனாவிலுள்ள சட்டமன்ற சதுக்கத்தில் நடைபெற்றபொழுது, அந்த நிகழ்ச்சியில் ஒரு ஹிந்து பிரார்த்தனை நிகழ்த்த, சாது அழைக்கப்பட்டார். 19 ஆம் தேதி அன்று கோல்ஃப் வியூவில், “பகவத்கீதையின் சாரம்“ என்ற தலைப்பில் பேசினார். 20 ஆம் தேதி பாலவிகாஸ் குழந்தைகளுடன் சாது ஒரு சிறந்த உரையாடல் நிகழ்ச்சி மேற்கொண்டு, அவர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். மாலையில், ”இயேசு கிறிஸ்து – ஒரு ஹிந்து யோகி“, என்ற தலைப்பில் உரையாற்றினார். சமயங்களுக்கு இடையேயான நன்றிநவிலும் பிரார்த்தனை கூட்டத்தில், மம்பாத்தோ சிவிக் சென்டரில், “ஹிந்து வாழ்க்கை முறை “குறித்து அவர் நிகழ்த்திய உரை அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அவர் சொற்பொழிவை முடித்தவுடன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கருப்பர்கள் வெள்ளையர்கள் உட்பட அனைவரும் எழுந்து மகிழ்ச்சியுடன் நடமாடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அது சுவாமிக்கு ஒரு மறக்க இயலாத நாளாக அமைந்தது. 21 ஆம் தேதி சுவாமி, மாஃபிகெங்கிலிருந்து, காரில் ஜோஹனஸ்பர்கிற்கு, மாஃபிகெங் ஹிந்து சமூகத்தினரின் மிகுந்த இனிமையான நினைவுகளோடு சென்றார். 

சுவாமியின் அனைத்து உரை நிகழ்ச்சிகளிலும் பலர் கலந்து கொண்டனர். சொற்பொழிவுகளுக்கு பின் நேரடி, கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் நடந்தன. அவர் பல தொடர்ச்சியான கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை அளித்தார். அவரது உரைகளில், வேதங்கள், உபநிஷத், ஹிந்து கலாச்சாரம், தத்துவங்கள், சமயச்சடங்குகள், புராணங்கள் மற்றும் இதிஹாசங்கள் ஆகிய அனைத்து பற்றியும் அளிக்கப்பட விளக்கங்கள் அனைவரையும் கவர்ந்தன. மாஃபிகெங் ஹிந்து மக்கள் கூட்டத்திற்கு இது வறண்ட நிலத்தில் தெய்வீகமான மழை பெய்ததுபோல் இருந்தது. அவர் பல இந்து இல்லங்களுக்கு சென்று காயத்ரி, துர்கா ஹோமங்களை பல இடங்களில் மேற்கொண்டார். அந்த ஹோமங்களின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். மாஃபிகெங் வரலாற்றில் அவரது விஜயம் நினைவு கொள்ளத்தக்க ஒன்றாக அமைந்தது.” 

திங்கள்கிழமை ,ஜூன் – 21 அன்று, சாது. மிட்ராண்டிற்கு காரில் சென்றார். செவ்வாய்க்கிழமையன்று சாதுஜி ஒரு விரிவான தகவலை ஃபேக்ஸ் மூலம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தனது போட்ஸ்வானா மற்றும் மம்பாத்தோ பயணம் பற்றி அனுப்பினார். தொலைபேசி மூலம் திருவண்ணாமலை ஆசிரமத்தில் உள்ள  ராஜலட்சுமியை அழைத்து தனது வணக்கங்களை பகவானுக்கு தெரிவிக்குமாறு கூறினார். மாலையில் மிட்ராண்ட் சத்ய சாய் குழுவினர் இடையே அவர் உரையாற்றினார். 

ப்ரிடோரியா ஹிந்து சமாஜ் ஒரு ஆரவாரமான வரவேற்பை சாதுவிற்கு புதன்கிழமை ஜூன் 23 , 1990 அன்று தந்தது. சௌ. யாஷிகா சிங், தென்னாப்பிரிக்கா தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சாதுவை வரவேற்றார். சாது, “புத்தாயிரமாண்டில் ஹிந்துத்துவம்“ என்ற தலைப்பில் பேசினார். திரு. கொர்க்கி சிங் லெனேசியாவில் வியாழக்கிழமை ஒரு சத்சங்கத்தை ஏற்பாடு செய்தார். வெள்ளிக்கிழமை சாது, லெனேசியா தக்ஷிண சேவா சமாஜில், “ஹிந்துத்துவமும் இளைஞர்களும்” என்ற தலைப்பில் பேசினார். சனிக்கிழமையன்று ஜூன் – 26 ல், சௌ. யாஷிகா சிங் சாதுவின் உரைகளை  “புருஷார்த்தங்கள்”, “ஐந்து உன்னத நற்பண்புகள்” மற்றும் “புத்தாயிரமாண்டில் ஹிந்துத்துவம்“  ஆகிய தலைப்புகளில், சவுத் ஆஃப்ரிக்கா ப்ரோடுகாஸ்டிங் கார்ப்பரேஷன் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுக்காக பதிவு செய்து கொண்டார். மாலையில் சாது, ராமேஸ்வர்  மந்திரில்  ஒரு கூட்டத்தில், “ஹிந்துக் கடவுள்கள் பற்றிய பகுத்தறிவுப் பூர்வமான விளக்கம்” பற்றி பேசினார். ஜனவரி 27 ஞாயிறன்று, ஜோஹன்னஸ்பர்க் காயத்ரி பரிவார், 108 முறை காயத்ரி சாலிசா பாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அந்த நிகழ்ச்சியில சாது விற்க்கு சிறப்பான வரவேற்பு வழங்கியது. சாது அதில் உரையாற்றினார். அன்று சாது கௌடேங் பக்தர்களிடமிருந்து விடைப்பெற்று டர்பனுக்கு விமானம் மூலம் சென்றார். திரு. டெட்டி கொமல்  மற்றும் அவரது பிள்ளைகள் சாதுவை டர்பன் விமானநிலையத்தில் வரவேற்றார்கள். திங்கள்கிழமை அன்று சாது ஒரு விவரமான கடிதம் ஒன்றை பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு, தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் உலக ராமநாம இயக்கத்தை பரப்புவதைப்பற்றி, எழுதினார். ஜூலை – 1 அன்று சாதுவை, திரு. ஸ்டீஃபன், ரேடியோ ஃபினிக்ஸில், தொலைபேசி மூலம் உரையாடல் நிகழ்ச்சிக்காக, ஒரு பேட்டியை எடுத்தார். சாது அதில் ஹிந்து சடங்குகள் குறித்து பேசியதோடு, நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஸ்யம்சேவக் மற்றும் சேவிகாக்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நான்கு நாள் முகாமில், A.M. மூலா ஸ்பெஸ் நோவா பள்ளியில், சாது ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை, ஜூலை – 2 , 1999 அன்று தொடங்கி, நான்கு நாட்களும் சாது அவர்களோடு தங்கினார். முதல் நாள், சாது காயத்ரி ஹோமம் மற்றும் தேச மாத்ரிகா பூஜையை செய்தார். அவர், பாரதத்தில், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஸ்தாபகர் மற்றும் முதல் சர்சங்கசாலக் ஆகிய டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் குறித்து பேசினார். தினமும் காலையில், சாது, ப்ராதஸ்மரண் மற்றும் ஏகாத்மதா மந்த்ரம்  போன்றவற்றை முகாமில் இருப்பவர்களுக்கு பயிற்சி அளித்ததோடு, சிறுவர்களுக்கான கதை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். அந்த முகாமில் கலந்து கொண்ட சுயம்சேவகர்கள் மற்றும் சேவிகாக்களிடையே, சனிக்கிழமை அன்று, ஹிந்துக்கள் மதம் மாற்றப்படும் பிரச்சனை குறித்து சாது உரையாற்றினார். அவர் டிவைன் லைஃப் சொஸைட்டியின் 50 வது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டார். சுவாமி வெங்கடேஸ்வரானந்தா அவர்களும் அதில் கலந்து கொண்டார். ஞாயிறன்று, சாது, திரு டெட்டி, திருமதி ஷெரிதா, மற்றும் திரு சிவா குடும்பத்தினர், போர்ட் ஷெப்ஸ்டோணிற்கு காரில் பயணித்து, அங்கு, இந்திய  பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஏராளமான நூல்கள் மற்றும் கலைப்பொருட்களை சேகரித்து வைத்துள்ள டாக்டர் கென்னத் சி.  புல்ஸ்ட்ரோடு என்பவரை சந்தித்தனர். மாலையில் மீண்டும் சங்க முகாமிற்கு திரும்பிவந்த சாது, சுவாமி விவேகானந்தர் குறித்து பேசியதோடு, அந்த முகாமில் பங்கெடுத்தவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். திங்கள்கிழமை அன்று முகாமில் இறுதி உரையை ஆற்றினார். 

ஷெல்க்ராஸ் சிவா மந்திர் சாதுவின் நிகழ்ச்சியை  செவ்வாய்க்கிழமையன்று ஜூலை – 6 ல் ஏற்பாடு செய்திருந்தது. சத்ய சாய் அமைப்பைச் சேர்ந்த திரு. சுரேஷ் சாதுவை வரவேற்றார். சாது, “ஹிந்துத்துவம் மற்றும் அறிவியல்” குறித்து உரையாற்றினார். சாட்ஸ்வர்த்தின் சர்வதர்ம ஆசிரமத்தில். ஜூலை – 7, புதன் அன்று, சிறப்பான ஒரு வரவேற்பு சாதுவிற்கு அளிக்கப்பட்டது. காலையில் சாது குழந்தைகளுக்கு, நசிகேதன் மற்றும் கௌஸ்துகன் குறித்த கதைகளை கூறினார். மாலையில் அவருக்கு அளிக்கப்பட்ட ஒரு வரவேற்பு சத்சங்கத்தில், சாது, ஹிந்து தர்மம் குறித்து பேசினார். அடுத்தநாள் சாது, மாண்ட்போர்ட் மூத்தகுடிமக்கள் மையத்தில், “வாழ்வின் இலட்சியங்கள்“ குறித்து பேசினார். மாலையில், ஸ்ரீகிருஷ்ணா சங்கத்தில், சாது, பகவத்கீதை புகட்டும் வாழ்க்கைமுறை குறித்துப் பேசினார். ஜூலை – 9 அன்று, சாது, அருட்பா கழகத்தினரிடையே, அருள் ஞானி ராமலிங்க வள்ளலார் குறித்து பேசினார். சௌ. லோகி பண்டாரம் சாதுவை அறிமுகப்படுத்தி பேசினார். சனிக்கிழமையன்று, வேதாந்தா அகாடமியை சேர்ந்த திரு ஜெயராம் அவர்களுடன், ஹிந்து சம்மேளனத்தவர்கள் ஏற்பாடுசெய்திருந்த ஒரு பாத யாத்திரையில் கலந்துகொண்டு டெரென்ஸ் பார்க்கில், “ஹிந்துத்துவத்தின்  மகிமை“ குறித்து உரையாற்றினார். திரு ஹரிதாஸ், திருமதி அலர்மேல் கூப்பர் மற்றும் திரு கமல் மஹராஜ் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். ஜூலை 11 ஞாயிறன்று காலையில், சத்திய சாய் மையத்தில்,  “புத்தாயிரம் ஆண்டில் ஹிந்துத்துவம்” என்ற தலைப்பில் சாது  உரை நிகழ்த்தினார். மாலையில், சர்வ தர்ம ஆசிரமத்தில், ஒரு சிறப்பான ஹோமம் நடத்தி அந்த ஆசிரமத்தை திறந்து வைத்து உரையாற்றினார். சுவாமி வெங்கடேஸ்வரானந்தா அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திங்களன்று, சாது, ஆரியன் பெனெவோலெண்ட் ஹோமில், “சுவாமி தயானந்தரும் ஹிந்து எழுச்சியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாலையில், சின்மயா மிஷனில்,  சுவாமி நிர்மலானந்தர்  சாதுவை வரவேற்றார். அங்கு சாது, “செயல்திறனின் ரகசியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். செவ்வாயன்று, சாது, இசிப்பிங்கோவில், ராமலிங்கா இன்ஸ்டிட்யூட்டில், மூத்த குடிமக்கள் இடையே உரையாற்றி, “வாழ்க்கையின் லட்சியம்” என்பது குறித்து பேசினார்.

சாது, சர்வ தர்ம ஆசிரமத்தில், செவ்வாய், ஜூலை 13 முதல் வெள்ளி, ஜூலை 16, 1999 வரை, “பஜகோவிந்தம்” குறித்து தொடர் உரையை ஆற்றினார். பின்னர் சனிக்கிழமை, ஜூலை 17 அன்று, காலையில், சாது, பிரிட்டிஷ் ஏர்லைன்சின் கோமெயர்  விமானம் மூலம், கேப்டவுன் வந்தார். கேப்டவுன் விமான நிலையத்தில் திரு துளசி வஸ்ஸன் அவரை வரவேற்றார். கேப்டௌனில், கேப் மாநில சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், திருமதி ப்ரமிளா வஸ்ஸனின்  இல்லத்தில், சாது விருந்தினராக தாங்கினார். திருமதி ஐனஸ் லாலர் மற்றும் ஆனந்த குடீரின் மா யோகேஸ்வரி மற்றும் பல பக்தர்கள்  சாதுவை சந்தித்தனர். மாலையில் சாது, ராதாகிருஷ்ணா கோயிலில் ‘பக்தி மற்றும் ஞானம்’ குறித்து பேசினார். ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், விஷ்ணு கோயிலில்  “இளைஞர்கள் குறித்த ஹிந்து இலட்சியங்கள்“ பற்றி பேசினார். மாலையில் கேப்டௌன்  தியோசஃபிகல் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘ஹிந்துத்துவத்தின் உலகளாவிய மற்றும் விஞ்ஞானபூர்வமான அடிப்படை’ என்பது குறித்து உரை நிகழ்த்தினார். ஜூலை 19 முதல் 23 வரை காலை வேளைகளில், திருமதி ப்ரமிளா அவர்களின் இல்லத்தில், “பஜகோவிந்தம்” குறித்து தொடர் உரையாற்றினார். 19 ஆம் தேதி மாலையில் சிவன் கோயிலில்,  “கடவுளும், வழிபாடும்“ என்ற தலைப்பில் பேசினார். விஷ்ணு கோவிலில் மற்றொரு கூட்டத்தில், ‘ஹிந்து புத்தெழுச்சி’  குறித்து பேசினார். ஜூலை 20 தேதியன்று, சாது, திருமதி ப்ரமிளா அவர்களின் SABC நிகழ்ச்சிக்காக ஒரு ஹோமத்தை நடத்தினார். அந்த TV குழுவினருடன் சாது, டேபிள் மவுண்டன் சென்று கயாமத் மலாய் முஸ்லிம் மியூசியம் ஆகியவற்றை பார்வையிட்டார். மாலையில் அவர் பகவத்கீதை குறித்து உரையாற்றினார். 

ஆப்பிரிக்கா கண்டத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தின் முன்னோடியாக திகழ்ந்த சுவாமி நிச்ரேயசானந்தா அவர்களின், அர்ப்பணிப்பு மிகுந்த பக்தரான, திரு. சுபாஷ் ராணா, நீண்டகாலமாக அவர் பாதுகாத்து வந்த சுவாமிஜியின் ஜெர்சியை  ஜூலை – 21 அன்று, சாதுவிற்கு அளித்தார். சாது, ராதாகிருஷ்ணா கோயிலில் நடந்த சத்சங்கத்தில், மானிட மூலியங்களின் அடிப்படையான ராமாயணம் குறித்து பேசினார். வியாழக்கிழமை அன்று சாது ஆனந்த குடீரில், “21-ஆம் நூற்றாண்டில் மதம்” குறித்து பேசினார். மா யோகேஸ்வரி சாதுவை அறிமுகப்படுத்தினார். அவர் சாதுவிற்கு சுவாமி வெங்கடேஸ்வரானந்தரின் நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். கேப்டௌனில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் சர்வ சமய பாராளுமன்றத்தின் அலுவலகத்திற்கு, சாது, ஜூலை 23, வெள்ளிக்கிழமை அன்று, சென்றார். பின்னர் அவர், டர்பனுக்கு காம்ஏர் விமானத்தை பிடித்தார். டர்பன் விமான நிலையத்தில், சாதுவை, இஸிப்பிங்கோவை சார்ந்த திரு பாலகிருஷ்ணா வரவேற்றார். அவரது இல்லத்தில் அவர் மனைவி, சரஸ், மற்றும் அவரது மக்கள், சோமா, தினா, மற்றும் பத்மா, சாதுவை வரவேற்று அவர்கள் விருந்தினராக தங்கவைத்தனர். ஜூலை – 24 சனிக்கிழமையன்று, சாது, ஹிந்து ஸ்வயம் சேவக சங்கத்தின், சேவகர்களின் சுற்றுலா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, டோங்காட் கோகலே ஹாலில், ‘ஒழுக்கம் மற்றும் தன்மை’ என்பது குறித்து,  சுயம்சேவகர்களிடையே உரையாற்றினார். அடுத்த நாள், திரு தனபால் நாயுடு அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சத்சங்கத்தில், சாது, ‘சமயம் மற்றும் பகுத்தறிவு’ என்பது பற்றி உரையாற்றினார். செவ்வாய்க்கிழமையன்று நியூ லாண்ட்ஸ் சிவன் கோவிலில் “செயல்முறைக்கு ஏற்ற ஹிந்து தர்மம்” என்ற தலைப்பில் சாது உரையாற்றினார். ஜூலை 28 அன்று சாது பீட்டர்மாரிட்ஸ்பெர்க் சென்று, தென்னாபிரிக்க போலீஸ் ஹிந்து சங்கத்தில் ‘ஹிந்து ஒற்றுமை மற்றும் மானிட சகோதரத்துவம்’ என்பது பற்றி சொற்பொழிவாற்றினார். மாலையில் திரு நரேன் ரகுநன்னன் இல்லத்தில் ஒரு சத்சங்கத்தில் கலந்துகொண்டார். ஜூலை -29, வியாழனன்று.  சாது ரிட்ஜ்வ்யூ ஆரம்பபள்ளியில், இன்டெக்ரல் யோகா சென்டரின் கூட்டத்தில், குருபூர்ணிமா விழாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வெள்ளியன்று வேத தரும சபாவில் வேத தர்மம் என்பது பற்றி உரையாற்றினார். சனிக்கிழமை அன்று, ஆரிய சமாஜத்தில் “புத்தாயிரம் ஆண்டில் ஹிந்து தர்மம்” என்பது பற்றி உரை நிகழ்த்தினார். ஆகஸ்ட் – 1 அன்று ஞாயிற்றுக்கிழமை, சாது, சத்யசாய் அமைப்பில், ஆந்திர சபாவில் உரை நிகழ்த்திய பிறகு ஹோவிக் சென்று, வேத தர்ம சபையில் பேசினார். மாலையில் ரிட்ஜ்வ்யூ ஆரம்பபள்ளியில், இன்டெக்ரல் யோகா சென்டரின் கூட்டத்தில் “பரமகுரு” என்ற தலைப்பில் பேசினார். திங்கள்கிழமை சாது, டர்பனில் இருந்து விமானம் மூலம், போர்ட் எலிசபெத் வந்தார். அவரை திரு. ராமு விமானநிலையத்தில் வரவேற்றார். 

சாது சுப்ரமண்ய ஆலயத்திற்கு காரில் சென்று அங்கே “அறிவியல் மற்றும் ஹிந்து மத பாரம்பரியம்“ குறித்து பேசினார். போர்ட் எலிசபெத்தில் சாது சௌ. தினா அவர்களின் விருந்தினராக தங்கினார். செவ்வாய்க்கிழமை சாது, தனது நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து, பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதி ஃபேக்ஸ் அனுப்பினார். மாலையில் ஹிந்து சேவா சமாஜம் கூட்டத்தில், “சமயம் மற்றும் பகுத்தறிவு” என்பது பற்றி உரையாற்றினார். திருமதி. ஹேம்கலா தயா என்பவர் என்பவர் போர்ட் எலிசபெத்தின் சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். அவருடன் சாது ஊடன்ஹேஜ் சென்று அங்குள்ள ஹிந்து சமாஜ் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். ஆகஸ்ட் – 5 அன்று சாது டர்பனுக்கு விமானம் மூலம் திரும்பினார். சௌ.  பத்மா, விமான நிலையத்தில் சாதுவை வரவேற்று,  இஸிபிங்கோவிலுள்ள தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். வெள்ளிக்கிழமையன்று சாது இஸிபிங்கோ ஆலயத்தில் ‘சமயம் மற்றும் பகுத்தறிவு’ பற்றி பேசினார். ஆகஸ்ட் – 8 ஞாயிறு அன்று, சாது ஸ்பிரிங்ஃபீல்டில் பஞ்ச பூஜா விழாவில் கலந்துகொண்டு இந்து சடங்குகள் குறித்து பேசினார். பின்னர் அவர், கார் மூலமாக பயணித்து, எஸ்ட்கார்ட்  சென்றார்.  அங்கு சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், திரு சிந்தால் ராமையா, சாதுவை வரவேற்றார். எஸ்ட்கார்ட் கோயிலில் பக்தர்களிடையே உரையாற்றினார். ஆகஸ்ட் – 9 அன்று குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பிறகு சைவசித்தாந்த கழகத்தில் உரையாற்றினார். பின்னர் மகா காயத்ரி மந்திரில் “புத்தாயிராமாண்டில் ஹிந்துத்வம்” என்பதுகுறித்து பேசினார். செவ்வாயன்று, சாது, டிவைன் லைஃப் சொசைட்டி, சத்யசாயி இயக்கம் மற்றும் ராமகிருஷ்ணா மையத்தின்  பக்தர்கள் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், காயத்ரி மந்திரில்,  பகவத் கீதை பற்றி உரை நிகழ்த்தினார். பின்னர் சாது பீட்டர்மார்டிஸ்பர்க் சென்றார். புதன்கிழமை அன்று சாது மதுபாதுபா சென்று, அங்கே கம்யூனிட்டி ஹாலில், “ஹிந்துத்துவத்தின் பகுத்தறிவு“ குறித்து பேசினார். அடுத்த நாள் மதுபாதுபா  சத்திய சாயி மையத்தில், ‘சமயம் மற்றும் பகுத்தறிவு’ என்பது பற்றி பேசினார். திருமதி ப்ரசில்லா, மதுபாதுபாவில் சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு ஏற்றார். சாது கார்மூலம் பயணித்து சாட்ஸ்வர்த் வந்து, திருமதி அம்பி இந்திரன் இல்லத்தை அடைந்தார். ஆகஸ்ட் 14, சனிக்கிழமையன்று அங்கு நடைபெற்ற சத்சங்கத்தில் பல பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆகஸ்ட் – 15 , 1999 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், சாட்ஸ்வர்த்தில், சாது, சத்யசாய் குழுவினரின் சத்சங்கத்தில், “உலகளாவிய மதமும் சேவையும்”  என்ற தலைப்பில் பேசினார். சர்வ தர்ம  ஆசிரமம் நடத்திய ஒரு முகாமில் பங்கு கொண்டு பக்தர்களுக்கு தியானம் செய்யும் முறை பற்றி பயிற்சி அளித்தார். அதன்பின் ஃபினிக்ஸ் சைவ சித்தாந்த சங்கத்தின் துர்கா பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் சர்வ தர்ம ஆசிரமம் வந்து பக்தர்களுடன் இந்திய சுதந்திர தின விழாவில் பங்கு கொண்டார். அங்கு, பாரதத்தின் மெய்ஞானிகள் பற்றி உரை நிகழ்த்தியதுடன், குழந்தைகளுக்கு தேசபக்தி பாடல்களையும், பாரம்பரிய விளையாட்டுகளையும் கற்றுத்தந்தார்.

ஆகஸ்ட் – 18 புதன் அன்று, சாது, டோங்காட் கோகுல் ஹாலில், ‘படைப்பு குறித்த ஹிந்துக்களின்  கருத்து’ என்பது பற்றி பேசினார். வியாழக்கிழமை, ரேடியோ ஃபினிக்ஸின், திரு ஸ்டீவன், சாதுவை நேர்காணல் செய்தார். “இந்துத்துவமும் விஞ்ஞானமும்”, “சமயமும் பகுத்தறிவும்”, மற்றும் “பாரதத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு” ஆகிய தலைப்புகளில் பேசிய சாது, நேயர்களின் தொலைபேசி மூலமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆகஸ்ட் – 21 அன்று சாது, மியர்பாங்கில் உள்ள பராசக்தி கோயிலில் ஹிந்து தர்மம் குறித்து உரை நிகழ்த்தினார். ஆகஸ்ட் – 23 அன்று சாது “ஆன்மீகமும், மதமும்” என்ற தலைப்பில் டோங்காட் காவல் நிலையத்தில், காவலர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில், உரையாற்றினார். 

ஆகஸ்ட் – 24 அன்று, சாதுவை வழியனுப்பும் மனம் நெகிழும் நிகழ்ச்சியை, டர்பன் ஏர்போர்ட்டில், பக்தர்கள் நிகழ்த்தினார்கள். சாது,  ஏர் மொரிஷியஸின் விமான எண் MK 848 ஐ மதியம் 1.40 மணிக்கு பிடித்து, மொரிஷியஸை இரவு 7.30 மணிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து சாது மும்பைக்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட்டார். திரு. ஓரி, மற்றும் திரு. நாயக்கர், தென் ஆப்பிரிக்காவில் இருந்து சாதுவுடன் பயணித்தனர். சாது, அடுத்தநாள் காலை மும்பையை அடைந்தபோது அவரை, சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர், திரு. A.R. ராவ் வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பக்தர்கள் சாதுவை திரு ராவ் அவர்களின் இல்லத்தில் சந்தித்தனர். திரு. ஓரி மற்றும் திரு. நாயக்கர் பெங்களூருக்கு பறந்து சென்றனர். சாது ஜெட் விமானம் W 461 ஐ பிடித்து, சென்னைக்கு. மாலையில் பயணித்தார். திருமதி. பாரதி, விவேக் மற்றும் வெங்கடேஷ் சாதுவை வரவேற்றனர். சாது வீட்டை அடைந்தப்பின் நிவேதிதா மற்றும் ஹரிப்ரியா, சாதுவை பெங்களூரில் இருந்து, தொலைபேசியில்  தொடர்பு கொண்டனர்.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s